Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:57:27 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15637
#KOTW15637
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 22, 2015
DCW நிறுவனத்தின் 57வது கால்கோள் தின விழா! நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6357 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (33) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டி.சி.டபிள்யூ நிறுவன 57வது கால்கோள் தினவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவிற்கு டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முடித் ஜெயின் தலைமை வகித்தார். நிர்வாக தலைவர் மால்டி ஜெயின், நிர்வாக உதவித் தலைவர்கள் ஜெயக்குமார் மற்றும் சுபாஷ்டாண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாக உதவித் தலைவர் மேகநாதன் அனைவரையும் வரவேற்றார். விளையாட்டுக்குழு தலைவர் மீனாட்சி சுந்தரம் விளையாட்டு அறிக்கை சமர்பித்தார்.

விழாவில் தமிழக அரசின் சமூக நலத்துறை இயக்குனர் சேவியர் கிரீஷோ நாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மூத்த பொது மேலாளர் சுரேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். நிறுவனத்தின் ஆண்டு மலரான சங்கமம் இதழை சிறப்பு விருந்தினர் சேவியர் கிரீஷோ நாயகம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.



விழாவில் ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத் தலைவர் தாமோதரன், நகர் நலமன்றத் தலைவர் பி.பூபால்ராஜன், நகர காங்கிரஸ் தலைவர் எல்.ராஜாமணி, த.மா.கா. பிரமுகர்கள் இரா.தங்கமணி, இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஜி.ராமசாமி, ஆத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.பி.முருகானந்தம், துணைத் தலைவர் கண்ணன், வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்களான சேர்ந்தபூமங்கலம் துரைராஜ், வரண்டியவேல் ஜனகர், வீரபாண்டியன்பட்டணம் ரூரல் சந்திரசேகர் மற்றும் மூலக்கரை குமரேசன், ஒப்பந்தகாரர்கள் நல்லூர் வி.முத்துபாண்டியன், எஸ்.ஆர்.எஸ். சுரேஷ், ஆர். தங்கபாண்டியன், டி.ராஜா, ஏ.கே.ஜெயராஜ், கான்டிராக்டர் சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் எஸ்.தியாகராஜன், ஆர்.தவமணி, ஆர்.தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் விழாக்குழு துணை தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 10வது வார்டு உறுப்பினர் பதுருல் ஹக் (நாளிதழ் பதுருதீன்? என குறிப்பிட்டிருந்தது), 12வது வார்டு உறுப்பினர் சுகு, 14வது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா (இவரின் கணவர் இங்கு பணிப்புரிகிறார்), 15வது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 17வது வார்டு உறுப்பினர் அஜ்வாது ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

10வது வார்டு உறுப்பினரை தவிர்த்து, கலந்துக்கொண்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்த உறுப்பினர்களை காயல்பட்டணம்.காம் தொடர்பு கொண்டதில், அவர்களும் நிகழ்ச்சியில் தங்கள் பங்கேற்பை ஊர்ஜிதம் செய்தனர்.

7வது வார்டு உறுப்பினர் அந்தோணி கலந்துக்கொண்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அவர் காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் மறுப்பு தெரிவித்தார்.

DCW நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் - 7வது வார்டு உறுப்பினரின் பெயர் தவறுதலாக நாளிதழில் வெளிவந்துள்ளதாக காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் விளக்கம் அளித்தார்.

தகவலில் உதவி:
தினமணி, தினத்தந்தி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39777

ஒட்டு மொத்த மக்களே இந்த ஆலைக்கு எதிராகவும், அதிகமான மக்கள் இந்த ஆலையால் பாதிப்புக்குள்ளாகி, கொடிய வியாதியால் தினமும் செத்து செத்து மடிந்தும், பாதிப்புக்களின் கொடுமையில் சிக்கி சின்னாபின்னமாகி நடைபிணமாக அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.

மக்களின் பிரதிநிதியான நீங்கள் அவர்களின் விழாவில் கலந்து கொண்டு, சிறப்பித்தது மிக்க சந்தோசம். மிகவும் பெருமையாக இருக்கின்றது.

இந்த ஆலைக்கு சட்டவிரோதமாக, தன்னிச்சையாக விரிவாக்க பணிக்கு முந்தைய ஆணையர் அனுமதி கொடுத்ததை ரத்து செய்யும் தீர்மானம் நகர்மன்றத்தில் கொண்டு வந்த சமயம், சகோதரர்கள் ஜஹாங்கீர், சம்சுதீன் மாமா ஆகியோரை தவிர்த்து அனைவர்களும் DCW விற்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் இருந்து, தீர்மானத்தை எதிர்த்தீர்கள்.

ஒரு குழு அமைத்து, DCW விற்கு சென்று ஆய்வு செய்வோம் என்று அன்றைய கூட்டத்தில் சூளுரைத்தீர்கள்.

அன்று குழு அமைத்து செல்லுவதின் அர்த்தம் புரியாமல் இருந்தது. இன்று கொஞ்சம் கொஞ்சம் புரிந்து வருகிறது.

இந்த DCW அமைந்துள்ள வார்டின் பிரதிநிதி சாமி ஐயா இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லையா.? இல்லை என்றால் உண்மையான பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்களின் மக்கள் பணிகள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by vilack sma (jeddah) [22 March 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39778

???????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...you , too , brutus ?
posted by mackie noohuthambi (colombo) [23 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39782

நீயுமா, புரூட்டஸ்?

இதை தவிர இந்த செய்திக்கு விமர்சனம் தேவை இல்லை. எனது கருத்துப் பதிவுகளில் மிகக் குறைந்த 8 எழுத்துக்கள் உள்ள கருத்துப் பதிவு.புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ?????
posted by Dawood bin Shaffie (Hong Kong) [23 March 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 39783

???????????????????????? ஒன்னும் புரியலயே?????? குப்பையிலே குளிர் காய போரீங்களா உறுப்பினர்களே?????

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Lukman (chennai) [23 March 2015]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 39785

அஸ்ஸலாமு.அழைக்கும் ஊரே வெறுக்கும் இந்த நச்சு ஆலையின் நிகழ்ச்சயில் இவர்கள் கலந்து இருப்பது கண்டனத்திற்குரியது.மக்கள் பிரதி நிதிகளான. இவர்கள் தாங்கள் இதில் கலந்து கொண்டதர்க்கான காரணத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்

லுக்மான்
முன்னாள் நகர மன்ற உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [23 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39788

இவர்கள் அங்கு நடத்தப்படும் விழாக்களில் கலந்து கொள்வது ஒன்றும் புதிது அல்ல - சிலருக்கு சில தேவைகள் அவசியமாகிறது அங்கு இவர்களுக்கு பூர்த்தியடைகிறது. அது போன்று இவர்களால் DCW க்கும் தேவைகள் பூர்த்தியடைகிறது.

இதில் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை...!

நகர்மக்களை இரசாயன கழிவின் மூலம் சுகாதார கேடுகளில் தள்ளவைக்கப்படும் DCW ஆலையின் விழாவில் பங்குகொள்ளும் உறுப்பினர்களை நகர்மக்கள் அனைவரும் விளங்கி கொண்டால் போதுமானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன
posted by Omer Abdul Qadir (Chennai) [23 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39789

யார் எக்கேடு கெட்டா எனக்கென்ன ....நான் திருந்தவும் மாட்டேன் அடுத்தவனை திருந்தவும் விட மாட்டேன்....நல்லதொரு கொள்கை..தேர்ந்தெடுத்த காயல் மக்களுக்கு அல்வா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [23 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39793

இவர்கள் அடுத்த முறை வேட்பார்கள் போட்டிக்கு நின்றால் முகத்தில் கரி பூசுங்கள் ..

மிக கவலையோடு ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.,எஸ்
சென்னை

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...வருந்துகிறோம் ..
posted by netcom buhari (chennai) [23 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39798

இப்பொழுது இவர்கள் யார் எண்டு புரிந்து இருக்கும். konjam கூட சமுதாய அக்கரை இல்லாதவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mohamed Sathack (Chennai) [23 March 2015]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 39799

கவனிக்கவும் //இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஜி.ராமசாமி// C & P

சில மாதங்களுக்கு முன்பு செய்துங்கனலூரில் வைத்து DCW ஆலைக்கு ஆதரவாக போராடியவர்கள் இவர்களே. வேறு எந்த மத சாதி அமைப்புகளும் கலந்து கொள்ளாத இந்த நிகழ்வில் இவர்கள் தாங்களாகவ போவர்கள்?

DCW ஆலையே காசு குடுத்தே காயல்பட்டினத்து மக்கள் முஸ்லிம்கள். அவர்களை எதிர்க்க மதத்தை தான் கையில் எடுக்க வேண்டும் என்ற நோக்கோடு ஹிந்து முன்னணியை காசு குடுத்து போராட சொல்லியது போல இருக்கிறது. பார்க்க http://www.kayalpatnam.com/shownews.asp?id=14930

அவர்களுக்கு ஏற்றார் போல செயல்படும் நமது நகரமன்ற உறுப்பினர்கள். கையூட்டு பெற்றார்களாஎன்று தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by kuthub (chennai) [23 March 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39802

நம்மை இவர்கள் அங்கு அடகு வைத்து விட்டு இவர்கள் நகரமன்ற தலைவியை உப்பு சப்பு இல்லாத ஒரு வாகனத்துக்காக குறை சொல்வதற்கு இவர்கள் தகுதி அற்றவர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. மனிதகுல மாணிக்கங்கள்! ..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [23 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39804

DCW நச்சி ஆலைக்கெதிராக நமதூர் அனைத்து மக்கள் சார்பாக "KEPA " தொடுத்திருக்கும் வழக்கு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பது மட்டுமல்ல. சில நேரங்களில் சில சங்கடங்களையும் DCW க்கு உண்டாக்குகிறது என்ற செய்திகளும் வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் அந்த வழக்கு இப்படி போனாலும் ஆச்சரியமில்லை.

அதாவது,

நீதிபதி: காயல்பட்டண அனைத்து மக்களும்,அநேகமான மீடியாக்களும் உங்கள் ஆலைக்கெதிராக விமர்சிப்பதில் உண்மையில்லையா?

DCW வக்கீல்:உண்மையில்லை,தமிழகத்தில் பணம்படைத்த ஊர்களில் காயல்பட்டணமும் ஒன்று,அதிலுள்ள சில பண முதலைகள்,எங்கள் ஆலையின் வளர்ச்சி பொறுக்காமல் பொறாமையுடன் பல வழிகளிலும் பணத்தை செலவழித்து ஒரு போலி எதிர்ப்பையே உருவாக்குகிறார்கள்!

நீதிபதி:ஆதாரம்.

DCW வக்கீல்:அந்த நகராட்சியின் உறுப்பினர்களை அந்த ஊர்மக்கள்தான் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள் அவர்களின் பெரும்பாலான உறுப்பினர்கள் எங்கள் ஆலையின் உண்மையறிந்து எங்களுக்கு ஆதரவாக உள்ளார்கள்.

நீதிபதி:சாட்சி கூர்களுடன் ஆதாரத்தை தரமுடியுமா?

DCW வக்கீல்:ஆதாரம்:1.எங்கள் ஆலையின் விரிவாக்க பணிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வு அந்த நகராட்சியில் விவாதமாக வந்த பொழுது எங்கள் ஆலைக்குஆதரவாகவும், விரிவாக்க தடை தீர்மானத்தை எதிர்த்தும் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தார்கள்

ஆதாரம்:2:அண்மையில் எங்கள நிறுவனத்தின் 57-வது கால்கோள் விழாவில் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இதோ புகைப்படங்கள்.மேலும் பலநேரங்களில் பல வழிகளிலும் எங்களுக்குஉறுதுணையாய் இருந்து எங்களுடன் இரண்டற கலந்துவிட்டவர்கள்.

நீதிபதி: நீங்கள் அவர்களை சொல்லுவதுபோல்,நீங்கள் ஏன் அந்த உறுப்பினர்களுக்கு பணஉதவி செய்து உங்களுக்கு ஆதரவா திருப்பி இருக்கக்கூடாது?

DCW வக்கீல்: அவர்கள் சாதாரண நியமன உறுப்பினர்கள் அல்ல.ஊர் அனைத்து மக்களும் வாக்களித்து தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்கள்.ஆகவே,அந்த மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக நடந்தால் சும்மா விடுவார்களா? ஊருக்கு எதிராக செயல்படும் துரோகியே எங்கள் வார்டுக்குள் நுழைய உனக்கு தகுதி இல்லை என்று விரட்டியடிக்க மாட்டார்களா?ஆகவே ஊர்மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள்

இப்படித்தான் வழக்கும் வருங்காலத்தில் செல்ல இருக்கிறது

அடுத்து,அண்மையில் SDPI அந்த நச்சு ஆலைக்கெதிராக ஆர்ப்பரித்து ஆர்ப்பாட்டம் செய்தபொழுது அதை பெரும்பாலான மீடியாக்கள்,நமதூர்மக்கள் மற்றும் அண்டைய பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்தததே. குறிப்பாக பேயன்விளை ஊர்மக்கள் சார்பாக போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தார்கள்.

அவர்களில் ஒருசிலர் சொன்னது அந்த ஆலையின் எடுபிடிகள் எங்களிடம் வந்து,உங்களுக்கு கணிசமான பணஉதவி,மற்றும் ஊருக்கு தேவையான உதவிகளையும் அந்த ஆலை நிர்வாகம் செய்யும்,நீங்கள் இந்த போராட்டத்தை எதிர்ப்பதாக ஒரு அறிக்கை விட்டாலே போதும் என்று நிர்பந்தப்படித்தினார்கள்!

அந்த பணத்துக்கு சோரம் போகாமல் நாங்கள் சொன்னது, காயலூரில் உங்கள் ஆலையின் கழிவு நீர் கடலில் கலக்கும்முன்னால் ஏற்ப்படும் விஷக்கிருமியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானவர்கள்,எத்தனைபேர்கள் மாண்டிருக்கிறார்கள் அந்த உயிர்கொல்லி கிருமியின் தாக்கத்தால் கொத்து,கொத்தாக மரணச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.நாங்களும் மனிதர்கள்தான், எங்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று உண்டு.

உங்களிடம் பணத்தை வாங்கிகொண்டு அவர்களுக்கு விரோத மாகவும்,உங்களுக்கு ஆதரவாகவும் நடந்தால்,எங்கள் கடவுள் எங்கள் குடும்பத்தை வேறு வழியில் தண்டித்து விடுவான்.இப்படி பணதைபெற்று சுகம் பெறுவதென்பது, வேறு தொழிலாகிய விடுதி தொழில்செய்து சுலபமாக சம்பாதிக்கும் தொழிலைவிட ஈனத்தனமானது என்று கூறினோம்.

ஊரால்,இனத்தால்,மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நம்முடைய இதயத்தால் என்றும் நிலைத்துநிற்கும் அந்த மனிதகுல மாணிக்கங்கள் நிறைவுடன் நீடொழிவாழ்வார்கள்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by buhary48 (kayalpatnam) [23 March 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 39807

நம் நகராட்சியில் இந்த நாசகார ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட கூட்டணி தானே. அவர்கள் சென்றதில் தவறில்லை.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. மனசாட்சியே இல்லையா?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [23 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39809

அந்த ஆலையின் நச்சு கழிவுகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர் பலர். அந்த நோயின் பாதிப்புகளால் நித்தம் நித்தம் வேதனையில் புழுங்கி கொண்டிருப்பவர் பலர்.

புற்று நோய்க்கு அந்த ஆலை தான் முக்கிய காரணம் என்று இவர்களுக்கு தெரியாதா? அப்படி தெரிந்தும் அவர்களின் விழாவில் கலந்து கொண்டுள்ளீர்களே? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பதிலாக XXXX செய்யலாம்.

கலந்து கொண்டதற்கு நீங்கள் என்ன சால்ஜாப்பு சொன்னாலும், அல்லாஹ் உங்கள் உள்ளத்தையும் செய்கைகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.

அந்த நச்சு ஆலையின் விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்களை கண்டிக்கும் நம்மில் எத்தனை பேர், அதே நிறுவனத்தின் மைதானத்தில் விளையாடும் நமதூர் இரு கால்பந்து அணிகளை (KSC & USC) கண்டிக்கிறோம்? இத்தனைக்கும் அங்கு போய் தான் போட்டியில் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.

அதே போல், அந்த ஆலையின் நிர்வாகிகளை, நாம் நடத்தும் நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கிறோம். அப்படி அழைக்கும் அமைப்புகளையும் நாம் கண்டிக்கிறோமா?

அதே போல், அவர்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் நமதூர் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கேட்டால், தரமான கல்வி என்று சால்ஜாப்பு. பிள்ளைகளை அந்த பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோரை கண்டிப்பதும் இல்லை.

அந்த ஆலை நச்சு கழிவுகளை நிறுத்தும் வரை, அவர்களுக்கு யார் துணையாக இருக்கிறார்களோ அவர்களை ஒதுக்கி வைப்போம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Shaik Abdul Cader (Kayalpatnam) [23 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39811

முதலில் காயல்பட்டிணத்தில் நடமாடிக்கொண்டிருக்கும் இது போன்ற இரு கால் புற்று நோய்களை கண்டு பிடித்து அவைகளை ஆணி வேரோடு அழிக்க வேண்டும் (புற்று நோயை மட்டுமே ).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அவசரப்பட்டு திட்டாதீர்கள்!
posted by Hameed Rifai (Jeddah) [23 March 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39813

இந்த விழாவில் பங்கேற்ற கவுன்சிலர்களை அவசரப்பட்டு யாரும் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்.....

(1) கால்கோள் விழாவை தவறுதலாக கம்பெனி மூடு விழா என்று நினைத்து சென்றிருக்கலாம்.....

(2) ஒருவேளை நெடுஞ்சாலை மூடப்பட்டிருக்கலாம். எனவே, அடைக்கலாபுரம் வழியாக சென்றால் சுற்ற வேண்டுமே என்று கருதி, ஆலையின் உள்ளே குறுக்குப்பாதையில் செல்ல நேர்ந்திருக்கலாம். அந்த நேரத்தில் எதேச்சையாக விழா நடந்த இடத்தில் யாராவது வற்புறுத்தி உட்கார வைத்திருக்கலாம்.....

(3) ஏற்கனவே அவர்கள் ‘ஆய்வு செய்ய’ திட்டமிட்டிருந்தார்களல்லவா? அதை தனிப்பட்ட முறையில் செய்வதை விட, அரசு அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், பிரமுகர்கள் முன்னிலையிலேயே செய்ய திட்டமிட்டிருக்கலாம்.....

(4) ஒருவேளை நகர்மன்றக் கூட்டத்தையே அங்கு நடத்தக் கூட திட்டமிட்டிருக்கலாம்.....

ஹூம்... எல்லாம் நம்ம தலையெழுத்து! கொஞ்சம் கூட உப்புச்சப்பு இல்லாத காரணங்களைக் கூறி தலைவியை எதற்கு எடுத்தாலும் இவர்கள் எதிர்த்துக் கொண்டிருந்தபோதே நான் நினைத்தேன் இவர்களுக்கு ஆலையின் பின்புலம் இருக்கும் என்று! (ஏனெனில், தலைவி அவர்கள் எல்லா வகையிலும் இந்த ஆலைக்கு இன்றளவும் எதிர்ப்பைப் பதிவு செய்துகொண்டே இருக்க, இவர்களோ சம்பந்தம் பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.)

என் நீண்ட நாள் எண்ணத்தை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது நம் ‘மரியாதைக்குரிய’ கவுன்சிலர்களின் நடவடிக்கை!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [23 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39817

அந்த நச்சு ஆலையின் விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர்களை கண்டிக்கும் நம்மில் எத்தனை பேர், அதே நிறுவனத்தின் மைதானத்தில் விளையாடும் நமதூர் இரு கால்பந்து அணிகளை (KSC & USC) கண்டிக்கிறோம்? இத்தனைக்கும் அங்கு போய் தான் போட்டியில் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. CP

சாளை அப்துல் ரசாக் அவர்களே..! தாங்கள் விபரம் அறியாமல் கருத்து பதிந்து உள்ளீர்கள் என்று நினைக்கிறன் - DCW மைதானத்தில் போய் தான் போட்டியில் விளையாட வேண்டும் என்ற நிர்பந்தம் நமதூர் இரு (KSC & USC) கால்பந்து அணிகளுக்கு தமிழ் நாடு அரசின் கால் பந்து கழகம் நிர்பந்திக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..! மேலும் விளையாட்டு போட்டிக்காக DCW சார்பாக KSC & USC க்கு நன்கொடையாக அளிக்க வந்த நிதியை கூட மனதால் வெறுத்து அந்நிதியை பெற மறுத்து வருகிறார்கள் அறிந்து கொள்ளுங்கள்.

சாளை அப்துல் ரசாக் அவர்களே..! தாங்களுக்கு தெளிவு வேண்டுமெனில் நகரின் இரு கிளப்புக்களின் நிர்வாகிகளை அணுகி தெளிவு பெறலாம்..!

ஆனால் நகரின் சமுதாய கல்லூரி மாணவிகளை அழைத்து கொண்டு இந்த DCW அமில ஆலைக்கு தான் தொழிற்சாலை ஆய்வு விசிட் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் நகரில் இயங்கும் சமுதாய கல்லூரிக்கு ஏற்பட்டு இருக்காது என நாம் நம்புவோமாக..!

அமைப்புக்களை கண்டிகிறோமா..! என்று கேள்வி எழுப்பும் நீங்கள் நீங்கள் நமது நகரில் இயங்கும் சமுதாய கல்லூரி நிர்வாகத்தை கண்டிகிறோமா..! இது எனது கேள்வி..!

அட்மின் அவர்களே..! இது விவாதம் அல்ல..! சில தெளிவுகளை வெளிப்படுத்தி இருக்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...கலந்து கொண்டவர்கள் பெயர் வேண்டும்
posted by K.S.Seyed Mohamed Buhary (அபுதாபி) [24 March 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39818

வரிசையாக கலந்து கொண்டவர்களின் பெயரையும் அவர்களின் வார்டையும் கூருங்கள் அடுத்த தேர்தலில் கவனிக்க உதவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...நடமாடும் புற்று நோய்கள்
posted by Shaik Abdul Cader (Kayal Pattinam) [24 March 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39819

நடமாடும் புற்று நோய்கள் இருக்கும் வரை ,புற்று நோய்களின் நடமாட்டம் இருக்கத்தான் செய்யும்....அதற்கான ஆணிவேரை அறிந்து முற்றிலும் ஒழிக்காதவரை ,அது பிறரை ஒழிக்காமல் விடாது.....புற்று நோய்கள் ஜாக்கிரதை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by nizam (india) [24 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39820

மனசாட்சி இல்லாவதவர்கள் அந்த விழாவுக்கு போய் உள்ளார்கள். கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும்.

மாற்றுமத சகோதர சகோதரி உறுபினர்களை நாம் விமர்சிக்க முடியாது. ஏனென்றால் அவர்களது சமுகத்தின் முடிவுகள் நமது ஜமாத்தின் கட்டுபாட்டில் இல்லை. அவரகளை விமர்சிக்கிம்போது மதநல்லினக்கதையும் பாதிக்காதவாறு இருக்கவேண்டும்.

சாலை லுக்மான் காக்கா கூறுவது மிகவும் சரி. நான் ஒரு படி மேலே சென்று கேட்கிறேன். ஜும்மாவில் கிட்டத்தட்ட பாத்வாவே கொடுத்துவிட்டார்கள். இந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கவேண்டாம். என்று. ஆனால் கமலாவதி காயல் மாணவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது. தினசரி வந்து போகும் பஸ்களை எண்ணினால் தெரியும். கமலாவதியில் படிக்காதவர்களை கேவலமாக நடத்திய கலாச்சாரத்தை மோகத்தை உருவாக்கியவர் யார் நாம்தானே? அதில் பாதிக்கப்பட்டு பெற்றோரை (அல்லா மன்னிக்க வேண்டும்) நொந்தவரில் நானும் ஒருவன்.

ஆனால் இன்று எந்த கமலாவதி மாணவரை விட நாற்பது தேச மக்களோடு பணியாற்றிய அனுபவம் காரணமாக அவர்களை விட சரளமாக பேச எழுத என்னால் முடியும். இதை பெருமைக்காக சொல்ல வில்லை. ஆங்கில அறிவு நாம் பழகும் இடத்தை வைத்துதான் வளருமே ஒழிய பள்ளியை வைத்து அல்ல. இன்று வரை அந்த மோகம் தொடர்கிறது.

ஆடோ ஒட்டுனைரையும் பொட்டிகடை வைத்து இருப்பவரையும் கேட்டு பாருங்கள். எனது மகனை கமலாவதியில் படிக்கவைப்பதுதான் எனது லட்சியம் என்று கூறுவார். இந்த மோகம் தடுக்கப்பட வேண்டும். அது போல செல்டவர்களை ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வைக்கவேண்டும். இல்லையென்றால் வழக்கு சூடு பிடிக்கும்போது ஊருக்குள் அமைக்கப்பட்டு இருக்கும் செல்டவர்களையும் அதிக எண்ணிகையில் தங்களது பள்ளியில் பயிலும் காயல் மாணவர்களையும் தங்களது சாதகத்துக்கு டி சி டபுள்யு நிர்வாகம் எடுத்துகொள்ளும்.

சென்ற விழாவில் அதிகமான உறுப்பினர்கள் கலந்தது போய் இப்போது குறைந்த எண்ணிகையில் உறுப்பினர்கள் கலந்தது மனமாற்றமே. இபோதுவந்துள்ள விமர்சனம் காரணமாக அடுத்த விழாவில் நமது சமுகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட வல்ல நாயன் போதுமானவன்.

மேலும் இந்த விஷயம் வெள்ளிகிழமை நடக்கபோகிற நகரமன்ற கூட்டத்தை பாதிக்காமல் இருக்கவேண்டும். ஏனென்றால் முக்கிய அம்சமான வடிகால் கட்டுவது நிறைவேறவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Farook (ksa) [24 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39823

இந்த dcw வாழ் பட்ட கஷ்டம் கொஞ்சமா நெஞ்சமா ? இந்த ஒருபினர்கள் என்னமோ காயல் நாட்டின் அதிபர் என்ற நினைப்பு , நீங்க எல்லோரும் இதற்க்கு விளக்கம் தரனும் . நீங்க நகரசிய்யில் அங்கம் வகிக்கும் அதை கேக்கும் உரிமை எங்களுக்கு உண்டு ,

இன்னொன்னும் சொல்லணும் , dcw பிரச்னை பேச மும்பும் , கொள்கை வேறுபாடில்லாமல் கமலவதிய்யில் போய் பலர் சும்மாஹ் தொழுகைக்கு முக்கிய துவம் கொடுக்காமல் சென்று படித்தார்கள் . அதன் தாக்கம் பலர் உணருவார்கள் . கேவலம் இங்கிலீஷ் உக்கு ஜும்மா பெருசா என்று நினைப்பு ?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:.மன்னிக்க முடியாத குற்றம்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [24 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39827

நாம் நமது எதிரிகளை மன்னித்து விட்டு விடலாம் . ஆனால் .... நம்முடன் ஒன்றாக இருந்து நமக்கு துரோகம் செய்யும் துரோகிகளை மன்னித்து விட முடியாது ..... நாம் இவர்களை மன்னிக்கவும் கூடாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. தங்களின் நிர்பந்தத்திற்காக, கொள்கையில் சமரசம் செய்து கொள்ளலாமா?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [25 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39829

நமதூர் இரு அணிகளும் (KSC & USC) ஏன் அந்த ஆலையின் மைதானத்தில் விளையாட வேண்டும்? அப்படி விளையாடும் அமைப்புகளை நாம் யாரும் கண்டிக்கவில்லையே? என்ற எனது ஆதங்கத்துக்கு தம்பி முத்து இஸ்மாயில் தனது பதிலில்,

"நமதூர் இரு (KSC & USC) கால்பந்து அணிகளுக்கு தமிழ் நாடு அரசின் கால் பந்து கழகம் நிர்பந்திக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்..! ....தாங்களுக்கு தெளிவு வேண்டுமெனில் நகரின் இரு கிளப்புக்களின் நிர்வாகிகளை அணுகி தெளிவு பெறலாம்..! " (C&P)

சகோதரரே, USC அணியின் முக்கிய அங்கமாகிய நண்பன், 'ஹிட்லர்' சதக் இடம் பெற்ற தகவல் அடிப்படையிலேயே எழுதினேன். அவர் தவறான தகவல் தந்தார் என்று வைத்துக் கொண்டாலும், அந்த அமைப்புகளின் நிர்பந்தத்திற்காக, ஊரே எதிர்க்கும் ஆலை மைதானத்தில் விளையாட 'சமாதானம்' செய்து கொள்வீர்கள். அப்படி தானே?

அந்த ஆலையின் முக்கிய நிர்வாகிகள் இந்த இரு மைதானத்தில் நடைபெறும் நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கும் அமைப்புகளை கண்டிக்கிறோமா? என்ற கேள்விக்கு,

"அமைப்புக்களை கண்டிகிறோமா..! என்று கேள்வி எழுப்பும் நீங்கள் நீங்கள் நமது நகரில் இயங்கும் சமுதாய கல்லூரி நிர்வாகத்தை கண்டிகிறோமா..!" (C&P)

வாவு வஜீஹா கல்லூரியில் industrial visit -க்கு பல வருடங்களாக (இந்த ஆலையை தவிர்த்து) கோவில்பட்டியில் இருக்கும் ஆலை வரை அழைத்து சென்றிருந்தாலும், இந்த ஆலைக்கு நமது பிள்ளைகளை அழைத்து சென்றது தவறு. கண்டிக்க தக்கது. இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

அந்த (industrial visit) செய்தியை போட்ட இணையதளங்கள், கல்லூரி நிர்வாகத்தின் கருத்தையும் சேர்த்து போட்டிருந்தால், நிர்வாகத்தின் நோக்கம் தெரிந்திருக்கும். அல்லது, இந்த இணையதளம் கேட்ட விளக்கத்திற்கு , நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டதா?

அந்த செய்திக்கு, நிர்வாகத்தை கண்டித்து, இதே இணையதளத்தில் கருத்து பதிந்த பலர், நான் குறிப்பிட்ட அமைப்புகள் மற்றும் பெற்றோரை கண்டிக்காமல் இருப்பதை தான் புரிய முடியவில்லை.

ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது.

-சாளை. அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [25 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39830

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்......நமது மாண்பு மிகு ....நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவர்களையும் இந்த விசையத்தில் மனதாரவே பாராட்டாமல் இருக்க முடிய வில்லை .....நாம் இவர்களை தேர்வு செய்து நகர் மன்றத்துக்கு அனுப்பியதை சொல்லவா ....அல்லது நம் ஊர் மக்கள் தவறுதலாக முடிவு எடுத்து நகர் மன்றத்துக்கு அனுப்பியதை சொல்லவா ?? அல்லது நாம் தற்போது இந்த நிகழ்வில் இவர்கள் கலந்து கொண்ட்டதை நினைத்து மன வருந்தவா ??

நம் ஊர் பொது மக்களின் உயிருக்கு உலை வைக்ககுடிய இந்த நாசமா போன >> DCW << எப்போது நிவர்த்தி அடையும் காலாம் வருமோ ........

ஒரு சிலவற்றில் அடிமையான இந்த நம் நகர் மன்ற உறுப்பினர்களை '' நம் ஊர் அனைத்து பொது மக்களுக்கும் '' நன்கு '' தெரியுமாறு இவர்களை பற்றி ஏன் ....நம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாது.... இந்த விழிப்புணர்வு ரொம்பவும் அவசிய படலாம் .....

இப்படி நம் உறுப்பினர்கள் ''துரோகம் '' பண்ணுவார்கள் என்று யாருமே கொஞ்சமும் நினைக்க வில்லை ?? அல்லாஹ் போதுமானவன் ....

இந்த துரோகத்தை நினைத்தாலே ,,நம் ஊர் அனைத்து மக்களின் நெஞ்சம் '' கொதிக்கிறது ...

ஓகோ .. நகர் மன்றத்தில் நம் மரியாதைக்குரிய ஒரு சில ''உறுப்பினர்கள் இதற்க்கு தான் >> DCW << விவகாரத்தில் ...நம் மரியாதைக்குரிய ஒரு சில உறுப்பினர்கள் அது சம்பந்தமான '' தீர்மானத்தை '' கடுமையாகவே எதிர்க்க காரணம் அது தானோ .......

நம் ஊர் அனைத்து பொது மக்களும் இன்ஷா அல்லாஹ் ....அடுத்து வருகின்ற நகர் மன்ற தேர்தலில் ...இவர்கள் நின்று ...இவர்களை வெற்றி பெற வழிவகுத்தோமானால் நம்மை விட ( படித்த ( முட்டாள் கண்டிப்பாகவே வேறு யாரும் இல்லை ....நம் உள்ளம் கொதிக்கிறது ....

நமது >> KEPA << பொது அமைப்பினர்கள் நம் ஊரின் மக்களுக்காவே கடுமையாக போரடி கொண்டு இருக்கும் இந்த தருனத்தில் ...நம் உறுப்பினர்களின் இந்த மட்டகரமான செயலால் நாம் பாதிக்க படலாம் ....

இன்ஷா அல்லாஹ் ....DCW ....தொழிற்சாலையால் நம் ஊர் மக்கள் பாதிக்காமல் இருக்க வல்ல நாயன் அருள் புரிவானாகவும் ஆமீன்......

அல்லாஹ் நல்லதையே நம் மக்களுக்கு நாடுவானாகவும் ஆமீன் .......... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. காயல்பட்டணம் நகர்மன்ற 18-வது வார்டு உறுப்பினரின் விளக்கம்.
posted by E.M.Samy, 18th ward (Kayalpattinam) [25 March 2015]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 39833

DCW ஆலையின் 57வது கால்கோள் விழாவில், உறுப்பினர்களில் நான்குபேர் மட்டும் கலந்து கொண்டதை உறுதி செய்து கொண்டதாக இச்செய்தி கூறுகிறது. இதில் கருத்து பதிந்திருக்கும் சகோதரர் சாளை ஜியாவுதீன் அவர்கள் நான் இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லையாயின் பாரட்டுக்கள் என சொல்லியுள்ளார். என்னை புரிந்து கொண்டமைக்கு அவருக்கு பாரட்டுக்கள்.

நமது நகர்மன்ற ஏரியாவில் அந்த ஆலை இருப்பதால், இவ்விழாவில் பங்கேற்கும்படி நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதாக அறிகிறேன். நகர்மன்ற தலைவருக்கும் அனுப்பியிருக்கலாம். எனக்கும் வந்தது. ஆனால் எனக்கு அவ்விழாவில் கலந்து கொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. எனவே நான் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

கலந்து கொண்டவர்களின் நிலைப்பற்றி அவர்களிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும். அவர்கள்தான் அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். மற்ற உறுப்பினர்கள் அதற்கு பொறுப்பல்ல. தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையில் வரும் கருத்து வேறுபாடுகளில் பல விசயங்களில், நாங்கள் அனைவருமே ஒத்துப்போகக்கூடிய நிலையிருப்பதால், நாங்கள் அனைவரும் எல்லா விசயங்களிலும் ஒரே மாதிரியான நிலைபாடுதான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த வகையில்தான் DCW விழாவில் பங்கேற்கும் விசயமும் அமையும்.

இருப்பினும் இதை பயன்படுத்திக்கொண்டு இச்செய்திக்கு கருத்து தெரிவித்திருப்பவர்கள் சில தவறான குற்றச்சாட்டுக்களை உறுப்பினர்களின் மீது சுமத்தியுள்ளார்கள்.

இந்த ஆலைக்கு சட்டவிரோதமாக, தன்னிச்சையாக விரிவாக்க பணிக்கு முந்தைய ஆணையர் அனுமதி கொடுத்ததை ரத்து செய்யும் தீர்மானம் நகர்மன்றத்தில் கொண்டு வந்த சமயம், சகோதரர்கள் ஜஹாங்கீர், சம்சுதீன் மாமா ஆகியோரை தவிர்த்து அனைவர்களும் DCW விற்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் இருந்து, தீர்மானத்தை எதிர்த்தீர்கள் -சாளை ஜியாவுதீன் (C&P)

இதன் மூலம் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் DCW விற்கு ஆதரவாளர்கள் என்ற தோற்றத்தினை உருவாக்க முயற்ச்சிக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்னாலேயே, விரிவாக்கப்பணிக்கு அரசின் ஒப்புதலை பெற்று, அதற்குரிய கட்டிடத்தை கட்ட சம்பிரதாய சட்டப்படி நகராட்சி ஆணையருக்கு DCW நிர்வாகத்தினர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

தலைவர் உட்பட உறுப்பினர்கள் எவருக்கும் தெரியாமல் அந்நேரத்தில் ஆணையர் அனுமதி வழங்குகியிருக்கிறார். ஓராண்டு கழித்துதான் தெரிய வருகிறது. அந்நேரத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும்போது, ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேறிவிடுவதாலயே உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. இதுவும் தலைவர் உட்பட்ட அனவருக்கும் தெரியும். ஆனால் இத்தீர்மானத்தினை தலைவர் கொண்டு வந்ததின் நோக்கம், முழுக்க முழுக்க சுயவிளம்பரம் தேடுவதற்கு மட்டுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இருப்பினும் உறுப்பினர்கள் அத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்பதை வைத்து, ஏதோ விரிவாக்க திட்டத்தின் உற்பத்திக்கு நாங்கள் துணைபோவது போல சித்தரிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறது KEPA. நகர்மன்றத்தில் தீர்மானத்தினை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காததை வைத்து, DCW ஆலைக்கு சாதகமாக நீதிபதி தீர்பளிக்க வாய்ப்புள்ளது என்பது போன்று எழுதுகிறார்கள்.

KEPA வழக்கறிஞருக்கு விபரம் தெரியாதா? வழக்காடுவதற்கு வேறு ஆதரங்களே இல்லையா? ஆகவே இதன் மூலம் ஒட்டு மொத்த உறுப்பினர் மீதும் களங்கம் கற்பிப்பதே சிலரின் நோக்கம்.

இந்நிலையில் ஒரு கேள்வி எழுகிறது. அத்தீர்மானத்திற்கு ஒரு ஒப்புக்காகவாவது தார்மீக ஆதரவாக உறுப்பினர்கள் ஏன் அன்று நிற்கவில்லை என்ற கேட்கக்கூடும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை.

இருப்பினும் அக்கூட்டத்தில், நாங்கள் நேரடியாக DCW சென்று பார்த்து, தனியாக தீர்மானம் கொண்டு வருவோம் என்று அறிவித்ததையும் நினைவு படுத்துகிறேன்.

இப்படிக்கு
E.M.சாமி,
18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர், காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by Salih (Chennai) [25 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39834

உறுப்பினர் சாமி அவர்களின் கருத்து பதிவில் சில தவறான தகவல்கள் உள்ளதால் இந்த விளக்கம்.

// ஓராண்டுக்கு முன்னாலேயே, விரிவாக்கப்பணிக்கு அரசின் ஒப்புதலை பெற்று, அதற்குரிய கட்டிடத்தை கட்ட சம்பிரதாய சட்டப்படி நகராட்சி ஆணையருக்கு DCW நிர்வாகத்தினர் விண்ணப்பித்திருக்கிறார்கள் ... // Copy & Paste

2006ம் ஆண்டு DCW நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், காஸ்டிக் சோடா, நிலக்கரி மூலமான மின் உற்பத்தி மற்றும் Synthetic Iron Oxide Pigments Plant (SIOPP) என்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் அதில் SIOPP தொழிற்சாலையை - DCW நிறுவனம் துவக்காமல் இருந்து வந்தது.

இந்த (SIOPP) தொழிற்சாலைக்கு தான், டிசம்பர் 2013இல் நகர்மன்றதிற்கு தெரியாமல், ஆணையர் கட்டுமான அனுமதியை கொடுத்துள்ளார். தற்போது KEPA வழக்கில் உள்ள விரிவாக்கப்பணிகளுக்கு அல்ல.

// அந்நேரத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, உற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும்போது, ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேறிவிடுவதாலயே உற்பத்தியை நிறுத்திவிட முடியாது. இதுவும் தலைவர் உட்பட்ட அனவருக்கும் தெரியும். // Copy & Paste

இதுவும் தவறான தகவல். SIOPP உற்பத்தியை துவக்க DCW நிறுவனம் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் - விண்ணப்பம் செய்துள்ளது. ஆனால் - இதுவரை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நாம் அறிய, Consent To Operate - CTO என்ற அனுமதியை வழங்கவில்லை.

SIOPP கட்டுமானமே சட்டத்திற்கு புறம்பாக நடந்துள்ளது, எனவே அதனை ரத்து செய்கிறோம் என்ற தீர்மானத்தை நகர்மன்றம் நிறைவேற்றியிருந்தால், இது வரை SIOPP உற்பத்தியை துவக்க (CTO) அனுமதி வழங்காமல் இருக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இனியும் SIOPP தொழிற்சாலையில் உற்பத்தியை துவக்க அனுமதி வழங்காமல் இருக்க, கண்டிப்பாக அந்த தீர்மானம் தோதுவாக இருக்கும்/இருந்திருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. எது விளம்பரம் சாமி அவர்களே???
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [25 March 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39835

“கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு...” CP

காயல்பட்டினம் நகர்மன்றத்திலேயே வயதால் மூத்தவரான சாமி அண்ணன் அவர்களின் இந்த பதில் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறதே.....?

KEPA அமைப்பு நகராட்சி அரசியலில் எந்தக் காலத்தில் தலையிட்டது என்று கூற இயலுமா சாமி அண்ணன் அவர்களே???

“...இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை.” CP

ஊரின் மிக முக்கியமான விஷயம் இது என்பதை உணராமல், ஊரில் எத்தனை அமைப்புகள் உள்ளன - அந்த அமைப்புகளில் யார் யார் உள்ளனர் என்ற அடிப்படையைக் கூட விளங்காமல், KEPAவில் உள்ளவர்களை எங்களுக்குப் பிடிக்கவில்லை, எனவே நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று பெரியவரான தாங்கள் கூறலாமா? இது ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகா சாமி அண்ணன் அவர்களே???

“இருப்பினும் அக்கூட்டத்தில், நாங்கள் நேரடியாக DCW சென்று பார்த்து, தனியாக தீர்மானம் கொண்டு வருவோம் என்று அறிவித்ததையும் நினைவு படுத்துகிறேன்...” CP

ஒரு பலமான, அரசியல் செல்வாக்கு மிக்க, பண பலம் கொண்ட நிறுவனம்..... அப்படிப்பட்ட நிறுவனத்தை - தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன் துணிச்சலான நடவடிக்கைகளால் எதிர்த்து வரும் தலைவி அவர்கள் கொண்டு வந்த இந்தத் தீர்மானம் விளம்பரம் என்று சொன்ன சாமி அண்ணன் அவர்களே....!

“அப்படி என்றால் - கட்டிடம் கட்டியாச்சு, உற்பத்தி துவங்கிடுசி (ஆனால் இதுவரை துவங்கவில்லை என்பது வேறு விஷயம்), அதனால் தீர்மானம் வேஸ்ட்” என்று சொல்லிவிட்டு, அப்புறம் ஏன் “நேரில் ஆய்வு செய்ய வேண்டும்????” என்று முடிவெடுத்தீர்கள் சாமி அண்ணா???

சரி, முடிவெடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டதே.....? ஆய்வு செய்துவிட்டீர்களா அல்லது உங்களது இந்த அறிவிப்பை விளம்பரம் என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா சாமி அண்ணா.....???

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. அந்த கடவுளின் கொடிய தண்டனை பிடியிலிருந்து தப்பவே முடியாது.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39836

DCW யின் 57-வது கால்கோள் விழாவில் சாமி அவர்கள் பங்கு கொள்ளாத விளக்கத்திற்கு நன்றி. அவர் பங்கு கொண்டாரா என்ற சந்தேக கேள்விக்கே பதறியடித்து பதிலளித்து இருக்கிறார் சாமி.

ஆனால் பக்கம் பக்கமாக கிழி,கிழி என்று கேவலமாக கிழிக்கிறார்கள் பொதுமக்கள் அங்கு கலந்து கொண்ட உறுப்பினர்களை நோக்கி, அந்த உறுப்பினர்களுக்கு கொஞ்சமாவது XX, XXX, XXXX, XXX, XXXX இருந்திருக்குமேயானால் ஒருவராவது மறுத்தோ அல்லது பதில் விளக்கமோ அளித்திருப்பார். இதுவரை இல்லையே.(சுமார் 2300 பேர்கள் இதுவரை இந்த செய்தியை பார்த்திருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் கூட உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டதில் தவறு இல்லை என்று கருத்து பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

அடுத்து,சாமி அவர்களின் விளக்கத்திற்கு, விளக்கம் அல்ல சமாலிப்பிற்கு சகோதரர் சாலிஹ் அவர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சாமி அவர்களின் கருத்துப்பதிவில் கொடைக்கானலில் இடி இடித்தால் குஜராத்தில் மழை பெய்ததாம் அதுபோல் இருக்கிறது "KEPA "வினால் எங்களுக்கு தனிப்பட்ட மரியாதைக் குறைவு, என்று மாமியார் மருமகள் சண்டைபோல் சித்தரித்து இருக்கிறார். என்ன அவமானம், எப்படி, எங்கே நடந்தது எப்படியெல்லாம் அல்லோலப்பட்டோம் என்பதை விளக்கவேண்டுமல்லவா? அதில் ஒரு உதாரணம் கூட இல்லையே, மொட்டையாக பொத்தாம் பொதுவாக அல்லவா பொரிந்திருக்கிறீர்.

ஆகவே அந்த "KEPA" வின் மரியாதைக்குறைவுதான் எங்களுக்கு முக்கியமே தவிர, காயல் மக்கள் இந்த நச்சு ஆலைக் கிருமியின் தாக்கத்தால் பல நூறு பேர்களை கொடிய உயிர் கொள்ளி நோய் பாதித்தாலும், பல நூறு பேர்கள் மாண்டு மண்ணோடு மண்ணாய் நாசமாய் போனாலும் கவலை இல்லை. எங்களை "KEPA "கவுரவக் குறைவாய் மதித்ததால், நாங்கள் அந்த DCW ஆலைக்கு எங்களின் அகம் கனிந்த ஆத்மார்த்த ஆதரவை அளித்திருக்கிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது. கேட்பது "சாமி" பதில் சொல்லுங்கள் பக்த கோடிகளே ?

தன்னிலம் பாராமல் இரவுபகல் எந்நேரமும் இந்த ஊருக்காக, ஊர்மக்களின் நலனுக்காக,தங்கள் உயிர்தாகுதல் மிரட்டலுக்கும் மசியாமல், பணத்தாசைக்கு "X" திங்காமலும், XXX XXX XXX XXX கண்ணிய காயலான் என்ற அசல் முத்திரையுடன், தங்களை இவவூர் சகோதர சகோதிரிகளுக்காக தியாகம் செய்து புண்ணிய பணியாற்றிவரும் அந்த "KEPA" அமைப்பை விட நீங்கள் எந்ததெந்த வழியில் அந்த நச்சு ஆலைக்கேதிராக செயல்பட்டீர்கள், எத்தனை போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்று பட்டியலிட முடியுமா? அல்லது "KEPA"அமைப்பு அந்த ஆலைக்கு அடிவருடியாய் அந்தரங்கமாக செயல்பட்டு வருகிறது என்ற ஒரு உதாரணத்தையாவது கூறமுடியுமா?

கொதிக்கிறது மனது. அந்த நச்சு ஆலையியன் தாக்கத்தால் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு பல லட்சம் ரூபாயை இழந்து இன்னும் பூரண சுகம் பெறாமல் துடித்து, துவண்டு கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பத்தின் சார்பாக சாபமிடுகிறேன், அந்த நச்சு ஆலைக்காதரவாய் அணுவளவு அந்தங்கமாகவோ / நேரிடியாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களின் குடுப்பம் அந்த கடவுளின் கொடிய தண்டனை பிடியிலிருந்து தப்பவே முடியாது.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Farook (ksa) [25 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39839

அந்த நச்சு ஆலைக்காதரவாய் அணுவளவு அந்தங்கமாகவோ / நேரிடியாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களின் குடுப்பம் அந்த கடவுளின் கொடிய தண்டனை பிடியிலிருந்து தப்பவே முடியாது. ( கோப்பி பேஸ்ட்)

ஒருவர் தவறு (DCW விஷயமாகட்டும் அல்லது வேறு தவறாகட்டும் ) செய்வதால் , அவரை சாடலாமே தவிர அவரின் குடும்பத்தை சாபமிடுவது சரியல்ல , அப்படி செய்தால் எந்த குடும்பமும் மிஞ்சாது ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [25 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39843

மரியாதைக்குரிய சாமி ஐயாவிற்கு,

DCW வை உள்ளடக்கிய வார்டுக்கு பிரதிநிதியான தாங்கள் அந்த விழாவில் கலந்து கொள்ளாததே எங்களுக்கு பூரிப்பாகவும் சந்தோசமாகவும் உள்ளது.

தன்னிச்சியாக முந்தைய ஆணையர் அனுமதி கொடுத்த அனுமதியை ரத்து செய்யும் தீர்மானம் கொண்டுவந்த அந்த கூட்டத்திற்கு நானும் வந்து இருந்தேன், இரு நன்முத்துக்களை தவிர, அனைத்து முத்துக்களும் DCW பக்கமே உருண்டு ஓடியதை கண்டேன். ஊர் மக்களுக்கு எதிராக இருப்பதை அறிந்து அதிர்ந்தேன். மேல் விளக்கம் சகோதரர் சாலிஹ் தந்துள்ளார்.

சாமி ஐயா அவர்களை பற்றி நன்கு அறிவேன். அவர் மக்களுக்கு செய்து வரும் சேவைகளையும் அறிவேன். வார்டு மக்கள் ஒரு சிறு பிரச்சனை என்றாலும் உடனே உதிக்கும் வார்த்தை "சாமி ஐயா விற்கு போன் போடு" என்பதாக தான் இருக்கின்றது.

ஒரு நாள் தண்ணீர் வரவில்லையா, ஆடு, மாடு, நாய் செத்து கிடக்கின்றதா, அரசாங்க வேலைகள் நடப்பதில் சிக்கலா எதற்க்காக இருந்தாலும் வார்டு மக்கள் முதலில் அழைப்பது உங்களை தான்.!! . அதிகாலையிலேயே ஸ்போட்டுக்கு ஆஜராகி விடுவீர்கள்.

தண்ணீர் தட்டுப்பாடு காலத்தில் வாட்டர் வண்டிக்கு பின்னால் ஒவ்வொரு வீடாக அலைந்தது,மழை வெள்ள காலத்தில் JCB இயந்திரத்தில் அமர்ந்து காடு காடாக சுற்றி பணியாற்றியது போன்ற பல பல மக்கள் பணிகளை நாங்கள் நினைவு கூறத்தான் செய்கின்றோம். உங்கள் தொகுதியில் எரியாத விளக்குகள் கம்மி என்பதும் அறிவோம். உங்களின் மக்கள் சேவையில் ஒரு குறையும் இல்லாமல் நிறைவாக நல்ல பெயருடன் செய்து வருகிறீர்கள். வெல்டன்.

கூடவே நகர் மன்றத்திலும் வேறு எந்த ஈகோ விற்கும் தலை வணங்காமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஆக்க பூர்வமான காரியங்களில் தங்களை அர்பணித்து மக்கள் பணியாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.

உங்கள் வார்டு மக்களில் ஒருவன்,

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. இந்த வலி பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது அறியக்கூடியது..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [25 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39844

ஒரு கொடியவனாலையோ அல்லது ஒரு கொடிய நிர்வாகத்தாலையோ ஒரு குடும்பம் மட்டுமல்ல எண்ணற்ற குடும்பங்கள் பாதிக்கப்பட்டு,அப்படி பாதிப்புக்குள்ளான குடும்பத்தைச் சேர்ந்தவன் தங்கள் பொருளையும், உயிரையும் பறிகொடுத்து "பதுவா" செய்கிறவன், யா அல்லாஹ் என்குடும்பத்தை இந்த நிலைக்கி கொண்டுவந்தவனுக்கும் அதற்கு உறுதுணையானவனுக்கும் குடும்பம் இருக்கிறது என்னுடைய வலியை உணரச்செய்ய நீதான் தண்டிக்கவேண்டும் என்ற ஆற்றாமை குரலும் ,அபயக்குரலும் வெளிவருவதற்கு வேறு எந்த காரணமும் தடையாக இருக்க முடியாது.

பாதிக்கப்பட்டவனின் குடும்பம் அபயம் நாடி யாஅல்லாஹ் எங்களை இக்கதிக்குள்ளாக்கியவனை எதிர்க்க எங்களுக்கு சக்தி இல்லை இக்கொடியவனுக்கும் அவனுக்கு துணைபோகிற கும்பலுக்கும் ஏற்றதொரு கூலியை கொடு என்று கண்ணீர் மல்க கையேந்தினால் அந்த அபலகுரலுக்கும். அல்லாஹ்விற்கும் இடையில் எந்த மறப்பும், தடையும் இல்லை நேரிடியாகவே அல்லாஹ்வை சென்றடையும் என்பதுதான் நபிமொழி.

இந்த கொடூர ஆலையினால் பாதிக்கப்புக்குள்ளான உறவினர்களின் வீட்டு குமர்களுக்கு இதுவரை மாப்பிள்ளைகள் அமையவில்லை என்ற உண்மை எல்லோருக்கு தெரியாத ஒரு ரகசியமான அவல நிலையாகும் !

அந்த குமரும்,அவளின் பெற்றோர்களும் ஓசையின்றி ஒப்பாரிவைத்து வெளியில் சொல்லமுடியாமல் தவித்து துவண்டுகொண்டிருக்கும் அந்தகுடும்பமும் அவர்களின் உற்றாரும் உறவினர்களும் வேதனை தீயில் விழுந்த புழுக்களாய் துடித்துக்கொண்டிருக்கிரார்களே அவர்களின் ஆற்றாமைக்கும்,அபயக்குரலுக்கும் அணைபோடமுடியுமா? இந்த வலி பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரியக்கூடியது அறியக்கூடியது.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. கம்பு வெட்டி போடும் உங்கள் தந்திரம் ஒரு போதும் நிறைவேறாது.. ஈ சாமி அவர்களே..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [26 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39847

கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த அமைப்பு பல்வேறு வழிகளில் உறுப்பினர்களாகிய எங்களை அவமானப்படுத்தி, எங்கள் மீது அவதூறுகளை கூறி வந்ததோ, அதே KEPA அமைப்பு இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க எங்களைக் கேட்டுக் கொண்டதாலும், அவர்களின் தூண்டுலின் பேரிலேயே இத்தீர்மானம் வந்ததாலும் நாங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுதான் உண்மை. CP

ஐயா ஈ சாமி அவர்களே..! தங்களின் அவமானம் என்ன..? / தங்கள் மீதான அவதூறு என்ன..? இவைகளை உங்களிடமிருந்து விளக்கம் எதிர் பார்க்கிறேன் - விளக்கம் தர முன் வாருங்கள்..! இந்த நச்சு ஆலையால் நகரில் பல உயிர்கள் நோயால் துடிதுடித்து செத்து மடிவது குறித்து உங்களுக்கு கவலை இல்லை உங்கள் கவலை எல்லாம் (ஈகோ) உங்களின் சுய கவரவும் குறித்தது என்பதை மிக தெளிவாக விளக்கி விட்டீர்கள்.

மேலும் இந்த ஈகோ விளக்கத்தின் மூலம் உங்களின் அனுபவ தராதரம் விளங்க முடிந்தது - நன்றி..!

ஏதோ மறைந்து கிடக்கும் ஒரு காரணத்தை திசை திருப்ப KEPA அமைப்பை தாங்கள் சாடி அமைப்புக்குள் பிரிவினையை உண்டாக்க முயற்சிப்பது போல் உங்களின் விளக்கம் உணரபடுகிறது.. நகர் மக்கள் இந்த நச்சு ஆலை விசியத்தில் மிக தெளிவாக விழிப்புணர்வோடு இருகிறார்கள் மேலும் கம்பு வெட்டி போடும் உங்கள் தந்திரம் ஒரு போதும் நிறைவேறாது.. ஈ சாமி அவர்களே..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...ஈகோ தான் முக்கியம்....விரைவில் எதிர்பார்க்கிறோம்
posted by Shaik Abdul Cader (Kayal Pattinam) [26 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39850

பத்தோட பதினொன்னு...
அத்தோட நானும் ஒண்ணு......
ஆக மொத்தத்தில்லெ ...
காயல் மக்கள் கண்ணுலெ மண்ணு......

எங்களுக்கு எதப்பற்றியும் கவலை இல்லை......
ஈகோ தான் முக்கியம்....

விரைவில் எதிர்பார்க்கிறோம்
"வீ கோ" என்ற சொல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved