Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:55:51 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10464
#KOTW10464
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 22, 2013
நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4381 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஏற்பாட்டில், 17.03.2013 ஞாயிற்றுக்கிழமையன்று, “நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஆற்றிய உரைக்கு விளக்கமளித்து, 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கை வாசகங்கள் வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. காயல்பட்டணத்தில் 10.03.2013 அன்று நடந்த காயல்பட்டினம் நகராட்சி நிகழ்வுகள் எனும் தலைப்பின்கீழ் நடந்த கூட்டத்தில் மன்றத் தலைவி அவர்களின் தரம் தாழ்ந்த முறைக்கேடான பேச்சுக்கு விளக்கம்.

31.03.2012 தேதியில் சென்னைக்கு நகராட்சி தலைவரால் அழைத்துச் செல்லப்பட்ட மன்ற உறுப்பினர்கள் மேல் சேற்றை வாரி இறைத்ததற்கு விளக்கம்.

நகராட்சி உறுப்பினர்கள் 10 பேர் உங்கள் தலைமையில் சென்னை சென்றோம். 31.03.2012ம் தேதி சனிக்கிழமை இரவு முதல் 03.04.2012 இரவு வரை உங்களுடனே தங்கியும் இருந்தோம். ஆனால் வடசென்னையில் ஒரு தனிநபர் ரூம் போட்டு, எங்களில் சில உறுப்பினர்களைத் தங்க வைத்து ………. படம் எடுத்து பிளாக்மெயில் பண்ண திட்டம் போட்டிருந்தார் என்றும், அல்லாஹ்வின் கருணையால் அவர்களை தாங்கள் (தலைவி) பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் அவதூறு பிரச்சாரம் செய்தீர்கள்.

அந்த தனி நபர் யார்? செல்ல இருந்த கவுன்சிலர்கள் யார்? அந்த தனிநபர் சில கவுன்சிலர்களை நேரடியாக அழைத்தாரா? அல்லது உங்கள் மூலமாக அனுப்பி வைக்கச் சொன்னாரா? குர்ஆனை முன்னிறுத்தி இதற்கு பதில் கூறுங்கள்.

தாங்கள் குர்ஆனை கையிலேந்தி சத்தியம் செய்யும்போது உங்கள் ஆதரவாளர்கள் கரகோசம் செய்தார்கள். சந்தோஷம். ஆனால் குர்ஆனை கையில் வைத்துக் கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றுக் கூறுவது நமது இஸ்லாம் மார்க்கத்திற்கு உடன்பாடானதுதானா?

உங்களை (தலைவியை)ப் பற்றிய இன்னும் பல உண்மைகள் வெட்டவெளிச்சத்திற்கு அடுத்து வரவுள்ளன...

இப்படிக்கு
A.A.அஜ்வாது
17வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்,
வரிவிதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்,
காயல்பட்டணம்.


இவ்வாறு அந்த அறிக்கையின் வாசகங்கள் அமைந்துள்ளது. அறிக்கை அடங்கிய பிரசுரம் வருமாறு:-



தகவல் உதவி:
Y.M.முஹம்மத் தம்பி
AKM ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...அழைப்பாணை இல்லாமல் முன்னிலை...
posted by சாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்) [22 March 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 26399

விளக்கம் என தொடங்கி விளக்கம் எதுவும் தராமல் கேள்வியில் முடிகின்றது துண்டறிக்கை.

நகர்மன்றத் தலைவி உங்கள் பெயரை மேடையில் சொல்லவேயில்லையே! ஏன் அஜ்வாத் உங்களுக்கு இவ்வளவு அவசரம்? சம்மனில்லாமல் ஆஜராகி விட்டீர்களே? எங்கேயோ இடிக்கின்றது.

அது சரி! இரண்டரை மணி நேரம் பெய்த பெருமழை போல் தலைவி உங்கள் அனைவரின் மீதும் குற்றச்சாட்டுகளை அட்டி அட்டியாக முன்வைத்தாரே? அவை அனைத்திற்கும் அரைப் பக்க துண்டறிக்கைதானா விடை?

அப்ப இந்த தனி அறை விவகாரம் தவிர மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதாகத்தான் பொருள் படுகின்றது.

சரி அது போகட்டும். பாவம். உங்களுடன் இதற்கு முன்னர் ஃபொட்டோவிற்கு போஸ் கொடுத்த மற்ற உறுப்பினர்களின் பெயர்கள் எதுவும் இந்த துண்டறிக்கையில் இல்லையே.

உங்களுக்குள்ளேயே ஒத்த கருத்து இல்லையா? அல்லது உங்களை பலி கடாவாக ஆக்கி விட்டு அவர்கள் அனைவரும் உங்கள் முதுகுக்கு பின்னர் ஒளிந்து கொண்டனரா?

பாவம் உங்கள் மனதைப்போலவே உங்கள் முதுகும் அவ்வளவு விசாலமானது போல.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பாராட்டுக்கள் அஜ்வாத்!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [22 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 26400

எல்லாப்புகழும் இறைவனுக்கே.

தம்பி அஜ்வாத் என்ன என்னவோ சொல்ல போறாருன்னு பார்த்தா, இப்படி டக்குன்னு முடிச்சுட்டாரு. இருந்தாலும் பாராட்டுக்கள். தொடர்ந்து விஷயங்களை கக்கிவிடுங்கள்.

தம்பி அஜ்வாது அவர்களே, நீங்கள் அல்லாஹுவை தவிர யாருக்கும் பயப்படாமல் உண்மையை வெளி கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் மேல் என் போன்றோருக்கு இருக்கிறது. ஆதலால் நீங்கள் உங்கள் மனசில் உள்ள உண்மைகளை மட்டும் அல்லாஹுவை அஞ்சி வெளியே சொல்லுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by salai s nawas (singapore) [22 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26402

தம்பி டீ இன்னும் வரலே !!!!!

தன்னிலை அறிக்கை வேறே ஆள்கிட்டே இருந்து எதிர்பார்த்தேன், ஆனா உங்ககிட்டே இருந்து வந்து இருக்கு. இப்படி அறிக்கை மேல் அறிக்கை வந்துகிட்டு இருந்தால் படிக்கிறவங்க நாங்க பாவம் இல்லையப்பா???

தனி நபர் என்று விவாதிக்கபட்டு கொண்டிருக்கும் காக்காவிடம் நேற்று அலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் கேட்டறிந்தேன். மிகவும் மனம் வேதனை பட்டு பேசினார்கள். இதற்கு காரணமாய் இருந்தால் அல்லாஹ் என்னை தண்டிக்கட்டும், அல்லாஹ் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன் அவன் என்னை கைவிடமாட்டான் என்று ஆணித்தரமாக சொன்னார்கள். அதிர்ந்து விட்டேன், எங்கே தப்பு நடக்கிறது? எனக்கும் என்ன நடந்தது என்று தெரியாது, நானும் இறைவனிடம் விட்டு விட்டு என் பாரத்தை இறக்கி வைக்கிறேன்

இனி உறுப்பினர் யாவரும் தனி நபரை விட்டு விட்டு ஊருக்கு நன்மை செயுங்கள்.

-அன்புடன் மண்ணின் மைந்தன்

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack SMA (HCM) [22 March 2013]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26404

அஜ்வாஜ் காக்கா ,

நம்பிக்கை இல்லா தீர்மான புகார் மனுவை இப்போதுதான் படிக்க நேர்ந்தது. இதில் சொல்லப்பட்ட காரணங்களை வைத்தே , நீங்களும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு பண்ணலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...ajward
posted by hylee (colombo) [22 March 2013]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26409

'ஒரு ஊதாப்பு கண் சிமுட்டுகிறது.'


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காக்கா...கா....கா...கா...காகங்கள் கரியுதப்பா காயலின் மரக் கொம்பினிலே...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [22 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26410

ஆஹா! அருமையான விளக்கம். இப்படியொரு தெளிவான விளக்கத்தை தான் மக்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். தம்பி அஜ்வாத அவர்களே...! மிக்க நன்றி! இப்பத்தான் மனசெல்லாம் நிம்மதியா இருக்கு! அல்லாஹ் இந்த விளக்கமான விளக்கத்தை எல்லா மக்களுக்கும் புரிய வைப்பதற்கு அருள் செய்வானாக! ஆமீன்.



-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Different Kind of Oath
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [22 March 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 26414

"...ஆனால் வடசென்னையில் ஒரு தனிநபர் ரூம் போட்டு, எங்களில் சில உறுப்பினர்களைத் தங்க வைத்து ………. படம் எடுத்து பிளாக்மெயில் பண்ண திட்டம் போட்டிருந்தார் என்றும், அல்லாஹ்வின் கருணையால் அவர்களை தாங்கள் (தலைவி) பாதுகாப்பாக அழைத்து வந்ததாகவும் அவதூறு பிரச்சாரம் செய்தீர்கள்". (C & P)

1) விளக்கம் என்று துண்டு பிரசுரம் வெளியிட்டு விட்டு அதில் எந்த விளக்கமும் இல்லாமல் கேள்விகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

2) ஒரு "சதி" (சம்பவம்) நடக்கவிருந்ததாக தலைவி சொல்கிறார். இந்த துண்டு பிரசுரத்தில் அப்படி ஒரு சதி நடந்ததா இல்லையா என்பது கூட தெரிவிக்கப்படவில்லை. மாறாக இது சம்பதமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. சதியின் சாராம்சம் தெரியாதவர்(கள்) எப்படி ஒரு பேச்சை "அவதூறு" என்று கூற முடியும். அப்படி ஒரு சதி செய்யப்படவில்லை என்று (முடிந்தால் ஆதாரத்துடன்) நிரூபித்துவிட்டு (நிரூபிக்க முடியாது என்பது தனி விஷயம்) தலைவியின் பேச்சை "அவதூறு" என்று சொல்லியிருந்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

3) இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை நான் /நாங்கள் தலைவியுடன்தான் இருந்தேன் / இருந்தோம் என்று இந்த கவுன்சிலர் தேதி குறிப்பிட்டதன் மூலம் அவர் சொல்லவருவது அப்படி ஒன்றும் (சதி) நடக்கவில்லை என்று.

யாருக்கு எதிராக "சதி" நடக்கிறதோ அது அவர்(கள்) முன்னிலையில் நடக்காது. அவ்வாறு நடந்தால் அதற்குப் பெயர் "சதி" இல்லை. ஆதலால் சதி நடந்த தேதி, நேரம் மற்றும் இடம் Immaterial to the subject.

4) 10 நபர்களில் சிலரை மையப்படித்திதான் "சதி" செய்யப்பட்டதாக தலைவி கூறினார். அந்த "சிலர்" யாரென்று குறிப்பிட்டு கூறவில்லை. இந்த சதியைப் பற்றிய விஷயம் தலைவி வெளியே சொல்லும் வரை இவர்களுக்கும் / பொதுமக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முறைப்படி பார்த்தால் 10 நபர்களும் சேர்ந்து இந்த கேள்வி கணைகளைத் தொடுத்திருக்க வேண்டும். ஒருவர் மட்டும் தொடுத்திருப்பது கீழ்க்கண்ட சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

a) மற்ற 9 நபர்களுக்கும் இவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியும் போலும்?

அல்லது

b) (ஒரு வேலை இவர்களுக்கு தெரியாத பட்சத்தில்) மற்ற 9 நபர்களும் இவரைப் போல தனித்தனியாக துண்டு பிரசுரம் வெளியிடப் போகிறார்களா? அல்லது (மக்கள் ஆவலுடன் எதிர்பார்துக்கொண்டிருகின்ற) மேடை போட்டு பதில் கொடுக்கப் போகிறார்களா?

அல்லது

c) "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை " என்று சொல்லாமல் இவர் சொல்லுகிறாரா ?

5) ஒரு (சதித்) திட்டம் தீட்டுவதற்கு (புத்தி சுவாதீனமுள்ள) குறைந்தது இரண்டு நபர்கள் தேவை. அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்(கள்) அதை சொல்லாமல் அத்திட்டம் வெளியாகாது. (Except with the help of Technology). தலைவி தன்னுடைய உரையில் தனக்கு அச்சதிதிட்டத்தை யார் அறிவித்தார் அல்லது யார் யாரெல்லாம் ஈடுபட்டனர் என்று தெரிவிக்கவில்லை. அந்த தகவல் தெரியாதவரை அவருடைய கூற்றை இவர்கள் நினைத்தாலும் மெய்ப்படுத்தவோ அல்லது இவர் விரும்பியபடி பொய்யக்கவோ முடியாது.

6) தலைவி இந்த சதி விசயத்தில் குற்றம் சுமத்துவது நகராட்சி உறுப்பினர்(கள்) மீதல்ல. ஒரு தனிநபர் மீதுதான். அவ்வாறிருக்கையில் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் தனி நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக கேள்வி(களை) தொடுத்திருப்பது தலைவியின் மற்றதொரு (முக்கியமான) குற்றச்சாட்டான தனி நபர் தலையீட்டை உறுதிபடுத்துகிறது என்பதை கூட அறியாமல் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்.

இவருடைய விளக்கத்தின் தரம் புஸ்வானம்" ஆகிவிட்ட நிலையில் இவர்(கள்) சுமத்திய குற்றச்சாட்டு(கள்) தரம் எப்படி இருக்கும் என்பதை பாமரனும் விளங்கமுடியும்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது மட்டுமல்ல தன்னுடைய கையை தானே அறுதுக்கொள்வதும் தற்கொலைக்குச் சமம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. சகோதரரே நீங்கள் கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்வது சிறந்து...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [22 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26415

நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரைக்கு 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கம்! (C - P)

தலைப்பு செய்தியை முதலில் மாற்றம் செய்ய வேண்டுகிறேன்...!

தலைப்புக்கும் மாண்புமிகு 17ஆவது வார்டு உறுப்பினர் வாசகத்திர்க்கும் சிறு அளவும் சம்பந்தமில்லை.. 17ஆவது வார்டு உறுப்பினர் விளக்கமா கொடுத்துள்ளார்...?

தலைவியின் பொது கூட்ட மேடையில் குர்ஆனை கையில் வைத்துக் கொண்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றுக் கூறுவது நமது இஸ்லாம் மார்க்கத்திற்கு உடன்பாடானதுதானா? என்று கேட்டுள்ளார் மேலும் தலைவியைப் பற்றிய இன்னும் பல உண்மைகள் வெட்டவெளிச்சத்திற்கு அடுத்து வரவுள்ளன... என முன் அறிவிப்பு செய்துள்ளார்..

தலைவியின் கேள்விகளுக்கு விளக்க (பதில்கள்) ஒன்னுமில்லையே...!

நமது இஸ்லாம் மார்க்கம் வட்டி - விபச்சாரம் - மதுபானம் இவைகளை எப்படி தடை செய்ய பட்டுள்ளதோ அதே போல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதையும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்... அதில் மாற்று கருத்து இல்லை சகோதரரே...

தலைவியின் கேள்விகளுக்கு நல்ல விபரமான ஆக்கப்பூர்வமான நாகரீகமான பதில்களை விரைவில் தாருங்கள் சகோதரரே..!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26416

எங்க அப்பன் குதிருக்குள் இல்லை!

தம்பி அஜ்வாஜு.. நீ நல்ல பிள்ளை என்று தான் இன்னும் நாங்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றோம்.

மரியாதைக்குரிய ஆலிம், திருக்குர்ஆன் முழுவதையும் ஒரே தராவிஹ் தொழுகையில் தொழவைத்த ஹாபில், சங்கைக்குரிய அஜ்வாஜு ஆலிம் உடைய பேரன் நீ..

நல்லதையே நினை, நல்லதையே மக்களுக்கு செய், வல்ல ரஹ்மானுக்கு பயந்து நட. இப்படி நடந்தால் நீ யாருக்கும் பயப்பட தேவை இல்லை. தலைவனாக இருந்தால் என்ன தலைவியாக இருந்தால் என்ன. உண்மையை தொடர்ந்து கூறு.

இங்கு யாரும் யாருக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கவில்லை. உண்மையில் தலைவி மீது தவறு இருந்தால் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பது நாங்கள்தான்.

எல்லோரும் நன்றாக இருக்கனும், ஊர் செம்மையாக இருக்கனும். இதுதான் அனைவர்களின் விருப்பம். அல்லாஹ் நல்லதையே நாடுவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [23 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26424

"வெள்ளிக்கிழமை நகராட்சி தலைவியின் பேச்சுக்கு பதில்கொடுக்கும் வகையில் துண்டு பிரசுரம் வருகிறது ..." என்று சொன்னார்கள் நானும் தலைவியி பேச்சுக்கு வரிக்குவரி பதிலடியாக ஒரு பத்து பக்கம் கொண்ட விலாவாரியான பதிலை எதிர்பார்த்தேன்.

அது என்னடாவெனில் காலையில் தினமணி பேப்பரை பிரிக்கும் போது அதிலிருந்து விழுந்த பிரசுரம்தான் மேற்படி உறுப்பினர் அஜ்வாத் அவர்களின் ஒன்ற்மே இல்லாத "சினிமா நோட்டிஸ் 'பதில் துண்டு பிரசுரம்.

சரி..சரி...மற்ற உறுப்பினர்களின் விளக்கமெல்லாம் என்னாச்சு...'ஜும்மாக்கு ஜூம்மா தவணை முறையில் வெளியாகுமோ...?

அவரது "மாபெரும் விளக்கம் "குறித்து எழுத ஒன்ற்மே இல்லை. சிறு பிள்ளைகளை அடிக்கு பயந்து உளறுகிறான் ..என்போமே ...அந்த வகை பதில் இது. இதற்க்கு நேரத்தை செலவழித்து பதில் எழுதிக்கொண்டிருப்பதே வீண் முயற்சியாகும்.

தலைவி அவர்கள் முன்வைத்த ஆணித்தரமான குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் பதில் எதுவும் இல்லை. அந்த உறுப்பினர்களில் பலர் எப்போது அல்லாமாக்களாகவும் ..ஹாபில்கலாகவும் மாறினார்கள் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் அவர்களில் பலர் மார்க்க நூல்களை விழுந்து விழுந்து படிப்பதாக கேள்வி. "சாகும்வரை உண்ணா விரதம் "கூடுமா..."கூடாதா ..?என்று பலர் ஆராய்ச்சியில் இறங்கிஉள்ளார்களாம்.

அவர்கள் செய்யும் "மக்கள் பணி"யை விட இது சிறந்தது.

கேட்ட கேள்விக்கு பதில் தருவதை விட்டு விட்டு உண்ணா விரத ஆராய்ச்சியை இவர்கள் தொடங்கியதில் இருந்தே ஒன்றை நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஆட்டிவைப்பார் யாரொருவன் ஆடாதேடா கண்ணா
posted by Salai Sheikh Saleem (Dubai) [23 March 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26425

தம்பி அஜ்வாஜ் விளக்கம் கண்டு அவரின் அப்பாவித்தனத்தை யாரோ முதலாக்குகிரார்கள் என்று தான் தோன்றுகிறது.

ஒரு நகராட்சி மாதந்திர கூட்டத்தில் நானும் பார்வையாளராக கலந்து கொண்ட போது, கூட்டம் ஆரம்பிக்கும் முன்னரே "நான் வெளி நடப்பு செய்கிறேன்" என்று முழங்கிய வீரர் தான் அஜ்வாஜ்.

அட, இதை போட்டு ஏன் சீரியஸ்ஸா விவாதிச்சிக்கிட்டு !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. புதிருக்கு புதிர்!
posted by Firdous (Colombo) [23 March 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26426

சகோதரரே, உங்களின் பிரசுரம் கண்டு விளக்கத்தை விளங்கி கொள்ளாமல் தவிக்கிறேன். புதிருக்கு புதிர் பதிலகுமா???

மடியில் கணம் இருந்தால், வழியில் பயம் இல்லை!!! - அதிகம் கேட்ட, படித்த பழமொழி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [23 March 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26429

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று தலைவியின் கோவத்தில் வந்த வார்த்தை பலரையும் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி பேச வைத்ததிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. இதுதான் கெட்டதிலும் நல்லது நடக்கும் என்பார்களோ....!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஒரு விளக்கம்
posted by salai s nawas (singapore) [23 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26430

நகர் மன்ற உறுபினர்களே, உப்பு தின்னவன் தண்ணி குடித்தே ஆவான். நீங்கள் மாறபோவதில்லை. அசிங்கங்கள் சந்திக்கு வந்து விட்டன. காலம்,மாறும் , நீங்கள் எய்த அம்பு திரும்பி வந்து உங்களையே தாக்கும் காலம் விரைவில். குறைந்த பட்சம் பற்ற சமுதாய மக்களிடமிருந்து ஒற்றுமையாவது கற்றுக்கொள்ளுங்கள்

- மண்ணின் மைந்தன்

Moderator: காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்குத் தொடர்பில்லாத கருத்துக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15.
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [23 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26433

தலைவியின் இரண்டரை மணிநேர உரைக்கு வள்ளுவனின் குரல் போல் இரண்டடியில் தெளிவான விளக்கம் தந்த உறுப்பினருக்கு நன்றி....

நாங்க இப்ப ரொம்ப "தெளிவா" இருக்கின்றோம்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved