Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:05:07 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14141
#KOTW14141
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 20, 2014
1.35 கோடி ரூபாயை வீணடிக்க தயாராகும் காயல்பட்டினம் நகராட்சி?!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4784 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜூன் 10, 2014 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் பெரிய விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று அக்கூட்டத்தின் பொருள் எண் 14 ஆகும். இது நகரின் சில பகுதிகளில் - PAVER BLOCK (சிமெண்ட் கல்) தொழில்நுட்பத்தில் சாலைகள் அமைப்பது குறித்ததாகும். 22 இடங்களில், 1 கோடியே, 35 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் - இத்தொழில்நுட்பத்தில் சாலைகள் அமைக்க ஒப்புதல் கோரப்பட்டு, மன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டும் உள்ளது.




நகர்மன்றத்தின் ஜூன் மாத ஒப்புதலை தொடர்ந்து, தற்போது 6 சாலைகளுக்கு - 43.65 லட்ச ரூபாய் மதிப்பில் - ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது.



PAVER BLOCK தொழில்நுட்பத்தில் பரவலாக சாலையோர நடைபாதைகள், வளாகங்களுக்கு உள்ளே உள்ள நடைபாதைகள் ஆகியவையே அமைக்கப்படும்.





தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை விட அதிக தொகை தேவைப்படும் PAVER BLOCK தொழில்நுட்பத்திலான சாலைகள் இந்தியாவில் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மிகவும் நேர்த்தியாக அமைக்கப்படவேண்டிய இது போன்ற சாலைகள், இந்தியாவில் அதிக அளவில் தோல்வியே அடைந்துள்ளன. அதிக பயன்பாட்டின் போதும், முறையாக அமைக்கப்படாத காரணத்தினாலும், எளிதாக இதன் கற்கள் பெயர்ந்து வந்து விடும்.

மும்பையில் பழுதடைந்த PAVER BLOCK சாலை



மும்பை மாநகராட்சி - இது போன்ற சாலைகளை இனி அமைப்பதில்லை என சில மாதங்களுக்கு முன் முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு - இத்தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் - எளிதாக பழுதடைந்து, மக்களுக்கு பெருத்த சிரமத்தை கொடுத்ததே காரணம்.

PAVER BLOCK தொழில்நுட்ப சாலைக்கு ஒப்புதல் கொடுத்த ஜூன் மாத கூட்டத்தில் இடம்பெற்றிருந்த மற்றொரு பொருள் (எண் 25) - பழுதடைந்த அப்பாபள்ளி தெரு சாலையை 5.2 லட்ச ரூபாய் செலவில் சீரமைப்பதாகும். இந்த சாலை - தளவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரால் 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு சில மாதங்களிலேயே பழுதடைந்தது.



அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே பாதிக்கப்பட்ட இந்த சாலையை, ஒப்பந்ததாரர் செலவில் சீரமைக்க கூறாமல், நகராட்சியின் செலவில் சீரமைக்க - நகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் கோரி, இந்த பொருளை இக்கூட்டத்தில் முன் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்றத் தலைவர் குறிப்பு எழுதினாலும், பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது.

காயல்பட்டினம் நகராட்சியில் சாதாரண சாலையை கூட தரமாக அமைக்க திறனான ஒப்பந்ததாரர் இல்லை என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில், புதிய தொழில்நுட்பத்தில் எவ்வாறு தரமான சாலைகள் அமைக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. சாலைகள் உட்பட நகராட்சியில் நடக்கும் எந்த கட்டுமானப் பணியையும் பொறியியல் துறை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதே இல்லை. நெய்னார் தெரு சாலை அமைப்பதில் நடந்த மோசடி இதற்கு மற்றொரு உதாரணம்.

மேலும் இந்த சாலைகளை பயன்படுத்த உள்ள பகுதி மக்கள் / பகுதியை சார்ந்த பொது நல அமைப்புகள் ஆகியோரிடம் இந்த புதிய தொழில்நுட்பத்தில் திட்டமிடப்பட்டுள்ள சாலையின் தன்மை குறித்து கருத்தும் கேட்கப்படவில்லை; விளக்கங்களும் வழங்கப்படவில்லை.

PAVER BLOCK தொழில்நுட்பத்தில் சாலைகளை அமைக்கும் முடிவு, மக்களின் தேவைகளை அறியாமல், நகராட்சியில் நிறைவாக இருக்கும் அரசு மானியம் உட்பட மக்கள் வரிப்பணத்தை வெகு விரைவாக வீணடிக்க திட்டமிடப்பட்டுள்ள செயலாகவே தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. RePAVER: பிளாக்..
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [20 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36042

இந்த தொழில் நுட்பம் கண்டிப்பாக தோல்வி இல் முடியும்.இது பார்கிங் பகுதிக்கு ஓரளவுக்கு ஓகே. ரோடு பகுதிக்கு சாத்தியம் இல்லை. கொஞ்ச நாளில் வாகனத்தின் லோட் தாங்காமல் ரோடு CURUVE SHAPE இல் ரோடு வந்து விடும். மேலும் CURUVE ஆன ரோடு கீழ் PIPE லைன்,எலெக்ட்ரிக் லைன்,டெலிபோன் லைன்,கண்டிப்பாக DAMAGE ஆகும், இந்த ஓப்பந்தகாரர் இடம் குறைந்தது ONE YEAR GURANTY தர ASSURANCE லெட்டர் கேளுங்கள். தருவார்களா பார்க்கலாம்.

மும்பை அல்ல FOREIGN COUNTRYயில்ல இது FAIL.அங்க எல்லா நாடு ENGINEER JOIND ஆக செய்தும் FAILURE தான்.SO நல்லா யோசித்து செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் EXPERIENCE கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Wasting Money in Paver Block in common areas
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [21 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36043

I appreciate the effort of new technology Paver blocks by Kayalpatnam town panchayat, But this technology can be used only external areas like Hospital, park ,mosque entrance and Car parking areas only. Not for heavy traffic areas.

In foreign countries, they are not using this system in main roads but they are using in the pavement ,because of drainage/electrical channels & grating cutouts will be provided in the pavement areas ended with heel kerbs with traffic marks yellow&black or white &black.

So as per my knowledge its not advisable to use this system for common roads.If am wrong kindly advice.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நம் நகரம் மேலை நாடுகள் அல்ல...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36044

நம் நகரம் வளர்ந்த மேலை நாடுகள் அல்ல...! இத்திட்டம் தேவையற்றது..! அதிகாரிகளுக்கும் - பெருவாரியான உறுப்பினர்களுக்கும் மட்டுமே இத்திட்டம் தேவையாக உள்ளது..!

1 கோடியே, 35 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மக்கள் வரி பணத்தால் நிறைவேற்றப்பட இருக்கும் இத்திட்டத்தால் நகரின் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பது தெள்ள தெளிவாக விளங்குகிறது.

இது நமது நகருக்கு அவசியமில்லாத வீண் விரய செலவு திட்டம் - இந்த பணத்தை கொண்டு புறநகரில் அவர்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி - குடிநீர் வசதி - கழிப்பிட வசதி மேலும் அவர்கள் தன்னிறைவு பெறும் வகையில் புறநகர் மக்கள் எதிர்ப்பார்க்கும் பல வசதிகளை இந்நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து ஒருமித்த கருத்துடன் செயல்ப்பட்டு நகருக்கு தேவையான புரோஜனமான மக்கள் பயன்பெறும் வகையான திட்டங்களை தீர்மானமாக்க பட வேண்டும்..

நகர் மக்கள் விரும்பாத நகராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே விரும்பும் எந்த வகையான திட்டமும் அதில் பொதுநலம் இருக்காது...! சுயநலமே இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை...!

நகர் மக்கள் எவரும் விரும்பாத 1 கோடியே, 35 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படவிருக்கும் இத்திட்டத்திற்கு நகரின் பொதுநல அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை நகராட்சி ஆணையரிடமும் - மாவட்ட ஆட்சியரிடமும் - தமிழக முதல்வரின் கவனத்திற்கும் எடுத்து சென்று வீண் விரயமாக போகவிருக்கும் இப்பணத்தை வேறு தேவைக்காக செலவு செய்ய முயற்சிகள் எடுப்பது நகரின் பொதுநல அமைப்புக்களின் கடமை.

பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற குழப்பத்தில் இன்று பல பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளான சமூக ஆர்வலர்கள் உள்ளார்கள் என்பதை உணர செய்கிறது.

(நகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் கோரி, இந்த பொருளை இக்கூட்டத்தில் முன் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்றத் தலைவர் குறிப்பு எழுதினாலும், பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேறியது. CP)

ஒற்றுமையுடன் அணைத்து பொதுநல அமைப்புகளும் (விரையமாகும் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு உள்ள) இவ்விசியத்தில் தமது எதிர்ப்பை பதிவு செய்தால் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறிய இத்தீர்மானம் மறுபரிசீலனை செய்யப்படலாம். 1 கோடி ரூபாய்க்கு மேல் வீண் விரையமாகும் இத்திட்டத்தை மக்கள் விரும்பாத போது அதிகாரிகளும் - உறுப்பினர்களும் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள்...? என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா..!

மக்கள் பிரதிநிதியாக நகராட்சிக்கு அனுப்பிவைக்கபட்ட உறுப்பினர்களின் மீது நம்பிக்கை வைத்து இனி எந்த நியாயமும் எதிர்பார்க்க முடியாது..! நகரின் பொதுநல அமைப்புகளே...! இனி நீங்கள் மக்களின் பிரதிநிதியாக இருந்து வரவிருக்கும் இதிட்டதிற்க்குரிய பயன் என்ன..! என்ன...! என்பதனை ஆராய்ந்து மக்களின் கேள்விக்கு பதில் தாருவது பொதுநல அமைப்புகளின் கடமை..

நகரின் பொதுநல அமைப்புகளே...! சமூக ஆர்வலர்களே...! தன் மகனிடம் 100 ரூபாய் கொடுத்தனுப்பி அவன் வாங்கிய சாமான்களுக்கு கணக்கு கேட்க நமக்கு உரிமை உண்டெனில்...! நமது வரி பணத்தை செலவழிக்க / செலவழித்த நமது நகராட்சியில் கணக்கு கேட்கவும் நமக்கு உரிமை உண்டு தானே...!

பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளே நீங்கள் இத்திட்டத்தின் மீது கவனம் செலுத்தினால் மட்டுமே சரியான தீர்வாக அமையும்.. அதுவரை மக்கள் விரும்பாத திட்டம்.. உறுப்பினர்கள் - அதிகாரிகள் மட்டுமே விரும்பும் திட்டம் நமது நகராட்சியில் மட்டும் நிறைவேறி கொண்டே தான் இருக்கும்..

பூனைக்கு யார் மணி கட்டுவது...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நாங்கள் நினைத்தால் எந்த தீர்மானத்தையும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்ற முடியும்.
posted by syed ahamed (kayalpatnam) [21 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36045

வீட்டின் கார் பார்கிங், ஆஸ்பிட்டல், வணிக வளாகம் முன் பகுதி இவைகளில் பதிக்க பட வேண்டிய இந்த சிமெண்ட் கற்களை தெருவில் பதிக்க ஆர்வம் காட்டுவது முறையல்ல.

இந்நகருக்கு ஏன் இந்த சோதனை இறைவா.

நகராட்சியில் நிறைவாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் உட்பட மக்கள் வரிப்பணத்தை மிக விரைவாக அவசியமில்லாமல் செலவு செய்ய துடிக்கும் உறுப்பினர்களே!

இந்நகருக்கு வழங்கப்பட்டு இருக்கும் பொருளாதாரத்தை நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும் என மனதில் நினையுங்கள். நாங்கள் நினைத்தால் எந்த தீர்மானத்தையும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்ற முடியும் என்ற ஆணவ நினைப்பை அகற்றி விடுங்கள். நன்மையான திட்டங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...புல்லெட் ரயில் கதை...
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36046

இந்த புதிய அரசின் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் புல்லெட் ரயில், ரயில் நிலையங்களில் கணினி வசதி, sms மூலம் உணவு பெறும் வசதி எல்லாம் செய்யப்படவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள பெட்டியில் பயணம் செய்த கசப்பான அனுபவம் நிறையப் பேருக்கு இருக்கிறது. கழிவறையில் ய்ஹன்நேர் இல்லை, விளக்கு வெளிச்சம் இல்லை, உணவுகளில் எலி கரம்பும் தொல்லை, காற்றாடிகள் ஒழுங்காக சுழல்வதில்லை. முதியவர்கள், இயலாதவர்கள் upper berth middle berth உக்கு தாவும் அவல நிலை, முன்பதிவு செய்யாதவர்கள் அங்கும் இங்கும் இந்த பதிவு செய்யப்பட பெட்டியில் இரவுகளில் சாதாரணமாக அலைந்து திரியும் போக்கு இவற்றையெல்லாம் சரி செய்தாலே போதும் புல்லெட் ரயிலும் வேண்டாம் அது தடம் புரண்டு உயிர் இழக்கும் நிலையும் வேண்டாம் என்று மக்கள் அலுத்துக் கொள்வது ரயில்வே நிர்வாகத்தின் காதுக்கோ மந்திரியின் காதுக்கோ கேட்காமலா இருக்கிறது,

அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று சும்மாவா சொன்னார்கள்.

மேடு பள்ளம் நிறைந்த ரோடுகள், குழியும் குண்டுமாக உள்ள சாலைகள், கழிவுகள் அகற்றப்படாத நாற்றங்கள் இவற்றை நகர்மன்றம் சரி செய்தாலே போதும் என்று மக்கள் சொல்வதை இணையதளங்கள் நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

காசிருந்தால்தான் சுண்ட சொல்லும், கண்டவர் வாயை கிண்ட சொல்லும், ஏறுக்கு மாறா பேச சொல்லும். கண்டது நிண்டதை செய்ய சொல்லும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஊரு இரண்டு பட்டாள் இந்த மாதிரி கமிசன் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
posted by syed ahamed (kayalpatnam) [21 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36053

ஊரில் செயல்படும் பொது அமைப்பு ஏதாவது நகராட்சியின் இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு பதிவு (ஸ்டே ஆர்டர்) தொடர்வது காலத்தின் கட்டாயம்.

ஊரில் இருக்கும் பொது மக்கள், பொது அமைப்புகள் அனைவரும் பேயன் பைத்திய காரன் அறிவு மங்கியவர்கள் தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பு நகராட்சியில் உள்ள அதிகாரிகள், உறுப்பினர்கள் மத்தியில் மேலோங்கி விட்டது.

ஊரு இரண்டு பட்டாள் இந்த மாதிரி கமிசன் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.

இதற்க்கு இப்போதே ஸ்டே வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 July 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36070

அஸ்ஸலாமு அலைக்கும்

இப்படியா நம் ஊர் பொது மக்களின் வரி பணம் வேஸ்டு '' ( மோசடிக்க ) பண்ணபடுகிறது.....யப்பா ....நினைத்து பார்க்கவே மனது சங்கட படுகிறது .....

இவர்களின் கமிசனுக்காகவா '' இந்த மாதிரியான ஒரு காரியத்தை செய்ய முடிவு செய்து நம் நகர் மன்றதில் '' தீர்மானம் நிறைவேற்றினார்கள்.....இவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்....இன்ஷா அல்லாஹ் அடித்து வரும் நகர் மன்ற தேர்தல்களில் கண்டிப்பாக இது போன்ற செயல் வடிவம் கொடுக்க கூடிய நபர்களை நாம் முன்னிறுத்தவும் & ஆதரிக்கவும் கூடாது ....நம்மிடம் ஒற்றுமையை முதலில் கடைபிடிக்க ( உறுதியாக இருக்க ) வேணும்.....அப்போது தான் நாம் இவர்களை சரி செய்ய முடியும் ....

இத்திட்டம் 100 % அனைத்து உள் நாடும் + வெளி நாடுகளிலும் பெயில் ஆனது தான்......பொதுவாக இது போன்ற கல் அமைப்பது அதிகமான பணம் படைத்தவர்களின் வீட்டு முன் உள்ள கார் பார்க்கிங்கு / தோட்டத்தின் முன் பகுதிகளில் தான் கல் பதித்து அழகு பார்ப்பார்கள்.....இதுவெல்லாம் நம் ஊர் ரோடுகளுக்கு சுத்தமாகவே சரிபட்டு வரவே ....வராது ....& கல் கூடிய சீக்கிரமே பேர்ந்து வந்து விடும்...... தயவு செய்து இந்த திட்டத்தை '' உடனே நிறுத்தி பொது மக்களுக்கு உகந்த மாதிரியே நல்ல தரமான ரோடு போடுவது தான் நல்லது.....

ஆமா யார் சர் இத் '' திட்டத்தை '' கொண்டு வந்து செயல் வரிவமாக்கினார்கள்.....தங்களின் '' சுய '' லாபத்துக்காக '' பொது மக்களின் வரி பணத்தையும் & நமக்கு தருகின்ற அரசாங்கத்தின் பணத்தையும் வீணடித்து ....கொள்ளையடிக்கவா இப்படி செய்கிறார்கள் .....

இதற்க்கு முட்டு கட்டை போட நமது ஊர் பொது நல தொண்டு அமைப்பினர்களால் தான் முடியும் ....இவர்களோடு பொது மக்களும் ஓன்று இணைத்து போராட வேணும் .....அப்போது தான் இதை நாம் நிறுத்த முடியும் ....

இவர்கள் இத்திட்டத்தை முன் வடிவம் கொடுக்கும் முன் தடுப்பது தான் சரியானது .....

இப்பணத்தை கொண்டு நம் ஊருக்கு நல்ல தரமான ரோடு போட்டு + மீதமான பணத்தில் வேறு பல நல்ல காரியங்களை செய்யலாமே .....

தயவு செய்து நம் மரியாதைக்குரிய நம் தலைவி & உறுப்பினர்களும் இத்திட்டத்தை செயல் வடிவம் கொடுக்காமல் இருப்பது தான் நல்லது ....

அருமை நம் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் சொன்னது போன்று ;; யார் சார் பூனைக்கு மணி கட்டுவது ????

ஆனால் ஒரு நாள் நிச்சயம் இந்த '' பூனைக்கு பொது மக்கள் மணி கட்டுவார்கள் இது உறுதி..............

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved