Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:01:25 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12695
#KOTW12695
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 3, 2014
ஒரு வழிப்பாதையில் சாலைப்பணிகளுக்கு நீதிமன்றம் தற்காலிக தடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் ஒரு வழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை வழியில், புதிய சாலை அமைப்பதற்காக, பழைய சாலையைத் தோண்டும் பணி அண்மையில் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது.









இப்புதிய சாலைப் பணிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலத் தடை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த டி.செய்யித் அஹ்மத் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு (வழக்கு எண் WP 20879 / 2013), இம்மாதம் 02ஆம் தேதி வியாழக்கிழமையன்று, நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை தாக்கல் செய்திருந்த செய்யித் அஹ்மத், தற்போது இரண்டாம் குடிநீர் திட்டப்பணிகள் காயல்பட்டினத்தில் நடைபெற்று வருவதாகவும், இவ்வேளையில் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலைப்பணிகள் நடைபெறுவதாகவும், இவ்வாறு புது சாலை போடப்பட்ட பின்பு - குடிநீர் குழாய்களைப் பதிக்க மீண்டும் சாலையைத் தோண்ட வேண்டியிருக்கும் என்றும், இதனால் மக்களின் வரிப்பணம் வீண் விரயம் அடையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், புதிய சாலை அமைப்புப் பணிக்கு இடைக்காலத் தடைவிதித்து, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி, இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர், நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோரைக் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கூடுதல் அசெளகரியம்
posted by Mauroof (Dubai) [04 January 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32266

தடைக்கோரியதற்கான காரணம் மிகச் சரியே. ஆயினும் இந்த சாலை தோண்டப்படுவதற்கு முன்னர் இத்தடைக்கோரிய மனு சமர்பிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். தாமதம் எங்கு இருந்திருப்பினும் இப்பகுதி மக்களுக்கு கூடுதல் அசௌகரியமே.

நகர்மன்றத்தின் பல கூட்டங்களில் பல்வேறு சாலைப்பணிகளை, குறிப்பாக இந்த ஒரு வழிப்பாதை சாலை அமைக்கும் பணியை இரண்டாம் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதியும் வேலைகள் முடிந்த பின்னர் மேற்கொண்டால் போடப்படும் சாலைகள் சேதப்படுத்தப்படாமல் பாதுகாக்கலாம் என நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் ஆலோசனை கூறினார்கள். குறிப்பாக உறுப்பினர் சகோ. சுகு அதை அதிகம் வலியுறுத்தியது ஞியாபகம். சென்ற மாதக் கூட்டத்தில் கூட இது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து ஒரு உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருந்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவிர்க்கப்பட்டிருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கிணறு வெட்ட பூதம் வெளியான கதை
posted by mackie noohuthambi (kayalpatnam) [04 January 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32268

என்ன நகர்மன்றம், என்ன நீதி மன்றம், என்ன பொது நல வழக்கு.. நீதி மன்ற தீர்ப்பு எப்போது வரும், தோண்டப்பட்ட இடங்கள் எப்போது மூடப்படும், தண்ணீர் குழாய் எப்போது பதிக்கப்படும், நகரமன்ற ஆயுள்காலம் எப்போது முடியும். மக்கள் நிம்மதி எப்போது சாத்தியமாகும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்,,,,மக்கள் பணம் இப்போது மட்டும் வீணாகாதா..

ALL SELFISHNESS, NO POSITIVE THINKING!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எங்கு தவறு?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [04 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32270

மனுதாரரின் முறையீடு சரியானதே, ஆனால் இரண்டாம் பைப் திட்ட பணிகள் எப்போது இப்பகுதிக்கு வரும் என்ற தகவல் தெரிந்து அது காலதாமதம் ஆகும் என்று தெரிந்திருந்தால், இம்முறையீட்டை தவித்திருக்கலாம். அல்லது வார்டு மெம்பரிடமாவது கேட்டிருக்கலாம். இரண்டுமுறை தோண்டுதல், அதிக செலவு போன்ற சிரமங்களை மனசாட்சியோடும் பொதுநல எண்ணத்தோடு தவிர்க்கவேண்டும் என்று நினைக்கும் தாங்களுக்கு இந்த ஒருவழிபாதையின் முக்கியத்வத்தையும் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்!

தாங்கள் நகராட்சிமன்றத்திடமும், வார்டுமெம்பரிடமும் கேட்டபின்னரும் உங்களுக்கு ஒழுங்க்கான தகவல் ஒருவரும் தராமல் உதாசீன எண்ணத்தோடு நடந்திருப்பார்களேயானால் அது முழுதவறேயாகும், தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான்.இத் தவறுகளுக்கு நகராட்சியும் அந்த வார்டு மெம்பரும் முழு பொருப்பாளியாகிறார்கள்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...புரியாத புதிர்?
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [04 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32272

மனுவான் இடைக்கால தடை வாங்கி இருப்பது பாராட்டப்பட வேண்டியது என்றாலும், வேறு கோணத்தில் சிந்திப்போமானால்,,,? மனுதாரர், தன் தெருவுக்கு வரும் வாகனங்களால், இன்னும் கொஞ்ச காலமாவது தன் பகுதி மக்களை கோர விபத்தின் பயத்தில் நின்று காக்கு முகமாக மிக சாதுர்யமாக போடப்பட்ட வழக்காகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் ரோடு தோண்டப்படும் முன்பே போடப்பட வேண்டிய வழக்கு இப்ப போடப்பட்டுள்ளது நமக்குள் புரியாத புதிராகவே உள்ளது!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by தேக் (kayalpattinam) [04 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32274

இரண்டு மாதத்திற்கு முன் நகர்மன்றத்தை அணுகி இரண்டாவது குடிநீர்திட்டத்தின் அடிப்படையில் குடிநீர்க் குழாய்கள் தெருவில் பதிக்கப்பட்ட பிறகே, சாலையமைக்கும் பணி துடங்கினால் மக்கள் ஒருதாவை அவதிபடுவார்கள் மக்கள் பணம் விரயம் ஆகாது என்ற தகவலை எடுத்து சொல்லியும் நகரமன்ற செவி சாய்க்கவில்லை எப்படி சாய்ப்பார்கள்

( சகோ. சுகு அதை அதிகம் வலியுறுத்தியது ஞியாபகம். சென்ற மாதக் கூட்டத்தில் கூட இது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து ஒரு உறுதியான முடிவு எடுக்கப்பட்டிருந்தால்) COPY உறுப்பினர்கள் கேட்டாலே மறுத்தவர்கள் மக்கள் சொன்னால் கேட்ப்பார்களா ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இந்த சிரமும் அனைவருக்கும் பொறுந்தும்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [04 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32276

ஒரு வழி பாதை அமைய மாவட்ட ஆட்சியரின் உத்தரவு வந்த உடனேயே அங்குள்ள தெருவாசிகள் பல எதிர்ப்புக்கள் - ஆர்ப்பாட்டம் என பல எதிர்ப்புக்கள் அன்று நடந்த வந்தன..!

இன்று இதற்கு சிரமமும் - செலவுகளும் ஏற்படுத்தும் வகையில் பொது நல வழக்கு என்ற பெயரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது..! எதிர்ப்புக்கு வேறு காரணம் அமையாமல் குடிநீர் குழாய் புதைப்பை கையில் எடுத்துள்ளார்கள்..1

நகராட்சியும் இதை முன்னரே உணர்ந்து இருக்க வேண்டும்..! மக்கள் வரிப்பணம் மீது அக்கறை கொள்ளவில்லை என்ன்பதே விளங்குகிறது..

நகரில் வழமையாக எப்போதும் சாலைகளை அமைக்க ஒரு ஒப்பந்தக்காரர்தான் நகரில் கால் பதித்து வந்தார்.. அவரை முறியடிக்கும் வகையில் இந்த புதிய ஒப்பந்தக்காரர் இந்த சாலையை ஒப்பந்தபுள்ளி மூலம் நமது நகராட்சியில் எடுத்தார்.. இது பழைய ஒப்பந்தகாரருக்கு பிடிக்கவில்லையோ என்னமோ...! அவரின் பின்னணியில் சிலருக்கு சந்தேகம் உள்ளது..

ஆக மொத்தத்தில் மக்களுக்கு இந்த தடை மிக பெரிய சிரமமும் - மக்கள் வரி பணம் விரயமும் ஏற்படுகிறது.

நகர்மன்ற ஆணையரும் - நகர்மன்ற தலைவரும் - இந்த 11 - 13 வது வார்டின் உறுப்பினர்கள் இருவரும் விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்...

சகோதரர் மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களே...!

நகர்மன்ற ஆயுள்காலம் நாளை காலையிலோ - மறுநாள் காலையிலோ முடிவு பெற்றால் எல்லாம் சரியாகி விடுமா...! அதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டுவிடுவார்களா..! ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் இன்று நேற்று அல்ல... 1950 காலக்கட்டத்திலேயே தொடர்கிறது..

ALL SELFISHNESS, NO POSITIVE THINKING!

நகரில் ஒரு மாற்றம் விரைவில் வரும்... இன்ஷா அல்லாஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by syed ahamed (chennai ) [05 January 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 32281

காலம் கடந்த வழக்கு / சாலை பணி ஆரம்பிக்கும் முன் இவ்வழக்கு நீதி மன்றம் சென்றிக்க வேண்டும்..

இந்த பொது நல வழக்கின் நோக்கம் இது பொது மக்கள் வரி பணம் மீது அக்கறை கொண்டதாக தெரியவில்லை. இது தனது சுயநல ஆதங்கத்தை வெளிபடுத்துவதாக தெரிகிறது.

மக்கள் திரண்டால் இந்த பொது நல வழக்கு பிசுபிசுத்து போய்விடும். மாவட்ட ஆட்சியரும், நகர்மன்ற தலைவரும், நகர்மன்ற கமிஷனர் மூவரும் அரசு தரப்பில் அரசு வக்கீலின் குடையில் அரசு திட்டமான வேலைக்கு ஆதரவாக தனது கருத்தை தற்போதுள்ள போக்குவரத்து நெருக்கடி சூழலை எடுத்து நீதிபதி முன் வாதமாக வைப்பார்கள். இந்த வழக்கு பிசுபிசுத்து போவது நிஜம்.. இதுக்கு மாற்றாக அமையுமானால் மக்கள் கொந்தளித்து இச்சாலை பணியை தொடர செய்ய வேண்டி பொது மக்கள் சாலை மறியல் செய்ய தயங்க மாட்டார்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வரும் ஆனா வராது....
posted by HASBULLAH MACKIE (துபாய் ) [05 January 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32282

உறுப்பினர் சுகு முன்னறிவிப்பு கொண்டு வந்த பிறகும் இதை கவனத்தில் எடுத்து கொள்ளாமல் தெருக்களை மீண்டும் எடராக்குவது... குடிநீர் குழாய் வேலைகள் நடை பெற்று முடிவதற்கு முன்னே புதிய சாலைகள் பனி தொடங்குவதற்கு ஏன் கால தாமதம் என்று ஏகப்பட்ட கேள்விகள் நகராட்சியில் நடந்தது.. சரி அது முடிவுக்கு வந்து நடை முறை படுத்தும் போது வேறொரு சிக்கல்.. இது அந்த வார்ட் உறுப்பினர்க்கும் தெரியாதா? அல்லது தலைவிக்கோ ஆணையருக்கோ தெரியாதா? ஆனால் இந்த வழக்கு போட்ட மகானுக்கு ரோடை தோண்ட போவது தெரியாதா? அல்லது போட்ட வழக்கு சரியான சமயத்தில் போடப் பட்டது தானா? என பல கேள்விகள் எழுகின்றன. அப்படியே இந்த தெரு போடப்பட்டு இருந்திருந்தால் இரண்டாம் நீர் குழாய் பதிப்பிற்கு அந்த தெரு முழுவதும் தோண்டுவார்களா? இந்த விஷயத்தில் நடந்தது என்ன? என்ற உண்மை நிலவரம் வெளி வர வேண்டும். மக்கள் பணம் இவ்வாறாக வீணடிக்கப் படுகிறதே?

இதெற்கெல்லாம் சம்பந்தப்பட்ட நபர்கள் இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்? இதன மூலம் படிக்கும் பாடம், இனி ஏதாவது புதிய தெருக்கள் போடவிருந்தால் அந்தந்த பகுதியில் ஏதேனும் வேலைகள் முடிவு பெறாமல் இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு செய்து கொண்டால் இதை போன்ற வீனடிப்புகள் தவிர்க்கப்படலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [05 January 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 32288

மனுதாரர் எப்போது வழக்கு தொடர்ந்திருப்பார்.வழமைபோன்று தாமதமாக இப்போதுதான் அதற்கு தடை ஆணை கிடைத்திருக்கும்.

பிரச்சனைக்குரிய இந்த பகுதியில் புதிய குடிநீர் குழாய்களை முன்னுரிமை அடிப்படையில் முதலில் பதித்துவிட்டு, சாலை பணிகளுக்கு வழிவிடலாமே !!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved