Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:05:29 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21397
#KOTW21397
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 26, 2019
நாற்சக்கர வாகன விபத்தில் காயலர் மரணம்! மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2683 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாற்சக்கர வாகன விபத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் காலமானார். அவரது உடல், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்தவர் ‘முத்துக்கெட்டி’ செய்யித் அபூதாஹிர் (வயது 44). நெய்னார் தெருவில் திருமணம் செய்துள்ளார்.

வணிகத்திற்காக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு, 25.04.2019. வியாழக்கிழமையன்று ஊருக்குப் புறப்பட்டு வந்த அவர், மதுரையில் இருந்தபோது, நாற்சக்கர (கார்) வாகனத்தில் அவ்வழியே சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரது உறவினர்கள், அவரையும் ஊருக்கு உடன் வருமாறு அழைக்க, அதன்படி அவரும் இணைந்து அவர்களுடன் பயணித்திருக்கிறார்.

அருப்புக்கோட்டை அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் ஒரு டயர் வெடித்ததில், வண்டி நிலைகுலைந்து, தலைகுப்புறப் புரண்டு சாலையோரத்தில் விழுந்ததாகவும், அதில் செய்யித் அபூதாஹிர் – பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், இதரருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த அபூதாஹிரின் உடல் – அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, சொந்த ஊரான காயல்பட்டினம் கொண்டு வரப்பட்டடு, அன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மகுதூம் ஜும்ஆ பள்ளியிலுள்ள அறிவிப்புப் பலகையில், வழமையாக திருக்குர்ஆன் வசனங்களையும், நபிகளாரின் பொன்மொழிகளையும் காலத்திற்கேற்ப – தனது அழகிய கையெழுத்தால் எழுதும் வழமையை செய்யித் அபூதாஹிர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அறிவிப்புப் பலகையில் வாழ்வில் கடைசியாக அவர் எழுதிய வாசகம் வருமாறு:-



அடுத்தடுத்து விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதையடுத்து காயல்பட்டினம் சோகத்துடன் காணப்படுகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எங்கே சென்றாய் எனதருமை மருமகனே...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [26 April 2019]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46400

எப்போதும் புன்முறுவலுடன் காணப்படும் முகம்.

அவனை தொழுகைக்கு வரும்போது நான் அடையாளம் கண்டு கொண்டு தொழுகை முடிந்த பின் ''இந்த அறிவிப்பு பலகை உனக்காக வெகு நாளாக காத்திருக்கிறது. இன்று ஒரு ஹதீதை பதிவு செய்'' என்று கூறி CHALK PIECE சை கொடுத்து ஹதீது தமிழ் மொழிபெயர்ப்பு நிறைந்த MUNTHAKHAB AL AHADHEES என்ற நூலையும் கொடுத்து நான் அருகில் நின்று வாசிக்க அவன் எழுத, அவனது மணியான எழுத்துக்களை நான் ரசிக்க, அல்ஹம்து லில்லாஹ் ...அந்த நாட்கள் கண்ணில் நிற்கிறது....

இதோ புனித ரமலான் வருகிறதே...? இவனை எங்கே காணோம்... ஆட்சி மாற்றத்துக்கான ஓட்டையும் போட்டுவிட்டு அதற்கான துஆவையும் இங்கு பதிவு செய்துவிட்டு கிளம்பி விட்டானே... என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதுதான் அந்த இடி போன்ற செய்தி என்னை வந்தடைந்தது.

அவனது முழு உருவ நிழல்படத்தை பார்ப்பவர்களுக்கும் அவனை பற்றிய ஒரு நல்லெண்ணம் ஏற்படும்.

எனது மகன் அஹ்மத் மௌரூப், அப்துல்லாஹ் மக்கி ஆலிம். LS மாமா பேரன் அப்துல்லாஹ் ஹாபிசா பெங்களூர், மருமகன் முஜாஹித் போன்றவர்கள் மர்ஹூம் அபூதாஹிர் எல்லோரும் ஒரே செட்.

சொல்வதற்கு வார்த்தை இல்லை கண்கள் குணமாகிறது. அவனது இறுதி மூச்சை விடு முன் அவன் இந்த நாட்டிலே நல்லாட்சி மலர வேண்டும் என்ற து ஆ வை எழுதி எல்லோர் உள்ளத்திலும் பதிவு செய்து விட்டு சென்றிருக்கிறான்.

மருமகனே உனது து ஆ வை அல்லாஹ் நிச்சயம் கபூல் செய்வான். உனது மறைவு ஒரு ஷஹீதுடைய மறைவு என்று பெரியோர்கள் சொல்வார்கள். அல்லாஹ் அந்த நிலையையும் உனக்கு ஏற்படுத்தி தருவான்.

உனது மண்ணறையை அல்லாஹ் சுவன பூங்காவாக ஆக்கி வைப்பானாக. உனது நல்ல செயல்களை பொருந்தி கொள்வானாக. நீ அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் பொருத்தருள்வானாக.

உனது மனைவி மக்களுக்கு அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள்வானாக. உனக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி தந்தருள்வானாக.அமீன்.

இந்த மொகுதூம் பள்ளி உள்ளவரை உனது பொன் எழுத்துக்கள் உனது பெயர் சொல்லி கொண்டிருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புன்முறுவலுக்கு சொந்தக்காரர்...
posted by Mauroof (Dubai) [29 April 2019]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46403

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்ஹாபிழ் செய்யது அபூதாஹிர் அவர்களது மரணச் செய்தி என்னை திடுக்கிட வைத்தது.

எல்லோருடனும் அன்பாக பழகக் கூடியவர். அவர் அதிர்ந்து பேச நான் கண்டதில்லை. கடின உழைப்பாளி, அல்லாஹ்வின் பால் நெருக்கமானவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved