Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:54:59 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15549
#KOTW15549
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 9, 2015
காயல்பட்டினம் வழியாக பேருந்துகள் செல்ல நடவடிக்கை! நகர்மன்றத் தலைவர் தகவல்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3696 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள், அடைகலபுரம் வழியாக செல்வதாக நீண்ட நாட்களாக புகார்கள் எழுந்து வருகிறது. இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், சமீபத்தில் - சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.

அந்த புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து - நகர்மன்றத் தலைவர், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பல பேருந்துகள் காயல்பட்டினம் வராமல் - அடைக்கலபுரம் பாதையில் செல்வதாக பல நாட்களாக புகார்கள் இருந்து வருகிறது.

இது குறித்து - ஜனவரி மாதம், சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு திரு செந்தில் பாலாஜி அவர்களிடம் புகார் மனு கொடுத்திருந்தேன்.

அதனை தொடர்ந்து - திருநெல்வேலி மண்டல பொது மேலாளர், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கிளை மேலாளர்கள் ஆகியோரிடமும் மனு கொடுத்திருந்தேன். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) அவர்களிடமும் மனு கொடுத்தேன்.

திருச்செந்தூர் கிளை மேலாளர் திரு பாஸ்கர் அவர்கள், திருச்செந்தூர் கிளை பேருந்துகளில் - அடைகலபுரம் பெர்மிட் பெற்றுள்ள இரண்டு மதுரை மற்றும் இரண்டு வேளாங்கணி பேருந்துகள் தவிர, அனைத்து பேருந்துகளும் காயல்பட்டினம் வழியாக தான் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

மேலும் - அவ்வாறு பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

இது தவிர - திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட,

சங்கரன்கோவில் (1 சேவை),
தூத்துக்குடி (1 சேவை),
விளாத்திக்குளம் (1 சேவை),
ஸ்ரீவில்லிப்புத்தூர் (2 சேவைகள்),
சிவகாசி (1 சேவை),
கோயம்புத்தூர் (2 சேவைகள்),
திருப்பூர் (3 சேவைகள்),
திண்டுக்கல் (3 சேவைகள்),
குமுளி (2 சேவைகள்),
பெரியகுளம் (1 சேவை) -

ஆகிய வழித்தட பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழியாக செல்ல துவங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

தொடர்ந்து நிலைமையை - திடீர் ஆய்வுகள் மூலமாக கண்காணிக்கவும், அதிகாரிகள் உறுதி அளித்துள்ளார்கள்.

நடவடிக்கை எடுத்த மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும், அனைத்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் - பொது மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

திருநெல்வேலி மண்டலம் சாராத - காயல்பட்டினம் பெர்மிட் பெற்ற - கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மண்டல பேருந்துகளும் - காயல்பட்டினம் வழியாக செல்ல - இறைவன் நாடினால் - தொடர்ந்து முயற்சி எடுப்பேன்.


இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [10 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39549

ஆபிதா ஷேக் அவர்களே! நீங்கள் இந்த நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி ! கண்டிப்பாக உங்களின் பதவிக்காலம் முடியும் முன்னால் இதற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும்

பெண்களாகிய நாங்கள் எப்போதோ தான் வெளியூருக்கு செல்கிறோம் அடிக்கடி வெளியூர் செல்லும் ஆண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது நாம் செல்லும் போது தான் தெரிகிறது திருசெந்தூரோ அல்லது தூத்துக்குடி , திருநெல்வேலி போன்ற வெளியூர்களில் எல்லாம் நமதூர் மக்கள் கண்டகடரிடமோ டிரைவரிடமோ சென்று இது காயல்பட்டணம் போகுமா? போகுமா? என்று பிச்சை கேட்பது மாதிரி கேட்க வேண்டியுள்ளது அவர்களும் வெறுப்பான முகபாவத்துடன் போகாது என்று கத்துகிற சூழ்நிலையை பார்க்கிறோம் இது பல வருடங்களாக நடக்கிறது. இதற்கு முடிவு எடுத்தே ஆக வேண்டும்

இப்படி ஒரு நாள் ஆழ்வார்திருநகரியில் நிற்கும் போது 10 பஸ்களுக்கு மேல் திருச்செந்தூருக்கு சென்றது காயல்பட்டணம் செல்லாது என்று கூறி விட்டனர் நாம் ஏதோ கிராமத்தில் தான் இருக்கிறோமா என்று நினைக்க வேண்டியுள்ளது அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நமதூரில் டிரைவர் ஆக வேலை பார்க்கக்கூடிய ஒருவர் சொன்ன தகவல் இன்னும் 5 ஆண்டுகள் போனால் நமதூருக்கே வண்டி வராது அந்த மாதிரி நமதூர் சாலைகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி வண்டிகளையும் பைக்குகளையும் வழியில் நிப்பாட்டி வைத்துக்கொண்டு அந்த ஊரிலேயே வேலை செய்கிற நமக்கே சிரமமாக இருக்கிறது இதனால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார் ஆதலால் இதற்கும் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் அமைச்சரிடம் மனு கொடுத்து விட்டேன் என்று இருக்காமல் இதற்கு என்ன காரணம் என்ற விளக்கத்தையும் கேட்டு தீர்வு எடுக்க வேண்டும்.

மேலும் ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்ன மாதிரி முதியோர் தொகை விதவை தொகை மக்களுக்கு கிடைக்க செய்தல் காயல்பட்டணத்தில் அலங்கோலமாக இருக்கும் ரோடுகள சீரமைத்தல் இந்த மாதிரி நல்ல காரியங்களை செய்யும் போது மக்களின் மனதில் நீங்கா இடம் பெறுவீர்கள் இறைவனிடத்தில் நமக்கு நன்மையையும் கிடைக்கும்

எல்லா புகழும் இறைவனுக்கே!
வல்லான் அவனே துணை நமக்கே!

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39552

நன்றி கலந்த பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்களுடைய தூய்மையான மக்கள் பணிகள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தொடரட்டும் நகர்மக்களுக்கான சேவைகள்...!.
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [10 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39558

சுயநலமற்ற உங்களின் அணைத்து முயற்சிகளும் இறைவன் துணையால் வெற்றி பெற பிராத்திக்கிறேன் - மேலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...

தொடரட்டும் நகர்மக்களுக்கான சேவைகள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...காயல்பட்னம் நகர்மன்ற தலைவர்
posted by Ismail Sufi (Kayalpatnam) [10 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39559

நமதூர் வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் மாற்றுப் பாதையில் சென்று வருவதை யாருமே கண்டுகொள்ளாத இந்த நேரத்தில் நகர்மன்ற தலைவி அவர்கள் அக்கரை செலுத்தி நமதூர் மக்களின் நண்மைக்காக அவர் எடுக்கும் எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் நாம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

இஸ்மாயில் சூபி
காயல்பட்னம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மாஷா அல்லாஹ்
posted by Omer Abdul Qadir (Chennai) [10 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39560

மாஷா அல்லாஹ்..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Thanks For the Effort
posted by Mohamed Hussain (Chennai) [10 March 2015]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 39563

Thanks For the Effort. I already faced this situation when i was coming back home from tuticorin, whatever long distance govt bus driver/conductor i asked, they told me that it was going in direct route via adaikalapuram.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [10 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39564

அடைக்கலபுரம் ரோடு பராமரிப்பு பணி நடந்தேருவதால், வாகனம் நமதூர் வழியாக வருகிறதே தவிர வேர்ஒன்றும் இல்லை.

அடுத்தவாரம் இதே நீடிக்குக்குமாயின் தலைவியின்,கோரிக்கை ok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39580

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களை ....பாராட்டுகிறோம் ...தயவு செய்து இந்த விசயத்தில் தாங்கள் கொஞ்சமும் அசராமல் மிக துரிதமாக செயல் பட்டு ...இந்த பஸ் போக்குவரத்து பிரச்சனையை சுமுகமாகவே முடித்து வைத்தால் ...நம் ஊர் அனைத்து பொது மக்களும் தங்களை என்றென்றும் மறவாது '' மனதில் கொள்வார்கள் ......இதில் சந்தேகமே இல்லை .....

காரணம் இந்த பஸ் போக்குவரத்து பிரச்சனையால் நம் ஊர் மக்கள் எவ்வளவு கஷ்ட படுகிறார்கள் என்பதை நான் அனுபவித்தும் ...நேரில் பார்த்தும் உள்ளேன் ....என்னோடு ஒரு சில நாளில் எம் அருமை நண்பர் .S.K.சாலிஹ் அவர்களும் நம் ஊருக்கு பஸ் வராமல் ஆறுமுகநேரி சென்று அந்த வழியாக வரும் பஸ்ஸில் பயணம் செய்து உள்ளார்கள் .....

நம் அருமை சகோதரர் அவர்கள் சொல்வது போல பஸ் டிரைவர் / கண்டைக்டர் இவர்களிடம் பஸ் காயல் பட்டணம் போகுமா ?? போகாத என்று நாம் பிச்சை எடுப்பது போன்றே கெஞ்சி கூத்தாடி கேட்டு விட்டு தான் பஸ்ஸில் ஏற வேண்டியதாக சூழ் நிலைமையாக இருக்கு ......

நம் ஊர் வயதான பெண்மணிகள் / வயதான ஆண்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்த்தால் நமக்கே வெட்கமாகவும் ...வேதனையாகவும் இருக்கிறது ....

இந்த சூழ் நிலைமை போக வேணும் ...அதான் எங்கள் யாவர்களின் எண்ணம் ......

பல தடவைகள் எம் அருமை நண்பர் பாலப்பா.. ஜலாலி அவர்களும் இது விசயமாக நடவடிக்கை எடுத்தும் உள்ளார்கள் என்பது யாவர்களும் நன்கு அறிந்ததே ....

தற்போது நம் மரியாதைக்குரிய நகர்மன்ற தலைவி அவர்களின் இந்த முயற்ச்சிக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம் ...தங்களின் மிக துரிதமான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் .....

அல்லாஹ் நல்லதையே நாடுவான் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved