Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:28:36 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15223
#KOTW15223
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 19, 2015
அடுத்த தேர்தலில் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவை முறியடிக்க வேண்டும்! அருணாச்சலபுரம் விழாவில் திருமாவளவன் பேச்சு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4141 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவை முறியடிக்க வேண்டும் என, காயல்பட்டினம் அருணாச்சலபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் 50ஆவது ஆண்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் அருணாசலபுரத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 50ஆவது ஆண்டு விழாவையொட்டி பொன்விழா மலர் வெளியீடு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் செ.ராஜன் தலைமையில் நடைபெற்றது.

மன்றப் பொருளாளர் கொ.பிரமானந்தன் வரவேற்றுப் பேசினார். வழக்கறிஞர் அ.சதீஷ்பாலன், சு.பன்னீர் செல்வம், தா.திருத்துவராஜ், கே.வி.ஏ.டி.கபீர், எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன், காயல் அமானுல்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பொன்விழா மலரை வெளியிட, எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் அதைப் பெற்றுக்கொண்டார்.





தொடர்ந்து, கல்விப் பரிசுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவள்ளுவரின் பெயராலான ஒரு மன்றம் இங்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றால் அது எளிதான காரியம் அல்ல. அதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரால் ஒற்றுமை உணர்வுடன் நடத்தப்படுவது மிகவும் போற்றுதலுக்கு உரியது. பூர்வீக தமிழகத்தில் சாதிகள் இருந்தபோதிலும், அதன் பெயரால் வேறுபாடுகளும், மோதல்களும் இருந்ததில்லை. சாதியைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் ராமதாஸ்களும், மதத்தை அரசியலாக்கும் மோடிகளும் அப்போது இல்லை.

இன்றைக்கு சாதி, மத உணர்வுகளைத்தான் அரசியல் களத்தில் மூலதனமாக பயன்படுத்தி வருகின்றனர். சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும், தலித் மக்கள் மீதும் வெறுப்புணர்வைப் பரப்பும் யுக்தியை செயல்படுத்துகின்றனர். நமக்கு சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் வெற்றி முக்கியமல்ல; வெறுப்பு அரசியலில் இருந்து ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையே முக்கியம்.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே திட்டமிட்டு வெறுப்புணர்வை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் அடைந்து பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டவர்தாம் மோடி. வட மாநிலங்களில் ராம்விலாஸ் பஸ்வான், மாயாவதி உள்ளிட்ட பல தலைவர்கள் பாரதீய ஜனதாவுடன் உறவாடி ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆனால் அம்பேத்கரின் கொள்கை வழியில் உறுதியுடன் மதவாதத்தை எதிர்த்து வரும் ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.

திருக்குறளில் இல்லாதததும், சொல்லாதததும் வேறு எதிலும் இல்லை. திருக்குர்ஆன், பைபிள், புத்தரின் போதனைகள் ஆகியவற்றைப் படிப்பதற்கும், திருக்குறளை படிப்பதற்கும் வேறுபாடுகள் இல்லை என்றே நான் நம்புகிறேன். இலக்கிய நடையில் இருக்கும் குறளின் பொழிப்புரையை குழந்தைகளுக்கு நாள்தோறும் கற்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் இஸ்லாமிய மக்களும், தலித் மக்களும் இணக்கத்துடன் வாழ்ந்து வருவதைப் போல அனைத்து மக்களும் வாழ வேண்டும். மதவாதத்திற்கும், சாதி வெறிக்கும் ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது. 2016இல் நடக்க இருக்கும் தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டு முயற்சி செய்து வருகிறது அதனை முறியடிக்க நாம் பாடுபடவேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன், முன்னாள் செயலாளர் சொ.சு.தமிழினியன், யாசர் அராபத், அல்அமீன், பேச்சிமுத்து, சுதாகர், சங்கத்தமிழன், அமலன், காயல்பட்டினம் நகர்மன்ற 01ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved