Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:00:22 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21392
#KOTW21392
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 23, 2019
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார்! பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம்!! பெருந்திரளானோர் பங்கேற்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5901 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் உள்ளாட்சியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எம்.கே.டீ.முஹம்மத் அபூபக்கர் அவர்களது மகனும், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரும், நெல்லையில் பல்லாண்டு காலமாக மருத்துவ சேவையாற்றியவருமான - குத்துக்கல் தெருவைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.முஹம்மத் தம்பி, உடல் நலக் குறைவு காரணமாக நேற்று 13.30 மணியளவில் - திருநெல்வேலியில் காலமானார். அவருக்கு வயது 80.

அன்னாரின் ஜனாஸா, பாளையங்கோட்டை – மஹாராஜநகரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று 20.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான காயல்பட்டினம் கொண்டு வரப்பட்டது.

காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில், இன்று 10.30 மணியளவில் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, பின்னர் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்கத்தில் - பல்துறை மருத்துவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

மறைந்த டாக்டர் எம்.ஏ.முஹம்மத் தம்பி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் மருத்துவத் துறையின் பேராசியர், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மூத்த உறுப்பினர், இந்தியன் அகடமி ஆஃப் பீடியாட்ரிக் (AAP) நல்லுறவாளர், முஸ்லிம் மெடிக்கல் பவுண்டேஷன் புரவலர், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலின் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்றவர் என பல சிறப்புகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தாய்மார்கள் உள்ளங்களில் நிறைந்து நிற்கும் மருத்துவர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 April 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46393

2019 இல் நின்றுகொண்டு தம்பி டாக்டர் அவர்களின் மகத்துவத்தை பேசினால் இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அது புரியாது. 50 ஆண்டுகளுக்கு பின் சென்று பார்த்தால் அவர்கள் இல்லாது வேறு ஒரு குழந்தை மருத்துவரை யாருக்கும் அடையாளம் காட்ட முடியாது .

கையில் குழந்தையை வைத்துக் கொண்டு பாளையம்கோட்டையில் நமதூர் பெண்கள் சென்றால் அவர்கள் நிச்சயம் தம்பி டாக்டர் அவர்களை பார்க்கவே வந்திருப்பார்கள். அப்படி ஒரு ஆளுமை மிக்க மருத்துவர் ஆனால் அமைதியே உருவானவர். அவர் சிரிக்கும்போது அழுகின்ற குழந்தையும் சிரிக்கும். அதைக் காணும் தாய்க்கும் உள்ளம் குளிரும்

நமதூரில் நடைபெற்ற ஒரு விழாவில் மருத்துவர்களை கௌரவிக்கும் அந்த விழாவில் தம்பி டாக்டர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

சாதனையாளர்களை இனம் கண்டு அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களை பாராட்டி கௌரவிக்க வேண்டும் என்ற எனது அழுத்தமான பதிவுகளை இங்கே மீண்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் பெயரால் ஒரு நினைவு மன்றம் கட்டப்பட்டு அவர்கள் பெயரால் அந்த மன்றம் அழைக்கப் படவேண்டும். அங்கு சிறந்த மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும். ஊரிலுள்ள புரவலர்கள் அதற்கு ஆவன செய்ய வேண்டும். இந்த மன்றம் நமதூர் மக்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள KMT மருத்துவமனையில் ஏற்படுத்தலாம். அல்லது பொதுமக்களிடம் வசூல் செய்து அவர்கள் பங்களிப்பும் அதில் இருக்க செய்யலாம் .

தம்பி டாக்டர் பற்றி ஒரு சுவையான செய்தியை கேள்விப் பட்டேன் அவர்கள் அரபுநாட்டில் பணி செய்வதற்காக ஒரு காலத்தில் அங்கு சென்றார்கள்.ஆனால் குறைந்த கால இடைவெளியில் அவர்கள் நாடு திரும்பி விட்டார்கள் . ஏன் அப்படி என்று அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்னார்களாம். தினசரி எத்தனை குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தேன் எத்தனை புது புது வியாதிகள் சவால்கள் எல்லாவற்றையும் மிக துணிச்சலுடனும் புத்துணர்ச்சியுடனும் நான் தீர்த்து வைத்தேன். இந்த நாட்டில் வந்து ஒரு நோயாளியை மட்டுமே பார்ப்பதும் தொடர்ந்து ஒரே சிகிச்சையை அளிப்பதும் எனக்கு போரடிக்கிறது, திரும்பி வந்துவிட்டேன் என்று சொன்னார்களாம். அங்கு கொட்டிக் கிடைக்கும் பணத்தை அள்ளிக் கொண்டுவருவதை விட இங்கு கொட்டிக் கிடைக்கும் அன்பை அள்ளிக் கொள்வதில் அவர்களுக்கு இருந்த பிரியம் எப்படி?

சின்னக் குழந்தைகளிடம் ஒரு டாக்டர் பெயர் சொல் என்றால் உடனே தம்பி டாக்டர் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் பிரபல்யம் அடைந்திருந்தார்கள். தாய்மார்களும் அப்படியே சொல்வார்கள் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சேவைகளை பொருந்திக் கொள்வானாக அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக ஆமீன் ..

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

HE ALONE LIVES FOR OTHERS , OTHERS ARE MORE DEAD THAN ALIVE .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்) [23 April 2019]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46396

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

மிகவும் கவலையான செய்தி .

காயல்பட்டினத்தின் அடையாளங்களில் ஒன்றை இழந்து இருக்கின்றோம் .

இங்கு என்னை அறிமுகப்படுத்தும் சமயம் , என் ஊர் காயல்பட்டினம் என்று சொன்னதுமே , தம்பி டாக்டர் ஊரா ? என்று பலரும் வினவியது உண்டு.

நான் றூரத்தில் இருந்து ரசித்த ஒரு பெர்சனாலிட்டி .

மிகவும் சிம்பிள் ,

குழந்தையே குழந்தைக்கு வைத்தியம் பார்க்கும் அழகு , பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டு , குறிப்பாக மருத்துவர்களுக்கு ..

சமூக வலைத்தளங்களில் பல பல அன்பர்கள் இவர்களின் சிறப்பை சிலாகித்து பதிவை பதிந்து உள்ளார்கள் .

----------------------------------------------

அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது" என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர்.

அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.

உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும்

நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது.

ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்.

( ஸஹீஹ் புஹாரி 1367 )

------------------------------------

கிருபை யுள்ள வல்ல ரஹ்மான் , இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து , சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுப்பானாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக .

சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by s.s.Jahufer Sadik (Jeddah -K.S.A) [23 April 2019]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 46397

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. We Love You Thamby Doctor...!!!
posted by S K Shameemul Islam (Chennai) [24 April 2019]
IP: 171.*.*.* India | Comment Reference Number: 46398

Thamby Doctor!

A Legendary Pediatrician who made thousands of Children breath easy by Allah's Will, has breathed his last. Innaa lillaahi wa innaa ilaihi raaji'oon.

May Allah forgive all his sins, accept his innumerable services, enlighten his Qabr and award the highest of Paradise, al-Jannatul Firdawsil A'la.

May Allah give strength to his family and friends to bear the irreparable loss of this humble soul. Aameen.

SK Shameemul Islam & Family,
SK House
Kochiyar Street,
Kayalpatnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Nizam (India) [28 April 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46401

Innalillaahi wainnaa ilaihi rajioon. கொஞ்சம் லேட் கமான்ட் மன்னிக்கவும்.

மறைந்த எனது தாய் மாமா தங்கம் அவர்களது நெருங்கிய நண்பர் 4 வருடம் இருக்கும் avarai சந்தித்து தங்கம் மருமகன் என கூறிய உடன் avarai நினைத்து சோகம் சிறிய வியாதியை எல்லாம் பெரிதுபடுத்தி பணம் உண்டாக்கும் காலத்தில் நோயாளியை முதலில் தைறியபடுத்தி பிறகு பக்குவமாக எடுத்து சொல்லி நோயாளியின் பொருளாதாரத்தை மனகண்ணால் அறிந்து சிகிச்சை கொடுத்து எத்தனையோ குடும்பத்தை வாழ்வித்தவர்.

நான் சிறுவனாக இருக்கும் போது அவர் அமெரிக்காவில் மேற்படிப்பு நெல்லை வந்ததை அன்றைய பத்திரிகைகள் கொட்டை எழுத்தில் செய்து போட்டு கொறவபடுதியது எண்ணத்திறையில் ஒடுகிறது இறைவன் அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கத்தை கொடுபானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved