Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:17:39 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7342
#KOTW7342
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 6, 2011
புதுப்பள்ளி நிர்வாகத்தின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய இரண்டாவது அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 7709 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (50) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 24)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதுப்பள்ளி ஜமாஅத் சார்பாக எதிர்வரும் நகர்மன்ற தேர்தல் குறித்து அறிக்கை ஒன்று - அக்டோபர் 3 அன்று -வெளியிடப்பட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்த சில விஷயங்கள் குறித்து நகர்மன்ற மன்ற தலைமை பொறுப்புக்கான வேட்பாளர் பி.எம்.ஐ. ஆபிதா - விளக்கம் அளித்திருந்தார்.

புதுப்பள்ளி சார்பாக மீண்டும் ஓர் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இணையதளத்தில் நகராட்சி தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் சகோதரி P.M.I. ஆபிதா அவர்களின் அறிக்கையை படித்தோம். அதில் புதுப்பள்ளி ஜமாஅத்தின் தலைவர் ஹாஜி S.M. உஜைர் அவர்கள் இணையதளத்திற்கு அளித்திருந்த தன்னிலை அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார்கள்.

அவர்கள் அறிக்கையில் இணைப்புகளாக (Attachments) வெளியிட்டுள்ள கடிதங்கள் எதுவுமே ரகசிய ஆவணங்கள் அல்ல. ஐக்கிய பேரவைக்கு சகோதரி எழுதிய கடிதம், ஐக்கிய பேரவையால் விருப்ப மனு தந்த அனைவருக்கும் எழுதியது போல், இந்த சகோதரிக்கும் எழுதிய கடிதம், முச்சரிக்கை (உறுதிமொழி படிவம்) ஆகியவை மட்டும் தான்.

"பேரவையுடன் தொடர்பான எனது நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எப்படியேனும் தெரிவித்தேயாக வேண்டும் என்று என் மனம் தூண்டியபோதெல்லாம் என்னை நான் கட்டுப்படுத்திக்கொண்டு, நாமாக ஏன் மக்களிடம் முந்திக்கொண்டு சொல்ல வேண்டும்... பின்னர் அதை ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு செயலாக மக்கள் எடுத்துக்கொள்வார்களே... என்ற எண்ணத்தில் இதுகுறித்து எதையும் இதுவரை தெரிவிக்காமலிருந்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏதோ மிகப்பெரிய அநீதி அவருக்கு இழைக்கப்பட்டிருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க அறிக்கையின் துவக்கத்திலேயே முயற்சிக்கிறார் என்பது தான் உண்மை.

சகோதரி அவர்களிடத்தில் சில கேள்விகள்:

1) ஐக்கிய பேரவையின் உறுதிமொழிப் படிவம் (முச்சரிக்கை) உங்களுக்கு மட்டும் அனுப்பப்படவில்லை. அனைத்து விருப்ப மனு தந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டது என்பதாவது தங்களுக்கு தெரியுமா? அதிலுள்ள வாசகம் உங்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதப்படாமல் அனைவருக்கும் பொதுவாக எழுதப்பட்ட ஒரே வாசகம் என்பதாவது தங்களுக்கு தெரியுமா?

2) நமது ஜமாஅத்தைச் சார்ந்த J.A. லரீப், உதவித் தலைவர் S.S.M. புகாரி ஆகியோரும், ஐக்கிய பேரவையின் சார்பில் தேர்தல் பணிகளை மட்டும் கவனிக்கும் காயல் ளு.நு. அமானுல்லாஹ் அவர்களும் தங்களிடம் நேரடியாக உறுதிமொழிப் பத்திரத்தில் (முச்சரிக்கை) கையெழுத்தின் அவசியத்தை வலியுறுத்தி வேண்டிக் கொண்டபோதும் பரிசீலிக்க மறுத்தது ஏன்? நல்லெண்ணத்தோடு அவர்கள் தங்களிடம் விடுத்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது ஏன்?

3) ஜமாஅத்தின் தலைவர் S.M. உஸைர் அவர்கள் தங்கள் கணவர் ஷேக் அவர்களிடம் இந்த முச்சரிக்கையின் அவசியம் குறித்து நீண்ட நேரம் வலியுறுத்திய பின்பும் அவராவது பரிசீலித்திருக்கலாமே!

4) எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பெயர் குறிப்பிடமுடியாத நிலையில் உள்ள தங்களின் மிக நெருங்கிய தோழியும், தற்போதைய நகராட்சியில் பெண் கவுன்சிலராக இருப்பவருமான ஒருவர் மூலமாக பேரவை சார்பாக வலியுறுத்தி கேட்ட போதும் அதனையும் தாங்கள் அலட்சியப்படுத்தியது ஏன்?

5) நீங்களே உங்கள் விளக்க அறிக்கையில் - நமதூரின் அனைத்து ஜமாஅத்தாரும் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்குடன், நகர பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு நானே நேரில் சென்று, ஐக்கியப் பேரவைக்கு நான் அளித்த விருப்ப மனுவின் நகலுடன், பின்வருமாறு தனிக்கடிதம் அளித்தேன் - என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் நமதூர் அனைத்து பள்ளிவாயில்களின் முத்தவல்லிகளின் ஆதரவை கோரியுள்ளீர்கள். இது தவறில்லை. ஆனால் தாங்கள் முச்சரிக்கையின் கையெழுத்திட்டிருந்தால் ஒருவேளை நீங்கள் ஏற்கனவே பள்ளிவாயில் முத்தவல்லிகளுக்கு கடிதம் மூலமாக அளித்த வேண்டுகோள் பயனளித்திருக்கும் அல்லவா? ஏனெனில் அந்த கடிதங்களுடன் பேரவைக்கு அனுப்பிய விருப்ப மனு காப்பியையும் இணைத்திருக்கிறீர்கள். இப்படியிருக்க தேர்வுக்குழு கூட்டத்தில் தங்கள் விருப்ப மனு மட்டும் வாசிக்கப்படாதது போலவும், அதனால் தாங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்களே? இது நியாயமா?

6) விருப்ப மனு கடிதத்தையே உறுதிமொழிப் படிவமாக கருதியிருக்கலாமே என்பது தங்களின் கருத்து மட்டும் தான். அதனை தேர்வுக்குழுவினர் ஏற்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

7) முச்சரிக்கையில் (உறுதிமொழி) கையெழுத்திடாத உங்கள் மனு மட்டும் தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லையா? அல்லது மற்ற கையெழுத்திடாத இருவருடைய மனுக்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

8) நீங்கள் உட்பட உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடாத மூவரின் பெயர்களும் அந்த தேர்வுக்குழு கூட்டத்தில் (ஜலாலிய்யாவில்) வாசிக்கப்பட்டது என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

9) உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடாதவர்களின் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள தேவையில்லை என்று தேர்வுக் குழுவில் பங்கேற்றோர் தெரிவித்த போது, இதற்கு மாற்றுக் கருத்து உடையவர்கள் யாரேனும் உண்டா? என்று கேட்டு நேர அவகாசம் கொடுக்கப்பட்ட பின்பும், எவருமே அக்கேள்விக்கு ஆதரவாக ஒப்புதல் வழங்கவில்லை என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

10) உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடாத மனுக்களை பரசீலிக்க மறுத்தது ஜமாஅத்துக்களின் பிரதிநிதிகளான தேர்வுக்குழுவினரே தவிர, ஐக்கியப் பேரவையினர் இல்லை என்பதாவது தங்களுக்கு தெரியுமா? அக்கூட்டத்தில் ஐக்கியப் பேரவையினர் ஒருங்கிணைப்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருந்தார்கள் என்பதும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் இக்கூட்ட நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தங்களுக்கு தெரியுமா?

11) ஊழலுக்கு துணை போக மாட்டேன், நேர்மையான நடப்பேன் என்பன போன்ற சில நிபந்தனைகளை பதிவு செய்து அதனடியில் கையெழுத்து கேட்டிருக்கலாமே என குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல யோசனை தான். இப்படிப்பட்ட உறுதிமொழிகளை விருப்ப மனு அளித்தவர்கள் அனைவரும் தான் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். அனைவரிடமும் தான் அப்படி கையெழுத்து வாங்க வேண்டியது வரும். ஒருவேளை அந்த மாதிரி சூழ்நிலை ஏற்பட்டு தேர்வுக்குழுவினரால் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லையென்றால் அப்போது தங்கள் நிலை என்னவாக இருக்கும்?

12) பேரவையில் எனது தன்னிலை விளக்கத்தை அளித்தபோதும், பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழு கூட்டத்தில், பொதுவேட்பாளர் என்று ஒருவர் தேர்வு செய்யப்பட்ட பின்னரும், உன்னைத்தான் தேர்ந்தெடுக்க எல்லோரும் நாடியிருந்தோம்... இப்படி தேடி வந்த சீதேவியை எட்டி உதைத்துவிட்டாயே...? என்று பலர் என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர். இப்போது எனக்கு இருக்கும் சந்தேகமெல்லாம், ஆபிதாவாகிய என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தால், ஏன் மற்றவர்களிடமெல்லாம் விருப்ப மனு கேட்டனர்...? எதற்கு இந்த பொது வேட்பாளர் தேர்தல்...? இது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. என குறிப்பிட்டுள்ளீர்கள். இதில் ஒன்றும் புதிர் இல்லை. தங்கள் மீது நல்லெண்ணம் வைத்திருக்கும் சில நல்லவர்கள் தாங்கள் முச்சரிக்கையில் கையொப்பமிட்டிருந்தால் ஒருவேளை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாமோ என்ற நினைப்பில் எழுந்த ஆதங்கத்தின் பிரதிபலிப்பே அது. நீங்கள் குறிப்பிடுவது போல் அதில் புதிரில்லை. தங்களை மதித்து ஆதரவாக தெரிவித்த கருத்தையே பேரவைக்கு எதிராக திருப்பியிருப்பது தான் எங்களுக்கு புதிராக தெரிகிறது.

13) இதுதான் நடந்த உண்மை நிகழ்வுகள் என்பதை அல்லாஹ்வை சாட்சியாக்கி உங்களிடம் திறந்த மனதுடன் தெரிவித்துள்ளேன். என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு தவறான வழிகாட்டும் சிலரால் பரப்பப்படும் வதந்திகளை நம்பி தயவு செய்து இனி இவ்விசயத்தில் அல்லாஹ்வை சாட்சியாக்காதீர்கள்.

14) ஐக்கிய பேரவையின் ஆதரவு பெற்ற வேட்பாளராக என்னை தேர்ந்தெடுக்காமல் நிராகரித்து விட்டால் நமது செயல்பாடுகள் முடக்கப்பட்டு விடுமோ, நமது நல்ல எண்ணங்கள் நசுக்கப்பட்டு விடுமோ என்ற உண்மையான ஆதங்கத்தின் காரணமாக மட்டுமே எனக்கு கையொப்பமிடுவதற்கு தயக்கமாக இருக்கிறது என தாங்கள் அறிக்கையோடு இணைத்துள்ள (ஐக்கியப் பேரவைக்கு எழுதிய) கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதை ஒரு வாதத்திற்கு சரியென்றே எடுத்துக் கொண்டால், விருப்பமனு தந்த மற்றவர்களும் இதே வாதத்தை முன்வைத்தால் எப்படி தான் மனுக்களை பரிசீலித்து பொது வேட்பாளரை தேர்வு செய்ய முடியும்? தங்களைப் புறக்கணிக்க ஐக்கிய பேரவைக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? அதையாவது சொல்லுங்கள்.

அன்புள்ள நமது ஜமாஅத் சகோதரி அவர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோள். ஊரின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது வாக்குகள் நம்மிடையே உள்ள பிரிவினையால் சிதையும் போது எதிர்பாராத வருந்தத்தக்க பின்விளைவுகளை சற்று எண்ணிப் பாருங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் நஷ்டப்படுவதில்லை. பெருந்தன்மையாக தாங்கள் முடிவெடுத்தால் காலம் தங்களுக்கு உரிய மரியாதையை வழங்கும். எனவே தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யுங்கள். ஜமாஅத்துக்களின் பொது வேட்பாளர் இன்ஷா அல்லாஹ் அடையும் வெற்றியில் தங்களின் ஒத்துழைப்பும் இணையட்டும். வருங்கால காயலின் வரலாறு தங்களை வாழ்த்தும். இதனை ஏற்பதும் மறுப்பதும் தங்களின் உரிமை. வல்ல இறைவன் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!. ஆமீன்.

வஸ்ஸலாம்.

இப்படிக்கு,
S.M. உஸைர் (தலைவர்).


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
S.A. முஸ்தபா (செயற்குழு உறுப்பினர்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Mohideen - PS (Hong Kong) [06 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9794

அஸ்ஸலாமு அலைக்கும்

மிக தெளிவான விளக்கம் . இதற்கு மேல் நம் ஊர் மக்களக்கு விளக்கம் தேவை இல்லை என கருதுகிறேன் . அனைவரும் நம்முடைய பொது வேட்பாளர் ஹாஜ்ஜா மிஸ்ரியா வை ஆதரித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by izzadeen (chennai) [06 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9796

please obey your jammath decision. next time try get same post, shaik matchan give advice,thanks.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ...தேர்தல் நாள் = 17 - 09 - 2011 அன்று மக்கள் தீர்ப்பு சொல்வார்கள்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9797

இதற்க்கு காலம் தான் பதில் சொல்லும் அது வெகு விரைவில் இல்லை...! தேர்தல் நாள் = 17 - 09 - 2011 அன்று மக்கள் தீர்ப்பு சொல்வார்கள்..

நட்புடன், தமிழன் முத்து இஸ்மாயில். வி சி கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by PIRABU MUJEEB (Riyadh-KSA) [06 October 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9802

மாஷல்லாஹ் அருமையான விளக்கம் இதற்கு ஆபிதா உடைய பதில் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by syed omer kalami (colombo) [06 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9803

What is this 2nd statement from PUTHUPALLI THALAIVAR ?Even AIKIYA PERAVAI did take this issue and give explanation.why you again?People think,some ever something wrong.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Shaik Sadakathullah (Chennai) [06 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9804

Sister Abida,

This is time for you to answer.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [06 October 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 9805

S .M .உஸைர் காக்கா அவர்களின் அறிக்கை மிகத்தெளிவாக இருக்கிறது.அவர்கள் இங்கு சொல்லுவதை எல்லாம், நான் பல கமெண்ட்ஸ்களிலும் தெரிவித்துவிட்டேன்.வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்து இல்லை.

சகோதரி ஆபிதா அவர்களை, ஒருசிலர் தவறான் ஆலோசனை வழங்கி வருவதன் பேரில் , இவரும் தவறான் முடிவையே எடுக்கிறார் . இதன் மூலம் . சகோதரிக்கு சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் இருப்பதாக தெரியவில்லை.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள்.எப்பாடுபட்டேனும் நாம் ஊர் இரண்டாக அனுமதிக்கக்கூடாது. இப்போதும் கூட சகோதரிக்கு, தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது .

தேர்தலிலிருந்து விலகி , ஐக்கிய பேரவையின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கலாம். சகோதரி மிஸ்ரியாவின் வெற்றியில் நீங்களும் பங்கெடுக்கலாம். இதிலும் அல்லாஹ் உங்களுக்கு நன்மையையே நாடி இருப்பான்.

இவ்வாறு கேட்பதினால் , உங்களுக்குத்தான் அதிக ஆதரவு இருப்பதாக நினைத்து இறுமாப்பு கொள்ளவேண்டாம். விட்டுக்கொடுப்போர் கெட்டுப்போவதில்லை. முடிவெடுப்பது உங்கள் கையில்.

எடுப்பது நல்ல முடிவாக இருக்க இறைவனிடம் கையேந்துவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சரியான நேரத்தில் விரிவான விளக்கம்
posted by Abdul Razzaq Lukman (Dubai) [06 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9809

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள காயல்வாசிகளுக்கு. நேற்று நகராட்சி தலைவர் வேட்பாளரின் அறிக்கை மற்றும் வாசகர்களின் கமெண்ட்ஸ் படித்தேன். சில விமர்சகங்கள் குறிப்பாக அருமை தம்பி சாஜித்தின் பேரவை பற்றி காரசாரமான கமெண்ட்ஸ் பற்றி ஐக்கிய பேரவை சார்பில் பதில் தந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த நேரத்தில் புதுப்பள்ளி சார்பில் வெளிவந்து இருக்கும் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.

வேட்பாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தது ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்பின் சார்பாக பிரதிநிதியாக வந்தவர்கள்தான். இதில் ஐக்கிய பேரவை வெறும் facilitator மட்டும் தான். சகோதரி ஆபிதா அவர்கள் தனக்கு ஐக்கிய பேரவை அநீதி இழைத்துவிட்டது என்று கூறுவது, அவர் இந்த தேர்வு முறை பற்றிய அறியாமையை காட்டுகிறது.

மேலும் ஒரு முக்கிய நபர் தன்னை அடிக்கடி அலைபேசியில் அழைத்து முச்சரிக்கையில் கையழுத்து போட வலியுறுத்தினார் என்று அறிக்கையில் சொல்லியுள்ளார். அந்த முக்கிய நபர் யார் என்று தெரிவித்தால், அவருக்கும் ஐக்கிய பேரவைக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியும். ஆனால் அவர் உங்களை(சகோதரி ஆபிதா) போட்டியில் இருந்து விலக சொல்லவில்லை. மாறாக நீங்களும் போட்டியில் நீடிக்க (தகுதி பெற) முச்சரிக்கையில் தான் கையழுத்து போட சொல்லியுள்ளார்.

இன்னும் ஒன்றும் முடிந்துவிடவில்லை. நீங்கள் நன்றாக சுயமாக யோசித்து போட்டியில் இருந்து விலகி அணைத்து ஜாமாத்தார் தேர்ந்தெடுத்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன். அதைவிடுத்து சிலரின் தவறான ஆலோசனையை கேட்டு போட்டியில் நீடித்தால், அது உங்களின் நற்பெயருக்குத்தான் கேடு. அல்லாஹ் நமது ஊருக்கு நன்மையை செய்யும் வேட்பாளருக்கு வெற்றியை தருவானாக. ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by fathimaahmed (kayalpatnam) [06 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9812

ஹஜியார் uzair அவர்களின் கருத்துக்கள் சரியானது என்றால் சகோதரி ஆபிதா கூறிய அனைத்தும் ஐகியபேரவை க்கு எதிரானது என்றே நினைக்கிறன். அல்லாஹு அக்பர்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Mohideen (Jeddah) [06 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9815

அடுத்து சகோதரி ஆபிதா அவர்களின் இரண்டாவது அறிக்கை வரும்.

எப்பப்பப்பா இப்பமே கண்ணை கட்துதே..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by sulaiman (abudhabi) [06 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9818

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரி ஆபிதா அவர்கள் சிந்திக்கும் திறனை வளர்துகொள்ளவண்டும். தனுடிய ஜாமத் & ஊரு ஜாமத் மேலும் ஊரின் பெரும்பான்மையோரை பகைத்து கொண்டு. யாருக்கு சேவை புரியபோகின்றீர்கள். மக்கள்களுக்கு சேவைசெய்யவண்டும் என்ற உங்களின் சிறு வயது நல்ல எண்ணம் ,தலைமை பதவி என்ற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது .இந்த ஆசை நகர் மன்ற தலைவியாக எப்படியாவது வந்து விடவேண்டும் என்ற மமதையை உண்டுபண்ணி இருக்கிறது.

இதற்கலாம் கடிவாளம் போடுவது போல் ஐக்கிய ஜாமத். வேட்பாளரை தேர்ந்து எடுக்க களமிறங்கி ரூல்ஸ் போட்டதால். சகோதரி ஆபிதா அவர்களுக்கு ஒருவேளை நாம் அணைத்து ஜாமத் வாக்கெடுப்பில் தோற்றுவிட்டாள் நம்முடிய தலைவி பதவி ஆசை கானல் நீரை போல் ஆகிவிடுமோ என்ற எண்ணத்தின் வெளிபாடுதான் ஊரின் ஒற்றுமைக்கு ஊரு விளைவிக்கும் இந்த முடிவு .

சிந்தனை திறன் குளறுபடியால் எற்பட்ட இந்த ஊரு விளைவிக்கும் முடிவை சகோதரி ஆபிதா அவர்கள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் .இல்லையன்றால் நம்முடிய மக்களால் இன்ஷாஅல்லாஹ் இவர் தோற்கடிக்கபடுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by kudack buhari (Qatar) [07 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9833

இதன் மூலம்:புதுப்பள்ளி நிர்வாகத்தின் உண்மை நிலை தெரிய வந்தது ஐக்கிய பேரவை,தெளிவான முடிவை எடுத்திருக்கிறது, வேறு வழி இல்லை வாபஸ் வாங்கிகொள்ளுங்கள் ,அல்லா உங்களுக்கு நன்மையை நாடி இருபான் .

you r right person but u have bad advisor


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. பேரவை செய்யுமா?
posted by M Sajith (DUBAI) [07 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9834

ஒன்றுக்கு இரண்டாக தன்னிலை விளக்கமளித்து தன்னால் இயன்ற வரை வெளிப்படையாகத்தான் நடந்து கொண்டோம் என்பதை தம் ஜமாத்தினர் மட்டுமல்லாது கயலின் எல்லோருக்கும் அறியத்தர வேண்டும் என்ற இந்த செயல் அந்த ஜமாத் நிர்வாகிகளின் நல்ல செயல்பாட்டின் பிரதிபலிப்பு.

பேரவையின் அனுதாபிகள் பரிந்துரைக்கும் 'நேரில்' வந்துதான் கேட்கவேண்டும் என்றில்லாமல், மக்களின் சந்தேகங்களை களையும் முகமாக கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் தரவேண்டும் என்னும் இந்த செயல் பாராட்டுக்குறியது.

'முச்சரிக்கை' என்னும் புதுமையான பழக்கத்தை பலரையும் போல இவர்களும் சரிகண்டிருப்பது மிகவும் வருத்தம். (It is an undemocratic, authoritative and unlawful practice to enforce against a birth right. That too written and singed by office holders, enough to file a case against) இதில் கையெழுத்திட வலியுருத்திய நீங்கள், இதனால் எற்படப்போகும் பின்விளைவுகளையும் குழப்பங்களையும் உணர்ந்திருந்தால் நிச்சயம் அதை செய்ய்திருக்க வாய்ப்பில்லை.

யார் தலையில் உதித்த உன்னதமான ஐடியாவோ தெரியவைல்லை இந்த 'முச்சரிக்கை' இத்துணை குழப்பத்துக்கும் 'ROOT CAUSE' இது தான். இதனால் தான் இன்று நம் தரப்பில் 5 போட்டியாளர்கள்.

சரியான சிந்தனையுள்ள யவரும் இந்த முச்சரிகை காலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. இதை மீரியவர்களை இதைவைத்து எந்த நடவடிகையும் எடுக்க இயலாது. மக்களின் நிராகரிப்புத்தன் வழி.

இந்த 'முச்சரிக்கை' முசீபத்து இல்லதிருந்தால், பேரவை விருப்பமனு அளித்த அனைவரையும் பேரவை நிராகரிக்காமல் வாக்களிப்புக்கு உட்படுத்தி இருக்கலாம். அதிகம் வாக்கு பெற்றவரை வேட்பாளராக்கி இருக்கலாம், அடுத்து வருபவரை மாற்று வேட்பாளர் என வெளிப்படையாக அறிவித்து இருக்கலாம். உம்மா, கம்மா டிராமா எல்லாம் அவசியமில்லை.

சற்றே காலதாமதம் என்றாலும், இந்த விளக்கம் முலம் புதுப்பள்ளி நிர்வாகத்தில் நிலைப்பட்டை வெளிப்படையாக்கியது நல்ல முன்மாதிரி.

அது போலவே பேரவையும் முச்சரிகையின் இன்றியமையாமை, வேட்பாளரகள் பெயரை 'இரகசியம்' காத்தது, தாயாரை மாற்று வேட்பாளராக்கியதன் அவசியம் (அல்லது ஒரு மறுப்பு), தேர்வுக்குழு லிஸ்டில் விடுபட்ட அமைப்புக்கள் (அழைக்கப்படவில்லையா ?) போன்ற விபரங்களுடன் ஒரு தன்னிலை அறிக்கை தரவேண்டும் இது ஒன்றுதான் இழந்த நம்பிககையை மீட்டுத்தர ஒரே வழி.

செய்யுமா பேரவையின் இப்போதைய நிர்வாகம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Mohamed Cnash (Kayalpatnam.) [07 October 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 9836

ஏன் இப்படி வரிந்து கெட்டி கொண்டு 1,2,3,4, .....என்று அறிக்கை விட்டு கொண்டு இருகிறார்களோ தெரியவில்லை.. இன்றைக்கு வெளிவந்து இருக்கும் ஒட்டு எடுப்பில் கலந்து கொண்ட இயக்கமான KWT இன் அறிக்கையை கொஞ்சம் பாருங்கள் எப்படி எல்லாம் SET -UP நடந்து வஞ்சிக்கபட்டு இருக்கிறார் என்று. ..அல்லாஹ்விற்கு பயந்து சொல்லுங்கள் அங்கே கலந்து கொண்ட அனைவரும் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தங்கள் சுயமாகத்தான் பொது வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தார்களா!! நீங்கள் எல்லாம் உங்கள் ஜமாத் மக்களில் எண்ணங்களை தான் அங்கே பிரதிபலிதீர்களா?

சஹோ. ஆபிதா ஒற்றுமை என்ற பேரில் பலிகடா ஆகாமல் தப்பி விட்டார், அறியாமலோ இல்லை இவர்கள் மேல் உள்ள நம்பிக்கையாலோ சகோ. வாஹிதா அவர்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டார். அதனால் தான் வேட்பாளரின் தாயாருக்கு கொடுக்கப்பட்ட அடுத்த வேட்பாளர் சாய்ஸ் கூட வாஹித அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இன்றுவரை அந்த மர்மம் பற்றி எந்த ஒரு பேரவையும் மக்களுக்கு விளக்கம் தர முன் வர வில்லை.

இப்போ ஆபிதா அவர்களுக்கு அதிகரிக்கும் செல்வாக்கை பார்த்து விட்டு ஒற்றுமை ...கட்டுப்படவில்லை என்ற வேற்று வாதத்தை வைத்து பார்த்தார்கள் அதுவும் எதிர்பார்த்த விளைவு கிடைக்கவில்லை. இப்போது ரூத்தமமாள் வருவார் முனியம்மாள் வருவா என்று பூஞ்சண்டி காட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்!! அப்படி ஒரு அக்கறையும் உணர்வும் இருந்தால் இந்த ஜமாதுகளும் பேரவைகளும் EGO பார்க்காமல் மக்கள் ஆதரவு உள்ள ஆபிதா அவர்களையே பொது வேட்பாளராக அறிவித்து நீங்க அறிவித்த உங்கள் வேட்பாளரை ஊர் நலம் விரும்பி திரும்ப பெற்று கொள்ளலாமே!!! ஒற்றுமைதானே உங்களுக்கு முக்கியம்!!!!

சகோ. ஆபிதா இதை எல்லாம் பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கு நோக்கி நீங்கள் போய் கொண்டு இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தருவான். இருக்கிற கொஞ்ச நாளில் மக்களை சந்தியுங்கள் ...இது போன்ற அறிக்கைகள் உங்கள் concentration ஐ divert பண்ண கூடிய சூழ்ச்சியாக கூட இருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by ISMAIL (KTM) (Hong Kong) [07 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9838

Dear sister pls ignore these pseudo unity people, u carry on with your campaign. Insha Allah you will win. Don’t give importance for these kinds of comments.

“Still they cannot answer why they nominate Sister Mishra’s mother? Why she with draw her nomination? (Who was behind her to do that, so there is no unity between mother and the candidate (sister Mishra))

Why not Mrs. Waheda????????????????????????????????????? How many vote did Mishra’s mother got the Ayikia Perravai meeting

Did Mishra’s mother sign any document from Ayika Perravai? So we can clearly come to a conclusion that candidate selection is predetermined all others happened after that was wrongly organized Drama by Aiyika perravai ( In the Name of Unity)

I don’t know why pudu Palli jammath very much against Sister Abithya Shaik is there any???????

“Almighty Allah knows the best”

Not Only abitha shaik there are 4 other candidate contesting against so called Kayal candidate.

Other Jammath did not behave like Pudu Palli Jammath (any pressure from Pseudo Unity Organization)

SISTER ABITHA SHAIK “U R PEOPLE CANDITATE, U DO MORE DUA WE ALSO DO DUA FOR UR VICTORY,

U WORK HARD INSHA ALLAH VICTORY URS


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:மாத்தி யோசியுங்கள்...
posted by OMER ANAS (DOHA QATAR.) [07 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9840

அற்புதமான விளக்கம் தந்த புதுப்பள்ளி ஜமாத்திற்கு நன்றி இன்னும் இதற்க்கு மேலும் விளக்கம் அவசியம் இல்லை. சகோதரி ஆபிதா, கொஞ்சம் மாற்றித்தான் சிந்தித்து பாருங்களேன். இது உங்கள் இச்ட்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by ashik (Saudi Arabia) [07 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9846

ரொம்ப நீண்ட நெடிய கேள்விகள் ...............

கேள்விகளை பாதி படிக்கும்போதே எனக்கே கண்ணு கட்டுதே .... கேள்விகளே படிக்கும் சகோதரி ஆபிதா என்ன பீல் பண்ணுவாங்களோ .

இந்த கேள்விகளை எல்லாம் படித்து அதுக்கு சகோதரி ஆபிதா பதில் அனுப்பினால் அதே படிக்கும்போது தலையே சுத்துமே... எப்பாடா .

ஸ்கூல், காலேஜ்ல கூட evalo பெரியே கேள்வி கேட்க மாட்டாங்க ஏன்டா இருக்கிற 2 மணி நேரத்துலே கேள்வியே மட்டுமே படிச்சா எப்போ பதிலே எழுதுவது ..

சகோதரி ஆபிதா கண்டிப்பாக பதில் போட வேண்டும் ஆனா அதுக்கு ரொம்ப அவசரம் இல்லே .. நீங்க campaining பிசியா இருக்கலாம் . 17 தேதிக்கு அப்புறமா ஆற அமர்ந்து ஆலோசித்து பதில் போட்டா போதும் ..ஆனா உங்க பதில் இதே போலே ரொம்ப பெருசா போட்டு விடாதீர்கள் .. கட்சிதமா ஒரே வரியில் குறிப்பிட்டால் போதும்...

kwt அறிக்கை கொஞ்சமா இருந்தாலும் colorful ஆ இருக்கு .. அதை படிக்கலாமே ...

அல்லாஹ்வே! ஆட்சியாளர்களுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். (திருக்குர்ஆன் - 3:26)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by zainab (kayalpatnam) [07 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9857

அஸ்ஸலாமு அழைக்கும்

ஊரின் மீதும் ஊர் ஒற்றுமை மீதும் அக்கறை கொண்ட நாம எல்லாரும் வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு என்று ஒரே வேட்பாளரிடம் நச்சரித்து கொண்டு இருக்காமல் அமைதியான முறையில் அல்லாஹிவிடம் ஊர் நன்மைக்கு யார் போருத்தமனவரோ அவரை தலைவராக்கும் படி பிரார்த்திப்போம் தகுதியானவரை தேர்தெடுக்க வல்ல நாயன் நமுக்கு ஹிதாயத் செய்வானாக !!

அல்லாஹ் மிக அறிந்தவன் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [07 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9859

ஆ சரி இது 2 வது அறிக்கை இன்னும் எத்தனை அறிக்கை வர காதிருக்க்றதோ. பாவம் புலி அடிக்கும்முன்னால் கிலி அடித்து விட்ட கதைபோல் ஆகிவிட்டது.

சகோதரி ஆபிதா அவர்களே நீங்கள் இனி எந்த அறிக்கைக்கும் பதில் அளிக்கவேண்டாம்.மக்களை நேரிடியாக சந்தித்து உங்கள் ஆதரவை கேளுங்கள். மனசாட்சியும் கண்ணியமும் நிறைத்த காயல் நகர மக்கள் கைகொடுப்பார்கள்.

ஐக்கிய பேரவையின் அவலட்சணத்தை 'KWT ' தோலுரித்து காட்டியருக்கிறது அதற்கு அறிக்கை மூலமாக மக்களுக்கு விளக்கம் தருட்டும் பார்க்கலா.ம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Mohamed Rafeek (DUBAI) [07 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9860

அஸ்ஸலாமு அலைக்கும்

இது புதுப்பள்ளி ஜாமத்தின் அறிக்கை என்பதை விட ஐக்கிய ஜாமத்தின் அறிக்கை என்றே சொல்லலாம்.என் என்றால் ஐக்கிய ஜமாத்தின் நிலைப்பாடு சரி என்றே சொல்லுகின்றது இந்த பதிவு . இந்த கேள்விகளுக்கு ஐக்கிய ஜமாஅதிடம் பதில் வந்தால் நல்லது

1 ஊரிலேயே தங்காத திருச்சியில் குடும்பத்தோடு தங்கும் வேட்பாளருக்கு ஊர் நடப்பு எப்படி தெரியும். ஒவ்வொரு நாளும் எப்படி பிரச்சினை வருகின்றது? என்று நேரில் பார்த்த வேட்பாளருக்கு தானே தெரியும். இப்போதான் தேர்தலுக்காக தனது வாக்காளர் அடையாளத்தை திருச்சியில் நீக்கும் வேட்பாளர் எப்படி ஊருக்கு நன்மை செய்வார். அவர் நான் தலைவராக தேர்ந்து எடுத்தால் ஊரிலேயே தங்கி மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொன்னாரா?

2 மாற்று வேட்பாளர் தாயார் எந்த உறுதி படிவத்தில் கையெழுத்து போட்டார். மொத்தத்தில் அந்த குடும்பத்தில் யாராவது ஜெய்க்க வேண்டும் என்ற நோக்கம் தானே ஐக்கிய பேரவைக்கு. இதேதான் சகோதரி ஆபிதாவும் பயந்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by N.ABDUL KADER (COLOMBO) [07 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9865

அஸ்ஸலாமு அழைக்கும் .....ஊர் மக்கள் இடையை குழப்பம் பண்ணு வதை நிருதுகள்......யார் யார்ரையும் தேர்த்து எடுக்க முடியாது........எல்லா செயல் களிலும் அல்லாஹ் வை அஞ்சிகொல்லுகள்.........இன்ஷா அல்லாஹ்

அல்லாஹ் யாரை நாடி நானோ அவர் வெற்றி பெறுவர்...........அல்லாஹ் அனைத்தும் அறிதவன்........இந்த வருடம் ஹஜ் கு போஹா இருக்கும் ஹாஜி கல் அன்னை வரும்............................நமது உரு ஒற்றுமைக்க ஆஹா இறைவனின் இல்லமாம் காபா வில் அன்னை வரும் ஒட்டுமையஹா வாழ துவ செயுகள்.....அல்லாஹ் உங்கள் துவா களை...கபுள் செய்வனநாஹா ................ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. புதுப்பள்ளியில் 'முச்சரிக்கை' கையெழுத்து இல்லாமல் எப்படி தேர்வு நடத்த பட்டது...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [07 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9872

'முச்சரிக்கை' கையெழுத்து போடாததால் தான் பொது நல சேவகி ஆபிதா அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் சொல்லும் புது பள்ளி ஜமாஅத்...!

அதே புதுப்பள்ளி ஜமாஅத் அவர்களுக்கு உட்பட்ட வார்டுக்கு உறுப்பினரை எப்படி தேர்வு செய்தார்களாம்..? கொஞ்சம் மக்களுக்கு விளக்க முடியுமா ? 'முச்சரிக்கை' கையெழுத்து போடா விருப்பம் இல்லாத 3 நபர்களையும் சேர்த்து தானே போட்டி தேர்தல் நடத்தினீர்கள்....? இதை உங்களால் மறுக்க முடியுமா ? புதுப்பள்ளி நிர்வாகத்தின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய ஒன்னாவது அறிக்கை..! இரண்டாவது அறிக்கை! னு சும்மா மழுப்ப குழப்ப கூடாது... ஆபிதா அவர்களின் 'முச்சரிக்கை' கையெழுத்து போடாதது ஓன்று தான் தேர்வுக்கு தடையாக இருந்தது என்றால் தாங்கள் புதுப்பள்ளியில் நடை பெற்ற உறுப்பினர் தேர்வில் 'முச்சரிக்கை' கையெழுத்து இல்லாமல் எப்படி தேர்வு நடத்த பட்டது...! இதற்க்கு விளக்கம் தர உங்களால் முடியுமா ?

ஒருவருக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் வேண்டாமே..! ஊர் மக்கள் இப்ப ரெம்ப உசாரா இருகாங்க...

உங்களின் விளக்கத்தை அல்லது உங்கள் நிர்வாகத்தை சார்ந்தோர் இந்த கேள்விக்கு பதில் இதில் பதிவு செய்யவும்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by s.e.m. abdul cader (bahrain) [07 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9875

RESPECTED SISTER IN ISLAM,

PLEASE KEEP YOU AWAY FROM PUBLIC COMMENTS AS WELL AS RESPECT AND COPRATE WITH OUR JAMATH, IT IS GOOD FOR YOU AND YOUR FURTURE, PLEASE DON'T BE IN THE MOOD OF " IT FOR TAT" PLEASE LIVE AND LET LIVE IF DO SO, NOTHING YOU WILL BE LOST.YOUR IMAGE WILL BE RESPECTED IN THE PUBLIC AND IN OUR JAMATH, IT IS MY KIND REQUESTION , THATS'LL, IF YOU ACCEPCT OR REECT, IT IS YOUR CHOICE. WASSALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by drnoordeen (muscat) [07 October 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 9880

இதற்குமேல் என்ன விளக்கம் தேவை எனபது விளங்க வில்லை சகோதரி ஆபிதா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஐக்கிய பேரவைக்கோ நஷ்டம் இல்லை ஒன்று தெளிவாகிறது ஒற்றுமை எனபது நம்ம ஊரை பொறுத்தவரை கஷ்டமாகதான் இருக்கிறது அல்லா நல்லதை நாடி இருப்பான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இப்படி குழப்புறீங்களே?-பாமர மக்கள்.
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [07 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9881

என்னப்பா இது? இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்லுவாங்க!ஆனால்,இக்கரையில் நின்றால் இது பச்சையாத் தெரியுது! அக்கரைக்குப் போனால் அதுவும் பச்சையாத் தெரியுது! ஒரேக் குழப்பமா இருக்கு!

குசும்பு:
இப்படியே நாம கொளம்பிட்டீக்கிறதுக்கு,பேசாமெ ருத்ரம்மாளுக்கு அஞ்சு வருஷத்துக்கு அடாப்பு போட்டுக் கொடுத்துறலாம் போலெ!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [07 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9908

How many of you heard of 'Geobbelsian Theory"?

It means, a falsehood repeated often enough will become a truth. In other words, tell the same lie again and again till it appears to be true. It simply means "False but accurate".

Whether sister Abida answers to all the questions raised or not, I can to the questions No. 9 & 10 providing aikkiya peravai defines "what is election committee" (தேர்வுக்குழு)? and it comprised of who ?

People who can get hold of the copy of the video recorded, will know the answer(s) to the question No.9 & 10.

" And say: "Truth has (now) arrived, and Falsehood perished: for Falsehood is (by its nature) bound to perish." (Al-Quran 17:81)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நடாத்திக் காட்டுங்கள்...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [07 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9912

MUHAMMED ADAM SULTHAAN அவர்களே உங்கள் பேரவை விமர்சனத்துக்கு, நன்றி.

உங்களிடம் இதே பேரவை தரப்பட்டால்? உங்களால் ஓர் அடி நிலத்தை இந்த ஊருக்காக தர முடியுமா? அப்படி தரும் பட்சம். உங்கள் கருத்துக்கு, நான் மற்றும் இன்றி எல்லோரும் வாழ்த்துப் போடுகிறோம். ஊருக்கு உபதேசம் பண்ணும் எண்ணம் உள்ளவர்கள், நடாத்திக் காட்டுங்கள். வாழ்த்துகிறோம்.

ஐக்கிய பேரவை யார் வீட்டு சொத்தும் அல்ல. இப்ப இருப்பவர்கள் செய்துள்ள தியாகம் ஊரால் மறுக்க முடியாதது. ஒரு சிலரின் குழப்பத்திற்கு ஒட்டு மொத்த பெரியோர்களையும் வஞ்சிக்காதீர்கள். உங்கள் இஸ்டம் போல் யாருக்கும் ஒட்டு போடுங்கள். அதுதான் பெருந்தன்மை. யாரோ ஒரு சகோதரி வரட்டும்.!!!.வாழ்த்துவோம். நான் சொல்வதில் குறை இருப்பின்,பொருந்திக் கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Ahamed Meera Thamby (kayalpatnam) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9913

ஊர் ஒற்றுமை என்றால் என்ன ?
ஊர் ஒற்றுமை என்று உறக்க சொல்பவர்கள் விளக்கவும் .

சில தனி நபர்களின் தனிப்பட்ட விருப்பம் எப்படி ஊர்மக்களின் தேர்வாக அமயும்?

பொது வேட்பாளரை அவர்கள் எப்படி தேர்வு செய்தார்கள் ?

அவர்களின் தேர்வு ஒளிவு மறைவின்றி இருந்ததா?

அவர்களாகவே முடிவு செய்தார்கள் , திட்டமும் வகுத்தார்கள , அவர்கள் நினைத்ததை சாதித்தும் விட்டார்கள்.

இவர்களின் இந்த சர்வதிகார சிந்தனைக்கு எதிராக களம் காண்பவர்கள் எல்லாம் ஊர் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்றால், நியாயமற்ற முறையில், பெயரளவில் ஒரு தேர்தலை நடத்தி, தான் விரும்பியவரை பொது வேட்பாளராக களம் கண்டிருக்கும் இவர்களின் செயல் சத்தியத்திற்கும்தர்மத்திற்கும் கட்டுபட்டதா?
சிந்திப்போம் செயல்படுவோம் .

சத்தியம் வந்துவிட்டது ,அசத்தியம் அழிந்து விட்டது . நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியது . ( அல்- குரான்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by அப்துல் காதற் தைக்கா ஸாஹிப் (Riyadh, KSA) [08 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9924

சகோ. ஓமர் அனஸ் அவர்களே.......

தங்களின் கருத்து "உங்களிடம் இதே பேரவை தரப்பட்டால்? உங்களால் ஓர் அடி நிலத்தை இந்த ஊருக்காக தர முடியுமா?"

அப்படியென்றால் பணம் படைத்தவர்கள் தான் ஐக்கிய பேரவையில் இடம் பெற முடியுமா?......... இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுப்பது உலக நியதி, இதற்க்கு ஐக்கிய பேரவை தேவையில்லை.

--------------------------------------

"அப்படி தரும் பட்சம். உங்கள் கருத்துக்கு, நான் மற்றும் இன்றி எல்லோரும் வாழ்த்துப் போடுகிறோம்."

அப்போ பணம் தந்தா, அவர் கூறும் கருத்து தவறாக இருப்பினும் அதை ஏற்று வாழ்த்து போடுவீர்களோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by sathick (buraida) [08 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9929

தமிழர் முத்து இஸ்மாயில், அதே புதுப்பள்ளி ஜமாஅத் அவர்களுக்கு உட்பட்ட வார்டுக்கு உறுப்பினரை எப்படி தேர்வு செய்தார்களாம்..? கொஞ்சம் மக்களுக்கு விளக்க முடியுமா ? 'முச்சரிக்கை' கையெழுத்து போடா விருப்பம் இல்லாத 3 நபர்களையும் சேர்த்து தானே போட்டி தேர்தல் நடத்தினீர்கள்....? இதை உங்களால் மறுக்க முடியுமா ? என்று கேள்வி கணை எழுப்பி உள்ளார்.

தமிழா, புதுப்பள்ளி ஜமாஅத் பெருந்தன்மையா 'முச்சரிக்கை' கையெழுத்து போடாத நபர்களையும் வாக்கு எடுப்புக்கு சேர்த்து உள்ளார்கள். ஐக்கிய பேரவையில் 'முச்சரிக்கை' கையெழுத்து போடாத நபர்களையும் சேர்க்கவில்லை என்றால், அது புதுப்பள்ளி குற்றமா ? புதுப்பள்ளி ஒரு சிறு அங்கம் தான். இதுகூட விளக்கனுமா? அவர்கள் தான் வாக்கெடுப்பில் சேர்க்கலாமா என்று கேட்டு இருக்கிறார்களே?

ஒரு சிலர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, அங்கெ உற்காந்து எதுக்கும் மறுப்பு தெரிவிக்காமல், அல்லது வெளிநடப்பு செய்யாமல், வெளியே வந்து எதிர்த்து பேசினால் எப்படி?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. ஹலோ.. புது பள்ளி நிர்வாகமே... பேரவையை எதிர்த்து இந்த கேள்வியை கேட்க துணிவு இல்லையா ?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9932

ஜனநாயகமான முறையில் களத்தில் இறங்கி இருக்கும் மக்கள் வேட்பாளர் திருமதி ஆபிதா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் - இவர் ஒரு பொது நல சேவகி இவர் நமது நகர் மன்ற தலைவருக்கு பொருத்தமானவர் தான் பேரவை அறிமுக படுத்திய வேட்பாளரின் கடந்த கால அனுபவம் ஏதாவது கூற முடியுமா ? ஒன்னும் கிடையாது...! சும்மா பேரவை தேர்ந்து எடுத்தால் மட்டும் போதுமா ? திருமதி ஆபிதா அவர்கள் அணைத்து சமூக மக்களின் நன்மதிப்பை பெற்றவர்... கடந்த பத்து வருடமாக பொது சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர்கள் இதில் எந்த சந்தேகமும் கிடையாது.. பேரவை தேர்ந்துடுத்த வேட்பாளர் திருமதி மிசிரியா அவர்களின் (தாயார்) மாற்று வேட்பாளர் பேரவைக்கு முச்சரிக்கை கையப்பம் போட்டாரா ? மாற்று வேட்பாளர் நியாயமாக யாராக இருக்க வேண்டும் என்றால் முச்சரிக்கை கையபம்மிட்ட 2 வதாக 3 வதாக வந்தவர் அல்லவா.. திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளராக இருக்க வேண்டும்... புது பள்ளி நிர்வாகத்திற்கு இது தவறாக புரியவில்லையோ ? பேரவையை எதிர்த்து இந்த கேள்வியை கேட்க துணிவு இல்லையா ?

ஹலோ.. புது பள்ளி நிர்வாகமே... ஊர் மக்கள் ரெம்ப தெளிவா இருக்காங்க... வருகிற 17ஆம் தேதி இதுக்கு முடிவு தெரியும்...!

தமிழன் முத்து இஸ்மாயில் (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by mariyam thahira (chennai) [08 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9935

புதுப்பள்ளி ஜமாத்தினரின் கேள்விகள் அனைத்தும் ஆபிதா அவர்களின் அறிக்கைக்கு சம்மட்டியடி. எங்கள் இறைவா, பதவி ஆசை (வெறி) உள்ள ஆபிதா அவர்களை தேர்தலில் தோற்கடித்து காயல் நகரையும், மக்களையும் காப்பாற்றுவாயாக! காயல் நகர பொது வேட்பாளரான எல் எஸ் எம் மைமூனத்துள் மிஸ்ரியா அவர்களுக்கு வோட்டளித்து வெற்றி பெற செய்வோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by AHMED MOHIDEEN (dubai) [08 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9941

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரி மிஸ்ரியா வெற்றி பெற்றால் ஐக்கிய பேரவைக்கு வெற்றி

சகோதரி ஆபிதா வெற்றி பெற்றாலும் ஐக்கிய பேரவைக்கு வெற்றிதான்

B COZ ஐக்கிய பேரவை முதலில் தேர்ந்தெடுத்தது சகோதரி ஆபிதாவைதான்

இதுதான் உண்மை தயவு செய்து இனி இந்த எழுத்து போரை நிறுத்திகொள்ளவும்

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி எழுத வேண்டாம்

ELECTION முடிந்த பிறகு நாம் நாம் மாமா மச்சான் சகோதரன் சகோதரி

யார் வெற்றிபெற்றாலும் ஊர் பெரியவர்களின் வழிகாட்டலில் ஊழலில்லா நேர்மையான ஐந்தாண்டு ஆட்சியை தரவேண்டும்,

இன்ஷா அல்லாஹ்

அஹ்மத் முஹியதீன்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:புரிந்தும் புரியாதவர்கள்...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [08 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9942

தம்பி தைக்கா சாஹிப், கருத்தை புரிந்து பதில் சொல்ல பழகவும்.ஆதம் கருத்து பேரவையை குறிவைத்து குற்றம் சாட்டும் முகமாக இருப்பதால் நான் பதில் எழுதினேன். நீ சொல்வது பேரவைக்கு நான் ஜால்ரா அடிப்பதாக இருக்கின்றது. முதலில் கருத்தின் அர்த்தத்தை படிக்க பழகவும். பின்பு பதில் எழுதவும்.

நான் யாருக்கும், ஜால்ரா அடிப்பவன் இல்லை! யாரையும் குற்றம் சொல்லும் முன்பு, அவர்கள் யார் என்று பார்ப்பதை விட அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். நானும் நீயும், தேர்தலுக்குப் பின், வெற்றி வேட்பாளருக்கு வாழ்த்து மட்டும் சொல்லி விலகிப் போய் விடுவோம். ஏன் ஊரை மறந்தும் விடுவோம். அவர்கள் அப்படி பட்டவர்கள் அல்ல .

இப்ப புரிந்தும் புரியாமல் இருக்கும், பலருக்கும் இது புரியும். வியாபார நோக்கத்தோடு மட்டும்,தொழில் செய்துக் கொண்டு இருப்பவர்கள்,தன்னை தொண்டு செய்கின்றேன் என்று அறிமுகம் படுத்தும் காலம் இது.! புரிந்து கொள்ளவும். ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு,கொண்டாட்டமாம்.!!! ஊரில் எப்பவும் என்ன நடக்கிறது என்று கவனிக்கவும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [08 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9946

ஒரு நண்பர் "முச்சரிக்கை - என்ன புதிய கலாசாரம்" என்று கேட்டுகொண்டே இருக்கிறார், பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு தெரியும் எல்லா சமுதாயத்திலும், இயக்கத்திலும் எப்போதே இருந்துவரும் வழக்கம்தான். ஒருவேளை "முச்சரிக்கை" என்ற வார்த்தை புதிதாக தெரிகிறதோ?. ஒரு விவாதத்துக்குரிய பொறுப்புக்கோ பிரச்சனைக்கோ ஒன்றுக்கு மேலான கருத்து மோதல் வரும்போது அதில் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாங்குவது என்பது எல்லா முஹல்லாவாசிகளுக்கும் தெரியும்.

அதற்காக ஒருவர் "முச்சரிக்கை" யில் கையெழுத்து தந்துவிட்டு நிர்வாகத்தின் முடிவுக்கு மாறாக ஒருவர் செயல்பட்டால் அவரை இந்திய சட்டப்படி ஒன்றும் செய்ய முடாது என்பது எல்லோருக்கும் புரிந்ததுதான், (ஒரு வேலை மற்ற ஊர்களில், சமுதாயத்தில் ஒருவர் அந்த அமைப்பின் முடியுக்கு மாறு செய்துவிட்டால் அவரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள், அப்படியா ஒரு கட்டுகோப்பான ஒரு அமைப்பு ஒருபோதும் நமதூரில் வர வாய்ப்பு இல்லை இப்படி நம்மைபோன்று தவற்றை தேடித்தேடி எழுதிக்கொண்டிரும்வரை),

இது ஒரு புரிந்துணர்தல் ஒப்பந்தம்தான், ஒரு நிர்வாக அமைப்புக்கு எழுத்துபூர்வம் வாங்குவார்கள் அவர்களின் கோப்புக்காக வேண்டி. அதே சமயம் தவறு யார் செய்திருந்தாலும் அதற்க்கான விளைவை அவர்கள் அடைந்தே தீர்வார்கள், சுய லாபத்திற்காக பொறுப்புகளை பயன்படுத்தினால் அவர்களின் அழிவை அவர்களே தேடிகொண்டவர் ஆவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by mammaash (qatar) [08 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 9951

ஐக்கிய பேரவை தேர்வு செய்த வேட்பாளரை kanmoodithanamaha ஆதரிகின்றது என்று இங்குள்ள விவாதங்களை பார்க்கும்போது தெரிஹின்றது .ஏன் அப்படி ஆதரிக்க வேண்டும் .அதனால் என்ன பயன் ஐக்கிய பேரவைக்கு? என்ன சூழ்ச்சி செயஹிரர்ஹல்?ஏன் சூழ்ச்சி செயஹிரர்ஹல் ?அப்படி யாரெல்லாம் இருகிரர்ஹல் பெறவில் pls யாராவது விளக்கமளிக்கவும்?ஒன்றும் புரியவில்லை ஒரே சண்டைய கேடக்குடுனு மட்டும் தெரிது ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. புத்தகத்தை நீங்கள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை தயவு செய்து கிழிக்காதீர்கள்
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [08 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9957

எங்கள் இறைவா, பதவி ஆசை (வெறி) உள்ள ஆபிதா அவர்களை தேர்தலில் தோற்கடித்து காயல் நகரையும், மக்களையும் காப்பாற்றுவாயாக!

சகோதரி அவர்களே ... அப்படி அவர் காயல் நகருக்கும், காயல் மக்களுக்கும் என்ன தீங்கு செய்துவிட்டார் ..? அவர் பதவி ஆசை (வெறி) க்காக நிற்கின்றார்கள் என்றால் உங்கள் ஆதரவு வேட்பாளர் எதற்காக நிற்கிறார் ....??? பதவி வெறிக்காக யார் செயல்பட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம் உங்களுக்கு தெரியாமல் போனது ஏனோ ...?? ( உம்மா ,மகள் வேட்புமனு தாக்கல்)உங்கள் கருத்தில் சிறிய திருத்தம் செய்யுங்கள் காயல் நகர பொது வேட்பாளர் என்பதற்கு பதில் பேரவை பொது வேட்பாளர் என்று போடுங்கள் .....

ஜமாத் அவர்களே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான் .நீங்கள் பேரவையின் முக்கிய பொறுப்பாளி என்பதற்காக அதற்கு ஆதரவு செலுத்துவதை நான் குறை கூறவில்லை அது மனித இயல்பு. அதற்காக தங்க ஊசி என்பதற்காக கண்ணை குத்த முடியாது அல்லவா ...????

ஆனால் நீங்கள் சகோதரி ஆபிதா விசயத்தில் எடுத்த முடிவு தன் விரலை கொண்டு தன் கண்ணை குத்தியதற்கு சமம். தயவு செய்து நம் ஜமாஅத் வேட்பாளரின் புத்தகத்தை நீங்கள் படிக்கா விட்டாலும் பரவாயில்லை தயவு செய்து கிழிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by K.D.N.MOAMED LEBBAI (JEDDAH) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9960

அஸ்ஸலாமு அல்லைக்கும்

ஆபிதா அவர்களுக்கு

நீங்கள் உங்கள் ஜமாதுடன் & ஊருடன் ஓத்து போவதுதான் உங்களுக்கும் சரி & ஊருக்கும் சரி நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [08 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9962

சகோதரர் OMER ANAS அவர்களே, ஐக்கிய பேரவையின் அனைத்தையும் நான் எதிர்ப்பது போல் எழுதி இருக்கிறீர்கள். தவரான கணிப்பு. நான் ஐக்கிய பேரவையுடன் எவ்வளவு ஈடுபாடுடையவன் என்பது ஐக்கிய பேரவையில் உள்ளவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும்.

அதற்காக அநியாயத்தை தட்டி கேட்க்காமல் இருக்கும் குணமுடையோன் அல்ல. இந்த ஊருக்கும், இந்த ஐக்கிய பேரவைக்கும் நான் என்ன செய்திருக்கிறேன் என்று என் வாயால் சொன்னால் அது தற்புகழ்ச்சியாகிவிடும்.

ஒன்று இரண்டு வருடம் அல்ல 30 வருட பொதுவாழ்க்கை பயணம். "முஹம்மது ஆதம் சுல்தான்" யார் என்று சற்று தீர விசாரித்து விட்டு விமர்சிக்கவும். உங்களுடைய எந்த விமர்சனத்திற்கும் விளக்கமும் பதிலும் தர தயாராக் உள்ள சகோதரன் தான் நான்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Noohu Amanullah (Makkah) [08 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9965

இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது..ஊர் மக்கள் ஜமாஅத், பேரவை இவங்க யாரோட பேச்சையும் கேட்டு நடக்குற மாதிரி தெரியவில்லை. அதுக்கு அப்புறம் ஏன் விளக்கம் கொடுத்து டைம் வேஸ்ட் பண்றீங்க. போட்டின்னு வந்ததுக்கு அப்புறம் அதா பார்த்துட்டு முடிவு பண்ணலாமே.. நீங்களும் பிரசாரம் பண்ணுங்க வெற்றி தோல்வின்னு இருக்கு.. பார்க்கலாம் இப்டிலாம் சீரழிகிறது..கொடுமை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Eassa Zakkariya (Jed) [08 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9966

அன்பின் காயலின் அடையாளங்களே! என் மனதில் பட்டது பெரியவர்களின் பக்குவம் கலந்த தொலைநோக்கு பார்வை அது போன்று சிரியவர்களின் வேகம் கலந்த தொலைநோக்கு பார்வை இந்த இரண்டையும் கூட்டினால் விவேகம் கலந்த நாளைய சமுகம்; வேண்டி துஆ செய்வோம் -ஆமின்

நம் கருதில்லிருந்து ஒருவர் முரண்படுகிறார் என்பதால் அவர் நம்மைவிட்டு பிரிந்தவருமஅல்லர் ; எதிரானவரும் அல்லர் எப்படியெனில் நேர் எதிர்மறையை கொண் அமர்திருக்கும் இரண்டு நண்பர்களிடம் கேள்வி யாதெனில் ; உங்களின் வலது "கை" எது என்றால் ; பதிலாக அவரவர் வலது "கை எதுவோ அதை சொல்லுவர்

திசை நோக்கி பார்த்தல் முரண்பட்டதாக தெரியும்; அனால் இரண்டும் சரியே

கிருபயுள்ள ரஹ்மான் நம் இதயங்களை செம்புலத்து பிரியா நீர்போல் ஆக்கி அருள்புரிவானாக -ஆமின்

We splitting Ourselves (Wther we know or not) every 25 years by saying any one of conflicts or Reson which depends upon our understanding Capability.

"அறிவு" பெரும்பாலும் மற்றவரின் "அறிவை" மறுபதற்கே பயன்படுகிறது

May Almigjty Allah Be With Us (Always) - Ameen Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [08 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9970

சகோ ஒமர் அனஸ், தங்களின் கருத்து, "உங்களிடம் இதே பேரவை தரப்பட்டால்? உங்களால் ஓர் அடி நிலத்தை இந்த ஊருக்காக தர முடியுமா?" இதற்க்கு எனக்கு தெரிந்த தமிழில் நான் புரிந்து கொண்டதை, என்னுடைய முந்தய கருத்தில் சொன்னேன், இதற்க்கு வேறு கருத்து தாங்கள் கொண்டிருந்தாள், விளக்கம் தரலாம். (தவறாக இருந்தால் திருத்தி கொள்ளலாமே?)

மேலும் ஐக்கிய பேரவை என்பது அனைத்து தரப்பினரையும் சார்ந்ததாக இருக்க வேண்டும், (ஊர் ஒற்றுமை என்று வரும்பொழுது அந்த பேரவையில், அனைத்து இயக்கம், கொள்கை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும்) அப்பொழுதுதான் அந்த இயக்கம் முழுமை பெரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Abdulrahman (kayalpatnam) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9972

புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு,

தலைவர் தேர்விற்காக ஜலாலிய்யாவிற்கு போகும்போது, யாரெல்லாம் போட்டியில் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெர்யுமா அல்லது தெரியாதா? உங்கள் மனசாட்சியின் படி சொல்லுங்கள்.

தெரியும் என்றால் மிஸ்ரியா விற்கு ஆதரவாக உங்கள் வாக்கினை பத்யு செய்தது பொதுகுழுவில் எடுக்கப்பட்ட முடிவா?......................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. ஸ்ஸ், ஸபஸபஸபஸபா.. முடியல...
posted by M Sajith (DUBAI) [08 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9973

சேம்சாஹிப் மச்சன்,

முச்சரிக்கை வார்த்தை புதிதல்ல, நடைபெறும் முறைதான் புதிது..

அரசியல் கட்சிகள் தமக்குள் சர்ச்சை சமயங்களில் இந்த முச்சரிக்கை ஏற்படுத்தப்படுவது கேள்வி பட்ட விஷயம்தான் - கையெழுத்திட்டு பின் முடிவை எதிர்த்து செயல்பட்டால் கட்சியிலிருந்து நீக்கம் போன்ற நடவடிக்கை எடுப்பதும் அறிந்துள்ளேன்.

பொதுமக்களிடம், எந்த உறுப்பினரும், தெளிவான 'பைலா'வும், கட்டுப்பாடும், இல்லாத இந்த அமைப்பு செய்ததுதான் 'புதுமை'. நடவடிக்கையும் எடுக்க பிரயோஜனப்படாத ஒரு செயலில் ஏன் இந்த பிடிவாதம்?

தகப்பன், மகன், பேரன் என ஒரு குடும்பத்தலைமயில் இயங்கும் அரசியல் அமைப்புகளும் ஒரு கண்துடைப்பு நிர்வாக தேர்தல் நடத்துவதுன்டே - இவர்கள் அது போலவாவது ஒரு நிர்வாக தேர்தல் நடத்தி இருக்கிறார்களா?

சில பள்ளிகளும் அமைப்புக்களும் பேரவையின் அழைப்பை நிராகரித்தும், அனைத்து ஜமாத்தையும் உள்ளடக்கிய அமைப்பு என தம்பட்டம் அடிப்பதுதான் சரியா?

இல்லை இதெல்லாம் அரசியல்ல சாதாரனமப்பா.. ன்னு சரிகாண போறீங்களா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by syed omer kalami (colombo) [08 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9983

I TOO SUPPORT TAMILAN MUTH ISMAIL'S COMMENTS AND QUESTION IN REFERENCE NO 9872. CAN THEY GIVE PROPER ANSWER TO TAMIL MUTH ISMAIL.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. ஆபிதா அவர்களின் பொது தொண்டு
posted by Abdul Razzaq Lukman (Dubai) [08 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9987

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கே சகோதரி ஆபிதா அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அன்பர்கள், அவர் சிறந்த பொது நல சேவகி என்றும் தம்பி முத்து இஸ்மாயில் தனது பதிப்புரையில் 10 வருடம் பொது தொண்டு செய்து கொண்டு இருக்கிறார் என்றும் வேறு சிலர் சகோதரி ஆபிதா எந்த நேரத்திலும் உயர் அதிகாரிகளை இலகுவாக சந்திக்க கூடியவர் என்றும் அவர் புகழ் பாடுகின்றனர். அப்படி பதிவு செய்தவர்கள் யாராவது அப்படி காயல் பதி பொது மக்களுக்கு என்ன தொண்டு செய்தார், உயர் அதிகாரிகளை சந்தித்து என்ன நல திட்டங்கள் கொண்டு வந்தார் என்று யாராவது தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

தான் fees வாங்கிக்கொண்டு நடத்தும் மழலையர் பள்ளி நடத்துவதை தவிர என்ன பொது காரியத்தில் ஈடுபட்டார் என்று சொன்னால் அவரின் வாக்கு வங்கி அதிகரிக்கும். அதை விட்டுவிட்டு புகழ்கிறேன் என்ற போர்வையில் வரம்பு மீறி யாரையும் புகழாதீர்கள். அதை அல்லாஹுயும் அவனது தூதரும் கண்டிக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஐக்கிய பேரவை, அணைத்து ஜமாத்தார்கள் மூலம் தேர்தெடுத்த சகோதரி மிஸ்ரியா அவர்களும் எந்த பொது சேவையிலும் ஈடுபட்டதில்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அவர்களுக்கு நல்ல ஆலோசனை சொல்ல ஐக்கிய பேரவையும், ஊரின் பொது தொண்டில் ஈடு பட்டிருக்கும் கண்ணியமான ஊர் பெரியவர்களும் இருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.

தேர்தல் நாளன்று ஊருக்கு எதில் நன்மை இருக்கின்றது, எதில் ஊர் ஒற்றுமை இருக்கிறது என்று சிந்தித்து வாக்களிப்பீர்!!! தங்களது சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து ஜமாத்தாரின் ஆதரவுடன் போட்டியிடும் சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு உங்களது பேராதரவினை ஓட்டு மூலம் செலுத்தி அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து நல்லாட்சி தர வேண்டி துஆ செய்கிறேன். ஊரின் ஒற்றுமை ஓங்குக!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [09 October 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9993

சகோ.. லுகுமான் அவர்களே, ஆபிதா லாத்தவை பற்றி கேள்வி எழுப்பும் தாங்கள், ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட சகோதரி மிஸ்ரியா அவர்கள், என்ன பொது தொண்டு செய்தார்கள் என்று தாங்கள் கூற முடியுமா?

அவர்கள் திருச்சி மற்றும் காயல்பட்டினம் ஆக இரட்டை வாக்குரிமை பெற்ற ஒருவர் தானே.

இதே வலைதளத்தில் வெளியான செய்தி பார்க்கவும், "உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு வேட்பு மனு செய்த இருவருக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை!

News ID # 7319

ஆகா காயல் நகருக்கே பரிட்சயம் இல்லாத ஒருவர் ஐக்கிய பேரவையின் வேட்பாளர் என்றால் என்ன ஞாயம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்ற எனது கருத்துக்கு பதில் தாருங்கள்...?
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9994

ஊர் ஒற்றுமையை விரும்பும் சகோதரர் அப்துல் ரசாக் லுக்குமான் அவர்களே... ஆக்கபூர்வமான எனது கருத்துக்கு (கேள்விக்கு) பதில் தந்தாள் பயன் உள்ளதாக இருக்கும் அதைவிட்டுட்டு சும்மா சம்மந்தம் இல்லாத பதில்... தீர்வு (ஆரோக்கியம்) தராது.. திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் என்ற எனது கருத்துக்கு பதில் தாருங்கள்...?

பேரவை தேர்ந்துடுத்த வேட்பாளர் திருமதி மிசிரியா அவர்களின் (தாயார்) மாற்று வேட்பாளர் பேரவைக்கு முச்சரிக்கை கையப்பம் போட்டாரா ? மாற்று வேட்பாளர் நியாயமாக யாராக இருக்க வேண்டும் என்றால் முச்சரிக்கை கையபம்மிட்ட 2 வதாக 3 வதாக வந்தவர் அல்லவா.. திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளராக இருக்க வேண்டும்...

சகோதரரின் பதிலை எதிர் பார்க்கிறேன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Mohamed Cnash (Makkah ) [09 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10005

சஹோதரர்களே!! எனக்கு தெரிந்த வரையில் எத்தனையோ தடவை தான் நடத்தும் பள்ளியில் வைத்து போலியோ ஒழிப்பு முகாம், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி இருக்கிறார் இந்த இணையதளத்தில் கூட செய்தி வந்தது!! சமீபத்தில் கூட SPOKEN ENGLISH COURSE FOR THE HOUSEWIVES என்று அந்த துறைசேர்ந்த வல்லுநர் ஒருவரை கொண்டு எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல் (அவருக்கு வழங்கப்பட்ட FEES தவிர) நடத்தினார் ..எத்தனையோ நம் இல்லத்து பெண்கள் பலன் அடைந்தனர் !! இது நான் அறிந்தது... அவருடைய மற்ற சேவைகளை பற்றி அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். !!!

சரி ஐக்கிய பேரவை வேட்பாளர் அவர்களை தேர்தேடுக்க முன்புவரை அவர்களுக்கே தெரியுமா அப்படி ஒரு வேட்பாளர் இருக்கிறார் என்று ... அப்படி தெரிந்து இருந்தால் டபுள் ட்ரிபுள் வோட்டு, உம்மா மகள் என்ற குழப்பம் எல்லாம் வந்து இருக்காதே ..ரிமோட் கண்ட்ரோல் தானே எதற்கு தகுதி பார்கனும்டு கேக்குறீர்களா ஓகே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:புதுப்பள்ளி நிர்வாகத்தின்...
posted by Sabeer (Mumbai. ) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10053

முச்சரிக்கையில் கையெழுத்திடவில்லை என்ற காரணத்திற்காக ஐக்கிய பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சகோதரி ஆபிதா அவர்கள் பெயர் வேட்பாளர் பட்டியிலில் இடம் பெறவில்லை என்று கூறும் புதுப்பள்ளி நிர்வாகம், நிர்வாகத்தின் சார்பில் 16வது வார்டுக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் முச்சரிக்கையில் கையெழுத்திடாத மூன்று வேட்பாளர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொண்டது எதனால்? அதில் ஒரு வேட்பாளர் புதுப்பள்ளி செயலாளரிடம் வாக்கெடுப்பிற்கு முந்தைய இரவு ஒரு கடிதம் கொடுத்து அந்த கடிதத்தில் 'தனக்கு இந்த வாக்கெடுப்பில் உடன்பாடு இல்லையென்றும் தனது கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளக் கேட்டும் கடிதத்தையும் வாபஸ் கொடுக்காமல் பெயரையும் வாக்கெடுப்பில் சேர்த்துக் கொண்டது எந்த வகையில் நியாயம்? தயவு செய்து இதற்கு விளக்கம் தரவும்.

அட்மின் சில விஷயங்களை அலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி விடுகிறார்கள். ஊடகத்தில் ஒரு செய்தி வெளியாகி அதை பலரும் பார்க்கக்கூடிய நிலையில் அதற்கான பதிலும் ஊடகத்தின் வாயிலாகத் தான் இருக்க வேண்டு;ம். அப்போது தான் பார்க்கின்ற அனைவருக்கும் தெரியும். அலைபேசியில் தொடர்பு கொண்டால் அது இருவருக்கு மட்டுமே தெரியும். பலருக்கும் என்ன நடந்தது என்பது தெரியாமல் போய்விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved