Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:11:17 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13009
#KOTW13009
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 12, 2014
காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் முறைக்கேடு?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3518 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் பொறியியல் துறையின் கீழ் வருகின்றன. குடிநீர் வழங்கும் பிரிவினை பொருத்துநர் நிசார் அஹமத் என்பவர் பிரதானமாக கவனிக்கிறார். இவரை தவிர - இரவு காவலாளி மற்றும் உயர் நிலை தொட்டி பாதுகாவலர் பொறுப்பில் உள்ள பாஸ்கரன் என்பவரும், கருப்பசாமி என்ற கண்ணன் என்பவரும், ரோஜா சுய உதவிக்குழு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள மகேஷ் என்பவரும், விவேக் என்பவரும் குடிநீர் விநியோகம் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வருவதாக தெரிகிறது.

சுமார் 8000 இணைப்புகள் உள்ளதாக கூறப்படும் காயல்பட்டினம் நகராட்சிக்கு தினசரி சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மேல ஆத்தூரில் இருந்து அனுப்பப்படுகிறது. இருப்பினும் - பல ஆண்டுகளாக, நகரின் குடிநீர் விநியோகம் பிரச்சனைக்குரியதாகவே இருந்து வருகிறது.

இணைப்புகள் எண்ணிக்கை, அரசு திட்டம் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவு ஆகியவற்றின்படி - இரண்டு நாளைக்கு ஒரு முறை வழங்க போதுமான தண்ணீர் இருக்க - நகரின் உட்பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும், பல புறநகர் பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

புதிய நகர்மன்றம் 2011 இல் பதவியேற்றப்பின் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், சென்னையில் அப்போதைய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS யை சென்னையில் சந்தித்து, அந்நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டினார்.



அதனை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குழு ஒன்று காயல்பட்டினம் நகர்மன்றதிற்கு வருகைப்புரிந்து விவரங்கள் கேட்டறிந்தது.



அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பி. ஏகாம்பரம் IAS - நகரில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த - தனது வாரியத்தின் ஐந்து பரிந்துரைகளை - நகர்மன்றத் தலைவருக்கு வழங்கினார்.




முதல் பரிந்துரையே - சட்டத்திற்கு புறம்பான இணைப்புகளை துண்டிப்பது ஆகும். அந்த பரிந்துரைகளை தொடர்ந்து - மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு போன்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீர் விநியோகத்தில் அவை பெரிய அளவில் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை.

இதற்கிடையில் நகரில் தற்போது இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்படி - நகரின் அனைத்து இல்ல இணைப்புகளும் புதிதாக வழங்கப்படும். இந்த புதிய இணைப்புகளை பெற - பொதுமக்கள், குடிநீர் வரி பாக்கி எதுவும் வைத்திருக்கூடாது என்றும், தாங்கள் இறுதியாக கட்டிய ரசீது அடிப்படையில் தான் - இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் இணைப்புகள் பெறமுடியும் என்றும் நகராட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

(சில ஆண்டுகளுக்கு முன்னர் - குடிநீர் கட்டணத்தை நகராட்சி உயர்த்தியதை தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை குடிநீர் கட்டணம் செலுத்தவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவித்தது. அதனை தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத பலரின் பாக்கி சுமார் 50 லட்சம் ரூபாய் உள்ளது).

சமீபத்தில் - நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர், நகர்மன்ற அதிகாரிகள் சிலர் - நகரின் வடப்பகுதியில் குடிநீர் இணைப்புகள் குறித்து ஆய்வுகள் செய்ய சென்றுள்ளனர். அப்போது - நகர்மன்றத் தலைவர், குடிநீர் இணைப்புகளுக்கான ரசீதுகளின் அவசியம் குறித்து பொது மக்களிடம் தெரிவித்துள்ளார்.

அவ்வேளையில் - பொதுமக்களில் ஒருவர், தான் 2007 ம் ஆண்டிலேயே சுமார் 10,000 ரூபாய் கட்டி இணைப்பு பெற்றதாகவும், ஆனால் தனக்கு இதுவரை ரசீது வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மற்றொருவர் - தான் வருட குடிநீர் வரியை கட்ட நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும்போது எல்லாம், அங்குள்ளவர்கள் - தங்கள் பெயரில் எந்த பதிவும் இல்லை என்றும் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாரிடம் பணம் கொடுத்தீர்கள் என நகர்மன்றத் தலைவர் வினவியதற்கு, அவ்விடத்தில் இருந்த - நிரந்தர ஊழியர் ஒருவரையும், ஒப்பந்தப்பணியாளர் ஒருவரையும் - பொது மக்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.

அந்த பணியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் விசாரித்ததில் - சில காரணங்களுக்காக கணினியில் பதிவேற்றம் செய்யமுடியவில்லை என்றும், விரைவில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இணைப்பு ஒன்றுக்கு 10,000 ரூபாய் பெற்று - நகராட்சியில் செலுத்தப்படாமல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது தற்போது வெளிவந்துள்ளது. இது போல் நகரில் பல இணைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த மதிப்பீடாக 100 இணைப்புகள் இது போன்ற முறையில் வழங்கப்பட்டிருந்தாலும் நகராட்சியின் இழப்பு சுமார் 10 லட்ச ரூபாய்! வருட குடிநீர் வரி - 600 ரூபாயும், பல ஆண்டுகளாக இது போன்ற இணைப்புகள் மூலம் வசூலிக்கப்படாமல், நகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது.

இது ஒரு புறம் இருக்க - நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவினை கணிக்கிட அளவு கருவி பொறுத்த - கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்மன்றத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 3.2 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான அளவு கருவி பொருத்தும் பணிக்கு இருவரிடம் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளி, ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெற இருந்த நகர்மன்றக் கூட்டத்தில் ஒரு பொருளாக இடம்பெற்றிருந்தது. அந்த கூட்டத்தையும், அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி நடைபெற இருந்த கூட்டத்தையும் பெருவாரியான நகர்மன்ற உறுப்பினர்கள் புறக்கணித்ததால் இது குறித்த தீர்மானம் நிறைவேறவில்லை.



இருப்பினும் - இது குறித்து நகர்மன்றத் தலைவரும், பெருவாரியான உறுப்பினர்களும் முன் அனுமதி வழங்கவே, அதன் அடிப்படையில், இப்பணிக்கான வேலை ஆணை (WORK ORDER), குறைந்த விலைப்புள்ளி சமர்ப்பித்த RESI ENGINEERING என்ற மதுரை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இப்பணி குறித்து ஒப்பந்ததாரரிடம் கடந்த செப்டம்பர் மாதம் காயல்பட்டணம்.காம் வினவியப்போது, ஒரு மாதத்தில் பணிகளை முடிப்பதாக தெரிவித்திருந்தார்.



பணி ஏதும் நடைபெறாததால், காயல்பட்டணம்.காம் இது குறித்து ஒப்பந்தாரரிடம் - டிசம்பர் மாதம் வினவியது. அவ்வேளையில் - இப்பணிக்கான பொருட்கள் கிடைப்பதில் காலதாமதம் ஆவதாகவும், பொங்கல் விடுமுறைகளுக்கு பின்னர் பணிகள் முடிக்கப்படும் என்றும் ஒப்பந்ததாரர் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி மாதம் துவங்கியும் பணி துவங்காததால், காயல்பட்டணம்.காம் - ஒப்பந்ததாரிடம் மீண்டும், கடந்த வாரம் வினவியது. பொருட்கள் மதுரை வந்துவிட்டதாகவும் - திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அன்று பணிகள் நடக்கும் என்றும் கூறினார். திங்கட்கிழமையும் பணிகள் துவங்கவில்லை. இது குறித்து மீண்டும் விசாரித்ததில் - வெள்ளிக்கிழமை துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பணிகளை விரைவுபடுத்த - நகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரரை எந்த நிர்பந்தமும் செய்ததாக தெரியவில்லை. விரைவாக அளவு கருவி நிறுவப்படுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும், முறையில்லாத இணைப்புகள் பல வழங்கப்பட்டு வருவதும் - நகரின் குடிநீர் விநியோகத்தில் பெரும் அளவில் முறைக்கேடு நடந்து வருவதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:00 am / 13.02.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நகராட்சியில் தோண்ட தோண்ட பூதம் கிளம்புகிறது.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [13 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33157

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு (அரசு அதிகாரிகள்) கொண்டாட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் - குடிநீர் கட்டணத்தை நகராட்சி உயர்த்தியதை தொடர்ந்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை குடிநீர் கட்டணம் செலுத்தவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவித்தது. அதனை தொடர்ந்து குடிநீர் கட்டணம் செலுத்தாத பலரின் பாக்கி சுமார் 50 லட்சம் ரூபாய் உள்ளது). (C&P)

ஐக்கிய பேரவை அப்போது அறிவித்ததன் அடிப்படையில் தான் குடிநீர் வரிவை குறைத்தார்கள். அந்த நடவடிக்கை எடுத்த ஐக்கிய பேரவையை பாராட்டுவோம். குடிநீர் வரியை குறித்த பின்னரும் வரியை கட்டவேண்டாம் என்று சொல்லவில்லையே. வீட்டு தீர்வையை வசூலிக்கும் நகராட்சி அதிகாரிகள், இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பது ஏன்?

எங்கள் வீட்டுக்கு (குத்துக்கல் தெரு) நகராட்சி குடிநீர் வந்து 5 வருடங்கள் ஆகிறது. 3 மாதங்களுக்கு முன்பு தோண்டி சரிபார்த்தனர். தண்ணீர் விட்ட முதல் 5 நிமிடங்களுக்கு மட்டுமே அடி பைப்பில் தண்ணீர் வருகிறது (எங்கள் வீட்டில் மோட்டார் போட்டு உறியவில்லை) அதன் பின் எந்த ........களோ மோட்டார் போட்டு உறிவதனால் தண்ணீர் வருவதில்லை. இந்த மாதிரி மோட்டார் போட்டு குடிநீரை உறிந்து, அதில் குளிக்கும் ஜென்மங்களை என்ன சொல்வது?

'பொதுமக்களில் ஒருவர், தான் 2007 ம் ஆண்டிலேயே சுமார் 10,000 ரூபாய் கட்டி இணைப்பு பெற்றதாகவும், ஆனால் தனக்கு இதுவரை ரசீது வழங்கப்படவில்லைஅவ்விடத்தில் இருந்த - நிரந்தர ஊழியர் ஒருவரையும், ஒப்பந்தப்பணியாளர் ஒருவரையும் - பொது மக்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். அந்த பணியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் விசாரித்ததில் - சில காரணங்களுக்காக கணினியில் பதிவேற்றம் செய்யமுடியவில்லை என்றும், விரைவில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். (C&P)

கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேப்பையில் நெய் வடிகிறது என்பானாம். அதே போல் இருக்கிறது, இந்த ஊழியர் சொல்வது. 2007-ம் ஆண்டு கட்டிய தொகைக்கு, 7 வருடங்கள் கடந்த பின்னருமா கணினியில் பதிவேற்றம் பண்ணமுடியவில்லை? இந்த 7 ஆண்டுகளாக, அந்த ரூ.10,000 வை அந்த ஊழியர் என்னசெய்தார்? இதே மாதிரி எத்தனையோ? ஊரின் நன்மைக்கு யார் செய்தாலும் வரவேற்போம்.

ஊரின் அனைத்து பகுதிக்கும் திடீர் ஆய்வுக்கு (surprise checking) சென்று அங்கு இருக்கும் முறைகேடுகளையும் கண்டுபிடித்து, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். ஊராரின் (மோசடி செய்தவர்களை தவிர) ஆதரவு உங்களுக்கு இருக்கும்

அடுத்தது, குடிநீரின் அளவினை கணிக்கிட அளவு கருவி பொறுத்த டெண்டர் எடுத்த நிறுவனத்தினர் அளித்த பதில், யாரோ சொல்லி தாமதம் செய்வது போல் இருக்கிறது. வருஷத்தில், தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், தமிழ் வருட பிறப்பு என்று வந்து கொண்டு தான் இருக்கும்.

அவர்கள் இந்த மாதத்துக்குள் சப்ளை செய்து பொருத்துகிறார்களா? என்று பார்போம். அப்போது தான் ஆத்தூரில் இருந்து, நமதூருக்கு விடப்படும் தண்ணீர் எங்கு திருடப்படுகிறது? என்று தெரியும். இதற்கும் நல்ல விடிவு காலம் வரும் என்று காத்திருப்போம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.

[Administrator: Comment edited; கோரிக்கை வைக்கப்பட்டது. கட்டணம் குறைக்கப்படவில்லை. பார்க்கவும் செய்தி: http://kayalpatnam.com/shownews.asp?id=1607]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.W.Hamid Rifai (Jeddah) [13 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33159

காயல்பட்டினத்தில் 25 ரூபாய் என்று இருந்த குடிநீர் கட்டணம் 50 ரூபாயாக மாற்றப்பட்டது. அதனை மீண்டும் 25 ரூபாயாகக் குறைக்க ஐக்கியப் பேரவை முயற்சி மேற்கொண்டது. அது பலனளிக்காமல் போகவே, யாரும் குடிநீர் கட்டணம் கட்ட வேண்டாம் என அப்போது பேரவையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

காலம் கடந்துகொண்டே சென்றது. கட்டணமோ குறைந்த பாடில்லை. இந்நிலையில், ஐக்கியப் பேரவையின் அறிவிப்பை ஏற்று குடிநீர் கட்டணம் கட்டாத மக்களுக்கு அவர்களின் குடிநீர் கட்டணமான 50 ரூபாயுடன், 5 ரூபாய் அபராதமும் சேர்ந்து, கட்ட வேண்டிய தொகையின் அளவு மாதம் மாதம் கூடியது.

கட்டணம் கட்ட வேண்டாம் என அறிவிப்பு விட்ட ஐக்கியப் பேரவையிடமிருந்து மறு அறிவிப்பு பெறப்படாத நிலையில், குடிநீர் கட்டணம் கட்டாதோர் பேரவை நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேட்டனர். “எவ்வளவோ கோரிக்கை வைத்தாயிற்று! ஆனால் கட்டணத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை” என்று பதில் கிடைத்தது. “உங்களது அறிவிப்பை ஏற்று இதுவரை பணம் கட்டாதோர் அதிகளவு தொகை செலுத்த வேண்டியுள்ளதே?” என்று கேட்கப்பட்டதற்கு, “வேறு வழியில்லை. கட்டி விடுங்கள்” என்று வாய்மொழியாகக் கூறி விட்டனர்.

இதனால், இன்றளவும் குடிநீர் கட்டணம் பல ஆயிரம் பாக்கி உள்ளவர்கள் ஏராளம் என்பதை நானறிவேன்.

அப்துர்ரஸ்ஸாக் லுக்மான் காக்கா அவர்களுக்கு இத்தகவல் கிடைக்காமலிருந்திருக்கலாம். குடிநீர் கட்டணத்தைக் குறைக்க ஐக்கியப் பேரவை முயற்சி மேற்கொண்டது; ஆனால் அது குறைக்கப்படவில்லை என்பதே உண்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [13 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33164

அஸ்ஸலாமு அழைக்கும் ,

குடிநீர் இணைப்புக்கு பதிவு செய்தவர்கள் தனக்கு முன் எத்தனை காத்திருப்பு பதிவுகள் உள்ளன என்பதையும் தன் காத்திருப்பு எண் என்ன என்பதை எழுது மூலம் நகராசி அதிகாரிகளிடம் வாங்க வேண்டும் .

நம் மக்கள்தான் இத்தகைய மோசமான நிலைக்கு முக்கிய காரணம்.

நகராசி குடிநீரை மின் மோடார் போடு உரியும் ஈன பிறவிகள், அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் என்ன சமந்தம் என்று எனக்கு புரியவில்லை ஒரு வேலை தாம் யார் என்பது உரிபவகளுக்கு தெரியும் அல்லது இறைவனுகுதான் தெரியும் . இது போன்ற காரியங்களில் ஈடுபடாமல் கடைசிவரை இருக்க நாயனின் கிருபை நமக்கு என்றும் வேண்டும் .

வரும் நாடாளுமன்ற தேர்தல், இந்த சமுதாயம் ஹிக்மதாக இருந்து ஒற்றுமையாக செயல்படுமா .

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புடிச்ச மீனும் போய் பொட்டி மீனும் போன கதையாகிப்போச்சே...!
posted by M.N.L.MOHAMED RAFEEQ. (SINGAPORE.) [13 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33165

இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள இணைப்பு உள்ளவர்களில் வருடக்கணக்கில் தண்ணீர் வரி கட்டாத குடிநீர் இணைப்புகளுக்கு இப்போது இந்த செய்தி இடியாக விழுந்திருக்கின்றது.

ஆத்தூரிலிருந்து வரும் குடிநீரை திருடுவது ஒருபுறமிருந்தாலும், உள்ளூரிலேயே மோட்டார் வைத்து பிறரது ஹக்கை களவாடும் பல ஜாம்பவான்கள் பரவலாக இருப்பது நகராட்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்திருந்தும் அதை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை! வெறும் கண் துடைப்பிற்காக ஆங்காங்கே ஓரிரு மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் விஷயத்தில் என்னமோ ஏதோ எங்கேயோ சில முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பது உறுதி! பகிர்மான முறையில் பரிவர்த்தனமான மோசடி நடந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved