Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:48:11 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11949
#KOTW11949
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 30, 2013
அஜ்மீர் முறையில் ‘கலப்படக்’ களறி(?!)யுடன் சிங்கை கா.ந.மன்றம் சார்பில் குடும்ப சங்கம திருவிழா! உறுப்பினர்கள் குடும்பத்துடன் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3523 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

‘கலப்படக்’ களறி(?!)யுடன் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-

பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம்:

இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், சிங்கை ALOHA CHANGI SEA FRONT CHALET A பூங்காவில், இம்மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 14.30 மணிக்குத் துவங்கி, இரவு 21.15 மணி வரை நடைபெற்றது.

புறப்பாடு:

மதியம் 15.00 மணியளவில், மன்ற உறுப்பினர்கள் Beach Road நிறுத்தத்திலிருந்தும், 15.30 மணியளவில் Bedok North Avenue 4 நிறுத்தத்திலிருந்தும் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை 16.00 மணிக்கு அனைவரும் நிகழ்விடம் வந்தடைந்தனர்.





அஸ்ர் தொழுகை:

மாலை 16.35 மணிக்கு, சிங்கை அப்துல் கஃபூர் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலீ அஸ்ர் தொழுகையை வழிநடத்த, உறுப்பினர்களனைவரும் ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.



தேனீர் & சிற்றுண்டி:

மாலை 16.45 மணிக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி அனைவருக்கும் பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்தாலோசனையில் உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்க, மறுபுறம் கடலோரத்தில் அமர்ந்தவர்களாக - மகளிர் தமக்கேயுரிய ‘பாரம்பரிய’ அரட்டையில் ஈடுபட்டனர்.



மாலை 18.15 மணிக்கு, மகளிருக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் விடையளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மஃரிப் தொழுகை:

இரவு 19.10 மணிக்கு மஃரிப் தொழுகையை, சிங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்காஸிம் வழிநடத்த, உறுப்பினர்கள் அனைவரும் ஜமாஅத்துடன் நிறைவேற்றினர்.



பொதுக்குழுக் கூட்டம்:

இரவு 19.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. கூட்ட நிகழ்வுகள்வருமாறு:-

ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.

வரவேற்புரை:

நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களை மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.



மன்றச் செயல்பாடுகள் குறித்த - மன்ற உறுப்பினர்களின் பலதரப்பட்ட கருத்துக்களையும், பின்னூட்டங்களையும் கேட்டறிந்த அவர், அவற்றுக்கான விளக்கங்களையளித்ததோடு, மன்றத்தின் நகர்நலப் பணிகளை மெருகூட்டுவதற்கு இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் எப்போதும் அவசியம் என்று கூறினார்.

நடப்பு கூட்டத்தைத் தொடர்ந்து மகளிருக்காக நடைபெறவிருக்கும் வினாடி-வினா போட்டி குறித்து பேசிய அவர், மன்ற நடவடிக்கைகளில் மகளிரின் பங்கேற்பு மிகவும் அவசியம் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளின் மூலம் அவர்களும் மன்றத்தின் செயல்பாடுகளை விபரமாக அறிந்துகொள்ளவியலும் என்றும் கூறினார்.

அண்மைக் காலங்களில் மன்றத்தின் இளம் உறுப்பினர்களின் பங்களிப்பு உற்சாகமூட்டும் வகையில் உள்ளதாக அவர் பாராட்டினார்.

வழமைக்கு மாற்றமாக, நடப்பு குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கு சமையல் ஏற்பாடுகள் எதுவும் தனியாக செய்யப்படாமல், அவரவர் இல்லங்களிலிருந்து ஆயத்தம் செய்து கொண்டு வர சொல்லப்பட்டுள்ளது என்றும், அவையனைத்தையும் கலந்து, ‘கலப்படக் களறி’ உணவு அனைவருக்கும் பரிமாறப்படவுள்ளது என்றும் கூறினார்.

தலைமையுரை:

அடுத்து, இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத்தின் துணைத்தலைவர் டாக்டர் எம்.என்.முஹம்மத் லெப்பை உரையாற்றினார். பின்வருமாறு மூன்று அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது:-

(1) ஒற்றுமை:

மன்ற அங்கத்தினருக்கிடையிலான ஒற்றுமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தின் அனைத்துப் பணிகளிலும் – பொறுப்பாளர்கள் செய்வார்கள் என்று இருந்து விடாமல், அனைத்துறுப்பினர்களும் சம அளவில் பங்கெடுக்க முன்வந்தால், இன்னும் அதிகளவில் மன்றப் பணிகள் மெருகேறும் என்று கூறினார்.

(2) வெற்றி தரும் திட்டமிடல்:

சிங்கை காயல் நல மன்றம் (KWAS) துவங்கப்பட்டது முதல், முறையான திட்டமிடல் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், அதன் அனைத்து செயல்திட்டங்களும் இறையருளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் மன்றம் - தேவையுடைய மக்களுக்கு இயன்றதைச் செய்வதில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்றும் கூறினார்.

(3) மகளிர் பங்களிப்பு:

மன்றத்தின் செயல்பாடுகளில் கூடுதல் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் பொருட்டு, மகளிரின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு, அவர்களின் நல்ல பல ஆலோசனைகள் மன்றத்திற்கு மிக அவசியமாகத் தேவைப்படுவதாகவும், அதற்கான வாய்ப்புகளை மன்ற நிர்வாகம் தொடர்ச்சியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், அதன் ஒரு பகுதியாகவே - மகளிருக்கான மாதாந்திர நிகழ்ச்சிகள் மன்றத்தால் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

புதுவரவறிமுகம்:

வேலைவாய்ப்பு தேடி சிங்கப்பூரில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள
(1) சுல்தான் அப்துல் காதிர் (சதுக்கைத் தெரு)
(2) ஸாமு ஷிஹாபுத்தீன் (குறுக்கத் தெரு)
(3) ஹாஃபிழ் அபுல் காஸிம் (ஆஸாத் தெரு)
ஆகிய காயலர்கள் இக்கூட்டத்தில் தம்மைத்தாமே அறிமுகம் செய்து பேசினர்.



தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்காக மன்ற உறுப்பினர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றியும் கூறினர். இக்காயலர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைத்திட உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் வழிகளில் முனைப்புடன் முயற்சி மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மன்ற நிகழ்ச்சிகள் குறித்த தகவலறிக்கை:

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான மன்றத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை, கணினி உதவியுடன் பவர்பாய்ண்ட் முறையில் மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் அனைவருக்கும் விளக்கினார்.

தான் தாயகம் சென்றிருந்தபோது, மன்றத்தால் உதவிகள் பெற்ற பயனாளிகளைச் சந்திக்க வாய்ப்பேற்படுத்திக் கொண்டதாகவும், மன்றத்தின் சார்பில் அளிக்கப்படும் நிதியுதவிகள் தகுதியானவர்களுக்கே சேர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நேரில் கண்டறிய முடிந்ததாகவும் கூறிய அவர், உறுப்பினர்கள் தம் விடுமுறையில் தாயகம் செல்கையில், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுடன் அவ்வப்போது இணைந்து - பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கல் உள்ளிட்ட மன்ற நடவடிக்கைகளில் தம்மை தன்னார்வத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

வரவு - செலவு கணக்கறிக்கை:

மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் பவர் பாய்ண்ட் ஸ்லைட் முறையில் அனைவருக்கும் விளங்கும் வகையில் விவரித்தார்.

துணைக்குழு உறுப்பினர்கள் கருத்துரை:

இதுநாள் வரை மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர்களாகச் சேவையாற்றிய
எம்.எஸ்.செய்யித் லெப்பை
ஜெ.அபுல் காஸிம்
எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர்
எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
ஜெ.எஸ்.தவ்ஹீத்
ஆகியோர், தம் பொறுப்புக் காலத்தில் நடைபெற்ற மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்கள் மூலம் தாம் பெற்ற அனுபவங்களை தமது கருத்துரைகள் மூலம் பகிர்ந்துகொண்டனர்.



>> தெளிவான மற்றும் துள்ளியமான தகவல் தொடர்பு

>> உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அவர்களால் வழங்கப்படும் கூடுதல் அக்கறை >> செயற்குழு உறுப்பினர்களுக்குள் பணிகளைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் மன்ற நடவடிக்கைகளில் நேர்த்தி

>> காயலர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் வளர்ப்புக் கருத்தரங்கத்தை அடிக்கடி நடத்தல்

உள்ளிட்ட - துணைக்குழு உறுப்பினர்கள் வழங்கிய ஆலோசனைகள் மன்ற நிர்வாகத்திற்கு உரமூட்டுவதாய் அமைந்திருந்தன.

புதிய துணைக்குழு உறுப்பினர்கள் தேர்வு:

அக்டோபர் 2013 முதல் ஏப்ரல் 2014 வரையுள்ள பருவத்திற்கு புதிதாகத் துணைக்குழு உறுப்பினர்கள் தேர்வு குறித்து கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

(1) கே.எஸ்.நூருல் அமீன்
(2) எம்.எம்.அப்துல் காதிர்
(3) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்
(4) ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்
(5) எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ
ஆகியோர், தன்னார்வத்துடன் தாமாகவே முன்வந்து, புதிய பருவத்திற்கான துணைக்குழு உறுப்பினர்களாகச் சேவையாற்றிட இசைவு தெரிவித்ததன் அடிப்படையில், அவர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர்.

ஷிஃபா குறித்து அறிமுகம்:

புதிதாகத் துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும் “ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்” குறித்து, மன்ற உறுப்பினர்களை நன்கறியச் செய்திடும் பொருட்டு, அதன் குறிக்கோள்கள், உதவி கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முறைமை, வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கிப் பேசிய மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், ஷிஃபா தொடர்பான உறுப்பினர்களின் நடப்பு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

திருமண அழைப்பு:

சிங்கை காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் மகன் பாளையம் எம்.எச்.முஹம்மத் அப்துல் காதிர், எஸ்.ஏ.முஹம்மத் ஜவாஹிர் மகன் எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர், வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று, தங்களுக்கு நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.



வெற்றி மங்கையர்:

கூட்டம் துவங்குமுன், மாலையில் மகளிருக்கான வினாடி-வினா போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்ற மங்கையர் விபரம்:-

(1) கதீஜா பீவி (கணவர் பெயர்: ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்)
(2) மஃஸூமா (கணவர் பெயர்: எம்.எஸ்.செய்யித் லெப்பை)
(3) எம்.ஏ.ஃபாத்திமா ஸபீனா (கணவர் பெயர்: ஏ.எம்.முஹம்மத் உதுமான்)
(4) ஸஃபீனா (கணவர் பெயர்: சோனா அபூபக்கர் ஸித்தீக்)

ஹஜ் புனிதப் பயணம்:

சிங்கை - மஸ்ஜித் அப்துல் கஃபூர் (டன்லப்) பள்ளியின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ், நடப்பாண்டு தான் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதாகவும், தனக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார். அனைவரும் அவருக்காகப் பிரார்த்தித்ததுடன், ஹஜ்ஜின்போது தமக்காகப் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

கருணையுள்ள அல்லாஹ் அவனது அளவற்ற அருளால் - அவரது ஹஜ் மற்றும் அது சார்ந்த அனைத்து நற்கிரியைகளையும் அங்கீகரித்தருள்வானாக, ஆமீன்.

நிறைவுரை மற்றும் இறைவேண்டல்:

சிங்கை - மஸ்ஜித் ஜாமிஆ சூலியாவின் இமாமும், மன்ற உறுப்பினருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, கூட்டத்தில் நிறைவுறையாற்றினார். அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்த அவர், இறைவேண்டல் - துஆ பிரார்த்தனையுடன் இரவு 21.15 மணியளவில் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

அஜ்மீர் முறையில் கலப்படக் களறி:



பின்னர், ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட படி, நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரும் தத்தம் இல்லங்களிலிருந்து கொண்டு வந்திருந்த பல்சுவை உணவுகளை ஒரே பாத்திரத்தில் கொட்டி, அஜ்மீர் பாணியில் அதை நன்றாகக் கிளறிய பின், ஸஹன் முறையில் கலப்படக் களறியுணவை தாளங்களில் வைத்து, அனைவருக்கும் பரிமாறினர்.









பலர் வீட்டு உணவுகள் ஒரே பாத்திரத்தில் இணைந்தமையால், சுவையும் – மணமும் தூக்கலாக இருந்ததாகவும், இனி வருங்காலங்களிலும் இந்த அஜ்மீர் முறையை அடிக்கடி அமுல் படுத்தலாம் என்றும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கூறினர்.






இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கலக்கப்போவது யாரு....அதான் ஒன்றாக கலந்து விட்டீர்களே...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [30 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30481

சிங்கை காயல் நல மன்றத்திற்கே உரிய வழக்கமான அரசல் புரசல் உணவு வகைகள் இல்லையே...? இருப்பினும் இந்த கூட்டாஞ்சோறு முறை நன்றாகத்தான் இருக்கின்றது. பல்வேறு கைவண்னத்திலுள்ள கலவை நிச்சயம் காயல் ஸ்டைலில்தான் சமைத்திருப்பார்கள். ஊர் மசாலா என்பதால் பெரிய வித்தியாசம் இருந்திருக்க வாய்ப்பில்லை!

வேலை தேடி வருவோர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து அரவணைத்து ஆதரவு கரம் நீட்டும் சிங்கை காயல் நல மன்றத்திற்கு பாராட்டுக்கள்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [01 October 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30487

சிங்கை காயல் நல மன்றம் நல்ல பல நல திட்டங்களை செய்து கலைக்கி கொண்டிருகிறிர்கள் ..இப்போ கறியிலும் கலக்கலா? கலக்குங்கள் ...வாழ்த்துகளோடு பாராட்டுகளும்.......

சுபான் N M பீர் முஹமது
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. السلام عليكم ورحمة الله وبركاته
posted by M.S.Kaja Mahlari (Singapore) [01 October 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30490

சிங்கை காயல் நல மன்றத்தின் செயல்பாடுகள் மென்மேலும் மெருகேறி கொண்டு இருக்கிறது .அல்ஹம்துலில்லாஹ் . மென்மேலும் சிறப்பாக செயல்பட வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக !

கலரி கறியில் அனைத்து கறிகளும் சங்கமித்து ஒரு அருமையான கூட்டு காயல் கலறி கறிகள் மிகவும் சிறப்பாக இருந்தது . எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ! ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [01 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30494

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது சிங்கை காயல் நற்பணி மன்றதின் அனைத்து செயல்களும் ...அங்குள்ள நம் ஊர் மக்களுக்கும் சரி ....நம் ஊர் மக்களுக்கும் சரி ...எப்போதும் பல நல்ல ....நல்ல செயல் திட்டங்களை செயல் வடிவத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதில்.....இவர்களுக்கு..... நிகர் ...இவர்களே தான் ....... நம் மக்களுக்கு அங்கு வேலை வாங்கி தருவதில் கூட..... நாம் யாவர்களும் இந்த நற்பணி மன்றத்தை மனதார பாராட்டாமல் கண்டிப்பாகவே இருக்க முடியாது .....இது தான் பெரிய சிறப்பு அம்சம் ...

இந்த நற்பணி மன்றம் மென்மேலும் நம் ஊர் அனைத்து மக்களுக்கும் பல நல்ல ( காரியங்களை ) செயல் திட்டங்களை செய்திட வல்ல இறைவன் அருள் புரிவானாகவும் ஆமீன்.........

இப்படி நல்ல செயல்களை தருவதில் முக்கியமாகவே நாம் ஜனாப்.P.M.H. ஹசன் ஹாஜி காக்கா அவர்களைத்தான் மனதாரவே பாராட்டனும். நாம் இவர்களின் நல்ல செயல்பாட்டை புகழ வேண்டும் என்றால் பெரிய கட்டுரையே எழுதலாம்.......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved