Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:48:09 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21786
#KOTW21786
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 2, 2020
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1724 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சில மாதங்களுக்கு முன் கொரோனா வைரஸ் சீனாவில் துவங்கி, பின்னர் படிப்படியாக உலகெங்கும் பரவி வருவதாக ஊடகங்கள் வழியே தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு COVID – 19 என்று பெயரும் சூட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தப் பரவலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில், சஊதி அரபிய்யா மக்கா நகரிலுள்ள புனித கஃபத்துல்லாஹ், மதீனாவிலுள்ள புனித மஸ்ஜிதுன் நபவீ ஆகிய புனிதத் தலங்களில் உம்ரா பயணியர் வர – நாள் வரையறுக்கப்படாத தடை அறிவிக்கப்பட்டு, இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, எப்போதும் இடைவெளியில்லாத மக்கள் திரளுடன் காணப்படும் இவ்விரு புனிதத் தலங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.







இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்திகளையடுத்து, 22.03.2020. ஞாயிற்றுக்கிழமையன்று 07.00 மணி முதல் 21.00 மணி வரை பொதுமக்கள் தாமாக முன்வந்து தன்னெழுச்சி ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு இந்தியப் பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர் அது 23.03.2020. திங்கட்கிழமை அதிகாலை 05.00 மணி வரை என நேர நீட்டிப்புச் செய்யப்பட்டது.



அந்நாள் முழுக்க நகரில் இந்தியாவில் எங்கும் பேருந்து, தொடர்வண்டி, ஆட்டோ – கார் – வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. அரசு நிறுவனங்களும், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் கிருமித் தொற்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்குள் இந்தியா வந்தவர்கள் தமது முழு விபரங்களை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு, அவரவர் இல்லங்களுக்குச் சென்ற அரசு அலுவலர்கள் – அடுத்த ஒரு மாத காலத்திற்கு வீட்டை விட்டும் வெளியேறக் கூடாது என உத்தரவிட்டு, அவர்களது இல்லங்களின் முன் “இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்ற ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றனர்.





அதனைத் தொடர்ந்து, மார்ச் 31ஆம் நாள் வரை நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு ஏப்ரல் 14ஆம் நாள் வரை அடுத்த 21 நாட்களுக்கு என 24.03.2020. அன்று மறு அறிவிப்புச் செய்யப்பட்டது.



அதன்படி, இன்றளவும் நாடெங்கும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், இறைச்சி – மீன் வகைகளை வாங்கிட காலை முதல் 14.30 மணி வரை கடைகள் திறக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தில் காய்கறிகளை தனித்தனிக் கடைகளில் விற்பது நிறுத்தப்பட்டு, நகரின் மேற்கே பேருந்து நிலைய வளாகத்திலும், கிழக்கே குருவித்துறைப் பள்ளி மைதானத்திலும், வடக்கு ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்திலும், தெற்கே தாயிம்பள்ளி மைதானத்திலும் இடம் வரையறுக்கப்பட்டு – ஒவ்வொரு நாளும் ஆங்கே காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.

காய்கறி விற்பனை நிலையங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மெயின் ரோடு, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, எல்.எஃப். வீதி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் கிருமி நாசினிக் கலவை தெளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அப்பணிகளை நேரில் பார்வையிட்டுச் சென்றார்.









பொதுமக்கள் வீடடங்கியிருப்பதால், அன்றாட வாழ்க்கை அவதிக்குள்ளாகிவிடக் கூடாது என்று கருதி, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பணமும், அரிசி – சமையல் எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் இலவசமாகப் பகிரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டு, தற்போது பொதுமக்களுக்குப் பகிரப்பட்டு வருகிறது.



இதனிடையே, கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் டில்லி நிஜாமுத்தீன் பகுதியிலுள்ள தப்லீக் மர்கஸில் இஜ்திமா – ஒன்றுகூடல் நடைபெற்றது. அதில் இந்தியர்களும், வெளிநாட்டினர் பலரும் கலந்துகொண்டு அவரவர் வசிப்பிடம் திரும்பினர். அப்படித் திரும்பிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க, அவர்களுள் பலருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யத் துவங்காத நிலையிலேயே - கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காகித & காட்சி ஊடகங்கள் சில பொறுப்பற்ற முறையில் அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளதையடுத்து, முஸ்லிம் சமுதாய மக்களிடையே அது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வரிசையில், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஃபாஸீயும் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவர் வீடு உள்ள அம்பல மரைக்காயர் தெரு முற்றிலும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரெங்கும் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியில் சுற்றித் திரிவோரை அவர்கள் கடுமையாக எச்சரித்து இல்லங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டுள்ளனர்.

இன்று காலையில் துவங்கி – நகரில் சுகாதாரக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தின் படி வீட்டு எண், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, மொத்த பெரியவர்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, 5 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை, சளி – இருமல் – சர்க்கரை நோய் – இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களைச் சேகரித்துக் கொண்டுள்ளனர்.



உலக வரலாற்றிலேயே தற்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் உலகளாவிய நடவடிக்கை போல இதற்கு முன் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டதில்லை என அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Nizam (India) [03 April 2020]
IP: 37.*.*.* | Comment Reference Number: 46500

,,,இரண்டாவது  உலக யுத்தம் நடந்த பிறகு இந்த corono தான் மிகபெரிய உயிரிழப்பை பொருளாதார பாதிப்பை  ஏற்படுத்தும் என சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்

இது முன்று விதமாக பிரிக்கப்படுகிறது. இலேசான நடுத்தர வலுவானது. இலேசான என்பது சாதாரண சளி காய்ச்சல் இருமல் தடுமல் அதற்க்கு மருத்துவரை கண்டு மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும். நடுத்தர என்பது முன்பு சொன்னது கூட விடாது காய்ச்சல் தலைவலி ச‌ளி இல்லாத வறட்டு இருமல் உடல் வலி இருந்தால் மருத்துவர் corono சோதனை எடுத்து பாசிட்டிவ் என்றால் தனி முகாமில் சேர்க்கப்பட்டு corono வுக்கு உரிய மருந்துகள் உட் கொண்டு பிறகு corono வைரஸ் எக்ஸ் ரெயில் அது இல்லை என்று தெரிந்தால் வீட்டுக்கு அனுப்ப படுவர். வலுவானது என்பது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நுரையீரல் வியாதி உயர் இரத்த அழுத்தம் உயர் சக்கரை வியாதி உள்ளவர்கள் அதிதீவிர சிகிச்சை கொடுக்க பட்டு காப்பாற்ற படுவர்.

ஹைதராபாத் சார்ந்த மூத்த மருத்துவர் டாக்ட்டர் ரெட்டி என்பவர் கூறுகிறார் இந்தியாவில் வந்திருக்கும் வைரஸை வீரியம் குறைவானதாக உள்ளதாகவும் வெயில் வரும் போது corono மடிந்து விடும் என்றும் நமது மக்களுக்கு இதை எதிர்க்கும் சக்தி உடலில் உல்லது என்று கூறுவது ஆறுதலான செய்தியாகும். இதில் மரு‌த்துவ‌ர் கூறும் நோய் எதிர்ப்பு சக்தி என்பதைப் நாம் எவ்வாறு அதிக படுத்து வதில் தான் corono மட்டுமல்ல எல்லா வியாதி களில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம் குறிப்பாக காய்கறி சூப் பூண்டு பால் மிளகு காரட் சிறிய வெங்காயம் திணை கரு சீரகம் துளசி போன்றது அடிக்கடி உட் கொள்ள வேண்டும். காய்ச்சல் சளி ஏற்பட்டால் கை மருந்து என்று இருக்காமல் மருத்துவரை கண்டு ஆங்கில மாத்திரைகளை சாபிட வே‌ண்டு‌ம் 70 சதவிகிதம் ஆல்கஹால் கலந்த handwash liquid கொண்டு ஒரு மணிக்கு அல்லது அடி‌க்கடி குறிப்பாக இயற்க்கை உபாதை செல்லும் போது சாப்பிடும் முன்பு கை கழுவ வேண்டும் பொது இடங்களான பள்ளி வாயில்கள் பள்ளிக்கூடங்கள் வணிக வளாகங்கள் கடற்கரை போன்ற இடங்களில் சமுக அமைப்புகள் இந்த liquid செலவை ஏற்கலாம் வெளியே செல்லும் போது முகமூடி கர்சீப் கொண்டு மூடி கொள்ள வேண்டும் கூட்டம் கூடும் இடங்களில் இடைவெளி விட்டு நிற்கத் வேண்டும்

இந்தியாவில் ஏற்கனவே முஸ்லிம் களை ஒதுக்கலாம் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டுவரும் மோடி அரசிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. இந்த corono பாதிப்பு மறை முகமாக ஒருவருட தத்துக்கு இருக்கும் என பொருளாதார நிபுண‌ர்க‌ள் கூறுகின்றனர் எனவே இந்த வருடத்தில் சிறு தொழில் க‌ல்வி மருத்துவ செலவு போன்ற வற்றில் வசதி படைத்திருக்கும் மனிதர்கள் தாங்கள் தங்களுக்கு தெரிந்த சமூகத்தின் நடுத்தர வறியவர்கள் என இனம் கண்டு உதவி செய்யலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved