Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:58:37 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13112
#KOTW13112
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 26, 2014
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5582 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் மீராஸாஹிப், இயற்பியல் ஆசிரியர் முஜீபுர் ஆகிய இருவரும், பள்ளி நிர்வாகத்திற்கெதிராக செயல்பட்டதாக மாவட்ட கல்வி அலுவலகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அவர்களை மீண்டும் பணியிலமர்த்தக் கோரி, அப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று காலை 09.30 மணிக்கு தமது வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளியின் வெளிப்பகுதி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.















தகவலறிந்து அவ்விடம் விரைந்து வந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மாணவர்களை அமைதிப்படுத்தினார்.



போராட்டம் குறித்து மாணவர்களிடம் விபரம் கேட்டபோது, ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் தமது பாடங்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசுத் தேர்வு நெருங்கும் நிலையில் தாம் இருப்பதால் ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் கோருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் காவல்துறையினர் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுநல ஆர்வலர்கள், மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.





நிறைவில், எஞ்சிய வகுப்பு நாட்களில் மாணவர்களின் பாடங்களுக்குப் பாதிப்பேற்படாதவாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, வகுப்புகளுக்குச் சென்றனர்.





மாணவர்களின் இப்போராட்டம் காரணமாக, பள்ளி வளாகம் சில மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

படங்களில் உதவி:
செய்யித் இப்ராஹீம்


[செய்தி திருத்தப்பட்டது @ 21:05 / 26.02.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Kayakpatnam) [26 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33379

நம் ஊரின் பழைமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான சென்ட்ரல் மேல்நிலை பள்ளியின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என எங்கும் கோஷ்டிப்பூசல். ஒற்றுமை இன்மை . தற்போதைய தலைமை ஆசிரியர் நல்லவர். ஆனால் வல்லவரா என தெரியவில்லை.. தலைமை ஆசிரியராக காஜா சார் இருந்தவரை இதுபோன்று உட்பூசல்கள் இல்லை. பின் எதனால் இந்த உட்பூசல்? நிர்வாகத்திலும் மாற்றம்.

காவல்துறையினர் மாணவர்கள்மீது பலபிரயோகம் செய்திருந்தால், நிலைமை மோசமாகி நம் ஊரின் மானம் கப்பலேறி இருக்கும். நல்ல வேளை அமானுல்லா காக்கா அவர்களின் சாதுர்த்தியத்தால் இன்றைய மாணவர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [26 February 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33381

என்னப்பா நடக்கின்றது.. ஒன்றும் புரியலைய்..யே.

மாணவர்களின் போராட்டம் என்ற வார்த்தையை நம் ஊரில் கேள்விப்படவே இல்லையே.

பத்தாம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்வுகள் நெருங்கி வரும் டென்ஷன் ஆன, இந்த தருணத்தில் இப்படியா.?

நம் மாணவர்கள் நல்ல நிலைக்கு வரனும் என்று அனைத்து காயல் நல மன்றங்களும், இக்ரவும் மற்றும் பல நிறுவனங்களும் தகுதிக்கு மீறி உழைத்து வருகிறார்கள். இதுவெல்லாம் "விழலுக்கு இழைத்த நீராக" மாறிவிடுமோ என்று அச்சம் வருகின்றது.

பள்ளி நிர்வாகிகளே, மாணவர்களின் நலனில் வழமை போல அக்கறை கொள்ளுங்கள்.

அட்மின் அவர்களே, இந்த பிரச்சனை சமீப காலமாக வலை தளங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. யார் பக்கம் நியாயம் என்று புரியவில்லை. இரு தரப்பு விவரங்களையும் வெளியிட்டால் நன்றாக இருக்குமே.

வருத்தத்துடன்,

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [26 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33382

கோஷ்டி பூசல் வந்தாலே பள்ளிக்கூடம் வெளங்காது. மாணவர்கள் படித்தல் மட்டும் போதாது., தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பதால் திறமைசாலி என்று சொல்லி விட முடியாது. நல்ல attitude கற்று வெளியேற வேண்டும். ஆசிரியர் கோஷ்டி குழுமம் கூடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பணியிடை நீக்கம் பெற்ற ஆசிரியரின் பனி நியாமத்தை அரசு ரத்து செய்ய வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by தமீமுல் அன்சாரி ரியாஸ் (Al Ain, UAE) [27 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33388

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அன்பு சகோதரர் சாளை S.I.ஜியாவுத்தீன் நம் ஊரில் இந்த மாதிரியான வார்த்தைகளை கேள்வி பட்டதே இல்லை என்று கூறியுள்ளார். நாங்கள் கேள்விபட்டுள்ளோம். நம் ஊரில் ஒரு தனியார் பாடகசாலை (பள்ளியின் பெயரை சொல்லி கலங்க படுத்த விரும்பவில்லை) பல முறை இந்த மாணவர் போராட்டத்தை சந்தித்துள்ளனர். நமக்கு இது இரண்டாவது முறை. இது விளக்கமாக கூறுவதற்கு சரியான நேரம் இது அல்ல.

தலைமை ஆசிரியர் கூறுவதை அதற்கு கீழ் இருகின்ற ஆசிரியர் கேட்கத்தான் செய்ய வேண்டுமே தவிர தனியாக கொடி புடிக்கக்கூடாது. நம் பள்ளியில் ஒரு களங்கம் ஏற்பட்டால் அது நமக்குதான் அசிங்கம்.

இப்போது பணியில் இருகின்ற தலைமை ஆசிரியர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். அவருடைய திறமையை மாணவர்கள் மதிப்பீடு செய்வது நல்லதல்ல.

12-வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் நிர்ணகிக்க இன்னும் 2-நாட்களில் ஆரம்பமாக இருகின்ற பொது தேர்வு அவர்களை மிகவும் வேதனை பட வைக்கின்றது. தலைமை ஆசிரியர் இதற்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இருவர்களின் EGO பிரச்சனையில் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமே...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33389

எது மெய் - எது பொய் என இதுவரை முழமையாக தெரியவில்லை... ஆனால் ஒன்று மட்டும் நினைவிற்கு வருகிறது பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் - தற்போது உடம்பு சரியில்லை என மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியர் மீரா சாகிப், மற்றும் இவருடன் சமீபத்தில் ஒரு குழுவாக கைகோர்த்துள்ள சில ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பல மாதமாக EGO பிரச்சனை நடந்து வருகின்றன என பலரும் முன்பு குற்றம்சாட்டி வந்தது நினைவிற்கு வருகிறது..

இந்த இருவர்களின் EGO பிரச்சனையில் பாதிக்கப்படுவது மாணவர்கள் மட்டுமே...! மேலும் மாணவர்கள் பள்ளி கூடத்தை புறக்களிப்பதும் சரியில்லை மாணவர்களின் படிப்பு மிக முக்கியம்..

உலக காயல் நல மன்றங்கள் மிக விழிப்புடன் இருந்து இதில் நிர்வாகம் - ஆசிரியர்கள் - மாணவர்கள் என பிரித்து அவர்களை அணுகி அதற்காக சிறப்பு கவனம் செலுத்த பட வேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காலம் மாறியதால் கோலம் மாறிப்போச்சு....!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Singapore.) [27 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33391

நாங்களும் அந்த பள்ளியில்தான் படித்தோம். கண்ணியமிக்க MKT அப்பா வீட்டாரின் நிர்வாகத்தில் கண்டிப்பு மிக்க மர்ஹூம் இபுறாஹீம் சார் அவர்கள் தலைமையில் பள்ளிக்கூடம் பாலிட்டிக்ஸ் இல்லாமல் மிகச் சிறப்பாக நடந்து செண்டமும் வாங்கியது. இதில் ஓய்வு பெற்ற எனது ஆசான் மதிப்புக்குரிய காஜா முஹிய்யத்தீன் சார் அவர்களின் ஒப்பற்ற உழைப்பும் இருந்தது.

ஆசிரியர்களை தரம் பிரித்தாளும் வேலையை பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் பார்த்துக்கொள்ளும். இதில் மாணவர்களுக்கு பங்கில்லை. படிப்பு ஒன்றே இப்போதைய குறிக்கோள்.

இப்படி நம் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுமளவிற்கு நிர்வாக சீர்கேடும், தனி நபர் ஆளுமையும், திறமை இன்மையுமே காரணம் என்று மேலோட்டமாக தெரிகிறது. மாணவர்களின் நலன் கருதி தம் சொந்த விருப்பு, வெறுப்புகளை மறந்து நிர்வாக பொறுப்பாளர்கள் செயல் பட வேண்டும்.

முன்னோர்கள் தமது உழைப்பையும், செல்வத்தையும் தந்து ஊர் நலனுக்காக பாடுபட்டு கட்டியெழுப்பிய கல்விக்கோட்டையை கோட்டை விட்டு விட வேண்டாம்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பள்ளியின் நிலை
posted by Hameed Sulthan (Abudhabi ) [27 February 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33393

நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களையும் மாணவர்களுக்கு எதிராக நிர்வாகத்தையும் தூண்டிவிடுபவர்கள் யார்? இதனை கானும்போது நம் பள்ளி தானா என்ற எண்ணம் உதிக்கின்றது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Hameed Rifai (Jeddah KSA) [27 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33395

இந்தப் போராட்டத்தில் உண்மை இருப்பதாக என்னால் கருத இயலவில்லை. என் மனதில் பட்டவற்றை சில கேள்விகளாக முன்வைக்கிறேன்.....

(1) ஆசிரியர் இல்லாததால் பாடம் கெடுகிறது, ஆசிரியர் வேண்டும் என்பதுதான் தமது கோரிக்கை என மாணவர்கள் தெரிவித்ததாக இச்செய்தி கூறுகிறது. அப்படியானால், அவர்கள் கைகளில் தாங்கிப் பிடித்திருக்கும் பேனர்களில் ஒன்று கூட அக்கோரிக்கையைக் கொண்டதாக இருக்கவில்லையே, ஏன்?

(2) பழைய தலைமையாசிரியர் காஜா சார் அவர்களின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, அந்த இடத்தைப் பிடிக்க சில ஆசிரியர்களுக்கு லட்சியம் இருந்தது என்பதை நான் ஊரிலிருந்தபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பலரிடம் வாய்மொழியாகக் கூறியதன் அடிப்படையில் அறிந்து வைத்துள்ளேன். தற்போது இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் கைகளில் இருக்கும் பேனர்கள் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளதே...? தலைமையாசிரியர் பதவிக்கு ஆசைப்படும் ஒருசில ஆசிரியர்களோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக யாருமோ அப்பாவி மாணவர்களைத் தூண்டி விட்டிருக்கலாம் என நான் நினைத்தால் அது தவறா?

இச்செய்தியின் கீழ் கருத்து எழுதுபவர்கள் தயவுசெய்து எடுத்தோம், கவிழ்த்தோம் என எழுதாமல், தீர விசாரித்து உண்மையறிந்து எழுத பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...அந்த காலம் பொற்காலம் ,!!!
posted by ceylon fancy kazhi (Thiruvalla,Kerala.) [27 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33396

நாங்களும் அந்த பள்ளியில்தான் படித்தோம். கண்ணியமிக்க MKT அப்பா வீட்டாரின் நிர்வாகத்தில் கண்டிப்பு மிக்க மர்ஹூம் இபுறாஹீம் சார் அவர்கள் தலைமையில் பள்ளிக்கூடம் பாலிட்டிக்ஸ் இல்லாமல் மிகச் சிறப்பாக நடந்து செண்டமும் வாங்கியது. இதில் ஓய்வு பெற்ற எனது ஆசான் மதிப்புக்குரிய காஜா முஹிய்யத்தீன் சார் அவர்களின் ஒப்பற்ற உழைப்பும் இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது..

நாங்கள் படிக்கும்போது இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை சந்தித்ததே இல்லை அதற்க்கான அவசியமும் ஏற்பட வில்லை ,படிப்பு மட்டும் தான் குறிக்கோளாக இருந்தது .எல்லா ஆசிரியர்களும் ஒற்றுமையாக செயல்பட்டார்கள், எனவேதான் அதிகமான செண்டமும் கிடைத்தது .அதனால்தான் அந்த காலத்தை பொற்காலம் என்று சொல்லலாம் ,,,

இப்போதுள்ள பிரச்சனை சீக்கிரம் முடிவுக்கு வந்து மாணவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களை போன்ற முன்னாள் மாணவர்களின் எண்ணம் ,ஆசை .......

முன்னாள் மாணவன் ( 1987 +2 batch )
ceylon fancy kaazhi , Thiruvalla, Kerala...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Shahul Hameed (Bangalore) [27 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33397

இவ்வாறு ஆசிரியர்களுக்குள்ளேயே கோஷ்டி மோதல் கருத்து வேறுபாடு இதெல்லாம் இருந்தால். அவர்களிடம் பாடம் கற்க்கும் மாணவர்கள் ஒழுக்கம் கேள்விக்குரியே? வெறும் படிப்பு இருந்தால் மட்டும் மாணவர்கள் முன்னேற்றம் அடைய முடியாது. நல்ல ஒழுக்கமும் வேண்டும். அதற்க்கு இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by H.M.SEYED AHAMED (Trichy) [27 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33398

அஸ்ஸலாமு அலைக்கும்

சென்ட்ரல் மேல் நிலை பள்ளியில் இப்போது நடை பெற்றது 2 வது போராட்டம். 1990 ஆம் ஆண்டு மிக பெரிய போராட்டம் பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டி நமது நகராட்சியில் தொடங்கி குத்துக்கல் தெரு , மெயின் ரோடு ,ஆராம்பள்ளி தெரு ,சதுக்கை தெரு வழியாக எமது சென்ட்ரல் மேல் நிலை பள்ளியை அடைந்தோம் . அதுவும் எதற்காக என்றால் இன்று நடக்கின்ற காரணம் போல தான்.

மர்ஹூம் இபுராஹிம் சார் அவர்கள் தென்காசியை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்ற சாரை பள்ளி யை விட்டு அரசு தேர்வு நெருங்கும் நேரத்தில் விலக்கியதை கண்டித்து அன்று மிக பெரிய போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்ட மாணவர்களில் நானும் ஒருவன். இதன் காரணம் நிர்வாகமும் , ஆசிரியர்களிடையே நிலவும் ஒற்றுமை இன்மையும் தான். இப்படி நிர்வாகம் நடந்தால் எப்படி எமது பள்ளி அரசு தேர்வுகளில் சாதனை படைக்க முடியும்?

அரசு தேர்வு நேரத்தில் ஆசிரியர்களும் நிர்வாகமும் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் தராமல் அவர்களை நல்ல படி தேர்வு எழுத அந்த மாணவர்களை தயாராக்கும் படி ஆசிரியர்களையும் நிர்வாகத்தையும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்று போராட்டம் வெற்றி பெற முனைப்புடன் செயல் பட்ட மாணவர்களின் சார்பாக இன்றைய மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை பள்ளி நிர்வாகம் செய்து தர அன்புடன் வேண்டுகிறேன்.

பள்ளி முன்னால் மாணவன்
H .M .SEYED AHAMED
TIRUCHY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ?உங்கள் பிறச்சனைனால் மாணவர்களை பலிகேடாக ஆகிவிடாதீர்கள்?
posted by shaha (dubai) [27 February 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33400

உங்கள் பிறச்சனைனால் மாணவர்களை பலிகேடாக ஆகிவிடாதீர்கள். ஒரு பள்ளி சரியாக செயல்படுவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நிர்வாகம். மற்று ஒன்று ஆசிரியர்கள். இந்த இரண்டில் ஒன்று சரி இல்லை என்றால் அந்த பள்ளியே சரியாக இயங்காது.

அப்படி இறுக்க இந்த பள்ளியில் ஏன் இந்த அவள நிலை. மாணவர்களின் தேர்வு நெறுங்கி இறுக்க ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது சரி இல்லை. அதற்கு பதிலாக வேறு ஆசிரியர்களை நியமிப்பது சரி இல்லை.

ஒங்கள் பிரச்சனை தல்லி வைத்து விட்டு மாணவர்களை பாருங்கள் .இதே காயல்.காம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்வை பட்ற்றி அறிவுரை கூறுகிறார்கள் ஆனால் இங்கு ???????????? இதை காயல்.காம் மில் இந்த கமெண்ட்டை பதிவு செய்வார்களா பார்ப்போம்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by salih (bangkok) [27 February 2014]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 33402

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை முழுமையாக நீக்கி விட்டால் பிரச்னை சரியாகிவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. அரசு பொது தேர்வு நேரத்தில் தேவையில்லாத நடவடிக்கை.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [27 February 2014]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33410

இந்த பிரச்சனையில், நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியா? தவறா? என்ற விவாதத்துக்கு வரவில்லை. ஏனென்றால், இதில் உள்ள உள்குத்து சமாச்சாரங்கள் தெரியாமல் விமர்சனம் பண்ணுவது முறையில்லை.

ஆசிரியர்கள் இடையே கோஷ்டி பூசல் எல்லா பள்ளி, கல்லூரிகளில் உள்ளது தான். பிரச்சனை பண்ணும் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு. ஆனால் இங்கே பிரச்சனை, அந்த ஆசிரியர்கள் செய்தது, தவறாகவே இருந்தாலும், இடைநீக்கம் செய்யப்பட நேரம் தவறானது.

அரசு பொது தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அனைத்து பாடங்களையும் அந்த ஆசிரியர்கள் முடித்து இருப்பார்கள். இந்த நேரத்தில், ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது இப்போது நிர்வாகத்தால் உறுதி அளிக்கப்பட படி, வேறு ஆசிரியர்களை வைத்து தேர்வு வரைக்கும் CLARIFICATION செய்தாலோ பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். புதிய ஆசிரியரின் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறை மாறுபடலாம்.

நிர்வாகம் இந்த நடவடிக்கையை, 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னரே செய்திருக்கலாம். அல்லது அரசு தேர்வு முடிந்த பின் செய்திருக்கலாம். நிர்வாகம், இந்த மாணவர்களின் நலன் கருதி (இஞ்சினீரிங்க் துறைக்கு முக்கியமான கணிதம் & இயற்பியல் ஆசிரியர்கள்) தங்களது நியாயமான அதிகாரத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து சுமூக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

மாணவர்களே! இதை உங்கள் பிரச்சனையாக எடுக்காமல், படிப்பில் கவனம் செலுத்தி, பொது தேர்வில் அதிக கட்ஆப் மார்க் எடுத்து, நன்கொடை கொடுக்காமல் பொறியியல் சேர வாழ்த்தி துஆ செய்கிறேன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...மாணவர்கள் பிரச்சினை
posted by Thawheed (chennai) [27 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33412

சென்ட்ரல் பள்ளிகுடத்தில் நடைபெற்றது ஒரு குடும்ப பொலிடிக்ஸ், தலைமை ஆசிரியரை பற்றி அவரிடம் படித்த அனைவர்க்கும் தெரியும். அதேமாதிரி சுலைமான் காக்காவை பதியும் அனைவருக்கும் தெரியும். இது ஒரு managment போட்டி என்றே சொல்லலாம்.

இங்கு சிலர் சொன்னார்கள் இதுதான் முதல் தடவை என்று அவர் காயல்பட்டினத்தில் படித்து இருக்கமாட்டார் என்று நினைக்கிறன். இங்கு பலபேர் மாணவர்களுடைய படிபிதான் முக்கியம் என்று சொன்னிர்கள் உண்மைதான் அதைபத்தி நம்மை விட பெரிதும் கவலைபடுபவர் பள்ளி தலைமை ஆசிரியர்.

மற்றும் ஒன்று நான் உங்களுக்கு சொல்றேன் தலைமை ஆசிரியர் முன்பு வாங்கின salary யை விட இப்போம் அவருக்கு வெறும் Rs.1000 தான் அதிகம் ஆனால் அவர் இப்பொழுது செய்யும் expences மிகும் அதிகம். அதுமட்றும் இன்றி அவர் காலையில் 7.30am வந்து விட்டு evening 7 மணிவரை வேலைசிகிரத நான் கேள்விபட்டேன். இது ஒரு சில ஆசிரியர்களை management யில் உள்ளவர்கள் துண்டிவிட்டு வேலை செய்ய விடாமல் செய்கிறார்கள்.

please குடும்ப பிரச்சினையை வீட்டில் பார்க்கவும். நம் சமுதாயம் வளர வழிவிடுங்கள் .mkt அப்பா காலத்தில் எப்படி சமுகத்துக்கு கல்வி குடுக்க நினைத்தார்களு அதைமாதிரி இல்லாவிட்டாலும் நீதமாக நடக்கஊம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...egovai vittozhiyungal ....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.) [27 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33416

சாளை அப்துர்ரஜாக் அவர்களின் கருத்துப் பதிவு 100% சரியே. அதையே நானும் ஆமோதிக்கிறேன் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலம் காக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் சமூக நலவிரும்பிகளின் அவா. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [28 February 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33431

அஸ்ஸலாமு அலைக்கும்

நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய MKT .அப்பா அவர்கள் காலத்தில் படித்த நல்ல பண்பு உள்ள ....ஒழுக்கமான ....அமைதியான '' சூழ் நிலைமை ''' உள்ள பள்ளி ....எங்கே போனது ...?? எங்கள் மரியாதைக்குரிய MKT அப்பா அவர்கள் எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் தான் .... தங்களின் சொந்த பணத்தில் தான் நம் ஊர் மக்கள் யாவர்களுக்கும் '' கல்வியை '' தந்தார்கள் .... அவர்களின் இந்த நல்ல மன பக்குவமான ...நல்ல கண்ணியமான ...ஒரு கல்வியை அப்போது அவர்கள் தந்ததால் தான் ...இப்போது நமது ஊரில் DR / ENGR / MASTER / நல்ல ஒழுக்கமான தொழில் அதிபர்கள் ....நல்ல பண் புள்ள மாமனிதர்கள் நமக்கு கிடைத்து உள்ளார்கள் .....இப்போது இந்த பள்ளியின் நிர்வாகத்தில் என்ன குளறு படியோ ...யாம் அறியான் ....இதை தொழில் ஆக்காமல் ....நம் மக்களுக்கு ...நல்லதோர் கல்வியை ....கொடுங்கள் ....இது தான் நம் மக்களின் எதிர்பார்ப்பு ......அல்லாஹு நல்லதையே நாடுவான் .......

நமது கண்ணியமிகு M.K.T.அப்பா அவர்கள் கட்டிகாத்த இந்த பள்ளியின் கண்ணியம் + ஒழுக்கமும் நிச்சயம் .... கட்டி காட்கப்பட வேணும் ....யாவர்களின் எண்ணம்மும் கூட........

தற்போது உள்ள தலைமை யாசிரியர் ரொம்பவும் நல்ல பண்புள்ளவர் + நிர்வாக திறமை உள்ளவர் என்று பரவலாகவே பொது மக்கள் மத்தியில் பரவலான ஒரு பேச்சு உள்ளது .....இதையும் நாம் பார்க்கவேணும் ......

பொதுவாக நம் பள்ளி நிர்வாகத்தினர்கள் பள்ளிக்கு கண்ணியமிகு வாத்தியார்களை வேலையில் அமர்த்தும் போது நல்ல பக்குவம் உள்ள வாத்தியார்களாக பார்த்து அமர்த்துவது தான் நல்லது ....அது தான் சரியானதும் கூட ........

நமது மாண்புமிகு .... வாத்தியார்கள் மாணவர்களுக்கு படிப்புடன் சேர்த்து நல்ல ஒழுக்கத்துடன் கலந்த பண்புகளைதான் சொல்லி கொடுக்க வேணுமே தவிர ....இப்பவே நம் மாணவ கண்மணிகளை வேறு திசைகளில் மனதை திசைதிருப்ப முயற்ச்சிப்பது நல்லது அல்லவே .......

நமது மாணவ கண்மணிகள் தயவு செய்து .....தேர்வு சமையத்தில் இது போன்ற போராட்டதில் ஈடுபடுவது தங்களின் நல்ல முன்னேற்றத்துக்கு கொஞ்சமும் சரி இல்லை ........தாங்கள் இப்போதைய நேரத்தில் நீங்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்த வேணும்....போராட்டம் என்கிற எண்ணமே தங்கள் மனதில் வரவே கூடாது .....

நம் பள்ளி நிர்வாகமும் நம் மாணவ கண்மணிகள் விசயத்தில் முழு கவனம் செலுத்த வேணும் .....

இந்த நம் மாணவ கண்மணிகளின் போராட்டதில் நமது மரியாதைக்குரிய காக்கா ஜனாப் .அமானுல்லா அவர்களின் மென்மையான ..கண்ணியமான ,பேச்சால் தான் இந்த போராட்டம் ....தவிர்க்க பட்டதாக கேள்வி பட்டு மனதுக்கு சந்தோசம்மானது...........

>>தயவு செய்து பழமை வாய்ந்த & எங்கள் மரியாதைக்குரிய ஹாஜி ஜனாப் ..M.K.T. அப்பா அவர்களின் முயற்ச்சியால் உருவாக்கப்பட்ட ..... நமது இந்த பள்ளியின் கண்ணியத்தை மாணவ கண்மணிகளும் & நிர்வாகத்தினர்களும் ..+ கண்ணியமிகு வாத்தியார்களும் தான் பாது காட்க வேணும் ........வெளி நபர்கள் வந்து இங்கு தலை ஈடுவதை எங்கள் பகுதி அனைத்து பொது மக்கள் விரும்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது ........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மாணவர்களின் எதிர்காலத்தை ? ஆக்கிவிடாதீர்கள் !!
posted by Salai. Mohamed Mohideen (Bangalore) [01 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33433

மிகவும் வருத்தமாக இருக்கின்றது. இதன் முழு பின்னணி தெரிய வில்லை. இருப்பினும்… சகோதர இணையதளத்தில் அசைபடத்தை கண்டபோது இரண்டு விடயங்கள் புலப்படுகின்றது. 'முன்னாள் நிர்வாகி' திரும்பவும் இப்பள்ளியின் நிர்வாகியாக வரவேண்டுமென்று 'பல முறை' பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் சொல்லுவதும்… அந்த மாணவரின் பேச்சில் +2 தேர்வு பற்றிய உண்மையான அக்கறையை விட பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பற்றியதாகவே இருக்கின்றது.

தேவையில்லாமல் உங்களுக்குள் (நிர்வாகத்தினர் + ஆசிரியர்கள்) உள்ள பிரச்சினையில், மாணவர்களின் எதிர்காலத்தை பகடைக்காயாக பயன்படுத்தி விடாதீர்கள்.

மாணவர்களே… ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். நிர்வாகத்தினருக்குள், ஆசிரியர்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் மனஸ்தாபங்கள் வரலாம். சமயம் வரும்போது அதை மறந்து ஒன்றாகி விடுவார்கள். ஆனால் உங்களின் வாழ்க்கை????? இவர்களின் சதுரங்க விளையாட்டிற்குள் நீங்கள் சிக்கி விடாதீர்கள்.

மர்ஹூம் இப்ராஹிம் சார் அவர்கள் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த போது, வேறு பள்ளியில் படித்த எங்களுக்கே… இப்பளியின் தலைமை ஆசிரயர் (இப்ராஹிம் சார் அவர்கள்) மீது ஒரு பயம் கலந்த மரியாதையும் இப்பள்ளியின் நிர்வாகத்தினர் மீது ஒரு தனி மதிப்பும் வைத்திருந்தோம். தயவு செய்து கெடுத்து விடாதீர்கள்.

இப்பிரச்சனை உடனே சுமூகமாக தீர்க்க இறைவன் அருள் புரிவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved