Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:18:54 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15964
#KOTW15964
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 21, 2015
பப்பரமார் தெரு??? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4155 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





காயல்பட்டினம் 10ஆவது வார்டுக்குட்பட்ட பரிமார் தெருவில் தேங்கியிருக்கும் குப்பைகளின் காட்சிகள்தான் இவை!

என்றாவது ஒருநாள்தான் இங்குள்ள குப்பைகள் நகராட்சியால் அள்ளிச் செல்லப்படுவதாகவும், அதுவரை தெருவே நாற்றக்கேடாகத்தான் காட்சியளிக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தகவல் & படங்கள்:
’AKM ஜுவல்லர்ஸ்’ Y.M.முஹம்மத் தம்பி


இதே நிலை பல தெருக்களிலும் - குறிப்பாக காயல்பட்டினம் கடற்கரையிலும் நீடிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, திருமண வீடுகளில் விருந்துக்கு பெரும்பாலும் ப்ளாஸ்டிக் கோப்பைகளே பயன்படுத்தப்படுவதும், தற்போது நகரில் திருமண சீஸன் என்பதால், அத்திருமண வீடுகளின் சார்பில் தேங்கும் மொத்தக் கழிவுகளையும் பொதுநலனில் எவ்வித அக்கறையுமின்றி இதுபோன்ற இடங்களிலேயே திருமண வீட்டார் கொட்டுவதும் - நகரில் யாராலும் கண்டுகொள்ளப்படாத வழமையாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by vilack sma (jeddah) [21 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40663

குப்பை தேங்கி கிடக்கிறது எனபது அந்தந்த வார்டு உறுப்பினர்களின் சுறுசுறுப்பை காட்டுகிறது .

திருமண விருந்துகளின்போது ஏற்படும் குப்பைகள்பற்றி நான் முன்பு ஒரு கருத்துபதிவில் எழுதி இருந்தேன் . திருமண வீட்டாருக்கு நகரின் சுகாதாரம் , சுத்தம் போன்றவற்றில் அக்கறை இல்லை என்றுதான் கூற வேண்டும் . பல லட்சங்கள் செலவு செய்து விருந்து வைப்பார்கள் . விருந்து முடிந்தபின் சில நூறு ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்வோமே என்ற மனப்பான்மை ஒருவருக்கும் இல்லை .

நகராட்சியும் , விருந்து நடக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இதற்கு தீர்வு காணலாம் . நகராட்சி விருந்து நடக்கும் இடத்திற்கு வரி விதித்து அந்த இடத்தை சுத்தம் செய்யலாம் . அல்லது பள்ளிவாசல்கள் , திருமண மண்டபங்கள் தாங்கள் நிர்ணயிக்கும் வாடகை தவிர சுத்தம் செய்வதற்கும் தனியாக ஒரு தொகை நிர்ணயித்து வசூல் செய்யலாம் . ஏனெனில் திருமண வீட்டுகாரர்கள் இந்த வேலையை செய்ய மாட்டார்கள் . தங்கள் வேலை முடிந்ததும் வெளியேறவே செய்வார்கள் .

சுத்தம் சோறு போடும் , குழம்பு ஊத்தும் போன்ற பொன்மொழிகளை சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உள்ளத்தூய்மையின் பிம்பமே ஊர்தூயமை!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40665

பரிமார் தெருவில் காணும் காட்சி,கல்யாண வீட்டின் கழிவுகளல்ல, என்றென்றும் காணக்கூடிய கண்காட்சியாகும்! 10-வது வார்டு உறுப்பினர்தான் ஓரளவு உண்மையான உதவி எண்ணத்துடன் உழன்று வருவதாக் கேள்விபட்டேன் இப்போ அவரும் ஐய்க்கியமாகி விட்டாரா? ஹைர்!

அம்மாவை அட்டகாசமாக ஆட்காட்டி விரல்காட்டி வீர வசனம் பேசி வார்த்தைகள் கொட்டிய வீராதி வீரர், தன் பகுதி வார்டின் அவலத்தையும் அகற்ற வேண்டுமல்லவா? அதுதானே வீரத்தனம்,உண்மைத்தனம் வேறெவருக்கும் விலைபோகா பொதுமைத்தனம்!

அடுத்து,அன்பு காயல் சகோதர சகோதிரிகளே இது நம்மூர், நம்தெரு நம் வீட்டருகேயுள்ள பகுதி.அதை சுத்தமுடன் வைக்கவேண்டியது நம் கடமை.அண்டை வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன் எல்லாம் ஏனோதானோவென்று குப்பைகளை வீசுகிறானே என்று ஆதங்கப்பட்டு நாமும் அதே தவறை செய்யலாகாது! .

நாம் சரியாக செய்வோம்,செய்வோம் அதை பார்த்தாவது ஒருநாள் அவமானமடைந்து அவர் திருந்துவார்.எல்லோர் கைகளும் இணைந்தால் இமயத்தைக்கூட இலேசாக அசைக்கலாம் என்பது முன்னோர்களின் முதுமொழி. தெண்டித்திடுவொம்-தூய்மை நகரமாய் திகழ்ந்திடச்செய்வோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...புகைப்படம் எடுத்து பிரதமருடன் நிற்க ஏற்பாடு செய்ய முடியுமா
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40670

பிரதமருடன் நின்று புகைப்படம் எடுக்க யாராவது ஏற்பாடு செய்தால் எல்லோரும் வரிசையாக துடைப்பத்துடன் தூய்மை இந்தியா என்ற போர்டுடன் சுத்தம் செய்ய தயாராக இருப்பார்கள். அப்படி ஏதாவது ஏர்பாடு செய்வோமா...

அட.... இப்போதுதான் மக்களின் முதல்வர் தமிழகத்தின் முதல்வராக முடி சூடப் போகிறாரே....அவருடன் நெருங்கி வரும் மோடியுடன் புகைப் படம் எடுத்தால் என்ன முதல்வருடன் எடுத்தால் என்ன அதையாவது செய்யுங்களேன்..நமது நகரமன்ற தலைவி கூட முதல்வருடன் நெருக்கமானவர்தானே...அவர் கூட இந்த ஏற்பாட்டை செய்யலாமே,,,,

சுத்தம் சோறு போடும் என்று சொல்ல வேண்டாம் சுத்தம் ஈமானில் பாதி என்று சொல்லுங்கள். சுத்தத்தை பற்றி நபிகள் நாயகம் சொல்கின்ற எவ்வளவோ செய்திகள் இருக்கிறது...5 வேளை தொழுகைக்கே ஒவ்வொரு முறையும் ஒழு செய்வது அந்த சுத்தத்தைவலியுறுதத்தானே.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பொறுப்புள்ளவர்களாக ...
posted by N.S.E.மஹ்மூது. (ரியாது – சவுதி அரேபியா. ) [21 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40675

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த குப்பைகளை பார்க்கும்போது மக்களின் பொறுப்பின்மையையும் , நகராட்சி ஊழியர்களின் கவனக்குறைவையும் – கடமையை செய்ய மறுப்பதையும் உணர முடிகிறது.

மேலும் இதுபோல் காட்சியளிக்கிற வார்டுகளில், உறுப்பினர் தனது சேவையை செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

-------------------------------------------------

மக்கள் பொறுப்புள்ளவர்களாக இருந்திருந்தால் குப்பைகளை நகராட்சி குப்பை வண்டி வரும்போது அவர்களிடம் கொடுப்பார்கள்.

குப்பை வண்டி தொடராக வரவில்லை என்றால் அதை எப்படியாவது வரவழைத்திருப்பார்கள்.

வார்டு மெம்பரை முற்றுகையிட்டு குப்பை வண்டியை தினசரி வர ஏற்பாடு செய்வார்கள்.

--------------------------------------------------

நகராட்சி ஊழியர்கள் வேலையை கவனமாக செய்பவர்களாக இருந்திருந்தால் இத்தனை குப்பைகள் தேங்கிக் கிடக்க வாய்ப்பே இல்லை – அவர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனலாம்.

இல்லை இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்கே போய், யாரிடம் புகார் செய்யப்போகிறார்கள் என்ற தப்பாண எண்ணத்தில் தங்கள் கடமையை செய்ய மறுக்கின்றார்களா?

இந்த இடத்தில் ஏன் ஒரு குப்பைத் தொட்டியை வைக்ககூடாது ? அல்லது இதற்கு முன்பு ஒன்று இருந்திருந்தால் அது என்னவாயிற்று?

குப்பையை அள்ளிச் செல்கின்றவர்கள் மட்டுமல்ல அதை மேற்பார்வை செய்கின்ற சூப்பர்வைஸர் என்று ஒருவர் உண்டே! அவர் எங்கே? சென்றார் இத்தனை நாட்களாக?

--------------------------------------------------

குப்பைகள் தேங்காமல் ஒவ்வொரு வார்டையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியப் பொறுப்பு வார்டு மெம்பரையே சேரும்.

அந்த இடத்தில் குப்பைத் தொட்டி ஒன்று நிரந்தரமாக இருக்கவும் அதை அவ்வவ்வப்போது அள்ளி செல்லவும் வார்டு மெம்பராக இருப்பவர் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அதை அவர் செய்ததாக தெரியவில்லை – மக்களுக்காக தொண்டு செய்யத்தான் அந்தந்த வார்டுகளை சார்ந்த மக்கள் வார்டு மெம்பரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அடிப்படை தேவையையே ஒரு மெம்பர் செய்யவில்லை என்றால் அவர் மெம்பராக இருப்பதில் அர்த்தமில்லை.

--------------------------------------------------------

சகோதரர் விளக்கு எஸ்.எம்.ஏ. அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.

கல்யாணம் மற்றும் விசேஷங்களில் தடபுடலாக விருந்து வைப்பவர்கள் எதுவும் கெளரவக் குறைவு வந்துவிடக்கூடாது – அதிகமாகவே ஆக்குங்கள் (சமையுங்கள்) என்று ஆக்கி சட்டிக் கணக்கில் மிஞ்சிப்போகும் - அதை அங்கே கொடு, இங்கே கொடு என்று கொடுத்துவிடுவார்கள் – அதுவும் இரவில் மிஞ்சிப்போனால் பெரும்பாலும் மண்ணில் புதைக்கப்படுகிற காட்சிகளை காணலாம்.

இப்படி கெளரவம் பார்த்து பல ஆயிரக்கணக்கில் வீணாக கொட்ட மனம் வரும் – அதே நேரத்தில் சுத்தம், சுகாதாரம் பேணுவதற்காக சில நூறு ரூபாய்களை செலவு செய்து அந்த இடத்தை சுத்தம் செய்ய மனம் இருக்காது.

இதற்கெல்லாம் காரணம் மார்க்கப்பற்று குறைவதும் – ஹராமான பணம் புழங்குவதும்தான்.

------------------------------------------------

தெருக்களில் கல்யாணப்பந்தல் போட்டால் நகராட்சியிலிருந்து உடனே வந்து, வரி வசூல் செய்வார்கள் – அது என்ன கணக்கு , எவ்வளவு பணம் – ஒரே பந்தலுக்கு ஒரு முறை வசூலா? இல்லை பல முறை வசூலா?. அது யாருக்கும் தெரியாது! என்னைப்போல் அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும் - அதற்கு வக்காலத்து வாங்க இன்னால்/முன்னால் கவுன்ஸிலர் வேறு வருவார் – அதிலெல்லாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்வதில்தான் எதிரும் புதிருமாவார்கள்.

நகராட்சியில் நல்ல நிர்வாகம் நடந்தால் எவ்வளவோ செய்யலாம் பந்தல் வரி வசூல் செய்யும்போதே! துப்பரவு பணிக்கும் சேர்த்து அட்வான்ஸாக வசூல் செய்து கொள்ளலாம்.

வீட்டுக்காரர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்திருந்தால் பணம் திரும்பக் கொடுத்துவிடலாம் – சுத்தம் செய்யாதிருந்தால் நகராட்சியே அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி முறையாக ரஷீது கொடுத்து சேவையாற்றலாம். இதை நமது நகராட்சி செய்யுமா?.

--------------------------------------------------

அன்பான மக்களே!

இனிமேலாவது, வரக்கூடிய நகராட்சி தேர்தலில் உங்களுக்கு சேவை செய்யக்கூடிய ஹராம் – ஹலாலுக்கு பயந்து நடக்கின்ற மனிதரை தேர்ந்தெடுங்கள்.

அல்லாஹ்! நமது மக்களுக்கு நேர்வழிக்காட்டுவானாக! ஆமீன். வஸ்ஸலாம்.

N.S.E.மஹ்மூது.
ரியாது – சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40677

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னப்பா இது .....இந்த தொகுதி உறுப்பினர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள் ....ஓன்று மட்டும் நமக்கு தெளிவாக தெரிகிறது....உறுப்பினர் அவரின் தொகுதியை சரிவர கவனிக்க வில்லை ....என்பது மட்டும் விளங்குகிறது ....

நமது '' இணைய தளம் '' குறிப்பிட்டது போன்று நமது ஊரின் மற்ற பகுதிகளிலும் இந்த அவல நிலை இருப்பது உண்மையே ......மற்ற பகுதிகளுக்கும் சேர்த்து நல்லதோர் முடிவு வந்தால் நல்லதே .......இப்படியே போனால் நம் ஊரின் நிலை தான் என்ன ??

நமது நகராச்சி இவ்வளவு மெத்தனம் ?? நாம் யாரை தான் குறை சொல்லுவது ?? அவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு .....

நல்லதோர் நிர்வாக திறமை உள்ள நகர் மன்ற தலைவி அவர்கள் இருந்தும் நமது ஊரின் முன்னேற்றத்துக்கு ஒரு வழியும் இல்லாமல் இருப்பது நமது '' துரதிஸ்டமே ''

நாம் பொருத்து விட்டோம் .....இன்னும் கொஞ்ச காலம் தானே பொறுப்போம் ..... அல்லாஹ் நல்லதையே நாடுவான் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by kamalmusthafa (abha.ksa) [21 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40680

நம்ம ஓட்டு போட்டு M .L .A .வாகவும் மந்திரியாக வும் ஆக்குறோம் அவர்களே தொகுதியை சரியாய் கவனிப்பது கிடையாது. பாவம் இவர் சாதாரனவார்டு மெம்பர்தானே.பரிமார் தெரு தானே யாரும் கேக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போல் தெரிகிறது.

அவர்களும் மனிதர்கள் தானே என்பதை மறந்தது விட்டார் பாவம் பரிமார் தெரு மக்கள் நகராச்சி கூட இதை கண்டு கொள்வது இல்லை என்பதை நினைத்தால் மிகவும் வருந்த தக்க விஷயம்.

நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியாஎன்ற திட்டத்தை கொண்டு வந்து கொஞ்ச நாள் அவரும் நாட்டில் உள்ள குப்பை கலை அகற்றி கொண்டு இருந்தார். இதை பார்த்து நம்ம ஊர் நகராச்சி தலைவியும் நம் ஊர் கடல் கரையில் குப்பைகளை அகற்றுவது மாதிரி நம் ஊர் இலையதளத்தில் பார்த்தேன். இப்போதுதான் புரிகிறது எல்லாம் விளம்பரத்துக்கு தான் என்று இனியாவது உண்மையான முறையில் நகரை சுத்தமாக வைக்க முன்வர வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved