Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:19:29 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15965
#KOTW15965
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 21, 2015
சர்வே எண் 278 இடத்தில வேலைகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் ஆணை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3509 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் (WP [MD] 7730/2015), மே 13 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், மனுவில் உள்ள விஷயங்கள் பிரதானமாக - சுற்றுச்சூழல் சம்பந்தமாக இருப்பதால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகுமாறு தெரிவித்தனர்.



அதனை தொடர்ந்து - இந்த வழக்கு (Appeal No.100/2015 [SZ]) இன்று நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில், முதலாவது வழக்காக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் டி.மோகன் மற்றும் வழக்கறிஞர் ஏ.யோகேஸ்வரன் ஆகியோர் ஆஜரானர்.

வழக்கின் விபரங்களை சுருக்கமாக வழக்கறிஞர் டி.மோகன் எடுத்து கூறினார். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டப்பின் - சர்வே எண் 278 இடத்தில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை - அடுத்த ஆணை பிறப்பிக்கப்படும் வரை நிறுத்தும்படி (STATUS QUO AS ON DATE), காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கும், ஒப்பந்தபுள்ளி பெற்று பணிகளை செய்து வரும் S.K. & Co. நிறுவனத்திற்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த 10 பேர்களுடன், புதிதாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சக செயலாளரும் இன்றைய வழக்கில் - எதிர் மனுதாரராக இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விரக்தியும் வேதனையும்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40668

உண்மையில் நல்ல செய்தியல்ல! வருத்தமாக இருக்கிறது! முன்னெச்சரிக்கை கவன ஈர்ப்பு கருத்தை முன்னமே இதே இணையதளத்தில் பதித்திருந்தேன். பொருட்படுத்துவோர் எவருமில்லை. எவருடய சொல்லோ அம்பலம் ஏறாது என்று முன்னோர்கள் சொல்வார்கள் அது அணு அணுவாக அரங்கேருகிறதோ என்ற ஐயம் தான்.

எது எப்படியோ ஒரு நல்லதிட்டம் கை நழுவி விடுமோ என்ற விரக்தியும் வேதனையும் மனதிற்குள் உழல ஆரம்பித்து விட்டது! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வேதனையுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (Jeddah) [21 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40673

இந்த வேலைக்கே தடை என்று சொல்லவில்லை. அடுத்த ஆணை பிறப்பிக்கும் வரை தான் தடை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அல்ஹம்துலில்லாஹ்...
posted by KJ KALIFA SEYED MOHAMED (CHENNAI) [21 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40679

அரசின் எந்த திட்டம் தான் உருப்படியாக செயல்படுகிறது. எங்கும் எதிலும் கட்டிங்(60-70 விழுக்காடு) போய் மீதி 30% அறை குறையாக நிறைவேறும்.பிரமாண்ட திறப்பு விழாவிற்கு பின் சில காலம் செயல்படும் பின்னர் மூடுவிழா.

ஏற்கனவே முடிக்கப்பட்ட அம்மா உணவகம், பப்பரப்பள்ளி EB சப் ஸ்டேஷன் செயல்பட்டதாக தெரியவில்லை.பேரூந்து நிலைய புதிய நூலகம் நெடு நாளைக்குப்பின் இயங்குகிறது(திறப்பு விழா காணாமல்) நம் வரிப்பணம் வீணாக்கப்படுவது இந்திய (தமிழ்) நாட்டின் சாபக்கேடு.

சென்னை கோயம்பேட்டில் காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் FAILURE சென்னை மெட்ரோ ரயிலும் அம்மாவுக்காக தாமதம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [21 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40681

இந்த கருத்தை பதிவதுற்கு ஒரு நிமிடம் முன்னர் விசாரித்த வரையில் இது மாதிரி எந்த ஒரு அரசாணையும் நகராட்சிக்கோ,அதன் ஆணையருக்கோ வரவில்லையாம்,ஆனால் இந்த செய்தியோ தடையாணை பிறப்பிக்கப்பட்டதாக சொல்கிறது,இதில் எது உண்மை?ஒருவருக்கு நான்கு பேரிடம் விசாரித்தேன் என்பது கூடுதல் தகவல் (இதில் ஒருவர் நான் விசாரிக்கும் பொது சென்னையில் இருந்தார்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நீதி மன்றம் வரை செல்ல வழிவகுத்தது யார்..? நடுநிலையோடு சிந்தித்தால் உண்மை விளங்கும்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [22 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40682

இவ்வளவு பிரச்சனைக்கு யார் காரணம்..! கொம்புதுறை சகோதரர்களை நீதி மன்றம் வரை செல்ல வைக்க யார் காரணம்..!

(1) நகர்மன்ற தலைவியா..!
(2) நகர்மன்ற உறுப்பினர்களா..!
(3) நகர்மன்ற அதிகாரிகளா..!

இத்திட்டத்திற்கு மிக முக்கியமான சாலை / BUFFER ZONE தீர்மானத்தை முறைப்படி நகர்மன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி கொடுத்து விட்டாலே போதும் குப்பை கிடங்கு அமைய எந்த தடையும் / இடையூறுமில்லாமல் மிக சிறப்பாக நல்ல முறையில் நடைபெறும் என்பதில் நகரின் பொது மக்களுக்கு எந்த மாற்று கருத்துமில்லை..

ஏன்...? எதற்க்காக...? ஒரு சிலரின் சுய நலதிற்காக BUFFER ZONE தீர்மானத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்..!

பொதுநல காரியத்திற்காகவே இத்திட்டத்திற்கு இந்நிலம் நன்கொடையாக வழங்கபட்டு இருக்குமானால் அந்நிலத்தில் நன்கொடை அளித்த மறு தினமே BUFFER ZONE தீர்மானத்தை நிறைவேற்றி குப்பை கிடங்கு பணிகளை துரித படுத்தி என்றைக்கோ திறப்பு விழா பெற்றிருக்கும் - இந்த நல்ல திட்டதிற்கு BUFFER ZONE தீர்மானத்தை ஆதரிக்காமல் பிரச்சனையாக / தடையாக இருப்பது யார்..?

இத்திட்டம் நீதி மன்றம் வரை சென்ற பிறகாவது பொது மக்களின் நலன் கருதி BUFFER ZONE தீர்மானத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றி கொடுப்பார்களா..? இதன் மூலமாவது நகரில் நிலவி வரும் இருவேறு குழப்பத்திற்கு / சந்தேகத்திற்கு நகரின் பொது மக்கள் நலமா..? நகரின் சிலரின் சுயநலமா..? என்பதை நகர்மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நிரூபியுங்கள் உங்களுக்கு ஒரு வாய்ப்பு இதன் மூலம் அளிக்கபடுகிறது..!

உறுப்பினர்களே..! இத்திட்டம் முழுமையாக நிறைவேற சர்வே எண் 278 ல் BUFFER ZONE தீர்மானத்தை எப்போது நிறைவேற்றி கொடுப்பீர்கள்..? ஒரே ஒருநிமிடம் உங்கள் மனசாட்சியோடு பொதுமக்கள் நலன் கருதி சிந்தித்து பாருங்கள்..! உங்கள் மனசாட்சி உங்களுக்கே பதில் சொல்லும் - அது என்ன பதில் என்பது அது உங்களுக்கும் / உங்களையும் எங்களையும் படைத்த இறைவனுக்கே விளங்கும்.

நகர்மன்ற உறுப்பினர்களே..! இத்திட்டம் முழுமையாக நிறைவேற உங்கள் சார்பாக என்ன.. என்ன.. தீர்மானம் நகராட்சியில் நிறைவேற்றி கொடுக்க பட வேண்டுமோ அனைத்தையும் பொது நலன் கருதி இத்திட்டத்திற்காக அனைத்தையும் நிறைவேற்றி கொடுங்கள்.

கொம்புதுறை சகோதரர்களுக்கு / குடியிருப்புக்களுக்கு சுற்றுசூழல் பாதிப்பில்லாத வகையில் உங்கள் தீர்மானம் இருக்குமானால் அதை மீறிய மற்ற தடைகள் / இடையூறுகள் அனைத்தும் தவிடு பொடியாகி விடும் என்பதில் சந்தேகமில்லை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பரமார் தெரு??? (?!)  (21/5/2015) [Views - 4156; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved