Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:43:11 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13116
#KOTW13116
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 27, 2014
ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2180 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 4 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

மேலும், 4 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கம் கோரி தமிழக அரசுக்கும், நளினி உள்பட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி, மாநில அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் விடுதலை முடிவை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 3 பேர் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் புதிய மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி -27) நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று (வியாழக் கிழமை) மத்திய அரசின் புதிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 4 பேரை, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் வரை விடுவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் விசாரணை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அம்மாவின் யுக்தி
posted by mackie noohuthambi (chennai) [27 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33403

முதல்வருக்கு இது தெரியும். தமிழக அரசியல் கட்சிகளை உற்சாகப் படுத்தவும் காங்கிரசை தனிமைப்படுத்தவும் அவர் எடுத்த அதிரடியான ராஜதந்திரமான முடிவு இது. அவசர கோலத்தில் விடுதலை செய்தால் தமிழ் மக்களிடம் 3ம் திகதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இதை பெரிதுபடுத்தி பேசலாம். விடுதலையை காங்கிரஸ் எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதையும் மக்களிடம் சொல்லி அனுதாபம் தேடலாம்.

ஒரு அதிமுக பேச்சாளர் சொல்கிறார் வருடத்தின் 12 மாதங்களில் பெப்ரவரி குறை நாட்களாக இருப்பதால் அந்த குறையை நீக்கவே புரட்சி தலைவி பெப்ரவரியில் பிறந்தார் என்கிறார். இப்படி குறை நாள் உள்ள மாதத்தில் பிறந்ததால்தான் முதல்வர் எல்லா விஷயத்திலும் குறை புத்தியுடன் செயல்படுகிறார் என்று இன்னொருவர் சொல்கிறார். புகழ்வதும் இகழ்வதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பது முதல்வருக்கு புரியாதா என்ன?

மக்கள் தலையில் எப்படி எல்லாம் மிளகாய் அரைக்கலாம் என்பதை எல்லா அரசியவாதிகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் நமக்குதான் ஒன்றும் புரியவில்லை, ஒன்றும் தெரியவில்லை. அண்ணா நாமம் வாழ்க.அவர்கள் நமக்கு போடும் நாமம் வாழ்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Farook (KSA) [27 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33404

மூன்று நாளில் மத்திய அரசு இந்த விசயத்தில் முடிவு செய்யாவிட்டால் நாங்களே முடிவு செய்து விடுதலை செய்வோம் என்று அகங்காரமா பேசும்போதே , பாமரனுக்கும் தெரியும் இது நடக்காது என்று .

இப்ப தமிழக அரசு என்ன செய்யும்?

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...election comedy.....
posted by Muhammad Nooh KA ( Sharafiyyah.Jeddah.) [27 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33413

இனி அம்மா அரசு என்ன செய்யும் தெரியுமா? இந்த தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க வேறு ஏதாவது நாடகத்தை அரங்கேற்றும். தேர்தல் முடியும் வரை இந்த நாடகங்கள் தொடரும். எல்லாம் நம் தலைவிதி அய்யா நம் தலைவிதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் சிறுமழை!  (28/2/2014) [Views - 2477; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved