Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:45:20 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14296
#KOTW14296
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 13, 2014
காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகர அதிமுக சுவரொட்டி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4145 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில் பின்வருமாறு சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது:-



காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதின கதையாக இருக்கிறது.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [13 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36374

நமதூரில் ஒரு சொல் வழக்கு உண்டு."ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதினார்" என்று. அதை போல், நமதூர் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்க முயற்சிக்கு, சிறு துரும்பையும் எடுத்து போடாமல், முஸ்லிம் லீக் கட்சியினரின் ஒருங்கிணைப்பில், சர்வ கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினரின் கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கிடைத்த பலனுக்கு, இவர்கள் (அதிமுகவினர்) தங்களுக்கு தாங்களே நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். வேடிக்கையாக உள்ளது.

மக்களின் ஞாபக சக்தி மீது இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக' உள்ளது இவர்களின் இந்த சுவரொட்டி .

காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் பற்றிய நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொண்டால், இந்த அதிமுகவினர் மக்களை எந்தளவுக்கு முட்டாள்களாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும்.

இதுவரை நடந்த முயற்சிகளில், அதிமுக பிரதிநிதிகள் கலந்து கொள்ளவே இல்லை. அதற்கு இந்த இணையத்தில் வந்த செய்திகளே சாட்சி.

1) பிப்ரவரி 5, 2014, அன்று வெளியான, "காயல்பட்டினம் ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சியினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை!" (News ID # 12960), இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலில், அதிமுகவினர் யாரும் இல்லை.

2) , பிப்ரவரி 21, 2014 அன்று வெளியான "நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு! ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! (பிரசுரம் இணைக்கப்பட்டது!)" (News ID # 13076).இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலிலும் அதிமுகவினர் யாரும் இல்லை.

முத்தாய்ப்பாக, இந்த விரிவாக்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு குறித்த இந்த இணையத்தின் செய்தி மிக முக்கியமானது.

3) ஜுலை 23, 2014 ஆண்டு வெளியான, "காயல்பட்டினம் ரயில் நிலையைப் பணிகள் குறித்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விபரம்!" (News ID # 14165). இந்த செய்தியில் எப்போது டெண்டர் விடப்பட்டது என்ற விபரம் உள்ளது. அதன்படி, மார்ச் 10 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு. அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஏப்ரல் 4 அன்று திறக்கப்படும் என்று உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்று மே 16-ம் தேதி முடிவுகள் வெளியானது. அதன் பின்னரே அதிமுகவின் திரு.நட்டர்ஜி அவர்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். ஆனால் அதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுவிட்டது. இந்த விரிவாக்க முயற்சியில் இவரின் பங்கு எங்கிருக்கிறது?

மேலும், இந்த முயற்சிகள் நடக்கும் போது, திரு. சண்முகநாதன் மற்றும் அந்த கட்சியின், நம் நகர்மன்ற தலைவியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

உண்மை இப்படி இருக்க, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்படி சுவரொட்டி ஒட்டினார்கள்? என்று தெரியவில்லை.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [13 August 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 36376

அம்மாவின் முரட்டு தொண்டர்கள்??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...சில நேரங்களில் ... சில மனிதர்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [13 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36379

இதை படிக்கும் போது நாம் சிறு வயதில் நமது பள்ளி கூடத்தில் படித்த ஒரு சிரிப்பு கதை நினைவுக்கு வருகிறது

ஒரு பனை மரத்தில் காக்கை உட்காரும் சமயம் , அந்த பனை மரத்தில் இருந்து ஒரு பெரிய பனங்காய் கீழே விழுந்ததாம் , அதை பார்த்த அந்த காக்கை , அஹா .... நாம் வந்து உட்காரும் போது நமது பாரம் தாங்காமல் இந்த பனங்காய் கீழே விழுகிறதே என்று தன்னை நினைத்து தனக்கு தானே மிகவும் பெருமை பட்டதாம் ......

பாவம் அந்த காக்கை அறிய வில்லை ....... தன்னால் அந்த பனங்காய் தன்னால் கீழே விழவில்லை ... அந்த பனங்காய் கீழே விழும் நேரம் தான் ... நாம் இந்த பனை மரத்தில் வந்து உட்காருகிறோம் என்று .....

சில நேரங்களில் சில மனிதர்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அரசியல் அண்டப்புளுகு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் . (yanbu) [13 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36380

இது மட்டுமா எத்தனையோ திட்டங்கள் முடிவுறும் தருவாயில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு,ஆரம்ப அடிக்கல் நட்டியதிலிருந்து நிறைவுபெற்றது வரை அம்மாவின் சாதனையால் உழைப்பால் விளைந்தது என்ற எத்தனையோ விளம்பரங்களை கேட்டும், பார்த்தும் புளித்துப்போன காதுக்கும்,கண்ணுக்கும் சொந்தக்காரர்கள்தான் நாம்!

பல ஆண்டாய் நாம் வலியுறுத்திவந்த முஸ்லிம்களுக்கு தனி இடஒதிக்கீடு உதவியை கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றினார்.அதற்க்கு பல முஸ்லிம் இயக்கங்களும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்களை சென்னையில் திரட்டி கலைஞருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் இந்த நாடே அறியும்.ஆனால் அம்மாவோ தேர்தல் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு நான்தான் இடஒதிக்கீடு வழங்கினேன் என்று வாய் கூசாமல் பொய்பேசிய தலைவியின் தொண்டர்களுக்கும் முரட்டு பக்தர்களுக்கும் ,பக்திகளுக்கும் இந்த ஒருபொய் சுவரொட்டியெல்லாம் சர்வ சாதாரண சகஜமப்பா! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அரசியல் அண்டப்புளுகை அழகாக ரசிக்கும், ஆதம் சுல்தான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அரசியல்லே,,இதல்லாம் சர்வ சாதாரணமப்பா...!
posted by omer anas (DOHA QATAR.) [13 August 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36382

அப்ப,,இது அம்மா ரயில் மேடையா,,?என்னவோ போங்க,,,நாங்க, gulf நாட்டுலே கஷ்ட்டமான வேலைகளை பார்த்து விட்டு வந்து நெட்ட தொறந்தா,,இது போன்ற ஜோக் செய்திகள போட்டு எங்கள வயுறு வலிக்க சிரிக்க வக்கிறீங்க போங்க!

அம்மா அம்மா வேலங்குச்சியிலே அம்மா,மிஸ்வாக் பசை கொண்டு,அம்மா கை கொண்டு பல்துலக்கியவண்ணம், உங்கள் ,,,,,உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிரிப்பு போலிஸ் கதை தான் நினைவுக்கு வருகிறது..
posted by syed ahamed (kayalpatnam.) [14 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36384

நகருக்குள் இனி ஒட்டும் சுவரொட்டியில் அனிதா அண்ணாச்சியையும் மறக்காமல் நன்றி தெரிவிப்பு சுவரொட்டியில் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள்...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 August 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36392

அப்போ அம்மா எக்ஸ்பிரஸ் எப்போ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved