Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:55 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21792
#KOTW21792
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 5, 2020
COVID 19: அரசு அறிவிப்பை மீறி காயல்பட்டினத்தில் மளிகை & காய்கறிக் கடைகளை மூட உத்தரவு! தூ-டி. மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பைப் பதிவு செய்திட “மெகா / நடப்பது என்ன?” வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1707 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஓரம்சமாக, ஏப்ரல் 05ஆம் நாள் முதல் காயல்பட்டினத்தில் மளிகைக் கடைகளில் பொதுமக்கள் நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் அறிவித்திருந்தது.

இது அரசு உத்தரவை மீறிய செயல் என்றும், பொதுமக்கள் தமது எதிர்ப்பை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்திடுமாறும் காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

கொரோனா வைரஸ் தாக்கத்தினை எதிர்கொள்ள - உலகெங்கும் பல்வேறு நாடுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில், ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் - அத்தியாவசிய பொருட்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை - கடைகளில், சமூக இடைவெளி பேணப்பட்டு - பெறலாம் என தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இருப்பினும் - காயல்பட்டினத்தில், கடந்த சில தினங்களாக, கொரானா பாதிப்பு உள்ள எந்த ஊரிலும் இல்லாத சில நடவடிக்கைகளை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்து வருகிறது.

துவக்கமாக, நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவந்த காய்கறி கடைகள் மூடப்பட்டன; பிறகு - பேருந்து நிலைய வளாகத்தில் மட்டும் காய்கறி கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கூடுதலாக 3 இடங்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவும் மூடப்பட்டு, லோட் வண்டிகளில் காய்கறிகள் விற்கப்படும் என பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தக்கூடிய. சாத்தியமற்ற ஒரு அறிவிப்பினை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க, தற்போது - நகரின் மளிகை கடைகள் இயங்காது, பொது மக்கள் - 5 தொலைபேசி எண்களில் ஒன்றினை அழைத்து, பொருட்களை கேட்கவேண்டும் என்றும், வீடுகளுக்கு நேரடியாக தரப்படும் என - 12.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 50,000 மக்கள் தொகை கொண்ட ஒரு ஊருக்கு தீர்வாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு - நகரின், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சிரமங்களை முற்றிலும் அறியாமல் - வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

நாடு முழுவதும், மாநிலம் முழுவதும் - அனைவருக்கும் பொருந்தக்கூடிய, அறிவிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் - காயல்பட்டினம் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அவசியமற்ற கெடுபிடிகள் பொது மக்களை வெகுவாக பாதிக்கிறது. இந்த கெடுபிடுகளை விலக்கிக்கொள்ள வேண்டி, கீழ்க்காணும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கலாம். மாதிரி வாசகமும் வருமாறு:-

(1) மாவட்ட ஆட்சியர் +91 94441 86000

(2) CALL YOUR COLLECTOR +91 8680 800 900

(3) கோட்டாட்சியர் (RDO) +91 94450 00480

(4) வட்டாச்சியர் (TAHSILDAR) +91 94450 00682

(5) நகராட்சி ஆணையர் +91 95971 92807

(6) HELLO KAYAL +91 75989 50800



மாதிரி வாசகம்

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளப்படி - காயல்பட்டினத்தில், காலை 6 மணி முதல், மதியம் 1 மணி வரை, அனைத்து காய்கறி, மளிகை கடைகளும், சமூக இடைவெளி பேணுதலுடன் இயங்கிட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவேண்டும்.

We request the Thoothukudi District Authority to allow opening of grocery shops, vegetable shops in Kayalpattinam Municipality as per the direction of Honourable Chief Minister of Tamil Nadu Thiru Edappadi Palanisamy

இந்த வாசகத்தையோ, இந்த பொருள்கொண்ட வாசகத்தையோ - பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Nizam (India) [06 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46501

மாண்புமிகு முதல்வருக்கு அவரது Facebook எழுதிய கடிதம்

அய்யா

நான் காயல்பட்டினம் பகுதியை சார்ந்தவன் எங்களது ஊரில் இரண்டு நபர் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து corono பாசிட்டிவ் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை அவர்கள் வாழும் பகுதியை சீல் இட்டு போலிஸ் கட்டுபாட்டில் உளளது வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நபர் களும் தாங்களே விருப்ப தனிமையில் உள்ளனர்

ஆனால் அதை காரணம் காட்டி மொத்த ஊரையும் corona உளளது போல சித்தரித்து இந்த ஊரின் அத்தியாவசிய தேவையான மளிகை கடைகளை மூட உ‌த்தரவு போட்டு இருக்கார் மாவட்ட ஆட்சியர். இது corono பரவலை எ‌ந்த விதத்திலும் தடுக்க செய்யாது இது அன்றாடம் காய்ச்சி கள் இதை நாடிய உள்ளனர் இது ஊரில் பசி பஞ்சம் சமுக சீரழிவை உண்டாக்கும்.

காலில் புண் ஏற்பட்டால் புண்ணை அகற்றும் நடவடிக்கையை தான் செய்ய iவேண்டுமே தவிர காலை அகற்றும் செயல் எவ்வளவு விபரீதம் அது போல korana பாதித்த நபர்கள் இருக்கும் தெருக்களை தனிமை படுத்தல் சரியான நடவடிக்கையே தவிர 50000 வாழும் ஊரில் அத்தியாவசிய உணவு பொருள் விற்கும் மளிகை கடைகளை மூடுவது அபத்தம்.

இதனால் பச்சிளம் குழந்தைகள் பால் கிடைக்காமல் இறக்க வாய்புள்ளது. கடும் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த வர்கள் முதியவர்கள் பெண்கள் நேரில் சென்று கூட்ட நெருக்கடி சாமான் வாங்க முடியாமல் பட்டினி கிடைப்பது உறுதி இதற்கு பதிலாக மளிகை கடைகளை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு கொடுத்து மக்கள் முகமூடி அணிந்து 3 அடி இடைவெளியில் நின்று சாமான் வாங்குமாறு செய்ய நடவடிக்கை செ‌ய்ய‌ வேண்டும்.

விஸ்வரூபம் படம பிரச்சனை வந்த போது சில பாதகங்கள் இருந்தாலும் எப்படி புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா எப்படி தனது மதி நுட்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை நலன் காத்தார் ஆகையால் சிறுபான்மையினர் மேல் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் கொள்கை ஏற்ப இந்த மளிகை கடைகளை மற்ற ஊரில் இயங்குவது போல இயங்க வைக்க வேண்டும்.

தாங்கள் நான் முன்பு எழுதிய குடியுரிமை சட்ட கவிதையை லைக் பண்ணியது இருந்தே தெரிந்து கொண்டேன் தங்கள் இவ்வளவு பெ‌ரிய பதவியில் இருந்தாலும் ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை மதிப்பவர் என. அது போல இந்த கோரிக்கை யேற்று ஆவன செய்ய வேண்டுகிறேன்

வாழ்க அண்ணா நாமம்
வளர்க புரட்சி தலைவர் புகழ்
வெல்க அம்மாவின் வீரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved