Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:40:57 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12685
#KOTW12685
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 2, 2014
காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி, ஒளிபடிப்பொறி இயந்திரங்கள் வழங்கப்படும்! சிறந்த நூலகருக்கான பாராட்டு விழாவில் மாவட்ட நூலக அதிகாரி அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4182 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி இயந்திரங்கள் மற்றும் ஒளிபடிப்பொறி (ஜெராக்ஸ் இயந்திரம்) ஆகியன வழங்கப்படும் என, சிறந்த நூலகருக்கான பாராட்டு விழாவில், தூத்துக்குடி மாவட்ட அரசு நூலக அதிகாரி அறிவித்துள்ளார். விபரம் வருமாறு:- தமிழக அரசின் நன்னூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீபுக்கு பாராட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 16.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் விழாவிற்குத் தலைமை தாங்கினார். அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், வரலாற்று ஆய்வாளர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், நூலாசிரியர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், விஸ்டம் பப்ளிக் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஐக்கியப் பேரவை நிர்வாகி ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ‘கவிமகன்’ காதர் விழா அறிமுகவுரையாற்றினார்.

இவ்விழாவில், பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் எஸ்.இருதயராஜ், ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, வாசிப்பின் அவசியம், உலகில் அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து உரையாற்றினர்.



தூத்துக்குடி மாவட்ட நூலகத்துறை அதிகாரி கே.மந்திரம் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



அதிக புரவலர்களைக் கொண்டுள்ள காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி இயந்திரங்கள் இரண்டும், ஒளிபடிப்பொறி (ஜெராக்ஸ் இயந்திரம்) ஒன்றும் நூலகத்துறை சார்பில் வழங்கப்படும் என அவர் தனதுரையில் அறிவித்தார்.

தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீபுக்கு, பாராட்டுக் கேடயம், சான்றிதழ் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணமுடிப்பு ஆகியவற்றை, மாவட்ட நூலக அதிகாரி கே.மந்திரம், சிறப்பு அழைப்பாளர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோரிணைந்து வழங்கினர்.





பல்வேறு அமைப்புகளின் சார்பில் - சிறந்த நூலகருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.



இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்., கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர் ஊக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பழைப்பாளர்களுக்கும், சிறப்பு விருந்தினருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.







முன்னதாக, இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாஜி ஏ.லுக்மான், ஹிஜாஸ் மைந்தன் என்ற எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஏ.ஆர்.இர்ஃபான் நன்றி கூறினார்.





ரூபாய் பத்தாயிரம் பணப்பரிசை உள்ளடக்கிய கட்டுரைப் போட்டிக்கான அறிவிப்பு விழா நிறைவில் வெளியிடப்பட்டது.

துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மைய (KCGC) செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அபூதபீ காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.சி.ஹமீத், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத் உட்பட பலர் கலந்துகொண்டனர். தனியார் நிறுவனமும், உள்ளூர் இணையதளமும் இவ்விழாவை இணைந்து நடத்தின.







கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சில சந்தேகங்கள்....
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32254

நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

முஜீப் அவர்களை மாவட்ட ஆட்சி தலைவர் அழைத்து சில நூறு ரூபாய் பெறுமதியான சால்வை அணிவித்து கௌவ்ரவிதபோது நமதூர் இணையத்தளம் ஒன்றில் என் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தேன்.

100 பேரை உறுப்பினர்களாக ஆக்கி 14 லட்ச ரூபாய்கள் வசூல் செய்து கொடுத்து தன்னை "எதையும் மாற்றும் திறனாளியாக" அடையாளம் காட்டிய முஜீபுக்கு இதுதானா கௌவ்ரவம், 10 ஆயிரம் ரூபாயாவது அரசு கொடுத்திருக்க வேண்டாமா? இன்னும் அந்த கேள்விக்கு விடை இல்லை. அடுத்து அரசு நூலகம் அமைவதற்கு தனிப் பட்ட நபர்கள், காயல்நல மன்றங்கள் வாரி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமா? அரசுதான் இந்த பணியை முழுமையாக ஏற்று, மக்களிடம் வாசிப்பு தாகத்தை, தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

புரட்சி தலைவி அரசு எதற்கெல்லாமோ அள்ளிக் கொடுக்கிறது, சதுரங்க ஆட்டத்துக்கு பத்து பதினைந்து கோடி வாரி வழங்கியதை அண்மையில் பார்த்தேன்.

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல் - ஆலயம் பதினாயிரம் அமைத்தல்- அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்...பாரதியின் கனவை அம்மா நனவாக்க வேண்டும் என நமதூர் மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [02 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32255

தமிழக அரசின் நன்னூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் சகோதரர் அ.முஜீபுக்கு பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சிரித்த முகம், சீரிய பண்பு, சிறப்பாக செயல் புரியனும் என்ற துடிப்பு, சாதிக்கனும் என்ற வேட்கை .. தம்பி முஜீபை பாராட்டுவதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம்.

உன் வாழ்வில் நிம்மதியும், இன்னும் பல பெருமைகளையும் பெற பிராத்திக்கின்றேன்.

இந்த பாராட்டு விழா எடுத்த 'காயல் நியூஸ்' வலைதளத்திற்கும், மற்றும் பங்கு கொண்ட அனைவர்களுக்கும் நன்றிகள் பல.

* மேடை அலங்காரம் அருமை.

* கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் மாமாவிற்கு ஊக்க பரிசு கிடைத்து இருக்கா.! சந்தோசம்...சந்தோசம்...!! அடுத்த தோப்பு டூருக்கு ஸ்பான்சர் கிடைத்து விட்டதே..!!

* எங்கள் நூலகத்திற்கு கணினி, ஒளிபடிப்பொறி இயந்திரங்கள் வழங்கிய அதிகாரிகளுக்கும், அரசுக்கும் கூடுதல் நன்றிகள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. திரு கே.மந்திரம் அவர்களுக்கு நன்றி..! நன்றி...! நன்றி...!
posted by syed ahamed (chennai ) [02 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32256

மிக சிறப்பாக பலர் போற்றும் வகையில் ஏற்பாடு செய்த சிறந்த நூலகருக்கான பாராட்டு விழாவில் காயல்பட்டினம் அரசு நூலகத்திற்கு கணினி இயந்திரங்கள் இரண்டும், ஒளிபடிப்பொறி (ஜெராக்ஸ் இயந்திரம்) ஒன்றும் நூலகத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்த திரு கே.மந்திரம் அவர்களுக்கு நன்றி..! நன்றி...! நன்றி...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாசிப்பறிவு சிந்தனை அமுத சுரபியே ஒரு நூலகமாகும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [02 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32257

மாஷா அல்லாஹ் எவ்வளவு ஆக்கபூர்வமான அறிவிப்பூர்வமான நிகழ்ச்சி! வாசிப்பறிவு சிந்தனை அமுத சுரபியை அடையாளம் காட்டி அதன் சுவையை பருக வைத்து முன்னணி நூலகம் என்ற முத்திரையை பெற்றுதந்த சகோதரர் முஜுபின் பாராட்டுவிழா நமதூரில் நடைபெற்ற்மைகண்டு களிப்புருகிறேன்!

மேடையில் சான்றோரும் பெரியோரும் புடைசூழ அமைந்திருக்கும் இந்த அறிவுப்பூர்வமான நிகழ்ச்சியைக்காண உள்ளூர் மக்கள் உவகை பொங்கிட உறசாகதுடன் அணியணி யாய் திரண்டிருக்கவேண்டும்!

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள்,எம்மை தீண்டுபவர் எவரும் இல்லையா என்று ஏராளாமான இருக்கைகள் ஏளனமாக கேட்கிறது!

நம் மண்ணின் மைந்தனுக்கு மகிமை செலுத்தும் இந்த முத்தான நிகழ்ச்சிக்கு அகம் மகிழ ஆதரவு தெரிவிப்பது தான் நம் மண்ணுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும் !

விளையாட்டு விழா.வேடிக்கை விழா மற்றும் நம்மை நெடிய நாட்களுக்கெல்லாம் வீணாக்கும் கட்சிகள் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஆட்சிமன்ற தலைவர்கள் முதல் ஊர் முக்கியஸ்தர்கள் வரை முண்டியடித்துக் கொண்டு மொய்க்கும் நிலையைத்தான் தற்போது அதிகம்மாக பார்க்க முடிகிறது!

அறிவுபூர்வமான இதுபோன்ற நிகழ்ச்சிக்கு மதிப்புமிகு ஊர் முக்கியமானவர்கள் என்று நாங்கள் கருதும் நீங்கள் போகாமல் இருக்கலாம், ஆனால் அருகாமை ஊரிலுள்ள ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் உங்களின் ஆதரவு தரத்தின் அடையாளத்தை அப்பட்டமாக தெருவிக்க இச்செயல் ஏதுவாகிவிடும் என்பதை மிக வேதனை கருத்தாய் இங்கு விதைக்கிறேன்! .

அல்லது இன்னனவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் தான் நானும் கலந்துகொள்வேன் என்று இனம் பிரித்து பார்த்து பின்னேர் செல்லும் ஒரு சில குறுகிய சிந்தனையில் சுழல்பவர்களின் வழியை நிறையபேர்கள் நாட ஆரம்பித்து விட்டார்களா?

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...வாழ்த்துக்கள் , பாராட்டுகள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [02 January 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32258

தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற காயல்பட்டினம் அரசு நூலகர் அ.முஜீபுக்கு, பாராட்டுக் கேடயம், சான்றிதழ் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணமுடிப்பு வழங்கி அவரை பாராட்டி சிறப்பித்த அனைவர்களுக்கும் நன்றிகள் & பாராடுக்கள். இவர்களை போல உள்ள நல்ல திறமைசாலிகளை நாம் ஊக்குவிப்பது நமது கடமை .

மேலும், இவ்விழாவில், ஊக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்ட காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்., மற்றும் எனது இனிய நண்பர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோர்களுக்கு எனது மன நிறைவான பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

அவர்களின் எழுத்து பனி தொய்வின்றி இன்னும் சிறந்து தொடர எனது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்...
posted by M. Sajith (DUBAI) [04 January 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32269

வாசிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரிப்பதைக்கண்டு மணம் பூரிப்ப்டைகிறது...

வாசித்து அறிந்தவைகளை தொகுப்பாக எழுதுவது, அதில் தனது பார்வையை (Perspective) உணர்ந்தவைகளை உள்ளக்கி தமக்கென ஒரு நடையை உருவாக்கிக் கொண்ட ஷுஐபு காக்காவை நிகழ்வுக்கு தலைமை ஏற்கச் செயதது மிகவும் பொருத்தமான செயல்.

ஒரு சமுதாயம் விட்டுச்செல்லும் 'தடையம்' எழுத்து என்றால் அது மிகையில்லை...

வாசிப்பின் ஆர்வம் தூண்டுதல் முதல் படி என்றால் அதன் சாரம்சங்களையும் தங்களின் சுய சிந்தனைகளையும் எழுதுவது என்பது அடுத்த நிலை.

நகரின் இனைய தளங்கள் இதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது என்பதை நன்றியுடன் நினைவுகூரும் அதே வேளையில், அதையும் தாண்டிய நிரந்திர வடிவமாக, புத்தகங்களாக அவற்றை வெளியிடவும் வகைகளும் ஏற்பாடுகளும் செய்தல் வேண்டும்.

இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளுடன், எழுத்தார்வம் ஊட்டும் நிகழ்வுகளையும், இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை முறையான பதிப்பு வடிவம்தரும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன், இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட நன்பர் முஜாஹித் மற்றும் குழுவினர், இதற்கான ஸ்பான்சர் ஏற்பாடுகளை செய்த கவிமகனாருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

****************************************************

சகோ. எஸ்கே சாலிஹ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்., இப்படி பிடிவாதமாக எல்லாவற்றையும் 'தொல்காப்பியத் தமிழில்' மொழியாக்கம் செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலையை நமக்கும் நாமே ஏன் விதியாக்க வேண்டும்?

போட்டோ காப்பியரை அப்படியே எழுதியிருக்கலாம் அல்லது 'நகல் இயந்திரம்' என எளிமையாக தமிழாக்கம் செய்திருக்கலாம்...

அடைப்புக்குறியில் போட்டிருக்கும் ஜிராக்ஸ் என்பது அதை கண்டுபிடித்த நிறுவனத்தின் பெயர், பழக்கத்தில் அப்படி ஆகிவிட்டது ஆங்கிலத்திலும் அதன் பெயர் 'Photo Copier' தான்.

Moderator: துவக்கமாக ‘நகல் இயந்திரம்’ அல்லது ‘நகல் பொறி’ என்றுதான் யோசிக்கப்பட்டது. ஆனால், யாம் கருதிய / தாங்கள் கூறியுள்ள படி அதுவும் தமிழல்ல! ‘நகல்’ என்பது அரபி மொழியிலிருந்து மருவிய சொல். ஆகவே, 'photo copier' என்ற சொல்லுக்கு இணையான ‘ஒளிபடப்பொறி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by PSA,Seyed Ahamed (HONG KONG) [04 January 2014]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 32273

விழா நாயகரை கடைசி நாற்காலிக்கு தள்ளிவிட்டு மற்றவர்கள் நடுவில் அமர்திருப்பது என்ன நியாயமோ? விழா ஏற்பாட்டார்கள் அதை சரியாக செய்திருக்க வேண்டாமோ? மன அழுத்தத்துடன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M. Sajith (DUBAI) [05 January 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32280

எஸ்.கே. ஸாலிஹ், எதற்கு இந்த தூய தமிழ் பிடிவாதம் என்பதுதான் புரியவில்லை ? தமிழ் ஆர்வம் என்பதையும் தாண்டிய வெறியாகிவிடாமல் இருந்தால் சரி.

டாக்டர் ஜெ.ராஜா முகமது அவர்களின் ஆய்வுப்படி சுமார் 1500 அரபுச் சொற்கள் தமிழ் மொழியில் அவை அரபுச் சொற்கள் என அடையாளம் காண முடியாத அளவுக்கு தமிழ்மயமாகி உள்ளதாம்

அசல், அத்தர், அண்டா, அல்வா, அமினா,அனாமத்து, அக்கப்போர், ஆசாரி, இனாம், இலாகா, ஊதுபத்தி, கசாப்பு,கஜானா, கிராக்கி, கெடுபிடி, குமாஸ்தா, கைதி, குத்தகை, சர்க்கார், சர்பத், தரகர், தராசு, நகல், பட்டுவாடா, பந்தோபஸ்து, மசோதா, மராமத்து,மாஜி, முகாம், மிட்டாய், ரத்து, ரஸ்தா, ராஜினாமா, வக்கீல், வக்காலத்து,வாபஸ், வாய்தா, ஜாமீன்,ஜில்லா, ஜமீன், மைதானம் என உதாரணங்களின் பட்டியல் வளர்ந்து கொண்டு போகிறது., இதில் எத்தனை சொற்களை தவர்க்க இயலும்..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. கற்க கசடற...
posted by Mauroof (Dubai) [05 January 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32283

"Clikon & காயல் நியூஸ் குழுமம்" இணைந்து நடத்திய இந்த அருமையான நிகழ்வு அறிந்து உள்ளம் உவகை அடைகிறது.

பாராட்டு விழா நாயகன் அன்பர் அ. முஜீபு, ஊக்கப்பரிசு மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட சான்றோர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

"ஒளிபடிப்பொறி", ஆஹா! என்னே ஒரு அழகுத் தமிழ் வார்த்தை!. ஆனால் இது குறித்த உசாத்துணைகளை இணையத்தில் நேரம் கிடைத்த அளவிற்கு தேடினேன், அகப்படவில்லை. எப்படியோ இன்று ஒரு தமிழ் சொல் என்பது போன்று இங்கு கற்றுக் கொண்டேன். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved