Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:16:28 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18716
#KOTW18716
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 24, 2017
"ஜனநாயகத்துக்கு, அரசியல் சட்டத்திற்கு, விதிகளுக்கு, நடைமுறைகளுக்கு எதிராக காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்": நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் தீர்ப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3442 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர்களின் விதி மீறிய செயலினை மேலதிகாரிகள் ஊக்குவித்ததால் காயல்பட்டினம் நகராட்சி முடங்கியது என காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் (TAMILNADU LOCAL BODIES OMBUDSMAN) தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:

மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் ஊழல், முறைகேடுகள் குறித்து பெறப்படும் புகார்களை விசாரிக்க 2014ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்.

டிசம்பர் 2015 இல் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், முறைக்கேடுகள் குறித்து வழக்கு பதிவு செய்திருந்தார். ஏறத்தாழ ஓர் ஆண்டாக இது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொண்ட முறைமன்ற நடுவம், தனது ஆணையை கடந்த மாதம் பிறப்பித்துள்ளது. இது குறித்த விபரங்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.

16 பக்கங்களில் 22 பத்திகளாக வெளியாகியுள்ள இந்த ஆணை - பெறப்பட்ட புகார், அதன் மீது நடத்தப்பட்ட விசாரணை, சமர்ப்பிக்கபப்ட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் விபரங்களை முதல் 21 பத்திகளில் தெரிவிக்கிறது. இறுதி பத்தியில், தெளிவான தனது ஆணையை கீழ்க்காணுமாறு - முறைமன்ற நடுவம் - பிறப்பித்துள்ளது.

"மனுதாரர் (நகராட்சி தலைவர்) மற்றும் நகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆகியோரது அறிக்கைகள், வாக்குமூலங்கள், அனைத்தையும் கவனமுடன் பரிசீலிக்கையில் காயல்பட்டினம் நகராட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கி, நகர் பாலிகா சட்டத்தின் நோக்கம் முற்றிலும் இந்நகராட்சியை பொறுத்த அளவில் சிதைக்கப்பட்டுள்ளது" என முறைமன்ற நடுவம், தனது ஆணையின் இறுதி பத்தியின் துவக்கத்தில் பதிவு செய்கிறது.

தொடர்ந்து, இதன் விளைவு குறித்து ---

"நகராட்சி தலைவர், ஆணையர் ஆகியோருக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டு, அப்பாவி பொது மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதை மேல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதை பயன்படுத்தி சில அலுவலர்கள் முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது" என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதுபோன்ற சூழல்கள் தொடர்வதை தடுத்திருக்கலாம். அரசியல் அமைப்பு சட்டத்தின் 73 வது மற்றும் 74 வது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புகள், சட்டபூர்வமாக செயல்படுவதை மேல் அலுவலர்கள் கண்காணிக்க தவறியுள்ளதாகவே இந்நேர்வில் கருத வேண்டியுள்ளது" என மேலும் அவ்வாணை தெரிவிக்கிறது.

ஆணையர்கள் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய ஆணை,

"இந்த நகராட்சியின் ஆணையர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றத்தினை தவிர்த்து மேல் அலுவலர்களோடு மட்டும் தொடர்புக்கொண்டு, நகர்மன்றம் கூட்டம் குறித்தோ, அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்ட நிதி செலவிடல் குறித்து மன்ற அங்கீகாரம் பெற்று, அரசு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திடவோ எவ்வித அக்கறையுமின்றி மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகவே கருதபபடவேண்டும்" என பதிவு செய்கிறது.

ஏன் நகராட்சி முடங்கியது என தொடர்ந்து விளக்கும்போது,

"ஒரு நகர்மன்றம், சட்டபப்டி செயல்படவில்லை என்றால் 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், பிரிவு 41 ன் கீழ் வழிவகை செய்யபப்ட்டுள்ளவாறு சட்டப்படி உரிய நடவடிக்கைகள் எடுத்து, மன்றத்தினை கலைத்திட அரசுக்கு முன் மொழிவு அனுப்பி, மேல் அலுவலர்கள் முயன்று, சட்டத் தீர்வு கொண்டிருக்கவேண்டும். அதை விடுத்தது, நகராட்சி ஆணையர்களின் விதி மீறிய செயலினை ஊக்குவித்து, நகராட்சி நடவடிக்கைகள் முடங்கிட காரணமாய் அமைந்துள்ளனர்" என தெளிவாக கூறுகிறது.

மேலும்,

"ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், முறையாக செயல்படுதல் வேண்டும். குழப்பமான சூழலை பயன்படுத்தி, ஜனநாயகத்துக்கு மற்றும் அரசியல் சட்டத்திற்கு, விதிகளுக்கு, நடைமுறைகளுக்கு, எதிராக காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரிந்த ஆணையர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். இது குறித்து விரிவான விசாரணை நடத்திட வேண்டுமென இம்முறை மன்ற நடுவம் விரும்புகின்றது. எனவே, மன்ற அனுமதி பெறாமல், செயல்படுத்திய பணிகள் குறித்து நேர்மையான அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து முறைகேடுகள் குறித்து தெளிவாக கண்டறிந்து உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், நகராட்சி நிர்வாக ஆணையரை, இம்முறைமன்றம் கேட்டுக்கொண்டு அவ்வாறே இவ்வழக்கில் ஆணையிடப்படுகிறது" என தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், முன்னாள் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் மீது தொடரப்பப்ட்ட வழக்கில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணை (முழு விபரம்)
































Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...Ombudsman Reported
posted by Abdul Wahid S. (Kayalpatnam ) [25 January 2017]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 45161

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. முன்னால் ஆணையர்கள் அசோக்குமார் மற்றும் காந்தி ராஜன்களுக்கு வக்காலத்து வாங்கிய சுயநல வாதிகள்/சந்தர்ப்ப வாதிகள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்.

நகர் மீதும் நகர்மன்றத்தின் மீதும் தங்களை மிகுந்த அக்கறை கொண்டவர்களென்று தங்களைத் தாங்களே அடையாளப் படுத்தியவரர்களின் நிலைபாடு என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved