Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:19:44 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14334
#KOTW14334
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 18, 2014
இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6450 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நீர், நிலம், வனம் என்ற தலைப்பில் - தமிழக கடலோரத்து பிரச்சனைகள் குறித்து தி இந்து தமிழ் நாளிதழில், அப்பத்திரிக்கையின் மூத்த எழுத்தாளரான சமஸ் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

அவ்வரிசையில் - 26வது பாகமாக - காயல்பட்டினத்தில் பெரிய அளவில் புற்று நோய்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து, அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா? என்ற தலைப்பில் சமஸ் எழுதிய கட்டுரை ஆகஸ்ட் 14 அன்று வெளிவந்தது.

27வது பாகமாக - இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா? என்ற தலைப்பில், DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சமஸ் எழுதிய கட்டுரை இன்றைய தி இந்து இதழில் வெளிவந்துள்ளது.

இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?

பொதுவாக, இயற்கைச் சூழலைச் சீரழிப்பதில் தொழில் துறையினரின் அநீதியான செயல்பாடுகளைப் பேச ஆரம்பித்தாலே, 'வளர்ச்சிக்கு எதிரான முத்திரை' குத்தப்படுவது இந்திய இயல்பு. வளர்ச்சியே காலத்தை முன்னகர்த்துகிறது என்பதில் எனக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வளர்ச்சி என்பதற்கான வரையறை எது; அதில் தொழில் துறையினருக்கான எல்லை எது? இந்தப் பயணம் எனக்கு இந்த எல்லையைக் கறாராக வரையறுத்துக் காட்டியது. அவலமான மொழியில், கொடூரமான தோற்றத்தில், உக்கிரமாகக் காட்டியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆலையும் அழிவும்

தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலைகள் இருக்கின்றன. சூழலை நாசப்படுத்துவதோடு, உயிர்களைக் காவு வாங்கிவிடக் கூடிய அபாயம் மிக்க ஆலைகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். அதிகபட்சமாக, பயணங்களின்போது நம் மூக்கில் விருட்டெனப் புகும் நெடி, ஆலையின் புகைபோக்கியிலிருந்து வெளியேறும் கரும்புகை, எங்கோ கசிந்து கழிவுநீர் தேங்கி நிற்கும் சாக்கடைகளைத் தாண்டி, இந்த ஆலைகள் சூழல் சார்ந்து பொதுத்தளத்தில் கவனத்தை ஈர்ப்பதில்லை.

ஒரு ஆலைக்காகச் சில நாட்களை ஒதுக்க முடியுமானால், ஒரு ஆலையால் சூழலை எவ்வளவு நாசப்படுத்த முடியும் என்பதை சாஹுபுரம் பயணம் எனக்கு உணர்த்தியது.

சாஹுபுரத்தின் வாசல்

சாஹுபுரத்தின் முன்வாசலுக்குச் செல்வது எளிதான பயணம். தூத்துக்குடி - திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், பாட்டு கேட்டுக்கொண்டே சுமார் ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்துவிடலாம். சாஹுபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், டி.சி.டபிள்யூ. (தாரங்கதாரா கெமிக்கல் ஒர்க்ஸ்) ஆலையின் சாதுவான முகப்பு உங்களை வரவேற்கும். அங்கே நீங்கள், சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் என்கிற உயரிய மனிதர், எப்படி இந்த நாட்டின் முதல் சோடா ஆஷ் ஆலையை குஜராத்தின் தாரங்கதாராவில் நிறுவினார் என்பதில் தொடங்கி, அந்த ஆலை எப்படியெல்லாம் விரிவாக்கப்பட்டு, இன்று பல நூறு கோடிகளைக் குவிக்கும் வெற்றிகரமான நிறுவனம் ஆனது என்கிற சாதனைச் சரித்திரம் வரை உங்களுக்குக் கிடைக்கும்.

சாஹுபுரத்தின் கொல்லைப்புறம்

சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்துக்குச் செல்லும் பயணம் கொஞ்சம் சிரமமானது. காயல்பட்டினம் கடற்கரையோரமாக நடந்து சென்று, கொம்புத்துறைப் பகுதியை அடைந்த பின் வரும் புதர்ப் பகுதியில் உள்ளே நுழைந்து சில கி.மீ. தூரத்தை முட்கள் சூழ்ந்த மணல் பாதையில் கடந்து சென்றால், சாஹுபுரத்தின் கொல்லைப்புறத்தை அடையலாம். இப்படிச் செல்லும்போது மக்களிடம் பேசினால், எப்படியெல்லாம் வளர்ச்சியை உருவாக்கிறேன் என்று சொல்லி, டி.சி.டபிள்யூ. ஆலை நிலத்தை சலுகையில் வாங்கி, ஒரு ஊராக்கி, ஆலை நிறுவனர் சாஹு சிரியன்ஸ் பிரசாந்த் ஜெயின் பெயரால், அதற்கு சாஹுபுரம் என்று பெயரிட்டுக்கொண்ட கதையில் தொடங்கி, கடலையே தன் ஆலையின் கழிவுத் தொட்டியாக்கிக்கொண்டது வரை கூறுவார்கள்.

நீராதாரக் கொலை

சாஹுபுரம் ஆலையின் பின்புறம் அழைத்துச் சென்று காட்டிய பெரியவர் சேக்கணா, “எங்க ஊரோட ஒரு பகுதி தம்பி இது. ஏதோ ஒரு ஆலை வரும், மக்களுக்கு வேலைவாய்ப்பு கெடைக்கும், வளர்ச்சி வரும்முன்டு சந்தோஷமா வரவேத்தோம். இன்னைக்கு, தொட்டா பஸ்பமாக்கிடக்கூடிய பலவித ரசாயனங்களையும் கொண்டாந்துட்டாங்க. இப்பம் பாருங்க, ஆலையை ஒட்டி இருக்குற ஒரு நீரோடையையே எப்படிக் கொன்னுட்டாங்கன்டு. வெறும் கழிவுநீரு இல்ல தம்பி இது, ரசாயனக் கழிவு. இது கடல்ல கலந்து கடல் எப்பிடி செவப்பா இருக்கு பாருங்க. கடலோட நெறமே மாறுதுன்டா எத்தன லட்சம் லிட்டர் இப்பிடிக் கடல்ல கலந்துருக்கும்? அது பட்ட எடத்துல பாறாங்கல்லையே எவ்வளவு அரிச்சிருக்குன்டு பாருங்க. இது மனுசனை அரிக்காதா தம்பி?” என்கிறார்.

அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார். என் கண்கள் அப்படியே அந்த நீரோடையில் குத்தி நிற்கின்றன. இப்படி ஓடையிலிருந்து வெளியேறும் நீர், தடையில்லாமல் கடலுக்குச் செல்ல ஏதுவாகக் கடலை நோக்கி வடிகால் வெட்டிவிட்டிருக்கிறார்கள்.

“யாரும் வர முடியாத எடம் இது. ஆள் அரவம் கிடையாது. ஆனா, ஆலைக்காரங்க ஆளுங்க இங்கே கூடாரம் போட்டு உட்கார்ந்திருப்பாங்க. நடுராத்திரில கால்வாயை வெட்டிக் கடல்ல கலக்க விடுற வேலை நடக்கும். நாங்க வர ஆரம்பிச்சதும் வேட்டை நாய்ங்களை வெச்சுத் துரத்த விரடறது, கையில அரிவா, கத்தி வெச்சிகிட்டு மெரட்டுறதுன்டுனு நிறையப் பண்ணிப் பார்த்தாங்க.

நாங்க தனியாளா இருந்தா வேலைக்காவாதுன்டு ஊருல ஒரு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பைத் தொடங்குனோம். இங்கே தினம் வர்றது, போட்டோ எடுக்குறது, அரசாங்கத்துக்கு ஆதாரபூர்வமா புகார் அனுப்புறதுன்டுனு களத்துல எறங்குனோம். ஆஷீஷ் குமார் ஆட்சியரா இருந்தப்போ, இங்கே எங்க புகாரைக் கேட்டு நேர்ல வந்தார். எவ்வளவு பெரிய கொடுமை இதுன்னு கொந்தளிச்சுட்டார். நடவடிக்க எடுக்குறதுக்குள்ள அவரு வேற எடம் போய்ட்டார். இப்பம் உள்ள ஆட்சியருகிட்ட மறுபடியும் பூரா சரித்திரத்தையும் கொடுத்து, நம்பிக்கையோட காத்திருக்கம்.”

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆலையிலிருந்து புகை வெளியேறுகிறது. பிணவாடை காற்றை நிறைக்கிறது. “ஆரம்பமாயிட்டு… கடவுளே” என்று சொல்லியவாறே தலையில் அடித்துக்கொள்கிறார்.

ஒரு ஊர் பிரச்சினையா இது?

காயல்பட்டினம் மக்கள், தங்கள் ஊர்க்காரர்கள் புற்றுநோயால் மாண்டுபோக முக்கியமான காரணம் இந்தச் சூழல் சீர்கேடுதான் என்று வலுவாக நம்புகிறார்கள். “இந்தப் படங்களையெல்லாம் பாருங்க” என்று காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த எஸ்.கே. சாலிஹ் காட்டும் படங்கள், ஆலை உருவாக்கும் அவலச் சூழலுக்கு வலுவான ஆதாரங்கள்.

“இது எங்க ஊர் பிரச்சினை மட்டும் இல்ல சார். ஆலையைச் சுத்தியும் பாருங்க, இந்தப் படங்களையெல்லாமும் பாருங்க... இப்பிடி ரசாயனக் கழிவு பட்ட, இங்கெ வெளையுற நெல்லை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ உற்பத்தியாவுற உப்பை நாங்க மட்டுமா சாப்பிடுறோம்? இங்கெ புடிக்குற மீனையும் இறாலையும் நாங்க மட்டுமா சாப்பிடுறோம்?

வளர்ச்சி வளர்ச்சினு பேசுறாங்களே... அந்த வளர்ச்சியை அனுபவிக்கிறது யாரு? அதனால வர்ற துயரங்களை அனுபவிக்குறது யாரு? இன்டர்நெட்டுல போய்த் தேடிப் பாருங்க. இந்த ஆலை கோடிக் கோடியா சம்பாதிக்குதுங்குறது தெரியும். வளர்ச்சியோட பலனை குஜராத்துல இருக்குற முதலாளிமாருங்க அனுபவிக்கிறாங்க. அந்த வளர்ச்சி தர்ற பாவத்துக்கு நம்ம சொந்தங்களைச் சவங்களாக்கிட்டு, நாம அனுபவிக்கிறோம். வருஷக் கணக்காப் போராடிட்டு இருக்கோம். அதிகாரிமாருங்க இங்கே வர வேணாம், இந்தக் கொடுமையையெல்லாம் நேர்ல பார்க்க வேணாம். எல்லா ஆதாரங்களையும் வெச்சுக்கிட்டுக் கதறுறோமே, அதுக்காவது காது கொடுக்கக் கூடாதா?”

காலில் மோதும் அலைகளின் சிவப்பு நிறம் துடிக்கும் கடலின் ரத்தமாக என்னைச் சூழ்கிறது.

என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?

இதைப் பற்றியெல்லாம் டி.சி.டபிள்யூ. ஆலை நிர்வாகத்தின் கருத்து என்ன? தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, விவரம் கேட்டவர்கள் அதற்குப் பின் தங்கள் பெயரைக்கூடச் சொல்லாமல் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆலையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரியோ மின்னஞ்சலைத் திருப்பியடிக்கிறது. ஆலை நிர்வாகத்தினர் பதில் அனுப்பினால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in


தி இந்து (ஆகஸ்ட் 18, 2014)



[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11:30 am / 18.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இதயம் பேசுகிறது
posted by mackie noohuthambi (chennai) [18 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36497

திரு சம்ஸ அவர்களின் கட்டுரை, அது கதையல்ல, நிஜம். அவர் எழுதி அனுப்பியது கடிதம் அல்ல, உள்ளம். அதில் இருப்பதெல்லாம் எழுத்தும் அல்ல, எண்ணம்.

காயல்பட்டினத்து மக்களின் இதயக் குமுறல் தி தமிழ் இந்து வின் மூலம் புரட்சி தலைவியின் சிம்மாசனத்துக்கு அனுப்பப் பட்டுள்ள ஓலைச் சுவடி அது. உங்கள் குரலை நிச்சயம் கேட்கும் இந்த தாயுள்ளம் கொண்ட அரசு என்று நம்புகிறோம்.

ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி... பச்சப்புளை என்று பாலூட்டி வளர்த்தேன், பாலைக் குடித்து விட்டு பாம்பாக கொத்துதடி, கண்மணி..என் கண்மணி......இந்த பாடல் நினைவிருக்கிறதா...

நாங்களும் ஷேக்னா சொல்வதுபோல் காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கம் ( KEPA ) செயலாளர் மருமகன் சாலிஹ் சொல்வதுபோல் - காயல்பட்டினத்தை செழிப்பாக்கி அந்த ஊர் மக்களின் வாழ்வை வளமடைய செய்யப் போகிறது DCW என்றுதான் நினைத்தோம்.

ஆனால் சாகுபுரம் சாகும்புரமாக - சாவுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் இளவுபுரமாக மாறி விட்டதே இந்த கொடுமைக்கு ஆளாகி ஒவ்வொரு நாளும் புற்றுநோயால் இறக்கும் இளவல்கள், பெண்கள் முதியவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறதே - இந்த புற்றுக்கு வைப்போம் முற்று என்று களம் இறங்கியவர்களுடன் கைகோர்த்து நிற்க இந்து தமிழ் நாளிதழ் முன் வந்திருப்பது எங்களுக்கு ஒரு புதிய தெம்பை - உற்சாகத்தை தருகிறது.

காவல் நிலையம் இல்லாத ஊர் - திரை அரங்கு இல்லாத ஊர் - மதுக் கடை இல்லாத ஊர் - மத நல்லிணக்கம் நிறைந்த ஊர் -இத்தனை பெருமைகள் பெற்ற ஊர் காயல்பட்டினம். திரு வைகோ அவர்கள் மது விலக்கை வலியுறுத்தி நடை பயணம் மேற்கொண்டபோது அவர் "இந்த காயல்பட்டினத்தை போல் தமிழகம் முழுவதும் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்" என்று நா தழுக்க சொன்னார்.

"புற்று நோய் இல்லாத ஊர்" என்றும் இதன் பெருமைக்கு அணி சேர்க்க தமிழக முதல்வர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று நிச்சயமாக நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்..நான். துணிச்சலை மனத்திலே வளர்ப்பவன் நான்..

புரட்சி தலைவரின் வைர வரிகள்..புரட்சி தலைவியின் செவிகளில் ரீங்காரமிடுகிறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Genocide by waste disposal
posted by JAHIR HUSSAIN VENA (Bahraain) [18 August 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 36500

சாகுபுரம்

இல்லை சாகடிக்கும் புரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by netcom buhari (CHENNAI) [18 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36503

இவர்களுக்கு கை கூலிய்க இல்லாமல் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட தொடகினால் போதும் இவர்களை அழிக்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சவக்குழி...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [18 August 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 36505

DCW ஆலை காயல்பட்டினத்தின் சவக்குழி! சாபக்கேடு! மனித உயிர்களை காவு வாங்கும் எமன். புற்றுநோய்க்கு மொத்த குத்தகை! எங்கிருந்தோ பிழைக்க வந்த வந்தேறிகள் எமது மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர். உடலில் ஒரு சிறு கட்டி வந்தால்கூட அது உயிர்குடிக்கும் புற்றுநோயாக இருக்கக்கூடுமோ என பதறியடித்துக் கொண்டு மருத்துவரைத் தேடி ஓடும் மனநிலை! இது காயல்பட்டினத்தில் வாடிக்கை!

இறைவனின் சாபமும், இறந்தோர்தம் குடும்ப உறவுகளின் வயிற்றெரிச்சலும் இந்த நச்சு ஆலைக்கு சாவுமணியடிக்கும் காலம் இன்ஷா அல்லாஹ் விரைவில் வரும். இதன் விபரீத வினைகளை ஊடகங்கள் உற்றுநோக்கத் துவங்கியுள்ளன. உயிர்க்கொல்லியான DCW வின் அட்டூழிய அடங்காப்பிடாரி ஆட்டத்தை உலகிற்கு உணர்த்தி ஒடுக்கும் காலம் வரும்.அங்கிருந்து ஆலையை அடியோடு அகற்றி அம்மண்ணில் அமிலக்கழிவைத் துடைத்தால்தான் என் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவர். இறைவன் நாடுவான்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [18 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36509

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்,என்ற தத்துவ பழமொழிக்கேற்ப,திரும்ப திரும்ப் என் முந்திய கருத்துப் பதிவையே மறுபடியும் பதிப்பதோடல்லாமல்,நம் பகுதி மக்களை மன்றாடிக்கேட்பது ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் செயல்படுங்கள்,எப்படிப்பட்ட எட்டாத இடத்தில இருக்கும் எந்த செயலுக்குறிய தீர்வும் எளிதாக முடியும்,அதற்குறிய ஒரே ஆயுதம் நம்மிடையே இருக்கவேண்டிய ஒட்டுமொத்த ஒருங்கிணைனைந்த ஒற்றுமையும் ,ஓரிறைவனின் உறுதிமிக்க நம்பிக்கையும்தான்!

(என் முந்தியகருத்தை மறுபடியும் பதிவு செய்கிறேன் மன்னிக்க!) காயல் வாசி மக்கள் மட்டுமே, மாசுகட்டுபாடு கட்டுக்கடங்க்காமல் கரைபுரண்டோட காரணமாக இருப்பதற்கு DCW முக்கியகாரணம் என்று முழுமையாக எங்களையே குறிவைத்து தாக்குகிறார்கள்.என்று நம் ஆதார குற்றச்சாட்டை குறைகூறி மறுத்தும், மழுப்பியும் வந்த DCW நிர்வாகம், தற்போது பல பத்திரிக்கைகள் இந்த அவலத்தை உண்மை நிலையை உலகறியவெளிச்சச்ம்போட்டு காட்டிக்கொண்டிருக் கிறார்களே, இதற்க்கு இந்த நிர்வாகம் என்ன சொல்கிறது.

ஆகவே அன்பு காயல் மக்களே இந்த நிர்வாகத்தால் பாதிப்புக்குள்ளான நமது பகுதி மக்கள் மட்டுமல்லாது பல ஊடக சக்திகளும் சேர்ந்து எதிர்த்து கொண்டே இருந்தால்தான் மிகப்பெரிய இந்த நிர்வாகத்தை ஓரளவாவது உணரவைக்க முடியும். அடிமேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்கின்ற உணர்வுபூர்வமான பழமொழிக்கேற்ப நாம் அனைவர்களும் ஒரே அமைப்பான "KEPA " வின் கீழ் ஒற்றுமையாக ஒரிங்கிணைந்து தொடர்ந்து நம் எதிர்ப்பை தெரிவித்து போராடிக்கொண்டே இருப்போமாக!

வல்ல இறைவன் நம் முயற்சியை வெற்றியாக்கித்தந்து நமதூர் மற்றும் நம் அண்டைய பகுதி மக்களையும் காப்பாற்றி காவல் புரிவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. DCW க்கு சங்கு ஊதப்பட்டு விட்டன. மக்கள் பால் ஊத்த ரெடியாகிவிட்டனர்.
posted by s.s.md meerasahib (TVM) [18 August 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36511

அன்பு DCW சுற்று வட்டார மக்களே...... இதோ மீடியாக்கள் நம்மோடு கை கோர்க்க துடங்கி விட்டன. நம் தான் இந்த தருணத்தை பயன் படுத்தி போராட்டம்களை DCW ஆலையின் முன்பு ஏற்ப்பாடு செய்தால் வெற்றி நிச்சயம். இதோ கீழே.... காணும் லிங்க் one india tamil லில் இப்போது அப் டேட் ஆனது.

http://tamil.oneindia.in/news/tamilnadu/kayalpattinam-people-agitate-against-dcw-firm-208877.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [18 August 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 36512

தேர்தல் காலங்களில் திரு சமஸ் அவர்களின் கட்டுரைகளை 'தி இந்து ' நாளிதழில் தொடர்ந்து படித்திருக்கிறேன். அவரின் அனைத்து கட்டுரைகளும் என்னை வெகுவாக கவர்ந்தன. அப்போதே சமஸ் என்பது யார் என்பதையும் , இது உண்மைப்பெயரா அல்லது புனைப்பெயரா என அறிந்துகொள்ள ஆவல். உங்கள் வலைதள செய்திகளின் வாயிலாக திரு சமஸ் அவர்களை காண முடிந்தது.

திரு சமஸ் அவர்களின் 'தி இந்து' கட்டுரை வாயிலாக இந்த விஷயம் மாநில மக்கள் அனைவரின் கவனத்திற்கும் சென்றடைதிருக்கிறது. இன்று 'ஒன் இந்தியா' வலைதள செய்தியிலும் இச்செய்தி வெளிவந்திருக்கிறது. கீழுள்ள இணைப்பை சொடுகி அச்செய்தியை காணலாம்..

http://tamil.oneindia.in/news/tamilnadu/kayalpattinam-people-agitate-against-dcw-firm-208877.html

போராட்டம், வழக்கு என்பது ஒருபுறமிருக்க, மக்களின் கவனத்தை மத்திய / மாநில அரசுகள் ஈர்ப்பதற்காக 'மீடியா' முலமாக பிரச்சார யுக்திகளையும் நாம் கையாள்வது அவசியம். இப்போதுதான் மீடியாக்களின் பார்வையில் நாம் இப்பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறோம். இது ஒரு நல்ல அணுகு முறை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M.N.Sulaiman (Qatar) [18 August 2014]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 36513

காயல் பட்டினத்து மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதை நம் தமிழக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற சகோ. சமஸ் அவர்களுக்கு எங்களின் கோடான நன்றி...!!!

இது குறித்து "தட்ஸ்தமிழ்.காம்" சார்பில் வெளியான இன்றைய செய்தியை காண,
http://tamil.oneindia.in/news/tamilnadu/kayalpattinam-people-agitate-against-dcw-firm-208877.html#cmntTop

இதற்கு அப்புறமாவது, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

எதிர்பார்ப்புடன்...............?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by L.A.K.BUHARY (Hong Kong) [18 August 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36514

http://tamil.oneindia.in/news/tamilnadu/kayalpattinam-people-agitate-against-dcw-firm-208877.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...பத்திரிகை உள்ளங்களுக்கு நன்றி
posted by Mohamed Iqbal (Chennai) [19 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36518

இது போன்ற முயற்சிஹல் எடுத்த திரு சமஸ் போன்ற பத்திரிக்கை உள்ளங்களுக்கு நன்றி . DCW இன் இந்த முறை தொடருமானால் , தேர்தல் புரகன்னிப்பு செய்யவும் தயங்க மாட்டோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved