Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:50:05 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11031
#KOTW11031
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 15, 2013
வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவருக்கு பலத்த காயம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3996 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

தாழையூத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான். அவருக்கு வயது 30. காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ள இவர், வாடகை வேன் ஓட்டுநராக காயல்பட்டினத்திலேயே பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கூத்தாநல்லூரைப் பூர்விகமாகக் கொண்ட ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகன் காலிதீன். இவருக்கு வயது 28. இவரது மனைவி செய்யித் அலீ ஃபாத்திமா. ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இவரும் காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் வசித்து வருகிறார்.

நேற்று (ஜூன் 14) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 08.30 மணியளவில், காயல்பட்டினத்திலிருந்து பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனத்தை, காலிதீன் ஓட்டிச் செல்ல, அப்துல் ரஹ்மான் அதே வாகனத்தில் பின்புறம் அமர்ந்தபடி சென்றுள்ளார்.

வீரபாண்டியன்பட்டினத்தை நெருங்கியபோது, அருகில் அப்பாச் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 26) என்பவருடன் போட்டி போட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளதாகவும், வீரபாண்டியன்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். கருவி அமைந்துள்ள பகுதி வழியே சென்றபோது, எதிரே வந்த தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான லாரி மீது, காலிதீன் - அப்துல் ரஹ்மான் இணைந்து சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், இருவரும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களோடு நெருங்கிய நிலையில் சென்ற பாலமுருகனும் தனது வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.





உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், காலிதீனுக்கு இடது நெற்றிப் பொட்டிலும், இடது முழங்காலிலும் பலத்த காயமேற்பட்டு, அதிகளவில் இரத்தம் வழிந்தோடியதால், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அப்துல் ரஹ்மானுக்கு இடது கால், இடது கையில் பல இடங்களில் காயமேற்பட்டுள்ளதாகவும், அவரது தலையின் பின்பகுதியில் ஊமைக்காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலமுருகனுக்கு, நெற்றி, இடது கை, இடது கால், பிடரி ஆகிய உறுப்புகளில் காயமேற்பட்டுள்ளது. அவரது முன்பற்கள் முற்றிலும் உடைந்துவிட்டன.

இந்நிகழ்வு குறித்து, திருச்செந்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், துணை ஆய்வாளர்கள் அய்யாசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காலிதீன் உடல், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்குப் பின்னர், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மானுக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. பாலமுருகன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த காவல்துறையினர், இரு சக்கர வாகனங்களை, முறையான அனுமதி பெறாதவர்கள் அதிகளவில் ஓட்டுவதாகவும், ஒருவர் ஓட்டிச் சென்றாலே ஆபத்து என்ற நிலையில் இருவரும், மூவரும் அமர்ந்துகொண்டு, கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் செல்வதாலேயே இவ்விதமான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறினர்.

இந்நிகழ்வு காரணமாக, நேற்றிரவில் காயல்பட்டினம் கடைவீதிப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

கள உதவி:
M.A.அப்துல் ஜப்பார்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நெஞ்சு பதறுகின்றது.... நினைத்துப் பார்கையிலே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [15 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28050

விபத்து என்பது விரும்பி வருவதல்ல! ஆபத்து என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நாம் நம்மை சுதாகரித்துக் கொண்டால் விபத்தை ஓரளவிற்கு தவிர்த்துக் கொள்ளலாம்.

சமீப காலமாக நமதூரில் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்துள்ளதோடு வயது வரம்பிற்கு உட்படாதோர் அதாவது சிறுவர்கள் மூன்று பேருக்கு குறையாமல் விதவிதமான பைக்குகளில் நம் வீதியெங்கும் சாகசம் செய்துவருகின்றனர். பல முறை எச்சரித்தும் அதை அவர்கள் ஒரு பொருடாகவே எடுத்துக் கொள்வதில்லை. இளங்கன்று பயமறியாது. ஆனால் பிள்ளையைப் பெற்றவனுக்குத்தான் அதன் விபரீதம் புரியும்.

கடற்கரையில் மாலை நேரம் அச்சிறுவர்கள் போடும் ஆட்டத்தையும் கூத்துகளையும் பார்த்தால் வளரும் தலைமுறையினரின் இளமைப் பருவம் இப்படியா? என மூக்கில் விரல் வைத்து முகம் சுளிக்கும் வண்ணம் இருக்கின்றது. இவர்களிடம் வாகனத்தைக் கொடுத்து விட்டு, விபத்து என்றதும் பதறியடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி வரும் பெற்றோர்களை நான் கண்கூடாகப் பார்த்ததுண்டு.

காவல்துறையினர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இச்சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து அவர்களின் பெற்றோர்களை கோர்ட் கேஸ் என அலைக்கழிக்க வேண்டும். இப்படி நான்கு முறை செய்தாலே சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயம் வந்து விடும்.

இச்செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தன்று நேரில் பார்த்த செய்தியாளர் கூறுகையில், விபத்தில் பலியானவரை புகைப்படம் எடுக்க பல நிருபர்களும் தயங்கினார்களாம். சாலையில் கொட்டிக் கிடந்த குறுதி, சிராய்ப்புகளால் சிதைந்து விழுந்த சதைத்துண்டு, பலத்த காயத்தால் உருக்குலைந்த உடலுறுப்புக்கள் இவைகளையும் தாண்டி அவர் மனோதைரியத்தோடு எடுத்து வந்த புகைப்படங்களை நான் பார்வையிட்டேன். பதறியது நெஞ்சம். ஒரு முறைக்கு மறுமுறை பார்வையிடமுடியாத கோர விபத்தின் கொடூர காட்சி!

யா அல்லாஹ்! இது போன்ற மரணத்திலிருந்து எங்களை பாதுகாத்தருள்வாயாக என கையேந்தினேன். விபத்தின் வீரியத்தை அறிந்து இந்த இழப்பு மற்றவர்களுக்கு ஓர் படிப்பினையாக இருக்கட்டுமே என்றுதான் இரத்தக் கறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் என நினைக்கின்றேன். அத்துனை படங்களையும் போட்டிருந்தால் எத்தனையோ பேர்களுக்கு இரவு தூக்கம் இல்லாமல் போயிருக்கும்.

அன்பு பெற்றொர்களே! உங்கள் பிள்ளைகளின் உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. வாகன விதிகள், சாலை விதிகள் இவற்றை நன்கு உணர்ந்து அறிந்து, அதற்குரிய வயது வந்த பின்னர் வாகனங்களை ஓட்ட முறையான பயிற்சிகளை அளித்து ஓட்டுநர் உரிமத்தோடு வண்டிகளை வாங்கிக் கொடுங்கள்.

சாலையில் சாகசம் புரியாமல் விதிகளை மதித்து நடந்தாலே விபத்துக்களை தடுத்து விடலாம். அல்லாஹ் நம் யாவரையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.

-கனத்த இதயத்துடன்.
-ஹிஜாஸ் மைந்தன்.
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...என்ன கொடுமை இது..!!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 June 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28060

என்ன கருத்து எழுதுவது என்றே தெரியவில்லை. அருமை நண்பன் ஹிஜாஸ் மைந்தன் கனத்த இதயத்தோடு எழுதி விட்டார்.

இன்று காலை facebook கில், SK ஸலிஹ் உடைய பதிவிற்கு ஒரு சகோதரர் "ஊரில் ஏதோ விபத்தாமே..!" என்று கருத்து பதிந்து இருந்தார். அப்பொழுதே மனது படபடக்க ஆரம்பித்து விட்டது. காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற செமினாரில் மனது லயிக்கவில்லை.

இந்த செய்தியை பார்த்ததும்... அப்பப்பா..இவ்வளவு கொடூரமாக நடை பெற்றுள்ளதே. யார் யாருக்கு ஆறுதல் சொல்லுவது என்றே புரியவில்லை.

யா அல்லாஹ்.. கொடூர விபத்துகள், ஆபத்துக்கள், கொடிய நோய்கள் இவைகளை விட்டும் எங்களை காப்பாயாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. உயிர் விலை மதிக்க முடியாதது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [15 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28063

விபத்துக்கள் எதிபாரததுதான் ஆனால் இந்த விபதைப் பற்றியுள்ள செய்தியைப் பார்க்கும் பொழுது விலைமதிக்க முடியா உயிரோடல்லவா விளையாடி இருக்கிறார்கள்!

ஒரு பிள்ளையை வளர்த்தெடுக்க அவர்களின் தாய் தந்தை எப்படியெல்லாம் பாடுபட்டிருப்பார்கள், எண்ணமெல்லாம் சீராட்டி, பாராட்டிம, தாலாட்டி வளர்த்திருப்பார்கள் நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது,

இதற்க்குமேல் எழுத எனக்கு மனத்துணிவில்லை மர்ஹூமுக்கு வல்ல அல்லாஹ் நற்பதவியை கொடுத்தருவானாக!

சோகத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by தேக் (kayalpattinam) [16 June 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 28074

அன்புள்ள இலஞ்சர்களே உங்களை பெற்றெடுத்த தாய் மற்றும் தகப்பன் உங்களை நம்பி இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகள் இவர்களை நினைத்துப்பாருங்கள் மரணம் அது இயற்க்கை ஆனால் உங்கள் கவனமற்ற பயணத்தால் உங்கள் வாழ்க்கை பயணம் மாறுகின்றது

டூவீலர் வாகனம் ஓட்டும் நண்பர்களே கொஞ்சம் இந்த விபத்தின் விபரீதத்தை புரிந்து நடந்துக்கொள்ளுங்கள்.

காக்க முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள் சொல்லுவதைப்போல் உயிரோடல்லவா விளையாடி இருக்கிறார்கள்!

...............................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அல்லாஹ்தான் எல்லாவற்றிற்கும் போதுமானவன்...........
posted by SK Shameemul Islam (Chennai) [16 June 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 28078

இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள். ''அவங்க சொல்ற மாதிரி சொல்வாங்க; நாம செய்ற மாதிரி செஞ்சிகிட்டே இருப்போம்" என்றா, "அல்லது அவங்க என்ன சொல்றது; நாம என்ன செய்றது" என்றா.

அவர்களின் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள். "நாம இப்ப அவன் கேக்குறதை எல்லாம் வாங்கி கொடுக்காட்டா பின்ன நமக்கு தேவையானதை அவனும் வாங்கி தரமாட்டான்" என்றா, "அல்லது வாங்கி தராட்டா உயிரையே எடுத்துறுவான்" என்றா.

அது சரி. நாம இங்க கதைக்கிறதெல்லாம் அந்த பிள்ளைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ விளங்குமா. விளங்கி இருந்திருந்தா இப்படி ரெண்டு நாளைக்கு ஒரு முறை ஊரில் விபத்துக்கள் நடக்குமா. ஏதாச்சும் நன்றாக யோசித்து ஒரு பாதுகாப்பான காயல்பதியை உருவாக்க முயற்சியுங்களேன், ப்ளீஸ்.

நாம எங்கிருந்தோ பேசிக்கொண்டிருக்கிறோம். அவங்க எங்கேயோ என்னென்னவோ செஞ்சிகிட்டு இருக்கிறாங்க. சென்னை மாநகராட்சியை விட காயல் நகராட்சியில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை இனி விஞ்சிவிடும் போலும். போன முறை ஒரு விபத்த பத்தி எழுதிய வாசகர் இதுவரைக்கும் நடந்த விபத்துகள் எதுலேயும் யாருக்கும் உயிர் சேதம் இல்லை, அல்ஹம்துலில்லாஹ் என்றாரே.

இப்போது அதுவும் நடந்துவிட்டதே. நாம் ஒட்டகத்தை பூட்டாமலே அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொண்டிருக்கிறோம். எனவே தான் நமது துஆக்களும் ஏற்கப்படாமலே போகிறது போலும். அல்லாஹ்தான் எல்லாவற்றிற்கும் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஜெராக்ஸ் காப்பியை தருகிறேன்.
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம்) [16 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28079

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த கோர விபத்தை அறியும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது – அமைதி பெற முடியவில்லை.

இதில் ஒரு சகோதரர் இறந்திருக்கிறார் – இது அவருடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இருசக்கர வாகனங்களை நிதானமில்லாமல் ஓட்டக்கூடியவர்கள் அனுதினமும் சிந்தித்து மிகவும் கவனமாக ஒட்ட வேண்டும்.

இறப்பு என்பது சொல்லிவிட்டு வருவதில்லை – வாகனத்தை ஒட்டுவதாலோ அல்லது ரோட்டிலே நடந்து சென்றாலோதான் வரும் என்பதில்லை – இறப்பு என்பது பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டதே!

ஆனால் அந்த இறப்பை இறைவனின் விதிப்படி அடைய வேண்டுமே தவிர நாமாக தேடிப்போகக்கூடாது.

-------------------------------------------

இருசக்கர வாகன விபத்துகளை பற்றி ஒவ்வொரு நாளும் செய்தி தாள்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

நம்ம ஊரை மையமாக கொண்டு கடந்த மார்ச் மாதம் ” இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள்! “ என்ற தலைப்பில் எழுத்துமேடை பகுதியில் ஒரு கட்டுரை எழுதினேன், அதை மக்கள் படித்தார்களானால் இந்த மாதிரியான கோர விபத்துகளில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

-------------------------------------------

என்னுடைய அந்த கட்டுரைக்குப்பின் (கடந்த 3 மாதத்தில்) நமதூர் மக்களுக்கு மட்டும் 20 க்கும் அதிகமான இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மிகவும் வேதனையோடு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மிக வேகமாக ஓட்டிச்செல்பவர்களை காணும் போதெல்லாம் கையை காட்டி வேகத்தை குறைக்க சொல்ல தவறுவதில்லை – அதை நன்மை என்று உணர்கிறவர்கள் வேகத்தை குறைத்து செல்லத்தான் செய்கிறார்கள் - அலட்சியப்படுத்துபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை.

-----------------------------------------

எனவே, பெற்றோர்களே! பெரியோர்களே! உங்களுடைய கடமையை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.

தயவு செய்து என்னுடைய ” இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள்! “ என்ற கட்டுரையை நீங்கள் படிப்பதோடு உங்கள் மக்களையும் படிக்க செய்யுங்கள் – பயனடையுங்கள்.

அந்த கட்டுரையை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் எம்மை அனுகினால் இன்ஷா அல்லாஹ்! அதன் ஜெராக்ஸ் காப்பியை தருகிறேன்.

வஸ்ஸலாம்.
http://kayalpatnam.com/columns.asp?id=81


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved