Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:00:00 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21390
#KOTW21390
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 22, 2019
இருசக்கர வாகன விபத்தில் மாணவர் மரணம்! குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2556 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இரு சக்கர வாகன விபத்தில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் மரணமடைந்துள்ளார். விரிவான விபரம்:-

காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த முஹம்மத் அப்துல் காதிர் என்பவரது மகன் முஹம்மத் ஜமாலுத்தீன் (18). நிகழாண்டில், கமலாவதி மேனிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்று, கல்லூரிப் படிப்பைத் தொடரவிருந்தார்.

நேற்று 23.15 மணியளவில், குரும்பூரைச் சேர்ந்த தனது பள்ளித் தோழன் ஹரி கிருஷ்ணன் – தனது வண்டியில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால், நடுச்சாலையில் நிற்பதாகக் கூறி, அதற்கு எரிபொருள் நிரப்ப முஹம்மத் ஜமாலுத்தீனிடம் அவருடைய வண்டியைக் கொண்டு வருமாறு கூறியிருக்கிறார்.

அப்போது காயல்பட்டினம் கடற்கரையிலிருந்த - முஹம்மத் ஜமாலுத்தீன், மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த தனது நண்பன் முஹம்மத் நெய்னாவையும் உடன் அழைத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ஹரி கிருஷ்ணன் தனது எரிபொருளில்லாத வாகனத்தில் அமர்ந்து இயக்க, ஜமாலுத்தீன் தன் நண்பன் நெய்னாவுடன் தனது வாகனத்தில் அமர்ந்து ஓட்டியவாறு - ஹரி கிருஷ்ணனின் வாகனத்தைத் தனது ஒற்றைக் காலால் (Toe) தள்ளி வந்திருக்கிறார். எதிரே வேகமாக வந்த காரைத் திடீரெனப் பார்த்துவிட்ட ஜமாலுத்தீன், தன் நண்பன் விபத்தில் சிக்கி விடக் கூடாது என்றெண்ணி, அவர் அமர்ந்து சென்ற எரிபொருளில்லாத வாகனத்தைக் காலால் வேகமாகத் தள்ளவே அவர் ஓரத்தில் ஒதுங்கிவிட்டார். ஆனால், அவரது வாகனத்தைத் தள்ளியதால் தனது வாகனத்தை இயக்குவதில் நிலைகுலைந்துவிட்ட ஜமாலுத்தீன், கண்ணிமைக்கும் நேரத்தில் - நேராக கார் மீது மோதி, படுகாயமுற்று, இரத்தம் அதிகளவில் வெளியேறி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் அமர்ந்து சென்ற காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த செய்யித் இப்றாஹீம் என்ற சேமா என்பவரது மகன் நெய்னா முஹம்மத் (18) கீழே விழுந்ததில், சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கமாகச் சிகிச்சை பெற்ற அவர் பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

உயிரிழந்த ஜமாலுத்தீனின் உடல் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின், இன்று 14.15 மணியளவில் தீவுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 16.30 மணிக்கு, அவரது ஜனாஸா, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், ஜமாலுத்தீன் உடன் பயின்ற பள்ளித் தோழர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

18 வயது பூர்த்தியடையாத மக்களுக்குப் பெற்றோர் இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும், அனைத்துத் தேவைகளுக்கும் மிதிவண்டிகளையே பயன்படுத்திட அவர்களை ஊக்குவிக்குமாறும், அதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் – விலை மதிக்கவியலாத தமது உயிர் இதுபோன்ற கோர விபரத்துகளில் இழக்கப்படுவதைத் தவிர்க்குமாறும் நல்லடக்கத்தின் நிறைவில் உரை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த விபத்து மரணம் காரணமாக, காயல்பட்டினம் நகரே பெரும் சோகத்துடன் காணப்பட்டது.

[செய்தி திருத்தப்பட்டது @ 23:52 / 23.04.2019.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அவன் உங்களுக்கு மட்டுமா மகன்.... எனக்கும் இந்த ஊர் மக்கள் எல்லோருக்கும் ஒரு பாசம் மிக்க மகன் ,,,
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 April 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46392

வைகறை பொழுது தொழுகை முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் செல்லும்போது இந்த இளவலின் மறைவு செய்தி கேட்டபோது அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. அவன் மற்றவர்கள் போல் பைக்கில் தாறுமாறாக அந்த அகால இரவு வேளையில் சென்றதாக தெரியவில்லை. தனது நண்பனுக்கு உதவி செய்வதற்காக சென்றிருக்கிறான் என்ற தகவல் கிடைத்தபோது அவனை பற்றிய தவறான மதிப்பீடு எனது உள்ளத்திலிருந்து நீங்கியது.

நவீன யுகத்தில் பைக்கின் தேவை இன்றியமையாதது என்றாலும் அதன் தாக்கம் நம் இளைஞர்களிடம் அதிகமாகவே பற்றிக் கொண்டு இருப்பதை காண முடிகிறது. ஒரு வண்டியில் நாலு பேர் செல்கிறார்கள் அதை ஓட்டி செல்பவனுக்கு 12 வயது கூட நிறைந்திருக்காது.

பெற்றோரை பிளாக்மெயில் செய்து பயமுறுத்தி பைக் வாங்கி கேட்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள்.

அதிக மதிப்பெண் பெற்று பரீட்சையில் தேர்வு பெற்றுள்ள மகனுக்கு பிரியம் மிகுதியால் அதை வாங்கி கொடுக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

100 என்ற வேகத்தில் சென்றால் 108 என்ற வாகனத்தில் திரும்பி வரவேண்டியிருக்கும் என்று சொன்னாலும் அந்த இளமையின் வேகம் அவர்களை அப்படித்தான் ஓட்ட சொல்கிறது. அதிலே ஒரு த்ரில் ஒரு க்ளிக் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் .

தினசரி செய்தியாக போய்விட்ட இந்த சோக நிகழ்வுகளை தடுத்து நிறுத்த எத்தனையோ முயற்சிகளை பொது நல மன்றங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். காவல் துறையும் அவ்வப்போது அவர்களை நிறுத்து சோதனைகள் மேற்கொண்டும் வருகிறார்கள். ஆனாலும் இவர்கள் யாருக்குமே கட்டுப்படாமல் தறிகெட்ட வேகத்தில் இவர்கள் செல்கிறார்கள்.

பெரியவர்களுக்கு சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் சாலை விதிமுறைகளை பேணவேண்டும் என்று இவர்களுக்கு எவ்வளவுதான் சொன்னாலும் அவர்கள் நம்மை பார்த்து முறைக்கிறார்கள் .

தெருவீதியில் நடுவே பைக்கை நிறுத்திக் கொண்டு 4 - 5 பேர் கூடிக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அடுத்தவர்கள் வாகனம் செல்வதற்கும் நடந்து செல்பவர்களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறார்கள்.. தம்பி கொஞ்சம் ஒதுங்கி நிற்க கூடாதா என்று கேட்டால் நம்மை சுட்டெரிக்கும் பார்வையால் நாமே ஒதுங்கி செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கை போன்ற சிறிய நாடுகளில் கூட ஹெல்மெட் அணிவதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இளைஞர்களும் அதற்கு மதிப்பளிக்கிறார்கள். சாலை விதிகளை மதிக்கிறார்கள். சில விதி விலக்குகள் இங்கும் உண்டு அங்கும் உண்டு விதிவிலக்குகள் வழிகாட்டலாக முடியாது.

இனி ஒரு விதி செய்வோம் எல்லோரும் சாலை விதிகளை பின்பற்றுவோம் . குறைந்த பட்சம் வெளியூர்களுக்கு செல்லும்போது பைக் போன்ற வாகனங்களை ஓட்டி செல்வதை தவிர்ப்போம் .

மகன் ஜமாலுதீன் அவர்கள் பெற்றோருக்கு மட்டுமா மகன் நம் எல்லோருக்கும் பிரியமுள்ள மகனே.... அவருடைய ஜனாஸாவில் கலந்து கொண்ட எல்லோர் மனதிலும் அப்படியொரு சோகம் ...முகங்களில் ஒரு வாட்டத்தை காண முடிந்தது...

ஒரு ஆலிமாக... ஒரு அறிஞனாக...ஒரு விஞ்ஞானியாக ஒரு ஆட்சி தலைவனாக எப்படி எல்லாம் ஆக வேண்டும் என்று அவனும் கனவு கண்டிருப்பான் அவனது பெற்றோரும் கனவு கண்டிருப்பார்கள்... ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்திருக்கிறது... நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணி ஸபூர் செய்து கொள்வோம்..

இதை எல்லோரும் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு நமது மக்களை வளர்ப்போம். நல்ல பண்புகளை பிஞ்சு வயதிலேயே அவர்களுக்கு ஊட்டி விடுவோம் . அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவரது மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்கள் பெற்றோருக்கு நல்ல சபூரை கொடுப்பானாக ஆமீன். உங்கள் இழப்பில் நானும் பங்கு கொள்கிறேன்.

மக்கி நூஹுத்தம்பி மற்றும் மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved