Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:12:43 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10982
#KOTW10982
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 9, 2013
நெய்னார் தெருவில் அத்துமீறி ஓடிய கார் மின்கம்பத்தில் மோதல்! ஓட்டுநர் தப்பியோட்டம்!! பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3875 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நெய்னார் தெருவில், பெரிய குத்பா பள்ளி – மன்பஉல் பரக்காத் சங்கத்திற்கிடையிலுள்ள பகுதியில், இன்றிரவு 10.30 மணியளவில், அத்துமீறி ஓடிய – TN 22 K 1161 என்ற எண்ணுடைய சான்ட்ரோ கார் மின் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.









அந்த வாகனத்தை வயது குறைந்த சிறுவன் இயக்கியதாகவும், வாகனத்தின் பின்புறம் இருவர் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

பெரிய குத்பா பள்ளி அருகிலுள்ள சிமெண்ட் வேகத்தடையைக் கவனியாமல் வாகனத்தை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தபோது, பெரும் ஒலியுடன் வேகத்தடை மீது கார் ஏறி இறங்கியதாகவும், எதிரே இரண்டு இரு சக்கர வாகனங்கள் வந்ததால், வழி விடுவதற்காக வேகமாக வந்த காரை இடதுபுறமாகத் திருப்பியபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் போடப்பட்டிருந்த சென்ட்ரிங் மரங்களின் மீதேறி, எதிரேயிருந்த சிமெண்ட் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனால் அதிர்வுற்ற அந்த மின் கம்பத்தின் அடிப்பாகம் சிதைந்து சேதமுற்றது.



மின்கம்பத்தின் அருகிலுள்ள வீட்டின் முன்பகுதி படியில் சில பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், அவர்கள் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில் வாகனம் மின் கம்பத்தின் மீது மோதியதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த சில நிமிடங்களில், அங்கிருந்த பொதுமக்கள் காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கும், ஆறுமுகநேரி காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினர். சிறிது நேரத்தில், அங்கு வந்த மின்வாரிய அலுவலர்கள், அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளதா என்பதைப் பார்த்தறிந்த பின்னர், சில நிமிடங்களில் மின்தடை நீக்கப்பட்டது.



இந்நிகழ்கு காரணமாக, நெய்னார் தெருவே பரபரப்புடன் காணப்படுகிறது.





தகவல்:
L.T.இப்றாஹீம்

கள உதவி:
M.I.ஜமீல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கண்மூடித்தனமான செயல்...கண்டிக்கத்தக்கது .
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [10 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27864

நமதூரில் இது ஓர் வாடிக்கையாகிப் போயிற்று. சிறுவர்கள் பைக்கில் சீறிப்பாய்வதும், தண்ணீர் கேன்கள் கொண்டு வரும் சிற்றூந்து கட்டுப்பாடின்றி தாறுமாறாக ரோட்டில் ஓட்டுதும், ஆட்டோக்கள் ஆகாய ஊர்தி வேகத்தில் சாகசங்கள் புரிவதும் பல முறை நான் கண்டு பதறியிருக்கின்றேன்.

அதையும் மீறி இப்போது சிறுவர்கள் கார் ஓட்டத் துவங்கியுள்ளார்கள். வாகனக் கட்டுப்பாடு மற்றும் சாலை விதிகள் முறையாகப் பேணப்படுவதில்லை.

இதனால் ஏற்படப் போகும் ஆபத்துக்களை பற்றிய அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர்களின் அலட்சியப்போக்கும் அசிரத்தையும் தான் காரணம். அல்லாஹ்தான் பாதுகாக்கணும்.

இந்த விபத்தின் போது யாராவது அந்த முடுக்கிலிருந்து வந்திருந்தால் ....? நினைத்துப் பார்க்கவே உள்ளம் நடுங்குகின்றது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:.. திருந்தவேண்டியது சிறுவர்கள் மட்டுமல்ல!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [10 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27865

கொடியிடுதல்,கோலியிடுதல்,பம்பரம்விடுதல் மற்றும்பல சிறிய பொருட்களை வைத்து தெருவுக்குள்ளும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்த காலம்மாறி, இப்பொழுது பால் குடி மறந்த மறுநாளே ஆசை மகனுக்கு அன்பளிப்பாக இருசக்கர வாகனம் இதோ பெற்றுக்கொள் என்று பெருமைப்பட கொடுத்து தன் பிள்ளை மீது வைத்துள்ள பாசத்தை பார்ப்போர் பாராட்டுவார்கள் என்கின்ற மகிழ்ச்சியில் தன்னை மறந்து வாழும் ஏராளமான தந்தைகள்!

இப்பொழுது அதையும் தாண்டி காரை குடுத்து ஓட்ட வைத்து வேடிக்கை பார்த்து பூரிப்படையும் வீட்டாரின் விஷயம் விபத்து சம்பவத்தால் ஊருக்கு தெரிய வந்து விட்டது! யாருக்கும் எந்த உடல் காயங்கள் இல்லாமல் காத்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!

இச்சிறார்களின் இப்படிப்பட்ட விஷப்பரிச்சைக்கு அச் சிறுவர்களின் தந்தைமுதல் அந்த வீட்டார்கள் முழுவதுமாக முழுப்பொறுப்புக்குறியவராகிறார்கள்! திருந்தவேண்டியது சிறுவர்கள் என்றால், திருத்தப்படவேண்டியது அச் சிறுவர்களின்.!?1?1?!?............. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by abdulrahman (kayalpatnam) [10 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27868

சிறுவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனகளை தெருவில் ஓடும் பொது பெரியவர்கள் அதை வேடிக்கை பார்க்காமல் ,அவர்களை நிறுத்தி கண்டித்து அனுபவேண்டும் மேலும் அவர்களது பெற்றோர்களுக்கு இது மாதுரி வகனங்களை உங்கள் மகனுக்கு கொடுக்க வேண்டாம் என்றும் தஹவல் கொடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27869

அல்ஹம்து லில்லாஹ். உயிர் சேதம் ஏற்படாமல் காத்த வல்ல ரஹ்மானுக்கே அனைத்துப் புகழும்.

ஒரு சின்ன சாமான் வாங்கச் சொன்னால், மாட்டேன் என்று சொல்லும் மகனை, இந்தா மாமா உடைய பைக்கை எடுத்துவிட்டு போ என்று பெற்றோர் சொன்னதும் துள்ளிக் குதித்துக் கொண்டு வேலை செய்யும் பிள்ளைகளை குற்றம் சொல்லுவதா?

அனைத்து பால் பற்களும் விழுந்து முளைக்காத பிள்ளைகளுக்கு பல்சர் பைக்கை கொடுக்கும் பெற்றோர்களை குறை சொல்லுவதா?

சமீப காலமாக நம் ஊரில் நடைபெற்று வரும் விபத்துக்களில் உயிர் சேதம் இல்லாமல் வல்ல அல்லாஹ் காத்து வந்துள்ளான், இது ஒரு எச்சரிக்கை தான்.! ஆக கவனம் தேவை. பட்ட பின்பு பதறுவது புத்திசாலித்தனம் அல்ல. அல்லாஹ் காப்பானாக.

இந்த சம்பவத்தில், சான்ட்ரோ வண்டியும், சிமென்ட் கம்பமும் கலப்படம் இல்லாமல் ஸ்ட்ராங் ஆக இருந்ததால் இத்துடன் முடிந்தது...!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [10 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27870

விபத்துகள், ஏதிர்பாராது நடந்தேருவதுதான்.

அனுபவம் கண்ட வாகன ஓட்டிகள்கள்கூட சிலநேரம் நிலை தடும்மாரி அங்கும் இங்கும் அசைந்து இறுதியில் ரோடை விட்டு கிழே இறங்கி வாகனத்தைதான் சேதப்படுத்துகிறார்கள்.

விபத்துகளை வேணும் என்று ஏதிர்கொண்டு எந்த இளைனர்களும் வாகனம் ஓட்ட முன்வரமாட்டார்கள் .

இந்த விபத்தல் ஓட்டுனர் தப்பி ஓடியது, அவரை பாதுகாக்கத்தான். மனிதர்கள் மீதோ எந்த உயிரினங்கள் மீது முட்டாது இருந்தமைக்கும், ஓட்டுனர் எந்த காயமின்றி உயிர் தப்பித்து வந்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்., அல்ஹம்துலில்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. புதியவரின் பதட்டம்,,,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [11 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27900

இதை போன்ற விபத்துகள் மூலம் கார் ஓட்டியவர் முறையான லைசென்சு பெறாதவர் என்பதை காட்டுகிறது. இதில் எதார்த்தம் என்னவெனில் பிரேக்கை மிதிப்பதட்கு பதில் பதட்டத்தில் அக்ஷிலேடரை ACCELATOR ரை மிதித்து விடுவார்கள்.

இப்படி சம்பவங்கள் நிறைய நடைபெற்று உள்ளன. மின்சார வாரியம் அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பணம் பெற்று கதையை முடித்து விடுவார்கள்.

இங்கேயும் இதை பெரிதுபடுத்தாமல் இதையே அந்த பகுதி மக்கள் செய்வார்கள் என எண்ணுகிறேன்.

நம் ஊரில் பெரும்பாலும் நன்கு வாகனம் ஓட்ட தெரிந்தவர்கள் கூட முறையான லைசன்சு எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு காவல்துறைக்கு 500,1000 என தண்டம் கெட்டுகிரார்கள்.

முக்கியமான கட்டத்தில் அவனிடம் மாட்டிகொண்டு பணத்தையும் நேரத்தையும் இழந்து கைபிசைந்து நிற்கிறார்கள். மாட்டிகொண்டவுடன் எடுக்கவேண்டும் என்று நினைப்பதும், அப்புறம் அதை செய்யாமல் விடுவதும் வழமையாக உள்ளது.

இந்த ஆவணம் எத்தனை முக்கியமானது என்று விளங்காமல் இப்படி அலட்சிய படுத்துவது இதை போன்ற விபத்துகளுக்கு வித்தாக உள்ளது எனலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved