Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:39:08 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15209
#KOTW15209
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 16, 2015
அம்மா மருந்தகம் உட்பட நகரில் நலப்பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் நகர்மன்றத் தலைவர் வழங்கினார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4084 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - நகரில் நலப்பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை, தமிழக அமைச்சர்களிடம் சென்னையில் வழங்கியுள்ளார். இது குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

கடந்த வாரமும், இவ்வாரமும் சென்னையில் அமைச்சர் பெருமக்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளேன். பல சந்திப்புகளின் போது நமது 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் அவர்கள் உடன் வந்தார்கள்.

(1) காயல்பட்டினம் கடற்கரையை நமதூர் கலாச்சாரத்திற்கு உட்பட்டு சீர்படுத்திட சுற்றுலாத்துறை அமைச்சர் திரு எஸ். பி. சண்முகநாதன் அவர்களிடம் கோரிக்கை வழங்கியுள்ளேன்

(2) நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசுவாமி அவர்களிடம் - காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை நிறைவு செய்யவேண்டிய CULVERT பணிகள் குறித்தும், காயல்பட்டினம் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் கோரிக்கை கொடுத்துள்ளேன்

(3) போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு வி. செந்தில் பாலாஜி அவர்களிடம் - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள், குறுக்கு வழிகளில் செல்வது குறித்தும், அப்பேருந்துகள் காயல்பட்டினம் வழியாக செல்வதை உறுதி செய்ய காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் TIME KEEPER நியமனம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளேன்

(4) காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவக பணிகள் நிறைவுற்றுள்ளதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு செல்லூர் கே. ராஜு அவர்களிடமும், அத்துறை அரசு செயலாளர் முஹம்மது நசீமுதீன் IAS அவர்களிடமும், கூட்டுறவு துறை பதிவாளரிடமும் - காயல்பட்டினத்தில், அம்மா மருந்தகம் மற்றும் பசுமை அங்காடி திறந்திட கோரிக்கை வைத்துள்ளேன்

(5) பள்ளிக்கல்வி அரசு செயலாளர் திருமதி சபிதா IAS அவர்களிடமும், இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்களிடமும் - காயல்பட்டினம் பொது நூலகம் குறித்தும், தைக்கா பள்ளி குறித்தும் கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளேன்

(6) காயல்பட்டினம் அரசு பொது மருத்துவ மனையின் கட்டிடங்களை இணைக்கும் வகையில் மேல் கூரை (ROOFED CORRIDOR) அமைத்திட சில மாதங்களுக்கு முன் கோரிக்கை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில் - மாவட்ட சுகாதார நிர்வாகம், மதிப்பீடு தயார் செய்துள்ளது. அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்

(7) காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் நியமனம் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன்

(8) காயல்பட்டினம் மீனவ சமுதாய நலன் கருதி தூண்டில் பாலமும், மீனவர் அங்காடியும் அமைத்திட மீன்வளத்துறை அமைச்சர் திரு கே.ஏ. ஜெயபால் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தியுள்ளேன்

(9) நகரில் அதிகமாக விற்கப்படும் கலப்படப் பொருட்கள், காலாவதியான பொருட்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி உணவுத் துறை அமைச்சர் திரு ஆர். காமராஜ் அவர்களிடமும், உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்களிடமும் வலியுறுத்தியுள்ளேன்

நகர் நலன் கருதி வைக்கப்பட்ட இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட, நமது மாவட்ட அமைச்சரான மாண்புமிகு எஸ். பி. சண்முகநாதன் அவர்கள் - அமைச்சர் பெருமக்களிடம் பரிந்துரையும் செய்துள்ளார்கள். அவர்களுக்கு - காயல் நகர் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இக்கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறிட வல்ல இறைவன் துணை புரிவான்.


இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [16 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38921

தூற்றுவூர் தூற்றட்டும் தொய்வில்லாமல் தொடரட்டும் நகருக்கான உங்கள் சேவை..!

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நம்பிக்கையே வாழ்க்கை!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [17 January 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38922

நல்ல முயற்சிதான், கடமைக்குறியவர்தான் என்றாலும், நடுநிலை நெஞ்சத்தவர்களின் பாராட்டுக்குறிய செயலை செய்திருக்கும் ஊர்தலைவி அவர்களுக்கு என்னகம் கனிந்த பாராட்டுக்கள் !

இதெல்லாம் சரிதான்,நீங்கள் வைத்த கோரிக்கைகள் அமைச்சர்கள் அளவில் நின்று விடுமா? அல்லது அதையும் தாண்டி முதலமைச்சர் வரை செல்லுமா? முதலமைச்சர் வரை சென்றாலும்,முதல்வரின் முதலாம் .........அமைச்சர் அவர்கள் பார்வை வரை கொண்டுசேர்ப்பவர் யார்? யார் மணி கட்டுவது?அப்படிகட்டப்படும் மணியிலிருந்து ஓசை இந்த ஜென்மத்திலாவது வருமா?

முதலில் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கட்டும் அதற்கு பின்னர் நமதூருக்கு ஏதாவதொரு நன்மை நடக்கும் என்று நம்புவோமாக! நம்பிக்கையே வாழ்க்கை! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பாராட்டுக்கள்!!
posted by shahul hameed sak (malaysia) [17 January 2015]
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 38926

நல்ல முயற்சி! மிகத்தேவையான கோரிக்கைகள்!! தொடர்ந்து முயற்சி செய்து நிறைவேற்றி காட்டுங்கள் !!! தூற்றுவோரை தூர் வாரி எடுக்கலாம்? சூது கொண்டோரை சுழற்றி அடிக்கலாம்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வல்ல இறைவன் துணை புரிவான்
posted by Omer Abdul Qadir (Chennai) [17 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 38927

பல தடைகளுக்கு மத்தியிலும் ...ஊர் நலனை கருத்தில் கொண்டு நன்மைக்காக முயற்சி செய்தமைக்கு அதற்கான நற்கூலியை தர அல்லாஹ் போதுமானவன்....இக்கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறிட வல்ல இறைவன் துணை புரிவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காலாவதியான
posted by Jahir Hussain VENA (Bahrain) [17 January 2015]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 38933

COPY AND PASTE

நகரில் அதிகமாக விற்கப்படும் கலப்படப் பொருட்கள், காலாவதியான பொருட்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி

யாரு அந்த புண்ணியவான். அந்த பலே பலசரக்கு கடை எங்கே உள்ளது .. கொஞ்சம் மெதுவா சொல்லுங்கலயன் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [17 January 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38938

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் நகர் மன்ற தலைவி நம் மரியாதைக்குரிய ஆபிதா சேக் அவர்களின் இந்த அனைத்து கோரிக்கைகளும் முற்றிலும் நம் ஊர் பொது மக்களுக்கு ரொம்பவும் அவசியம் தேவையானதே ......

நம் மரியாதைக்குரிய அமைச்சர் அவர்கள் நம் ஊர் பொது மக்களின் நலன் கருதி மிக துரிதமாகவே நம் தலைவி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தாருவார்கள் என்கிற முழு நம்பிக்கை நம் யாவர்களுக்கும் உண்டு ......நிச்சயம் நடக்கும் நடக்கும் என்கிற முழு நம்பிக்கையும் உண்டு...

மிகவும் முக்கியமானது ....நம் ஊர் வழியாக போக வேண்டிய முக்கியமான பேருந்துகள் ...அடைக்கலா புரம் வழியாக செல்வது தான் நமக்கு பெரும் வேதைனையாகவே உள்ளது ..... நம் ஊர் மக்களின் அவசர தேவைக்கு இந்த பஸ்கள் '' வேறு பாதையில் செல்வது தான் நமக்கு மன வேதனைகளை தருகிறது ....... நம் ஊர் வயதான ஆண் / பெண்மணிகளின் & நம் ஊர் வியாபாரிகளின் .....கஷ்டத்தை நாம் என்னவென்று சொல்வது .....

இந்த கஷ்டத்தை நானும் பல தடவைகள் அனுபவித்து உள்ளேன் .....நான் அவசர வேலையாக மதுரை / திருச்சி செல்ல பல தடவைகள் பஸ்சுக்காக நம் ஊரில் காத்து இருந்து ஏமாற்றம் அடைந்தும் உண்டு + பல தடவைகள் ஆறுமுகநேரி சென்றும் பஸ் ஏறியும் உள்ளேன் .....இதனால் நான் மன வேதனையும் அடைந்து உள்ளேன் ....என்பது குறிப்பிடத்தக்கது .......

ஒரு தடவை நம் காயல் பட்டணம்.காம் நிறுவனர் ...அருமை நண்பர் ஜனாப் .S.K. சாலிஹு அவர்களையும் என்னோடு ஒன்றாகவே அறுமுகநேரியில் மதுரை செல்ல பஸ் ஏறியதும் உண்டு ....

இந்த விசையத்தில் நம் மரியாதைக்குரிய.அருமை சகோதரர் ஜனாப் .பாலப்பா.ஜலாலி அவர்கள் பல தடவைகள் ( போராடி ( ....கடுமையாகவே முயற்ச்சித்து பேருந்து நிர்வாக அதிகாரிகள் மூலம் தவறாக சென்று கொண்டு இருந்த பேருந்துக்களை ...'' நம் ஊர் பக்கம் திரும்பவும் ...வரவைத்த '' காலமும் '' உண்டு ....இப்போது மீண்டும் பேருந்துகள் வேற்று பாதையில் போவதை நாம் நினைக்கும் போது நமக்கு மன வேதைனையாகவே உள்ளது ....இதற்க்கு நிரந்தரமாக ஒரு நல்லதோர் முடிவு ஏற் படுவது தான் நல்லது ......நம் ஊர் தலைவி அம்மா அவர்களின் இந்த முயற்ச்சி வீணாகாது ....

அம்மா மருந்தகமும் நமது ஊருக்கு அவசியம் தேவையே ....

நம் இந்த நம் ஊர் அம்மா அவர்களின் இந்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற ...வாழ்த்தி ...நாமும் துவா செய்து ....நம் யாவர்களின் முழுமையான ஒத்துழைப்பையும் கொடுப்போமாக ....

எந்த '' இன்னல்கள் வந்தாலும் '' தொய்வின்றி '' தொடரட்டும் தங்களின் செயல்பாடுகள் ......நம் ஊருக்காக .......இந்த முயற்ச்சிக்கு நாம் வாழ்த்துகிறோம் .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.I.Moosa Naina (Chennai) [17 January 2015]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 38946

நம் நகர்மன்ற தலைவியும், அதிமுகவின் முண்ணனி உறுப்பினராகவும் உள்ள சகோதரி ஆபிதா சேக் அவர்களின் மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட சீரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

அத்தனை வேண்டுகோளும் கூடிய சீக்கிரம் நிறைவேற்ற, நமது மாவட்ட அமைச்சரிடம் தலைவிக்கு உள்ள அபிமான நெருக்கத்தை பயன்படுத்தி அவ்வப்போது followup செய்ய வேண்டியது மிக முக்கியம்.

சகோதரர்.முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள், அதிமுகவை சேர்ந்தவர்கள் எது செய்தாலும் அதை கிண்டல் அடிப்படையில் தனது கருத்துக்களை பதிவு செய்கிறார். அப்படிபட்டவருக்கு பதில் கூறி எங்களது பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

அவருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்குமானால், திமுக ஆட்சி காலம், அதிமுக ஆட்சி காலம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து நமதூருக்கு, நமது சமுதாயத்துக்கு கிடைத்த சேவைகள், நன்மைகள் என்ன... என்ன..., அதிமுகவை சேர்ந்த முண்ணனி உறுப்பினர்கள் நமதூர் மக்களுக்கு செய்துள்ள சேவைகள் நன்மைகள் என்ன... என்ன ... என்பதை சீர்தூக்கி பார்த்து கருத்துக்களை எழுதவும். எங்களால் மார்தட்டி சொல்ல முடியும்... திமுகவைவிட அதிமுகவினால் தான் நன்மைகள் ஏராளம் நமதூருக்கு கிடைத்துள்ளது.

ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதும் சகோதரருக்கு ஒரு கேள்வி, நமதூரின் மிக முக்கிய பிரச்சனை, தடம் மாறி போகும் பேருந்து பிரச்சனை. அந்த பிரச்சனையை ஆளும் கட்சியாக இருந்தும் கூட அதிமுகவின் முண்ணனியினர் பல தடவை கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நமது நாட்டை பொருத்தவரை போராட்டம் என்று ஒன்று செய்தால் தான் அதற்கு value அதிகம். திமுகவினர் ஏன் அதை கையில் எடுத்து ( அரசியல் ஆதாயம் தேடும் முகமாகவும் கூட ) போராட்டத்தை நடத்தவில்லை?.

தனது மக்களின் பதவி சண்டையை சரி செய்ய முடியாமல் தலைவர் திண்டாடும் போது, நாட்டு மக்களிம் பிரச்சனையாவது மண்ணாங்கட்டியாவது - யாரோ சொல்வது என் காதில் விழுகிறது.

தற்போது தலைவி அவர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள் நிறைவேற தமிழக முதல்வரின், மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கடைக்கண் பார்வையோ தேவையில்லை. அமைச்சர்கள் மட்டத்தில் செய்து முடிக்க கூடிய பிரச்சனைகள் தான். எனவே அப்பிரச்சனைகள் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கட்சியை பொருத்தவரை தலைவி அவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாகவும், விவேகம் உள்ளவையாகவும் உள்ளது.

தலைவி அவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்: நமதூர் ரயில் நிலையத்தில் இரவு நேரத்தில் மின்சார விளக்குகள் எரிவதில்லை. நானும் பல தடவை கண்டுள்ளேன். அதே சமயத்தில் குறிப்பிட்ட செந்தூர் ரயில், நிலையத்துக்கு மிக அருகில் வரும் சமயத்தில் அனைத்து விளக்குகளும் எரிய விடுகிறார்கள். நான் விசாரித்த வரை இது தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இதனால் வயதான பயணிகள், பெண்கள் உட்பட அனைவரும் படும் அவஸ்த்தை ஏராளம். எனவே இந்த விசயத்தையும் கையில் எடுத்து நமது பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு ஆவன செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.

இந்த விசயத்தையும் திமுக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் கையில் எடுத்து போராட்டம் நடத்தி அரசியல் ஆதாயம் தேடலாம் என்பதே என் விருப்பம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved