Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:02:34 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15214
#KOTW15214
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 17, 2015
பயோ காஸ் திட்டத்திற்கு சர்வே எண் 278யை பரிந்துரைத்து மண்டல செயற் பொறியாளர் சமர்ப்பித்த அறிக்கை விபரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2665 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பயோ காஸ் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி வழங்கிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு - அந்நிறுவனத்திற்கு தற்போது வேலை ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் நிறுவனம் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்ககத்தின் மண்டல செயற் பொறியாளர் கனகராஜ், இத்திட்டத்திற்கு பொருத்தமான இடம் குறித்த 17-10-2014 தேதியிட்ட அறிக்கை ஒன்றினை, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளருக்கு அனுப்பியிருந்தார்.

பொருத்தமான இடம் குறித்து தொழில்நுட்ப அறிக்கையினை கோரி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், ஜனவரி 2014இல் - திருநெல்வேலி மண்டல இயக்ககத்திற்கு - கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் - நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் அவ்வேளையில், இடங்களை பார்வையிட குழு ஒன்றையும் அனுப்பவில்லை; எந்த அறிக்கையும் தயாரிக்கவில்லை.

முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் - அக்டோபர் 9, 2014 அன்று நகராட்சிக்கு சர்வே எண் 278 இடத்தினை வழங்கிய பிறகு, அக்டோபர் 13, 2014 அன்று நகர்மன்றத் தலைவர், தனது முந்தைய தொழில் நுட்ப அறிக்கை கோரிக்கையை நினைவூட்டி - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக - 4 நாட்களில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை, நகராட்சி நிர்வாகத்துறையின் திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் சமர்ப்பித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறையின் திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் கனகராஜ் தயாரித்த அறிக்கை





ஒரு அரசு திட்டத்திற்கு இடம் தேடப்படும் போது சில வழிமுறைகள் கையாளப்படும். அத்திட்டத்திற்கு எவ்வளவு இடம் தேவை என பார்க்கப்படும்; அந்த இடம் அரசிடம் உள்ளதா என பார்க்கப்படும்; அந்த இடத்திற்கு அடிப்படை வசதிகள் (நீர், அணுகுசாலை, மின்சாரம் போன்ற) உள்ளதா என பார்க்கப்படும்; இந்த திட்டத்தினால் பயன்பெற உள்ள மக்களுக்கு அருகாமையில் அந்த இடம் உள்ளதா என பார்க்கப்படும்; அந்த இடம் குறித்து ஏதாவது நியாயமான ஆட்சபேனைக்கு வழிவுள்ளதா என பார்க்கப்படும்.

இவைகளும், இவைகளை தவிர வேறு தொடர்பான விஷயங்களும் பரிசீலனை செய்யப்படும். ஒரே தகுதியில் பல இடங்கள் இருந்தால், முதலில் அரசு இடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்; அது தவிர எந்த இடத்தில் அமைந்தால், குறைவான - கூடுதல் செலவு இருக்கும் என்பதும் கருத்தில் எடுக்கப்பட்டு, தகுதியான இடம் பரிந்துரை செய்யப்படும்.

நகராட்சிக்கு பாத்தியப்பட்ட அனைத்து இடங்களையும் - தொழில்நுட்ப காரணங்கள் எவற்றையும் கூறாமல் - நிராகரித்து விட்டு, அவர் அறிக்கை தயாரிக்க ஒரு வாரத்திற்கு முன்னர் - முன்னாள் நகர்மன்றத் தலைவரால் வழங்கப்பட்ட இடமான - சர்வே எண் 278 இடத்தினை, பயோ காஸ் திட்டத்திற்கு திருநெல்வேலி மண்டல செயற் பொறியாளர் பரிந்துரைத்துள்ளார்.

ஒரு அரசு திட்டத்திற்கு, ஒரு இடத்தினை தேர்வு செய்வதற்கு முன்பு தேவையான மேலே குறிப்பிடப்பட்ட எந்த அம்சத்தையும் அவர் பரிசீலனை செய்யவில்லை. அரசு இடங்களை தவிர்த்து, தனியார் தற்போது வழங்கும் இடத்தில் இத்திட்டம் வந்தால், நகராட்சிக்கு - அரசு திட்ட நிதியை தவிர, கூடுதலாக எவ்வளவு தொகை செலவாகும் என்பதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை.

மண்டல செயற் பொறியாளர் என்ற அடிப்படையில், குப்பைக்கொட்ட தேவையான 5 ஏக்கர் நிலத்தில், 4 ஏக்கர் நிலம் தான் தரப்பட்டுள்ள நிலையில், இந்த இடத்தில் பயோ காஸ் திட்டத்தினை பரிந்துரைப்பதன் மூலம் - குப்பைக்கொட்டுவதற்கான இடம் மேலும் சுருங்கும் என்பதனையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை.

முக்கியமாக - சர்வே எண் 278 க்கு அணுகு சாலை அமைக்க வழங்கப்பட்டுள்ள இடம், CRZ-1 எல்லைக்குள் வருவதால், சாலை அமைக்க ஒப்புதல் கிடைப்பது கடினம் என்பதனையும் - பயோ காஸ் திட்டத்திற்கு, சர்வே எண் 278 இடத்தினை பரிந்துரை செய்யும்போது, மண்டல செயற் பொறியாளர் கனகராஜ் கருத்தில் கொள்ளவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 January 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38936

கிணறு வெட்ட பூதம் மட்டும் அல்ல வேறு வேறு வாஸ்துக்கள் எல்லாம் வெளியில் வருகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மக்கள் வரி பணத்தின் மேல் அக்கறை இல்லாத அவசரமாக தயாரிக்கப்பட்ட அறிக்கை..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38949

எப்படியாவது BUFFER ZONE அனுமதி பெறாமல் விதிமுறை மீறி தனவந்தர் அளித்த நிலமான சர்வே எண் 278 இல் குப்பைகொட்ட முன் ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெறுவது தெளிவாகிறது - மக்கள் வரி பணம் எக்கேடு கெட்டு போனால் போகட்டும் என்று சிந்தனை அதிகாரிகள் மத்தியில் வெளிபடுவதை உணர முடிகின்றது..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [18 January 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38968

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த விசயத்தில் ஒன்றுமே சொல்வதற்கு இல்லை ....ஒன்று மட்டும் நமக்கு நன்கு தெளிவாகிறது .....அதாவது நம் பொது மக்களின் வரி பணம் சுத்தமாக வீணாவது தெள்ள ,, தெளிவாகவே தெரிகிறது .....

இப்படி நம் வரி பணம் வீணடிக்க படுவது எந்த விதத்தில் நியாயம் ?? பொது மக்களாகிய நாம் '' மிக தெளிவாகத '' வரைக்கும் .....இப்படிதான் நம் வரி பணம் வீணடிக்க ஒரு சிலரால் படும் .......

நம் வரி பணம் இப்படி நாசமாவதை விட்டு .....பொது மக்களுக்கு பிரோஜனம் பட்டால் ரொம்பவும் நல்லதே ........இது நடக்குமா ?? பொருத்து இருந்து பார்ப்போம் ........

நம் நகர் மன்றத்தால் இன்று நாள் வரைக்கும் ....நம் ஊர் மக்களுக்கு பிரோஜனமாக ஒற்றுமே நல்லது நடந்ததாக தெரிய வில்லை .....காலங்களும் ஒடி கொண்டே தான் இருக்கிறது ....நாம் நம் நகராச்சியால் பலன் பெறாதது தான் குறிப்பிடத்தக்கது ..& நம் மனதுக்கு சங்கடத்தை தருகிறது .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உள்ளூர் அரசியல் சற்றும் சளைத்ததல்ல
posted by Omer Abdul Qadir (Chennai) [18 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 38971

சர்வதேச அரசியலாகட்டும் ..உள் நாட்டு அரசியலாகட்டும் ..நமது உள்ளூர் அரசியல் சற்றும் சளைத்ததல்ல என்பது போன்ற நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது..இன்னும் ..இன்னும் நிறைய செய்திகளை எதிர்பார்க்கிறோம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மின்னல் வேக கடமையுணர்ச்சி!
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [19 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38973

ஆக... முன்னாள் நகர்மன்றத் தலைவரே தனது நிலத்தைக் கொடுப்பதற்கும் முன்பாகவே நமது உறுப்பினர்கள் அந்த இடத்தில்தான் தீட்டம் வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை அறியும்போது என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

அவர்கள்தான் இப்படி என்றால், நமது ஆணையரோ ஒரு படி மேலே போய், குப்பை கொட்டுவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்; பயோமெத்தனேஷன் திட்டத்தை முதலில் கொண்டு வருவோம் என இந்த ஊர் நலனில் எவ்வளவு அக்கறை(???)யுடன் பேசியிருக்கிறார்!!!

ஹூம்... எல்லாம் நம் தலைவிதி! நம் நகராட்சியிலிருந்து ஒரு வீட்டு ப்ளான் அப்ரூவல் எடுப்பதற்குள் கிழவி குமரியாகிவிடும் காலத்தில், இப்படி மின்னல் வேகத்தில் செயல்படும் இவர்களைப் பாராட்ட (???) என்னிடம் வார்த்தைகளே இல்லை!

எனக்கு இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் என்னவென்றால்....

(1) நமது கண்ணியத்திற்குரிய முன்னோர்கள் நம் ஊர் நலன் கருதி, அப்போதைய ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் குப்பை கொட்ட தீர்மானம் தீட்டி ஒதுக்கியிருந்த நிலத்தை இன்றளவும் பரிசீலிக்காமலே இருந்தது ஏன்?

(2) அந்த இடத்தில் இன்று பயோகேஸ் திட்டத்தை மட்டுமாவது கொண்டு வந்தால், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் பல்சமய மக்கள் அடங்கிய குடியிருப்புகளுக்கு இரவெல்லாம் வெளிச்சம் கிடைக்குமே...? அதை விட்டுவிட்டு, இன்றைய சூழலில் யாருக்கும் தேவையில்லாத சர்வே எண் 278இல்தான் பயோ கேஸ் திட்டமும் வர வேண்டும் என்று கருதுவதற்கு நியாயமான காரணங்கள் ஏதும் உண்டா? இதை உறுப்பினர்களை நோக்கியும், அதிகாரிகளை நோக்கியும், சர்வே எண் 278இல்தான் பயோகேஸ் வர வேண்டும் என்ற தொணியில் கருத்து எழுதிய என் அன்புச் சகோதரர்களை நோக்கியும் கேள்வியாக முன்வைக்கிறேன். தாங்கள் அளிக்கும் பொருள் பொதிந்த விளக்கத்தை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

(3) முன்னாள் நகர்மன்றத் தலைவர் அவர்கள் (ஆவணப் படி) குப்பை கொட்டுவதற்குத்தான் சர்வே எண் 278 நிலத்தைத் தந்துள்ளார்கள். அதை நடைமுறைப்படுத்துவதே தற்போது சட்டச்சிக்கலாக இருக்கும்போது, அவர்களே எதிர்பார்க்காத பயோகேஸ் திட்டத்தையும் அங்குதான் கொண்டு வருவோம் என துடியாய்த் துடிக்கும் உறுப்பினர்களே.... தங்கள் ஆர்வத்திற்கு நியாயமான காரணம் ஏதும் உள்ளதா, கூறுங்களேன்...

இவ்வளவு விபரங்களும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் அவர்களின் கவனத்திற்குச் சென்றுதான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்..........

நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்...

யாரையும் புண்படுத்தவோ, விமர்சிக்கவோ அல்லது மறு சாராரைத் தூக்கி வைக்கவோ இக்கருத்தை நான் பதியவில்லை. இந்த ஊரின் ஒரு குடிமகன் என்ற அடிப்படையிலும், மர்ஹூம் எம்.கே.டி. அப்பா அவர்கள் ஒதுக்கிய நிலத்தை நேரடியாகச் சென்று பார்த்தறிந்தவன் என்ற அடிப்படையிலுமே இக்கருத்தை நான் பதிவு செய்துள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved