Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:46:45 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15542
#KOTW15542
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 8, 2015
ப்ளஸ் 2 தேர்வெழுதச் சென்ற முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு நிர்வாகிகள் வாழ்த்து!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2797 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு இம்மாதம் 05ஆம் நாளன்று துவங்கியது. காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து நடப்பாண்டு 30 மாணவர்கள், 21 மாணவியர் என மொத்தம் 51 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.

தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு, மாணவர்கள் நல்ல முறையில் தேர்வெழுதுவதற்காக பள்ளி வளாகத்தில் இறைப்பிரார்த்தனை செய்யப்பட்டது.



பின்னர், தேர்வெழுதச் செல்லும் மாணவ-மாணவியருக்கு பள்ளி நிர்வாகிகளான ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எம்.எல்.ஷேக்னா லெப்பை உள்ளிட்டோர் தேர்வறை நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) வழங்கி, வாழ்த்தி வழியனுப்பினர்.



தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)


கடந்தாண்டு (2014) நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [08 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39533

"அஸ்ஸலாமு அலைக்கும்."

அல்லாஹ் உதவியால் நம் பள்ளி அனைத்து மாணவர்ஹல் + மாணவிஹள் முதல் வஹுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்தி துஆ செய்ஹிரென்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!!!

அன்புடன்,
சூப்பர் இபுராஹிம். எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohideen fathima (tirupattur) [08 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39535

All the best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கண்ணில் கண்ட காட்சி எல்லாம்...
posted by mackie noohuthambi (colombo) [09 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39540

மகாபாரத்தில் வரும் கவுரவர்கள் 100 பேருக்கும் பாண்டர்கள் ஐந்து பேருக்கும் துரோணர்தான் ஆசிரியர். அவர் ஒரு தேர்வு நடத்தினார். ஒரு மரத்தின் கிளையில் வைக்கப்பட்டுள்ள ஆந்தையின் வலது கண்ணில் அம்பை எய்ய வேண்டும் என்பதே தேர்வு. ஒவ்வொரு மாணவரிடம் மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? ஆந்தை தெரிகிறதா? அதன் வலது கண் தெரிகிறதா? என ஒரே மாதிரி கேள்விகளை துரோணர் கேட்டார். 104 மாணவர்களும் “தெரிகிறது குருவே” என ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தந்தனர். ஆனால் அனைவருக்கும் குறி தப்பியது.

கடைசியாக அர்ஜுனன் வந்தான். மரம் தெரிகிறதா? என்ற கேள்விக்குத் “தெரியவில்லை குருவே!” என அர்ஜுனன் பதில் தந்தான். கிளையும் தெரியவில்லை என்றான். ஆந்தையும் கண்ணுக்குத் தெரியவில்லை என்றான். பொறுமையிழந்த துரோணர் “என்னதான் தெரிகிறது?” என்றார்.

“ஆந்தையின் வலது கண் மட்டும் தெரிகிறது குருவே” என்றான் அர்ஜுனன். “அம்பை விடு” என்றதும் அம்பு வலது கண்ணைச் சரியாகக் குத்தியது.

இந்தக் கதை நமக்கு என்ன தெரிவிக்கிறது? அர்ஜுனனுக்கு மரமோ, கிளையோ, ஆந்தையோ தெரியாததுபோல, தேர்வு அறையில் உள்ள மற்ற எதுவும் உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

தேர்வு அறைக்குள்ளே நீங்களும் உங்களின் தன்னம்பிக்கையும் மட்டுமே இருக்கிறீர்கள் என்ற மனநிலையில் இருந்தீர்கள் என்றால் படித்த எதுவும் மறக்காது. உங்களின் தன்னம்பிக்கைதான் மனத்திரையில் தெளிவாக விடைகளைக் காட்டும். மனதில் பயம் இருந்தால் மனத்திரையில் விடைகள் வராது.

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், இலக்கு நோக்கிய கவனமும் இருந்தால் பொதுத் தேர்வு என்ன, வாழ்க்கையின் எந்தத் தேர்வையும் சுலபமாகக் கடந்துவிடலாம். பத்தாம் வகுப்பு தேர்வு என்பது வாழ்க்கையின் ஒரு திருப்பு முனைதான். ஆனால் அதுவே ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல. ஒரு வேளை தோல்வியே ஏற்பட்டாலும்கூடத் துளியளவும் கவலை வேண்டாம்.

வேறு ஒரு துறையில் சாதிப்பதற்காகத்தான் இந்தத் தேர்வில் தோல்வி ஏற்பட்டுள்ளது எனக் கருதுங்கள். மற்றவர்களின் கருத்துகளை உதாசீனப்படுத்துங்கள். முன்னேறிச் செல்லுங்கள். தன்னம்பிக்கையை எந்தக் காரணம் கொண்டும் கைவிடாதீர்கள். பரந்த உலகில் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. வாழ்த்துக்கள், சென்று வாருங்கள் வென்று வாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved