Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:34:28 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11948
#KOTW11948
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 30, 2013
தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமியர்களை தண்டிக்க கூடாது! மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் கடிதம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2279 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமியர்களைக் கைது செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

சமீப காலமாக அப்பாவி இஸ்லாமியர்கள் தீவிரவாதம் என்ற பெயரில் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தவறுதலாக கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறிய அவர், அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி அப்பாவி இஸ்லாமியர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு 39 சிறப்பு நீதிமன்றங்கள் மத்திய அரசு அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

நன்றி:
தினகரன் இணையதளம்

தகவல்:
ஹாஃபிழ் P.S.J.ஜெய்னுல் ஆபிதீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அரசியல் இலாபம்... அமோக வெற்றி இதுதான் இவர்களின் இலக்கு.
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [30 September 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30480

வரவேற்கத்தக்கதே அதே நேரம் இது வர இருக்கும் நாடளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சிறுபாண்மையினர் வாயில் தேன் புரட்டும் செயல்.

இத்தனை வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் அரசுக்கு இப்போது தான் தெரிகின்றதோ? அநியாயமாக சிறுபாண்மை சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களை கொத்தாக அள்ளிச் சென்று தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்கள் ஆயுளில் பாதி விசாரனை கைதிகளாகவே காலம் கடத்தி வரும் கொடுமைகள்.

தேர்தல் வர இருப்பதால் இனி சிறுபாண்மையினரைப் பாதுகாக்க எல்லாக் கூத்தும் நடக்கும். அதில் ஒன்றுதான் இந்த கடிதம்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உண்மை செய்தி என்று நம்புவோமாக! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [01 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30488

சகோதரர் ரபீக்கின் கருத்தோடு ஒத்துப்போகிறேன், அதே நேரத்தில் காலம் தாழ்த்தி வந்திருக்கும் இச்செய்தி உன்மை செய்திதான் என்று உளப்பூர்வமாக நம்புவோமாக, நம்மை படைத்தவனும் நமக்கு துணை புரிந்து அப்பாவிகளின் வாழ்க்கையை அல்லல் தீர்ந்த அதிகாலையாய் உதிக்கச்செய்யட்டுமே!

இந்த செய்தி உண்மையாகிவிடக்கூடாதே என்ற காழ்ப்புணர்ச்சியில் காவிக்கட்சி கடுமையாக இச்செய்தியைச் சாடி,எதிர்த்திருப்பத்தையும் நாம் கண்டு கொள்ளாமல் இருந்துவிட முடியாது!

நம்இன எதிர்ப்பின் உண்மை சொரூபம் ஒவ்வொரு காலகட்டத்திலும் காவிக்கட்சிக்காரர்களால் வெளியாவதை அனைவரும் அறிந்துகொண்டுதான் இருக்கிறோம்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved