Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:31:26 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15645
#KOTW15645
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 24, 2015
அரசியல் சாசனத்துக்கு எதிரானது சட்டப் பிரிவு 66-ஏ: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2671 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும் வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது.

இச்சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வாய்ப்பிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாகவே இது உள்ளது.

மேலும் இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுப்படையாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக தெரியும் விஷயம், மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்தாகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கு பின்னணி:

கடந்த 2012-ல், சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரே மறைவை அடுத்து மும்பையில் அக்கட்சியினர் நடத்திய கடையடைப்புப் போராட்டத்தை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட ஷாஹீன் தாதா என்ற இளம்பெண்ணும் அதற்கு விருப்பம் வெளியிட்ட அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரேயா சிங்கால் என்ற சட்ட மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த மே 2013-ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்காக ஒருவரை கைது செய்யும்போது ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தது.

தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, இந்த வழக்கு நீதிபதிகள் சலமேஸ்வர், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், 'தேசிய பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்த முடியும். சமூக வலைதளங்களில் மாற்று கருத்துகள், விமர்சனங்களை வெளியிடுவது குற்றமல்ல. இந்திய குடிமகன் தனது அடிப்படை பேச்சுரிமையை பயன்படுத்துவதை தடுக்க முடியாது.

இதை தடுக்கவும் மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், சட்டப் பிரிவு 66ஏ துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்துக்காக மட்டுமே அதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுவிடமுடியாது' என வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

நீதிபதிகள் தரப்பில்,சட்டப்பிரிவு 66-ஏவில் சில பொதுப்படையான சட்ட வார்த்தைகள் அடங்கியுள்ளன. அவ்வாறான வார்த்தைகள் அச்சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்த வழிவகை செய்யும் என தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [24 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39824

ஆக, கருத்து சுதந்திரத்தை நிலை நிறுத்த, நம் வலை தளத்தில் கருத்துக்களை கத்திரி போடாமல் பிரசுரிப்பார்கள் என்று நம்புவோமாக.!!

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...தீர்ப்புக்கள் திருத்தப் படலாம்
posted by mackie noohuthambi (colombo) [24 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39825

அல்லாஹ்வின் தீர்ப்பை தவிர வேறெந்த தீர்ப்பும் இறுதியாகவோ உறுதியாகவோ இருக்க முடியாது. ஒருவருக்கு மன உளைச்சலை கொடுக்கக் கூடிய பேச்சைக்கூட தவிர்த்துக்கொள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.

திருமறையில் அந்நிஸா என்ற அத்தியாயத்தில் 148வது வசனம் இப்படி சொல்கிறது."அநீதம் இழைக்கப்பட்டவரை தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.அல்லாஹ் யாவையும் செவி ஏற்கிறவனாக, நன்கறிந்தோனாக இருக்கிறான்..".

யாரும் யாரை பற்றியும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்ற தீர்ப்பு சர்ச்சைக்கு உரியது. உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளிக்கிறது என்பதினாலேயே அது வேத வாக்காக ஆகி விட முடியாது. இந்த நாட்டில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கள் எத்தனையோ மக்களுக்கு அல்லது பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவதாக அமைந்ததில்லை. சாட்சிகள், பிறள் சாட்சிகள், முன்னுக்கு பின்னான தகவல்கள் எல்லாவற்றையும் வைத்து அலசி, சில நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பதுதான். அவர்களும் மனிதர்கள்தான். தீர்ப்புக்கள் ஹை கோர்ட்டில் வழங்கப் படுகிறது அதை இன்னொரு கோர்ட் ரத்து செய்கிறது. இறுதியாக உச்ச நீதி மன்றம் தீர்ப்புக்களை ரத்து செய்கிறது அல்லது ஊர்ஜிதப் படுத்திகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்படுபவர்களுக்கு அவனது தீர்ப்பு - நாளை மறுமையில் வழங்கப் படும் என்பது தான் சத்தியம். அவனுக்கு பயப்படுவது மட்டுமே நம்மை நியாயவான்களாக வாழ செய்யும். மற்றவை எல்லாம் போலியான சந்தர்ப்பவாத தீர்ப்புக்களே. வேறு வழி இல்லை. இந்த தீர்ப்புக்களை நாம் ஜீரணித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்!...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [24 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39826

நடக்கின்ற காவி ஆட்சியாளர்களின் நரம்பில்லா நாவிலிருந்து வெளிவவரும் நரகல் வார்தைகள் அது எந்த அளவிற்கு எதிர்தரப்பினர்களை உணர்வால், உள்ளத்தால் வேதனை படுத்தும் என்ற ஒரு எண்ணம் இமியளவுகூட இல்லாமல் பேச்சு,எழுத்து சுதந்திரம் என்ற போர்வைவில் போடும் கூத்தும்,கும்மாளமும், ஏளனமும்.இருமாப்பும் ,எள்ளி நகையாடலும் எல்லாம் ஒருங்கே சேர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்ற ஒரு அவல காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்த வேலையில், இப்படியொரு தீர்ப்பு வந்திருப்பது துரதிஷ்டமே.

நீதியரசரின் எண்ணமோ,அவரின் நோக்கமோ நன்மையான நடவடிக்கையென்று முடிவெடுத்து இருக்கலாம். ஆனால் இதுபோன்ற தீர்ப்புகளை எந்த அளவிற்கு தீய வழியில் செயல் படுத்தலாம் என்று சதித்திட்டம் தீட்டிகொண்டிருக்கும் சதிகார கும்பலுக்கு இது ஒரு "அல்வா" செய்தியல்லவா.சும்மாவே இந்த பேய்களெல்லாம் ஆடும்,அதிலும் கொட்டும் சேர்ந்து ஒலி உண்டாக்கினால் கேட்கவா வேண்டும் ?அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வேதனையுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கருத்து சுதந்திரமா???
posted by Dawood bin Shaffie (Hong Kong) [26 March 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 39849

இந்த பிரிவு தடை செய்யப்பட்டால் என்ன இல்லாவிட்டால் என்ன?

அமுல் படுத்தப்பட்டால்... சிறுபான்மையிரை மட்டுமே தாக்கும்... ஆட்சியிலிருக்கும் அந்த கயவர்கள் மீது ஒரு துளியளவும் இந்த சட்டம் பாயாது...

ரத்து செய்யப்பட்டால்??? அந்த கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்....!!!

இரண்டிற்கும் வித்தியாசம்... முன்னர் சட்ட சிக்கலுடன் சுதந்திரம்... இப்போ... சுதந்திரத்துடன் சேர்ந்து ஸ்வீட்டும் கூட....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved