Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:55:01 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15961
#KOTW15961
Increase Font Size Decrease Font Size
புதன், மே 20, 2015
நகராட்சி திருநெல்வேலி மண்டல பொறியாளர் கனகராஜ் உட்பட 6 பேர் மீதி லஞ்சம் ஒழிப்பு துறை வழக்கு பதிவு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3875 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சாலையே போடாமல் கணக்கு காட்டி பணத்தை சுருட்டியதாக நகராட்சி தலைவி மீது லஞ்ச ஓழிப்பு போலீசார் வழக்கு பதிவ செய்துள்ளனர்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்நதவர் வழக்கறிஞர் அருள்ராஜ். இவர் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.

புகாரில், 36 தெருக்களில் ரூ.6 கோடியே 94 லட்சத்தில் தார் சாலை போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மான எண் 405ன் அடிப்படையில் மாநில அளவிலான மின்னணு ஒப்பந்த புள்ளி அடிப்படையில் மறு டெண்டர் விடப்பட்டதாக கூறியுள்ளார். இந்த 36 சாலை பணிகளில் பல முக்கிய பணிகளை செய்யாமல் தார்சாலை போட்டதாக அரசு ஓப்பந்தகாரக்களிடம் பேரம் பேசி போலியாக ஆவணம் உருவாக்கி பல கோடி ரூபாயை நகராட்சி தலைவி உள்பட 6 பேர் மோசடி செய்துள்ளதாக புகாரில் கூறப்படுள்ளது.

இதுகுறித்து நெல்லை நகராட்சி நிர்வாக இயக்குனர், நகர்மன்ற துணை தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையாளர், ஆகியோருககு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுககப்படவிலலை.

பல தெருக்களில் தார் சாலை போடாமல் பணிகள் முடிவுற்றதாக ஆவணங்களை உருவாக்கி ஒப்பந்தகாரர்கள் பெயரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடையநல்லூர் நகராட்சி தலைவி சைபுன்னிசா, நகராட்சி பொறியாளர் அமகது அலி, அபபோதைய நகராட்சி பொறியாளர் பிரின்ஸ், ராஜேந்திரன், விஜயகுமார், நெல்லை மண்டல பொறியாளர் A.கனகராஜ், ஒப்பநதக்காரர்கள் கிருஷ்ணாபுரம் அருணாசலம், சங்கரன்கோவில் ராஜா முகமது ஆகியோர் மீது ஊழல் தடுப்பு உள்பட பல்வேற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சாலையே போடாமல் போட்டதாகக் கூறி பல கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில் நகராட்சித் தலைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கடையநல்லூர் நகராட்சியை போல், காயல்பட்டினம் நகராட்சியும் திருநெல்வேலி மண்டலத்திற்குள் வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 6 நபர்களில் ஒருவரான மண்டல பொறியாளர் ஏ.கனகராஜ், தற்போது காயல்பட்டினம் நகராட்சியில் முறையான அனுமதி பெறாமல் நடைபெற்று வரும் பயோ காஸ் திட்ட பணிக்கான இடத்தினை கடந்த அக்டோபர் மாதம் பரிந்துரை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. யா சலாம்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [20 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40649

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

யாசலாம்.........................

ஓலையில்லாது எழுதியசெய்தியும்
நூலில்லாது நெய்தசேலையும்
தாவரங்களில்லாது அமையும்சோலையும்

அதுபோல்
காற்றிலே போடப்பட்டசாலையும்
எல்லாம் பதவிதந்த வரமாலையே.

கிணறுவெட்டாமல் கணக்குகாணிபித்த திரைப்பட
நகைச்சுவைக்காட்சிகளையும் மிஞ்சிவிட்டது இவர்களின் கூத்து.

விழித்துக்கொண்டதில் விடைகண்டது.

ஆமா தமிழ்நாட்டிலே கடையநல்லூர்னு ஒரு ஊர் இருக்குதா...?

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விரைவில் எதிர்பார்ப்போம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [20 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40650

கூடிய விரைவில் காயல்பட்டினம் நகாரட்சி அலுவலகத்திலும் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையின் கவனம் திரும்பலாம் என எதிர்பார்க்கிறேன் - அப்போது பல பெருச்சாளிகள் பிடிபடுவது உறுதி..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சிலர் உத்தமர்களாக நடிக்கிறார்கள்,
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [20 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40651

எய்த சக்தியை விட்டுவிட்டு "அம்பை" மட்டும் கசக்கி பிழியலாமா? இன்றைய காலகட்டத்தில் எய்கின்ற சக்தி, எல்லாம் வல்ல இறை சக்தியாக போற்றப்படுகிறது, புகழப்படுகிறது, பிரார்த்திக்கப்படுகிறது, பக்த கோடிகளால் படுத்துருண்டு புண்ணியப்படுத்தப்படுகிறது!

பாவம் ஒன்றைனா "அம்பை" பிடித்து விட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் அனைத்து அசுரர்களும் அப்பட்டமான பொய்யுலக பிரதிநிதிகளே, சிலர் உத்தமர்களாக நடிக்கிறார்கள், அந்த நாடகமும் நாடுபோற்ற அரங்கேறுகிறது! அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பிறப்பு,இறப்பு சான்றிதழ்
posted by kalifa seyed mohamed kj (chennai) [20 May 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40652

நமது நகரா(ஆ)ட்சியில் இறப்பு சான்றிதழ் பெற சென்றிருந்தேன். முதல் பிரதிக்கு விலையேதுமில்லை.கூடுதல் 1 நகலுக்கு ரூ.50/- வசூலித்தனர்.ரசீது கேட்டும் கிடைக்கவில்லை.எந்த கணக்கில் வரவு வைப்பார்களோ?வரிசை எண் இல்லாதலால் விநியோகக்கணக்கு பார்ப்பது கடினம்.பல சான்றிதழ் தவறாக எழுதி கிழிக்கப்படுகிறது. RTI சட்டமும் பெயரலவில் ஆட்சியாலர்களால் செயல்படுத்தப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வழக்குதானே! கைது அல்லவே!!...
posted by N.S.E.மஹ்மூது (ரியாது – சவுதி அரேபியா) [20 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40653

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இலஞ்சம் வாங்குவதும் , கொடுப்பதும் குற்றமே! அதிலே மாற்றுக்கருத்து நமக்கில்லை.

இலஞ்சம் வாங்குவதற்கும் , கொடுப்பதற்கும் யார் உதவினாலும் குற்றம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

----------------------------------------

இந்த வழக்கிலே சிக்கி இருக்கும் தலைவி இலஞ்சம் வாங்கினாரா? இல்லையா? என்பது கேள்விக்குறி!.

ஆனால் ஒன்றுமட்டும் அறியமுடிகிறது – இவர் தலைவியாக வர உதவியவருக்கு உள்கட்சித் தேர்தலில் எதிராக இல்லாமல் இருந்திருந்தால் இந்த ஊழல் மறைக்கப்பட்டேயிருக்கும் இன்னும் சில காலம்.

எது எப்படியோ! யார் என்ன தவறு செய்தாலும் அந்த தவறு ஒருநாள் வெளிவந்தே தீரும் – அப்போதுதானே நல்லவர்கள் நல்லவர்களாக வாழமுடியும் – அல்லது அவர்களும் கெட்டு குட்டிச்சுவராகி விடுவார்களே!

------------------------------------------

சாலையை அரைகுறையாக போட்டு பொதுமக்கள், ஒப்பந்தக்காரர்கள், அரசு அதிகாரிகள் என்று நூற்றுக்காணவர்ளுக்கு பதில் சொல்வதைவிட சாலையை போடாமல் நான்கு சுவர்களுக்குள் – நான்கு பேர் மட்டுமறிய மோசடி வேலையை செய்வதுதான் இன்றைய ஃபேஷன்.

வழக்கு அது, இது என்று எது வந்தாலும் எப்படி வந்தாலும் அதை சமாளித்துக்கொள்ளலாம் – அரசும், அதிகாரியும் அதைத்தான் விரும்புவார்கள் - சட்டத்திலும் தப்பித்து வர ஓட்டைகள் அதிகமிருக்கும்.

------------------------------------------------

ஒரு வேலையை செய்து இலஞ்சம் பெறுவதைவிட - இந்த மாதிரி செய்யாத ஒரு வேலையை செய்ததாக காட்டி மோசடி செய்வதில்தான் சிக்கலும், சிறமமும் குறைவு – இலாபமும் , பாவமும் அதிகம்.

நமது மண்டலத்தில் நமக்கு தெரிந்து வெளிச்சமாகி இருப்பது இது மட்டுமதான் – தெரியாமல் மறைந்து கிடப்பது விரைவில் வெளியாக இருப்பது விரல்விட்டு எண்ணமுடியாதுங்கோ! அதில் நம்ம ஊர் நகராட்சியும் தப்பவில்லை என்றே அறிய முடிகிறது!!.

அங்கே நேர்மையானவர்களும் இருக்கிறார்களாம் – அடிபட்டு திருந்தியவர்களும் உண்டாம்.

------------------------------------------------

நமது நகராட்சியானாலும் பிற நகராட்சியானாலும் சரி மக்கள் பிரதிநிதிகள் தூய்மையானவர்களாக, திறமையானவர்களாக அமைந்துவிட்டால் எந்த மோசடியும் நடைபெறாது – எந்த ஊழலும் தலை தூக்காது.

அடுத்து அமையக்கூடிய நமது நகர்மன்றத்தில் திறமையானவர்களும் , தியாகம் செய்யக்கூடியவர்களும் நிறைந்திருக்க இறைவன் அருள் செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

N.S.E.மஹ்மூது , ரியாது – சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by kamalmusthafa (abha.ksa) [20 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40654

என்னப்பா பன்னுறதுநம்ம மகாத்மா காந்திஜி வெள்ளைகாரன்கிட்ட சுகந்திரத்த வாங்கி இந்த மாதிரி கொள்ள காரங்ககிட்ட கொடுத்துட்டு போய்டாரு.இப்பஎன்ன பன்னமுடியும்.

அதுனாலதான் நம்ம நாட்டு பாரத பிரதமர் மோடி ஐயாஅவர்கள் பல நாடுகள் சுற்றுபயனம் செய்து இங்கு இருந்து போன வெள்ளகாரங்கள எல்லாம் கூப்பிட்டு நம்மலதிரும்பும் வெள்ளகாரன்கிட்டையே கொடுத்துவிடலாம்முனு நினைக்கிறார். நீங்கள் விடமாட்டிர்களே பாவம் அதிகாரிகள் என்ன செய்வார்கள்

ஒவ்வொரு பதவிக்கும் வொவ்வொரு விலை நிர்நயம் செய்து இருக்கார்கள் 3 லட்சம் முதல் 3 கோடிவரை பதவிக்கு தகந்தவாறு கொடுக்க வேண்டியது உள்ளது கேட்டால் நீ ஒருவருட காசுதாய கொடுக்கிற மற்றது எல்லாம் உனக்கு தாய என்கிறார்கள் நீங்க என்ன வேனும்னாலும்கேச போடுங்க எங்களுக்கு நம்ம ஜர்ஜிஐயா குமாரசாமி இருக்காரு பார்த்து கொள்வாரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பல பெருச்சாளிகளின் முகம் வெளிப்படும். பொறுத்திருந்து பாப்போம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [20 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40656

நிர்வாகத்தை செம்மையாக நடத்த பெண்களால் முடியவில்லையே !! பெண்கள் பெயரில் வேறு யாரோ ஒருவர்தான் மறைமுக ஆட்சிபுரிகிறார் . காயல்பட்டணம் நகராட்சியும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இதுவே ஆண் தலைமையிலான நகராட்சியாக நமது நகராட்சி இருந்திருந்தால், வளர்ச்சிப்பணிகள் வேகமாக நடந்திருக்கும். CP

சகோதரரே ..! கடந்த நிர்வாகத்தை ஆண்களால் செம்மையாக நடத்த முடியாமல் போனதேன்..!

1) கடந்த நிர்வாகத்தில் துணை தலைவர் காசோலை மோசடி.

2) கடந்த நிர்வாகத்தில் முறைகேடான முறையில் நகராட்சி பணி நியமனத்தில் ஆட்கள் தேர்வு.

3) கடந்த நிர்வாகத்தில் நகராட்சியின் வசூல் மையத்தில் வசூலாகும் தொகை வங்கியில் செலுத்தாமல் (ஒப்பந்த பணியாளர்) தனி நபர்கள் வட்டிக்கு விட்டு வியாபாரம்.

4) கடந்த நிர்வாகத்தில் மொகுதூம் ஜும்மா பள்ளியில் கட்ட பட்ட குடிநீர் தேக்க தொட்டி (திட்டமிடல்) முன் ஆலோசனை இல்லாமல் இன்று வரை காட்சி பொருளாக உள்ளது.

5) கடந்த நிர்வாகத்தில் கணினி (கம்பியூட்டர் மற்றும் அது சார்ந்த சாதனங்கள்) வாங்காமலேயே தொகை தனிநபர் பெயரில் காசோலை / பணமாற்றம். மேலும் பல பல முறைகேடுகள்...

கடந்த நிர்வாகத்தில் ஆண்களால் செம்மையாக நடத்த முடியாமல் மேலும் பல முறைகேடுகள் அரங்கேறி உள்ளது..!

கடந்த நிர்வாகத்தில் ஆண்களால் நடத்தப்பட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து நமது நகராட்சியில் விஜிலன்ஸ் ஆபிசர்கள் தற்போது நகராட்சி ஊழியர்கள் / அலுவலர்கள் மத்தியில் நேரடி புலன் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது..!

இவ்விசாரணையின் போது பல பெருச்சாளிகளின் முகம் வெளிப்படும். பொறுத்திருந்து பாப்போம்..!

கூடிய விரைவில் இது குறித்த தகவல்கள் செய்தியாக வெளிவரலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Vilack sma (jeddah) [21 May 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40657

" முறையான அனுமதி பெறாமல் " என்ற வார்த்தை தவறானது . அரசின் சார்பாக நடைபெறும் வேலை , அனுமதி இல்லாமல் நடந்தால் ஆட்சியாளர்கள் சும்மா இருப்பார்களா ? அல்லது எதிர் கட்சி மற்றும் பிற கட்சியினர்தான் சும்மா இருப்பார்களா ? குறை சொல்வதற்கும் ஒரு அளவில்லையா ?

இந்த பயோ காஸ் திட்டம் நல்ல முறையில் செயல்படத்தான் போகிறது . அப்போதும்கூட இதை குறை சொல்பவன் தன்னுடைய ஹயாத்து உள்ளவரை குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பான் . அது அவனுடைய தலைவிதி .

கனகராஜ் , கடையநல்லூரில் ஊழல் செய்திருக்கலாம் . ( செய்திதானே தவிர நிரூபணம் ஆகவில்லை ) இங்கேயும் அப்படி நடப்பார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by nizam (india) [21 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40658

இதலல்லாம் லஞ்சத்தை பங்கிடுவதில் போட்டியே தவிர வேருன்றுமில்லை. இதை போல ஒரு பெரிய மாநராட்சியில் லஞ்ச சண்டை முற்றி சி எம் வரை சென்று அங்கும் தீர்வு ஏற்படாமல் மேயரும் (பெண்) துணை மேயரும் கேவலமாக தாக்கிகொன்டத்தை பத்திரிகைகள் வெளியிட்டன.

சமிபத்தில் ஒரு ஒப்பந்தகாரர் தீக்குளிக்க முயர்ச்சித்ததை தொலைகாட்சியில் காட்டினார்கள் அவர் லஞ்சம் கொடுத்தும் காரியம் நடக்காததை குறை கூறினாரே தவிர லஞ்சத்தை எதிர்த்து அல்ல.

எனது சொந்த அனுபவத்தில் ஒரு மாநகராட்சியில் நான் வாங்கிய சொத்தை பெயர் மாற்றுவதற்கு சுமார் 25 முறை அலைந்திருக்கிறேன். லஞ்சம் கொடுக்காமல் இருப்பதற்கு அல்ல அவர்கள் கொள்ளை தொகையை குறைப்பதர்க்ககத்தான்.

இதற்க்கு வில்லன் யார் என்று பார்த்தால் நமது சீனி அலுவலகர்தான் அவர் கையில் ஒரு தொப்பி பாண்டில் ஒரு தொப்பி தலையில் ஒரு தொப்பி தஸ்மினி தொழுகை நேரம் எல்லாம் போடு வைத்திருக்கிறார்.

பேச ஆரம்பித்தார் எல்லாம் துட்டை பற்றிதான் இதில் அவர் சொன்னார் வார்த்தை தூகிவாரி போட்டது.

உங்களது ஊர் ஆள்கள் இதில் பேரம் பேச மாட்டார்கள் கேட்பதை கொடுத்து விடுவார்கள் நீங்கள் அப்படி கொடுக்க மாடீர்களே என்று ஆதங்கபடார். ஏனென்றால் நமதூர் நிலைமை அப்படி

ஆண்கள் உள்ளூரில் இருக்கும் காலம் கம்மி என்பதால் கொடுப்பதை கொடுத்து காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் நிம்மதி கிடைக்காது. இந்திய சரித்திரத்தில் அன்ன ஹஜாறேஎப்போல ஊழலை எதிர்த்து போராடியது கிடையாது பாவம் அவரையும் வாயை மூட வைத்து விட்டார்கள்.

இந்தியாவை குறிப்பாக காயலில் பொருத்தவரை ஊழலை அடியிடு ஒழிக்க முடியாது குறைபதர்கான முயர்ச்ச்யைதான் செய்ய வேண்டும்.

முதலில் ஊழல் எதிர்ப்புவாதிகள் போராட வேண்டிய மிக மோசமான முகங்கள் பணம் கொடுக்காததால் பிரசவம் பார்க்க மறுத்ததால் இறக்கும் ஏழை தாய், தரமற்ற சிமன்டால் கட்டப்பட்டு இடிந்து விழ்ந்து இறக்கும் சின்னஞ்சிறிய பள்ளி குழைந்தைகள் , நடவடிக்கை எடுக்காத காலாவதியான உணவு மருந்து உண்டு இறக்கும் பெருவியதிக்குள்ளகும் மக்கள்,

இறையச்சம் தேசபக்தி எளிமையான வாழ்க்கை இவையெல்லாம் மக்களிடம் அதிகாரிகளிடம் வராதவரை எந்த கொம்பனாலும் இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்கமுடிடாது கடைசியாக ஊழலை தீவிரமாக எதிர்த்து வரும் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியை தொலைகாட்சியில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி தாங்கள் இவளவு தீவிரமாக ஊழலை எதிர்த்து இப்போது பேசுகிறிர்களே தாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது தாங்கள் தடுத்த ஒரு ஊழல் கூறமுடியுமா? அந்த அதிகாரியால் பதில் சொல்ல முடியவில்லை இதுதான் இந்தியாவில் ஊழலின் பாரன்ஹீட்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40664

அஸ்ஸலாமு அலைக்கும்

ரோடு போடாமலே கணக்கு காட்டி பணத்தை முழுமையாகவே சுருட்டிய அந்த கும்பலை '' நாம் என்னதான் செய்வது ....இல்லை ...என்னதான் சொல்வது .......நல்ல துணிச்சல் தான் ....இப்போதைய காலத்தில் ,, பல அரசு நிர்வாகம் கணணி மயமாக்க பட்டது ,, தொலைதூர சாதனங்கள் படுவேகமாக முன்னேறி கொண்டு உள்ள இந்த காலம் ,, அனைத்து ஊர்களிலும் ,,இணைய தளம் ,,மூலம் தொடர்ப்பு பொது மக்கள் வைத்து உள்ள தொடர்ப்பு ....இவையாவும் பொது மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து ,, இவர்கள் .....ரோடே '' போடாமல் பொது மக்களின் வரிபணத்தை ????

நாம் என்னதான் சொல்லுவது ..... இது போன்று பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது எந்த வகையில் நியாயம் ......

குற்றம் ஒப்புக்கொள்ள பட்டால் அரசு தக்க தண்டனை வழங்க வேணும் ...மற்றவர்களுக்கு இது ஒரு ஒரு பாடமாக இருக்கும் .....

இவர்களையும் & கடைய நல்லூர் நகர்மன்றத்தையும் அதன் தலைவி அவர்களையும் பார்க்கும் போது ....நமது ஊர் மரியாதைக்குரிய தலைவி அவர்களை நாம் பெருமையாகவே தான் பார்க்கணும் .....காரணம் ...நம் ஊர் நகர் மன்றம் நேரான வழியில் ,, நேர்மையாக ,, நேர்மையான நிர்வாகத்தில் சென்று ,, நம் ஊர் பொது மக்களுக்கும் ...ஊருக்கும் நல்லது செய்யணும் என்று மிக துடிப்புடனும் ....வேகமாகவும் செய்யல்லாற்றிட துடிக்கும் நம் தலைவி அவர்களை நாம் நினைத்து பெருமை படுவதில் ....மற்றற்ற மகிழ்ச்சியே .....

நாம் நம் தலைவி அவர்களை சரியான முறையில் வழி நடத்த ஒத்துழைக்காதது நமக்கு ஒரு குறையே ........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பரமார் தெரு??? (?!)  (21/5/2015) [Views - 4154; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved