Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:24:17 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10987
#KOTW10987
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 11, 2013
முறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2700 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மாவட்ட ஆட்சியரின் அறிக்கைப்படி நெய்னார் தெரு சாலைப்பணியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுக்குக் காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீதும நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

காயல்பட்டினம் நகராட்சியில் - பொது நிதி (5 பணிகள் - மதிப்பு ரூபாய் 43 லட்சம்), IUDM திட்ட நிதி (10 பணிகள் - மதிப்பு ரூபாய் 97 லட்சம்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திட்ட நிதி (3 பணிகள் - மதிப்பு ரூபாய் 21 லட்சம்) ஆகியவை மூலம் - 161 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 18 பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த அக்டோபர் மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் IUDM திட்டத்திற்கு கீழான 3 பணிகள், மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளாகும்.

15 சாலைப் பணிகளில், 3 சாலைப்பணிகள் (அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு மற்றும் நெய்னார் தெரு) - சாலையை முற்கூட்டியே தோண்டி, நிறைவேற்றப்படவேண்டியவை. இந்த மூன்று சாலைப்பணிகளை மேலோட்டமாக பார்க்கும்போதே, சாலைகள் முறைப்படி தோண்டப்படவில்லை என தெரிந்தது. ஆகவே - இது குறித்து விசாரிக்கும்படி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.



அதனை தொடர்ந்து - மாவட்ட ஆட்சியர் அமைத்த ஆய்வு குழு, மூன்று சாலைகளையும் பார்வையிட்டது. மூன்று சாலைகளில் - நெய்னார் தெரு சாலைப்பணிகள் மட்டும் ஓரளவு நடைப்பெற்றிருந்ததால் - அச்சாலையை மட்டும், ஆய்வு குழு பரிசோதனை செய்தது. அந்த குழு தயாரித்த ஆய்வறிக்கை, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பெறப்பட்ட ஆய்வறிக்கையை, மாவட்ட ஆட்சியர் - சென்னையில் உள்ள நகராட்சிகள் நிர்வாகத்துறையின் ஆணையருக்கு அனுப்பிவைத்தார்.



12 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான நெய்னார் தெரு சாலை பணியில், நகராட்சியின் பதிவேட்டில் - ரூபாய் 8,87,535 மதிப்பிற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக (நகராட்சியின்) M புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் இதுவரை நிறைவு செய்யப்பட்ட இப்பணிகளின் மதிப்பு ரூபாய் 6,75,214 ரூபாய் மட்டும் என்றும் - ஆகவே ரூபாய் 2,12,321 அளவிற்கு முறைக்கேடு நடந்திருப்பதாக தெரிகிறது என்றும் இந்த அறிக்கை தெரிவித்தது.

மாவட்ட ஆட்சியர் அனுப்பிய ஆய்வறிக்கையின் மீது நகராட்சி நிர்வாகத்துறை ஆணையம் எடுத்த நடவடிக்கை குறித்த முழு விபரம் வெளியாகவில்லை. இருப்பினும் - மே 31, 2013 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில், சாலைப்பணிகள் குறித்து வினா எழுப்பப்பட்டபோது பதில் கூறிய நகராட்சி ஓவர்சியர் - சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அபராதம் விதிக்கும்படி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

IUDM திட்டத்தின் கீழான - நெய்னார் தெரு, ஆசாத் தெரு உட்பட 10 பணிகளின் டெண்டரும், தலவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரருக்கே வழங்கப்பட்டது. அது தவிர சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலம் மேற்கொள்ளப்படும் அப்பாபள்ளி தெரு சாலைப்பணிக்கான டெண்டரும் தலவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரருக்கே வழங்கப்பட்டுள்ளது.

நெய்னார் தெரு சாலைப்பணிகள் குறித்த விசாரணை நடைபெற்று வந்ததால், அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு சாலைப்பணிகளை பெற்றிருந்த அதே ஒப்பந்ததாரர் - அந்த இரு சாலைகளின் பணியையும் நிறுத்தி வைத்திருந்தார்.

பல மாதங்களுக்கு பிறகு அச்சாலைப் பணிகள் மீண்டும் தற்போது துவங்கி உள்ளன. இது குறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நகராட்சி பொறியாளர் சிவகுமாரிடம் வினவிய போது - நெய்னார் தெரு சாலை குறித்த நகராட்சி நிர்வாகத்துறையின் முடிவு எழுத்துப்பூர்வமாக பெறப்படவில்லை என்றும், அப்பாப்பள்ளி தெரு, ஆசாத் தெரு மற்றும் மஹ்லரா காலனி சாலைகள் - ஆவணங்களில் உள்ள கணக்குப்படி போடப்படும் என்றும் தெரிவித்தார்.





இந்நிலையில், காயல்பட்டினம் வந்திருந்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னையின் மாநில மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.நஃபீஸ் அஹ்மத் - மீண்டும் துவக்கப்பட்டுள்ள சாலைப்பணிகளை - ஜூன் 10 (திங்கட்கிழமை) அன்று - பார்வையிட்டார். இவ்வமைப்பின் காயல்பட்டினம் கிளை - பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ, செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் அவ்வேளையில் உடனிருந்தனர். நகராட்சியின் சாலைப்பணிகளின் தரம் குறித்து இதுவரை காயல்பட்டினம் கிளை மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவரிடம் அப்போது விளக்கம் வழங்கப்பட்டது.



நெய்னார் தெரு சாலைப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை எடுத்துள்ள முடிவு விபரத்தை ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை கோரவுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கைப்படி நெய்னார் தெரு சாலைப்பணியில் நடைபெற்றுள்ள முறைகேட்டுக்குக் காரணமான அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலியுறுத்துகிறது. இது தவிர - பிரச்சனைக்குரிய ஒப்பந்தாரர் தலவாணிமுத்து மூலம் தற்போது நடைபெறும்/சமீபத்தில் நடைபெற்று முடிந்த அனைத்து பணிகளையும் - முறையான குழுக்கொண்டு ஆய்வு செய்யவேண்டும். இக்கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் - இது குறித்து பொது நல வழக்கு தொடரவும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை முடிவு செய்துள்ளது.


இவ்வாறு ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விதிமுறைப்படி செலவு (வேலை) செய்ய படுகிறதா.. ? என்பதை கவனிப்பது நம் கடமை... உரிமை...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [12 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27960

நகரில் புதிய புதிய அமைப்புகள் தோன்றியதால் நன்மைகள் என்ன என்று வினா எழுப்பும் சகோதரர்கள் இதை விளங்கி கொள்ளட்டும்... நாம் செலுத்தும் நமது வரி பணம் நமது நகரிலேயே முறைகேடு செய்யபடுவதை இந்த புதிய அமைப்பு நகர் மக்களின் பார்வைக்கு தருகிறார்கள்... மேலும் இந்த ஊழல் எதிர்ப்பு இயக்க அமைப்பு பல அரசு சம்பந்தமான வேளைகளில் முழு கவனம் செலுத்தி அது முறையாக ஒப்பந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைகள் நடைபெறுகிறதா என்பதனை கவனித்து - அதில் முறைகேடுகள் நடப்பதாக சந்தேகம் ஏற்படுமானால் மாவட்ட ஆட்சியர் - அது சார்ந்த துறைகள் - பொது மக்கள் பார்வை- நீதி துறைகள் மூலம் முறைகேடுகளை தடுக்க உதவுகிறார்கள்...

நாம் நமக்கு அறிந்த நமது நகராட்சி வேளைகளில் முறைகேடுகள் அறிந்தால் ஆதாரபூர்வமாக அதை இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை பரிமாறலாம்.. இதனால் நமது வரி பணம் வீண் போவதை தவிர்க்கலாம்...

நமது வரி பணம் மூலம் நமது நகராட்சியின் வேலையை பெறும் ஒப்பந்தக்காரர் முறைகேடுகள் இல்லாமல் நல்ல முறையில் விதிமுறைப்படி செலவு (வேலை) செய்ய படுகிறதா.. ? என்பதை கவனிப்பது நம் கடமை... உரிமை...

தொடரட்டும் ஊழலுக்கு எதிரான பயணம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved