Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:28:31 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5825
#KOTW5825
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 18, 2011
தேர்தல் 2011: திருச்செந்தூர் தொகுதி மக்களுக்கு தி.மு.க. வேட்பாளர் வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5343 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் ஏப்ரல் 13ஆம் தேதியன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராக நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாம்வல்ல இறைவனின் திருப்பெயரால்...

அன்பார்ந்த திருச்செந்தா சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே! இறைவனின் நல்லருள் நம் அனைவர் மீதும் என்றும் நிலவட்டுமாக ஆமீன்.

பிறந்த மண்ணிற்குப் பெருமை தேடி, வாழும் நகருக்கு வளம் சேர்த்து, செல்லும் இடமெல்லாம் சிறப்படையச் செய்யும் உங்களை உளமார வாழ்த்துகிறேன்.

நான் கடந்த காலங்களில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து அரசின் பல திட்டங்களை பெருமளவில் நம் தொகுதி மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன்.

இன, மத, கட்சி வேறுபாடின்றி ஏழை எளியவர்களின் தேவைகளை இயன்ற வரை நிறைவேற்றி இருக்கிறேன். ஆனாலும் ஆற்ற வேண்டிய பணிகள் அநேகம் இருக்கின்றன. மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் தொண்டனாகிய நான் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மீண்டும் நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

அன்பானவர்களே! எனது வெற்றிக்காக நீங்களும் வாக்களித்து, உங்கள் குடும்பத்தினரையும் வாக்களிக்கச் செய்யுங்கள்.

இந்த வேண்டுகோளை உங்களிடம் நான் நேரில் சந்தித்துக் கேட்டதாகக் கருதும்படி வேண்டுகிறேன்.


இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை பிரசுரமாக வெளியிடப்பட்டு, இன்று நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிக்ளுக்கு வெளியிலும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தேன் தடவிய வார்த்தைகள்
posted by Husain Noorudeen (Abu Dhabi) [18 March 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3372

சகோதரர்களே, நமதூருக்கு சமீப காலத்தில் ஏற்பட்ட சோதனைகளின்போது அண்ணாச்சி அவர்கள் எங்கே போயிருந்தார்கள். தேர்தலில் சீட் கிடைத்தும், இந்த பிரச்சனைகளை குறித்தும் அவற்றை எவ்வாறு அணுக போகிறார் என்பதைப்பற்றியும் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

இனியும் இந்த தேன் தடவிய வார்த்தகைளை நம்பி வாளாவிருக்கப்போகிறோமா? அல்லது இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அவரிடம் ஊரின் பிரச்சினை குறித்து பேசவாவது போகிறோமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. என்ன பெரிய சோதனை வந்து விட்டது ?
posted by vsm ali (kangxi, jiangmen, china) [18 March 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 3373

நண்பர் ஹுசைன் நூர்தீன் ,

நமதூருக்கு அப்படி என்ன பெரிய சோதனை வந்து விட்டது ? எல்லாம் வழமை போல் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இப்படி சொன்னது எனக்கு " வேதனை " யாக உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஓட்டு அண்ணன் அனிதாவுக்கே
posted by mohamed (India) [19 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3378

எங்கள் ஓட்டு அண்ணன் அனிதாவுக்கே. தாங்களை ரொம்ப பிடிக்கும். ஹுசைன் பாய் சொன்னது போலே கொஞ்சம் கவனம் தாருங்கள் அண்ணன் அனிதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. DCW
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [19 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 3380

அஸ்ஸலாமு அழைக்கும் அண்ணாச்சி அவர்கள் நிச்சயம் நமதூர் தலையாய பிரச்சினை ஆனா D C W கழியுகளை அப்படியே கடலில் கலக்க விட்டும் மற்றும் சுற்று புற சூழலை அதிகம் மாசு படுத்தி, நமதூரில் பல மக்களின் நோய்க்கும், அதிக மரணத்திற்கும் வழிவகுத்ததை இனியாவது, POLLUTION CONTROL மூலமாக தடுத்து நிறுத்தி, இன்னும் பல மரணங்களை தடுக்க ஆவன செய்வாரா.

இப்பவும் காலம் கடந்து விடவில்லை. விதிமுறைகளை மீறும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பது, தேர்தல் நன்னடத்தை விதியின் கீழ் வராது.. எனவே இக்கணமே அண்ணாச்சி இந்த வேலையை ஆரம்பித்து காயல்பட்டினத்தின் ஒட்டு மொத்த VOTE களையும் பெற்று விடலாம். VOTE கேட்டு வரும் சமயம் அனைவரும், இந்த கோரிக்கையை வைத்து நமதூரின் துயர் துடைக்க சபதம் எடுப்போம்.

நமக்கும் VOTE போட பணம் வேண்டாம், சேலை வேட்டி வேண்டாம். புற்று நோயால் இறந்த நம் சகோதர்களின் நிலை , இனி யார்க்கும் வராமல் தடுக்க இது ஒரு சிறு முயற்சி.. நம்ம வீட்டில் பாதிப்பு இல்லையே என்று இருக்காதீர்கள்.. இது நாள் வரை DMK VOTE போடுவது நமது ஆறாவது கடமை என்று இருந்ததை மாற்றி, நம் ஊர்க்கு அளப்பரிய காரியம் செய்த அண்ணாச்சிக்கு வோட்டு மூலம் நன்றி சொல்வோம். அதற்க்கு அண்ணாச்சி வழி வகுப்பார் என்று நம்புவோம். அதை செய்தால் அண்ணாச்சி என்று காயல் மக்களின் இதயத்தில் இடம் பெறுவார். சலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தேன்,தேன்,தேன் உனை நானும் படித்தேன்..ரசித்தேன்...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா) [19 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3382

என்னங்க... காக்கா!!

வார்த்தைகளில் விஷம் தடவித்தரும் அரசியல்வாதிகள் இருக்கும் போது, அனிதா அண்ணன் தேனாவது தடவித் தருகின்றாரே? அதுக்காகவே அவருக்கு தைரியமா வாக்களிக்களாம். உங்க வீட்லெ, அவருக்கே போடச் சொல்லுங்க!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Dear Administrator
posted by mohideen (saudi) [19 March 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3389

Please avoid political campaign in kayal website otherwise its quality will be questioned in future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Good Time
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [19 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3391

Dears,

As quoted by Dr. Kizar, We can all or DMK Representatives strongly put a demand to Mr. Anitha concering DCW issues to avoid the "RED SEA" it reflects killing many peoples & fish.

It is good time to demand.

Enkal Vote DMK ku & UNGAL velai to stop the DCW violation of factory law.

Regards,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஆப்பு
posted by சாளை.S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [19 March 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3394

அன்பு நண்பர்களே.. இப்போ நம்ம தொகுதி சூடு பிடித்து விட்டதா?

நாம் யாருக்கு ஒட்டு போடுவது? நன்கு அறிந்த அண்ணாச்சி அனிதா அவர்களுக்கா, அல்லது யார் என்றே தெரியாதா அண்ணாச்சி மனோகரன் அவர்களுக்கா?

ஒரு பழமொழி நினைவுக்கு வருகின்றது ( பழமொழி எழுதினாலே cut பண்ணிவிடுகிறாரே administrator, சரி நம் கடமை கமெண்ட்ஸ் தட்டுவது,) "நன்கு தெரிந்த ....வி நல்லதா அல்லது ஒன்றுமே தெரியாத சீதேவி நல்லதா. (அதற்காக அண்ணாச்சியை நான் ...வி என்று சொன்னதாக அர்த்தம் எடுத்து விடாதீர்கள்).

காச்.. மூச்.. என்று நன்றாக எழுதும் சகோ.இப்னு சாஹிப் அவர்களே பதில் பதிவு போடுங்கள் (யப்பா. சொந்த பெயரில் எழுதுங்கப்பா.. நீங்கள் யார் என்று அறிவதற்குள் தாவு தீர்ந்து விட்டது, கடைசியில் உங்களின் IP ADDRESS கொண்டு உங்களை யார் என்று கண்டு பிடித்து விட்டேன்ல... நாங்கள் எல்லாம் யாரு.. ஒரே மொடக்கில் ஒரு பாட்டில் அடிப்போம்லே.. பயப்படாதீர்கள்.. செந்தூர் வாட்டர் தான்.. ச்ச்சும்மா..)

நீங்கள் அனிதா அவர்களுக்கு ஆதரவு என்றால் "கூட்டணி தர்மத்திற்கு அப்பு",

மனோகரன் அவர்களை ஆதரித்தால் "மனசாட்சிக்கு ஆப்பு",

இல்லை யாருக்கும் ஓட்டு இல்லை என்றால் "உங்களுக்கே ஆப்பு அடிக்கின்றீர்கள்". பார்ப்போம் உங்களின் பதிலை.

சாளை.S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
posted by IBN SAHIB (Dammam, Saudi Arabia) [19 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3398

அருமை அண்ணாச்சி, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நீங்கள் அதிமுகவில் இருக்கும்போது கூட காயல்பட்டிணத்தை நன்றாக கவனித்தீர்கள். கலைஞர்பட்டணம் என்ற ஊரில் உங்கள் அயராத பணியால் அதிமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரித்தீர்கள். இருந்தாலும் திமுகவின் மதுரைக்காரர் தொழில் ரீதியாக உங்களுக்கு கொடுத்த குடச்சல், ஜெ.ஜெ. உங்கள் மீது காட்டிய அலட்சியம், உங்களை கட்சி மாற வைத்தது. எனினும் உங்களின் கடந்த கால நல்ல பணியின் காரணத்தால் காயலர்கள் நீங்கள் சுயேட்சையாக நின்றாலும் வாக்களித்து இருப்பார்கள் / வாக்களிப்பார்கள். காயலர்கள் என்றுமே நன்றி மறவா மக்கள்.

இந்நேரத்தில் உங்களுக்கு சில வேண்டுகோள்:

1. கற்புடையார் வட்டம் - முறையான அங்கீகாரம் இல்லாமல் திமுக அரசால் அவசர அவசரமாக கட்டப்படும் சுனாமி வீடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலிடம் கட்டியே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்தால், குறைந்தபட்சம் எங்கள் ஊரில் வறுமை எனும் சுனாமியால் தினமும் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு அந்த வீடுகள், முஸ்லிம் ஐக்கிய பேரவையின் ஆலோசனைகளோடு, பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

2. எங்கள் ஊர் சுற்றுவட்டாரத்தில் ரசாயண கழிவால் ஏற்படும் நீர்,காற்று மற்றும் நிலத்தில் ஏற்படும் மாசு கட்டுப்பாட்டுக்கு வழி வகை செய்ய வேண்டும்.

இந்த முக்கியமான இரு வேண்டுகோளை நீங்கள் தேர்தல் வாக்குறுதியாக வழங்க வேண்டும். நீங்கள் அரசியல்வாதியாக இருந்தாலும் வாக்குறுதி கொடுத்தால் மீற மாட்டீர்கள் என்றும், நீங்கள் வரும் காலத்தில் எதிர்கட்சியில் இருந்தாலும் இக்கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவீர்கள் என்றும் காயலர்கள் நம்புகிறார்கள்.

நம்பிக்கையுடன் கூடிய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. தேர்தல் 2011
posted by தைக்கா சாஹிப் (ரியாத் ) [19 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3401

சாளை.S.I.ஜியாவுதீன் அவர்கள் சொன்னது போல முகம் தெரியாத ஒருவருக்கு ஓட்டு போடுவதைவிட கட்சி பாகுபாடின்றி அன்றும், இன்றும் தொகுதிக்கு பணியாற்றிய திரு. அனிதா அவர்களுக்கு ஓட்டு போடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. பண அலையா? இரட்டை இலையா?
posted by kavimagan (dubai) [19 March 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3404

ஜியாவுதீன் காக்கா அஸ்ஸலாமுஅலைக்கும்!

ஐந்தாண்டு காலம் காங்கிரசின் உதவியோடு ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த கருணாநிதி, வெறும் மூன்று சீட்டுகளுக்காக, தனது ஆதரவினை விலக்கிடத்துணிந்தார். பாராளுமன்றத் தேர்தலில் தனக்கு ஒத்துவராத காங்கிரஸ்காரர்களின் முதுகில்குத்தி தோற்கடித்தார். அதேபோல,ஐந்தாண்டுகால கருணாநிதியின் வஞ்சக,அராஜக.அநீதியான அரசுக்கெதிரான போர்க்களத்தில் அண்ணா திமுகவிற்கு எல்லா வகையிலும் தோள்கொடுத்த வைகோவை கொஞ்சமும் அரசியல்நாகரீகமோ, நேர்மையோ சிறுதுமின்றி கழற்றிவிடத் துணிந்தார் ஜெயலலிதா.இதில் கூட்டணி தர்மமாவது,வெங்காயமாவது?

கல்குவாரி.மணற்கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டு கருணாநிதியால் சொத்துக்குவிப்பு வழக்கை சந்திக்க நேரிட்ட அனிதா,சாதாரண பாத்திரவியாபாரியான தன்னை,எம்.எல்.ஏ.,மாவட்டச்செயலாளர்,மந்திரி என்று பல்வேறு உயர்பதவிகளை அடையக் காரணமாயிருந்த ஜெயாவிற்கும்,வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து,அழகிரியின் காலடியில் மண்டியிட்டார் .அதேநேரத்தில் கொள்ளையடித்த பணத்தை முற்றிலும் பதுக்கி விடாமல் கொஞ்சம் தொகுதி மக்களுக்காகவும் செலவிட்டார் என்பது உண்மை.அதுதான் கடந்த தேர்தலில் ஓட்டுக்காக அவர் பணத்தை வாரி வாரி இறைத்ததை கண்கூடாகக் கண்டோமே! மொத்தத்தில் இவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. அதேநேரத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏ. ஆளுங்கட்சியை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், நமது ஊருக்கு அரசின் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டுவரமுடியும். அந்தவகையில்,புதியவருக்கு வாக்களிப்பதுதான் நன்மையில் முடியும் என்பது எனது பணிவான கருத்து!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. போலியான நண்பன்.....
posted by முத்துவாப்பா.... (அல்-கோபர்) [19 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3406

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால் ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." என்பார்கள்.

அதுபோல்தான் இங்கு நாம் தாகத்தில் இருக்கிறோம் நமக்கு அனிதாவின் முத்துக்கள் தேவையில்லை நாம் தாகம் போக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கிடைத்தால் போதும். நாம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்க கூடாது தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற பரந்த சிந்தனை வேண்டும்.

எல்லாரும் ஒன்றை பெருமையாக சொல்லுகிறார்கள், அனிதா நம்ம தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார் அதனால் நாம் நன்றி மறக்க கூடாது அப்படி இப்படி என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

நான் ஒன்றை கேட்கிறேன், முதலில் இந்த அனிதா நன்றியுள்ளவரா..? வெறும் பாத்திர வியாபாரியா இருந்த அவரை எம்.எல்.ஏ, மந்திரி என்று பல்வேறு உயர்பதவிகளை அடையக் காரணமாயிருந்த அ.தி.மு.க விற்கு துரோகம் செய்த இந்த அனிதா நன்றியுள்ள்வர் என்றால் அவரை எதிர்த்து ஓட்டு போடும் நாம் அனைவரும் நன்றியுள்ள்வரே....

"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்."

போலி நண்பனை கண்டு ஏமாந்து விடாதீர்கள். இந்த தேர்தலிலாவது இந்த துரோகி கூட்டத்திற்கு பாடம் புகட்டுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. புதியவர்!!!!!!!!!!
posted by தைக்கா சாஹிப் (ரியாத் ) [19 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3407

"கொள்ளையடித்த பணத்தை முற்றிலும் பதுக்கி விடாமல் கொஞ்சம் தொகுதி மக்களுக்காகவும் செலவிட்டார் என்பது உண்மை" என்று கூறிய சகோதரருக்கு ஒரு கேள்வி, புதியவர் வந்து மொத்தமும் சுட்டுட்டு போய்டா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. wish you all the best.
posted by s.e.m. abdul cader (bahrain) [19 March 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 3410

dear sir, anitha, i wish you all the best. i feel you are better than others to be with us. i hope and wish you to be the winner.

s.e.m. abdul cader


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ANBU VENDUKOL
posted by SATNI,S,A,SEYEDMEERAN (JEDDAH) [20 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3411

ASSALAMUALAIKKUM.WRAB
ANBINUM INIYA KAYALARKALUKKU ANBANA VENDUKOL.

ANITHA ANNACHI AVARKAL KAYALARKALAGIA NAM MEEDU NAALA NAMBIKAI VAITHU ANBUDAN VENDUKIRAR.NAM VALTHA MANAM ILLAI ENDRALUM VASAI PADATHU IRUNTHAL NAMAKKUM,NAM KAYALKKUM PERUMAI.AVARKAL ONNUM PATHIRA KADAI VAITHU PATHIRAM ENTHI KONDU IRUKKAVILLAI.ANITHA METAL ENUM FACTRE Y VAITHU IRUNTHU VALVANGU VALNTHAVARKAL.

PIRARIN MUNTHAYA VALKAIKALAI PARTHAL NAMUM MUNNAR ENNA SAUDI,DUBAI ENA KADALKADANTHA VALNTHOM. KALAINGERUM,ANITHAUM,MATRUM EVARUM NAMAKKU ALLI THARAVILLAI ENDRALUM IRAIVANAL PADAIKKAPATTA ENTHA ORU JEEVANAIYUM,PORULAIYUM NAM ILIVAGA NINAIPATHUM,ELUTHUVATHAI THAVIRPOMAGA. NAMAKKUM,NAM KAYALUKKUM ENA ELLOR ALAVILUM NALLA KANNIYAMUM,MARIYATHAIYUM ULLATHU. MELUM NAM PERUMAI SERKKA VILLAI ENDRALUM SIRUMAI PADUTHIDA VENDAM.ELLAM ARINTHAVAN ALLAH ORUVANE.AVANUKKEY ELLA PUGALUM,NANDRIYUM.

KAYAL.COM NAM 10,15 PERKAL MATTUM PARKKAVILLAI.

KAYALARKAL MATTUM NAMMODU VELAI SEYGINRAVARKAL,ROOM MATE,MATRUM NANBARGAL ENA PALATHARA PATTAVARKAL PARKIRARKAL. NAM 10,15 NABARKALI ORU SILARIN KANNIYAKURAIVANANA KARUTHUKALAI PARTHU VITTU NAM OTTU MOTHA KAYAL MAKKALKALAIYUM, ADHAI VIDA INTHA SAMUGA,SAMUTHAYA NARPANIYATRUM KAYAL.COM WEB SITE YUM MIKAUM THARAM THALTHI PESIDA MURPADUKIRARKAL.NANMAIYUM,VILIPUNARUM SEYYUM IDU PONDRA NALAVARKALUKKU NAMMAL MUDINTHA NANMAYINAI SEYVOMAGA. AROKKIYAMANA,ARIVUPPURVAMANA,4 PERUKKU NAMMAL NANMAI UNDAKUM VANNAM NAM URAVAI NAM KAYAL SONTHAKALODU IRUPPOMAGA.INSHAALLAH MASALAMA...INTHA KAYALPATNAM.COM MEEDUM,SALIH KAKAMARKAL MEEDUM ALAU KADANTHA AKKARAIYUM,ANBUM KONDA ANBIN.SATNI.S.A.SEYEDMEERAN.JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. துர்நாற்றம்... தேவைதானா?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [20 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3414

என்னமோ,நாறுதேன்னு?சுற்றும்,முற்றும் பார்த்தேன்,அது சரி,அரசியல் சாக்கடையில் நம்ம வாசகர்கள் கமெண்ட்ஸ் என்ற கற்களை எறிந்து கலக்கோ கலக்கென்று கலக்கி விட்டுட்டாங்கப்பா!கருத்து சுதந்திரம் இருக்குதேன்ணு காயல் வெப் சைட்டை இப்படி நாறடிக்கிறது சரியில்லை!அதுக்காக,இனி அரசியலைப் பற்றி கருத்தே எழுதக் கூடாதுன்ணூ அத்தமில்லை!ஒருத்தரை ஒருத்தர் பழிப்பதையும்,தான் சார்ந்த கட்சியை வானளாவப் புகழ்வதையும் சற்றே தவித்துக் கொள்ளலாமே?அவ்வளவு தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. தேர்தல் 2011
posted by தைக்கா சாஹிப் ( ரியாத் ) [20 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3418

முன்னால் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்கள் ஒன்றும் பரம்பரை பணக்காரர்கள் இல்லையே? ‌வேட்பாளர்கள் ரூ.75 லட்சம் ‌செலுத்த ‌‌தே.மு.தி.க., வலியுறுத்தல்? ‌வேட்பாளர் ‌செலுத்தும் பணத்துடன் தலைமைக் கழகம் சார்பில், 50 லட்சம் ரூபாய் சேர்த்து ‌தேர்தல் செலவுக்கு வழங்கப்படும்.? மார்ச் 20,2011,02:29 IST தினமலரில் வெளியான செய்தி. பார்க்க. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=209219 ரூ. 125 லட்சம் ஒரு வேட்பாளருக்கு என்றால் 41 தொகுதியில் போட்டியிடுகின்றனர்? மொத்தம் ரூ. 5 ,125 லட்சம் இன்று முளைத்த கட்சி செலவிடுகிறதென்றால்? தி.மு.க மற்றும் அ.தி.மு.க, கதி?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. SUPPORT OUR BROTHER IF NOT MR.ANITHA
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [20 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3420

ASSALAMUALAIKKIM.VARAH

If any our muslim brother [even shelf] is available in this election in our region means we can fully support him and show our unity and power not only for political party & also great examble for our other brothers in other regions.

Then they [ political party] can understand the reason [DCW & ILLEAGAL HOUSING AND MANY MORE ISSUE] to get vote for next time.

Any have we cannot resolve our issue thru these politicians, Becuse already our issue in the level of facing LAW AND ORDER by court thru leagel aspects.

If no one our brothers is participating means we strogly support to MR.ANITH RATHA KRISHNAN M.L.A. I hope from his last action atleast we can get some social advantages


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. வாழ்க கருத்துச் சுதந்திரம்!
posted by kavimagan (dubai) [20 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3428

தித்திக்கும் தேன்மறையைத் தந்தவனின் திருத்தளங்கள்
எத்திக்கும் வானுயர்ந்து நிற்பதுவே நம்பெருமை!
சத்தியத்தின் சாட்சிகளாய் சன்மார்க்க சான்றோர்கள்
நித்தியமாய் நிற்கின்றார் நமதூர்க்கு அதுபெருமை!!

அறங்கூறும் கல்வியது அழியாது வளர்ந்திடவே
அரும்பாடு பலபட்ட அறவோர்கள் பெரியார்கள்
எம்.கே.டி., எல்.கே.வின் தோளோடு நின்றவர்கள்
மண்ணறைக்குச் சென்றாலும் மாறாது அவர்மகிமை!!

இறைமறையை இதயத்தில் ஏந்துகின்ற ஹாபிழ்களும்
இஸ்லாத்தின் பயணத்தில் வழிகாட்டும் ஆலிம்களும்
அவையடக்கம் பூண்டனல் அறிஞர்கள் ஆன்றோர்கள்
இவர்யாரும் இனியனம் தாயகத்தின் தனிப்பெருமை!!

சீரழிக்கும் சினிமாவும் மதிமயக்கும் மதுக்கடையும்
சீரோங்கும் காஹிரிலே இல்லையது நம்பெருமை!
அழகான கடற்கரையும் ஆர்ப்பரிக்கும் அதனலையும்
அதனோர மணற்பரப்பில் இறையில்லம் எம்பெருமை!

களங்கமில்லா பொதுவாழ்வில் அன்பிளவல் அபூபக்கர்
கால்பந்து காழிபஷீர் காயலுக்கு தனிப்பெருமை!
கடல்கடந்து வாழ்ந்திடினும் காயலர்தம் துயரறுக்க
உடலுழைத்து ஊனுருக்கி உதவுகிறோம் அதுபெருமை!

தலைமுறைகள் தொடர்ந்திட்ட காட்டாட்சி வீழ்ந்திடவே
வலைதளத்தில் வாதிட்டான் காலிதென்னும் காளையவன்
மலையனைய முபாரக்கின் முடியாட்சி முடித்திட்டான்
நைல்நதியின் தீரத்தில் கலந்திருக்கும் அவன்பெருமை!!

அனிதாவும்,லலிதாவும் கருணாவும் காங்கிரசும்
அரசியல் சாக்கடையில் நெளிகின்ற புழுக்களம்மா!
இவர்புகழைப் பாடித்தான் பெருமைநிலை கிட்டுமெனில்
அதைவிடமேல் காயலுக்கு வேறென்ன சிறுமையம்மா?

வாழ்க கருத்துச் சுதந்திரம்!
வளர்க காயல்பட்டணம்.காம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. எந்த நாற்றம்............
posted by Husain Noorudeen (Abu Dhabi) [20 March 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3429

இங்கே நாறுவது அரசியல் மட்டுமல்ல............ நம்முடைய சமூக அக்கறையின்மை என்னும் நாற்றமும்தான். எல்லாவற்றையும் விட அதிகம் நாறுவது அடுத்திருக்கும் தொழிற்ச்சாலையின் கழிவு நீரும் அதனால் ஏற்படும் தீமைகளும்.

நான் அனிதா அண்ணாச்சிக்கு நம் மக்கள் தரும் ஆதரவை எந்த வகையிலும் குறை சொல்லவில்லை. எல்லா வகையிலும் அது நமக்கு நன்மை தரக்கூடியதே. என்னுடைய கருத்தானது நம்முடைய தேவைகளை ஏன் முற்கூட்டியே அவரிடம் சொல்லி அவற்றை நிறைவேற்றித்தர வாக்குறுதியாவது வாங்கக்கூடாது என்பதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Yosithu sayal padungal
posted by Sayna (Bangkok) [20 March 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 3430

Oruku nallathu saithavaruku,
Kupita kuraluku odie vanthavaruku,
Innum oruku yavalavo saiya ninaikum nallavaruku,
annachiyai thedie pogum nanbargalai ubasarithu
athuku undana velai galai saibavaruku,

Yanna innuma yosikiringa yara solluradu thariyaliya,
Nama Anitha Annachie thaan ithanaium saigirar
Avaruku support pannuvathila thappu illai,
Nigaluku sithithu parungal yaru namaluku nallathu saithargalo,
nallathu saiya ninaikerar galao avaruku nigalum support pannuga


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. vaalthukal
posted by mohamed (Al Ahsa) [20 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3431

அனிதாவும்,லலிதாவும் கருணாவும் காங்கிரசும்
அரசியல் சாக்கடையில் நெளிகின்ற புழுக்களம்மா!
இவர்புகழைப் பாடித்தான் பெருமைநிலை கிட்டுமெனில்
அதைவிடமேல் காயலுக்கு வேறென்ன சிறுமையம்மா?

kavithai arumai. kaalam kadantha nanothayam. vaalthukal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. MANAMARNTHA NANDRI.
posted by SATNI.S.A.SEYEDMEERAN (JEDDAH) [21 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3436

ASSALAMUALAIKKUM.

ENGAL ANBINUM INIYA NANBARKAL, INTHA INAYATHALATHIL KARUTHKKAL PARIMARI VARUM SAGOTHARA SONTHANGALKU ENTHAN VENDUKOLAI MANATHIL NIRUTHI NALATHARAU NALKIA UNGAL ANAIVARUKKUM MANAMARNTHA NANDRIYUM, PARATTUKKAL. VALKA VALAMUDAN

ENGAL MARIYATHAIKKUM, MATHIPPUKKUMURIYA MARHOOM USTHAD SHAM WALI OOLIYAR SADAKKATHULLAH ALIM AVARGALIN ANBU(KAVI)MAGAN ABDULKADER KAVITHAI MIGA, MIGA ARUMAI. ENGAL ANBU MAMA KAVINGER S.A.NAINA AVARKALIN MARU(KAVI)MAGAN. WAPPA, MAMAVINAI POL KAVITHAI VALAMUM, SENTHTAMIL NAYAMUM MELONGI SIRAKKA NENJARNTHU VALTHUKIREN.

ANBU THAMBI ALKHOBAR MUTHUWAPPA UNGAL KAVITHAIYUM, ANBU NANBARKAL MAKKAH MNL.MOHAMMEDRAFEEK, SEENA.S.H.MOHDOOM MOHAMMED(CNASH) KARUTHUKKALUM, SUDAN.SULTHAN AVARGALIN SUDANA THALAIPPU SEYTHIKAL, NONA MAHMOOD MAMA, DAMMAM SALAI ZIYAUDDEN, ANBU THAMBI ENGR.P.M.HUSSAIN NOORUDEEN MATRUM ANBANA ANAIVARKLIN SAMUDAYA NALAMULLA NALLA KARTHUKKALUKKUM MANAMARNTHA NANDRIKAL.

ANAITHU KARUTHUKKALAIYUM INTHA KAYALPATNAM.COM PIRASURITHA PERUMAKKALUKKUM KODANU KODI NANDRIKAL. JAZAKKALLAH KHAIRA.

NALLATHAI ENNUVOM, NALLAVAIKALAI ELUTHUVOM, NALLATHAGAVEY NADAKKUM. NAYAN ALLAHVIN NALARULAL.AMEEN. MASALAMA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved