Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:02:17 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18709
#KOTW18709
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 23, 2017
காயல்பட்டினத்தில் காவல்துறை வேண்டுகோளை ஏற்று முடிக்கப்பட்டது ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரும் தொடர் முழக்கப் போராட்டம்! நேற்று கருப்புத் துணியால் கண்களைக் கட்டி கண்டன முழக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2393 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஓரம்சம் - வீரியமிக்க நாட்டுக் காளையை இளைஞர்கள் சேர்ந்து அடக்கும் ஜல்லிக்கட்டு ஆகும். தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு, நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.

இத்தடையை நீக்கக் கோரியும், ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் காயல்பட்டினத்திலும் கடந்த ஐந்து நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வந்தது.

18.01.2017. புதன்கிழமையன்று சிலரால் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

காயல்பட்டினம் இரத்தினபுரியிலும், பேருந்து நிலையம் அருகிலும் - நகரின் அனைத்துப் பகுதி மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்கும் போராட்டம், 19.01.2017. வியாழக்கிழமையன்று 17.00 மணிக்கு முறைப்படி துவங்கியது.

அன்று முழுக்க - ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்பைத் தடை செய்யக் கோரியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.

20.01.2017. வெள்ளிக்கிழமையன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க, நகரில் முழு கடையடைப்பும் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகிலுள்ள போராட்டப் பந்தலில், அன்றிரவு முழுக்க மேள வாத்தியங்களுடன் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும் நடைபெற்றது.

21.01.2017. சனிக்கிழமையன்று (நேற்று) தொடர் முழக்கப் போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றது. நேற்று மாலையில் - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உட்பட, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் திரளான பங்கேற்பில், மனித சங்கிலி போராட்டம் 17.30 மணிக்குத் துவங்கி 18.15 மணி வரை நடைபெற்றது.

மனித சங்கிலி போராட்டத்தைக் கண்ணுற்று - பேருந்து நிலையத்தைக் கடந்து சென்ற சுற்றுலா வாகனத்திலிருந்து திடீரென இறங்கிய வெளியூர்களைச் சேர்ந்த ஆண் - பெண் பயணியரும் சுமார் 30 நிமிடங்கள் மனித சங்கிலியில் இணைந்து நின்று, தமது ஆதரவைத் தெரிவித்தனர். அன்று 22.00 மணியளவில் – தமிழரின் பாரம்பரிய விளையாட்டான உரி அடித்தல் நடைபெற்றது. 22.01.2017. ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களும், இளைஞர்களும் கருப்பு நிற உடையணிந்தும், கண்களில் கருப்புத் துணி கட்டியும், ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்புக்கு இந்தியாவில் தடை கோரியும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.

இவ்வாறிருக்க, இன்று 09.00 மணியளவில், போராட்டப் பந்தலுக்கு வந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் சுந்தரநேசன், போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறும், பந்தலை அகற்றுமாறும் போராட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டதையடுத்து, அவர்கள் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்து, பந்தலையும் அகற்றினர்.







போராட்டத்தின் துவக்கம் முதல் இன்று வரை - உடன் அமர்ந்தும், பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற போராட்ட நடவடிக்கைகளில் இணைந்து நின்றும், போராட்டப் பந்தலில் முழுமையாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கும் - இளைஞர்களுக்கும் தேவையான உணவு, தேனீர் - சிற்றுண்டி, ஒலி - ஒளி, பந்தல் ஏற்பாடுகளைச் செய்தும், தேவையான ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கியும் வந்த - காயல்பட்டினத்தின் அனைத்துப் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...போராட்டக் களம் போர்க் களமாக மாறாக கூடாது
posted by mackie noohuthambi (kayalpatnam ) [23 January 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45148

தமிழ் பேசும் மக்களின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் ஒரு முடிவுக்கு வந்து ஒரு அவசர அரசாணை மூலம் ஜல்லி கட்டு நடத்த எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்திருக்கிறது. நிரந்தரமாக ஜல்லிக் கட்டு நடக்கும் என்று முதல்வர் உத்தரவாதமும் தருகிறார். இந்த சூழ்நிலையில் போராட்டத்தை முடித்துக் கொள்வது ஒரு நல்ல முன்மாதிரி.

அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இதில் குளிர் காய நிறைய இருக்கிறது. இரண்டு ஆடுகள் மோதிக் கொள்ளும்போது அதிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடிக்க ஓநாய்கள் ஆவலுடன் காத்திருக்கும். இளைஞர்கள் மாணவர்கள் அந்த ஓநாய்களின் இலக்கை முறியடித்து தங்கள் தனி தன்மையை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.

சென்னையிலும் பிற ஊர்களிலும் நேற்றுவரை மாணவர்கள் அற போராட்டத்தில் ஈடுபட்டு அமைதியாக அவர்கள் போராட்டத்தை நடத்தினார்கள் என்று எல்லோரும் வியந்து பாராட்டினார்கள். ஆனால் இன்று போராட்டக் களங்கள் போர்க் களங்களாக மாறியிருக்கிறது சென்னை போன்ற இடங்களில்.இது வேதனைக்குரிய விஷயம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கரம் கொடுப்போம் என்ற கோக்கையைத்தான் பின் பற்ற வேண்டும். அரசியல்வாதிகளின் கைப் பாவையாக ஆகிவிடக் கூடாது.

அந்த வகையில் நமதூர் மக்கள் எடுத்துள்ள முடிவு நிம்மதி தருகிறது.

NEET போன்ற விஷயங்கள் மாணவர்களுக்கு உள்ள பிரச்சினை. வறட்சி போன்ற விஷயங்கள் விவசாயிகளுக்கு உள்ள பிரச்சினை. பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினை.காவேரி தண்ணீர் பிரச்சினை தமிழக மக்களுக்கு உள்ள பிரச்சினை. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை. எல்லா பிரச்சினைகளையும் உண்டாக்கி விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

திடீரென்று இந்த ஜல்லிக் கட்டு பிரச்சினை எப்படியோ வந்து எப்படியோ முடிந்திருக்கிறது. ''ஜல்லிக் கட்டு இது ஒரு டெல்லிக் கட்டு'' என்று தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் அவர்கள் கட்டுரையை எல்லோரும் படிக்க வேண்டும்.

இளைஞர்களின் வேகம் தடை மீறி செல்லும்போது பெரியவர்களின் விவேகம் அதை தடுத்து நிறுத்த வேண்டும். அதைத்தான் நமதூர் பெரியவர்கள் செய்து காவல்துறையுடன் சமரசம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (22/1/2017) [Views - 1768; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved