Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:46:11 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 113
#KOTWART01113
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 9, 2017
கண் கண்ட மாமேதை!
இந்த பக்கம் 5983 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எனது கண்ணியத்திற்குரிய பாசமிக்க ஆசிரியத் தந்தை ஷைக் அப்துல்லாஹ் ஆலிம் (பேஷ் இமாம்) அவர்களின் வஃபாத் செய்தியானது நமக்கெல்லாம் தாங்க முடியாத அதிர்ச்சியும் மிகுந்த பேரிழப்புமாகும். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

நமதூரின் அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வியைக் கடந்த 46 வருடங்களாகப் புகட்டி வருவதோடு, அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் பல திறமைகளை வெளிக்கொணர்ந்து, மிளிரச் செய்து, தாய்ச்சபை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் சேய் சபையாக இயங்கி வரும் - ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் துவங்கிட காரண கர்த்தா இவர்களாவார்கள்.

அருள் மறையாம் திருக்குர்ஆனைப் பிழையின்றி ஓதக் கற்றுக்கொடுப்பதில் தனக்கென தனி வழியைக் கொண்டிருந்தவர்கள். அலிஃப், பா முதல் அருள் மறை குர்ஆனின் இறுதி வரை அன்னவர்களிடமே நானும் ஓதி முடித்தேன். என் போன்ற சக நண்பர்கள் அவர்களிடம் கால் மடித்து குர்ஆன் ஓதியது மட்டுமல்லாது, மார்க்க அடிப்படைக் கல்வி, தக்க ஷுரூத், அதபு மாலை, அஹ்காமுஷ் ஷாஃபிஇய்யா, தொழுகைக்காக உளூ செய்யும் முறை, தொழும் முறை என - மார்க்கம் சார்ந்த அனைத்து அடிப்படைகளையும், சின்னங்சிறு பருவத்தில் பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைத்தவர்கள்.

ஒழுக்க நெறிமுறைகளைத் தன்னலமின்றி போதித்த மகான் அவர்களிடம் பயின்ற மாணவர்கள் பலர் இன்று தலைசிறந்த ஆலிம்களாக, ஹாஃபிழ்களாகத் திகழ்ந்து வருகின்றனர். நான் ஹாஃபிழாக, ஆலிமாக ஆவதற்கும் அஸ்திவாரம் அமைத்துத் தந்தது இந்த மகான் அவர்கள்தான்! இன்று எல்லோராலும் அறியப்பட்ட - கிழக்குப் பகுதியின் எண்ணற்ற ஆலிம்களும், ஹாஃபிழ்களும், நல்லொழுக்கம் நிறையப் பெற்ற சகோதரர்களும் - இந்த மஹானின் அன்பு மாணவர்கள்.

இவர்களிடம் கால் மடித்துப் பாடம் கற்றோர் இன்று எந்த நிலையில், எங்கு இருந்தாலும் - ஊர் வந்தால் ஒரு முறையேனும் அவர்களை நேரில் சந்தித்து, துஆவைப் பெற்று வருவார்கள். அந்த வரிசையில், அவர்களைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் கிடைத்தது. என் சகோதரி மகன் (மருமகன்) எஸ்.கே.ஸாலிஹ் அவர்களை அழைத்துக்கொண்டு நான் சென்று வந்தேன்.





அவர்களின் பள்ளி மாணவனாக நான் இருந்தபோதே - அல்குர்ஆனில் “சூரத்து பனீ இஸ்ராஈல்“ அத்தியாயத்தில், “ஸுன்னத்த மன் கத் அர்ஸல்னா“ என்று துவங்கும் வசனங்களை தேனினுமினிய அவர்களது குரலால் அழகுற ஓதிக் காட்டி, “இதனை நன்றாகப் பயிற்சி செய்து வா! நீ வருங்காலத்தில் ஒரு ‘காரீயாக’ வரவேண்டும்!!” என உரிமையுடன் தொடர்ந்து சொல்லி, எனக்கு தஜ்வீதையும், கிராஅத்தையும் முறையாகப் பயிற்சியளித்தவர்கள்.

(மக்தப்) குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் அக்காலத்திலேயே “நவீனத்தையும், புரட்சியையும்” ஏற்படுத்தியவர்கள்.

மர்ஹூம் செய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்களின் சுலைமானியா கார்பரேஷனிலிருந்து ட்யூப் லைட் அட்டைப் பெட்டியை எடுத்து வந்து, அதனைப் பெரிய நீண்ட போர்டாக ஆக்கி, அதில் பலகை சாயம், கலம் (எழுதுகோல்) கொண்டு, கல்வியின் சிறப்பு, அரபி பைத், ஹதீஸ்கள், அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை அழகு அரபி, அருமைத் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதி, பள்ளியில் தொங்க விட்டு, மதரசா முடியும் தருவாயில் அதனை மாணர்கள் முறைவைத்துப் படிக்கச் செய்வார்கள்.

புதிய வீடுகளுக்கு முகப்பிலும், வீட்டு உள்பகுதில் சுவரிலும் பதிப்பதற்காக “ஹாதா மின் ஃபழ்லி ரப்பீ”, “அஸ்ஸலாமு அலைக்கும்”, போன்ற வாசகங்களையும், இதர துஆ, ஸலவாத்துகளையும் அட்டையில் அரபி “காலிகிராபிக்” முறைப்படி, எழுத்து வடிவில் எழுதி, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கிப் பொதுசேவை செய்தவர்கள்தான் இந்த மஹான்.

ஒடுக்கத்துப் புதன் வரும்போது பீங்கானில் எழுதியும்,கரைத்து குடிப்பதற்கும்,தலையில் தேய்த்து குளிப்பதற்கும் பனை ஓலையில் எழுதி ஒவ்வொரு மாணவர்களின் வீட்டுக்கும் அனுப்புவார்கள். இவர்களது கைவண்ணத்தில் மிளிரும் அரபி எழுத்துக்கள், தரமிக்க ஒரு கலைஞனின் ஓவியம் போன்று இருக்கும். குருவித்துறைப் பள்ளியில் உள்ள பல கிதாபுகளில் இன்றும் அவர்களின் கைவண்ணம் ஒளிர்வதைக் காணலாம்.

இவர்களது கைவண்ணத்தில் மிளிரும் அரபி எழுத்துக்கள், தரமிக்க ஒரு கலைஞனின் ஓவியம் போன்று இருக்கும். குருவித்துறைப் பள்ளியில் உள்ள பல கிதாபுகளில் இன்றும் அவர்களின் கைவண்ணம் ஒளிர்வதைக் காணலாம்.

40 வருட காலம் எமது முஹல்லா குருவித்துறைப் பள்ளியில் இமாமாகப் பணியாற்றினார்கள் என்பது இறையில்லத்தில் செய்த மாபெரும் மார்க்கச் சேவையாகும். இவ்வாறாக, அன்னாரின் சன்மார்க்க தீன் சேவைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

95 வயது என்று நிறைவான வாழ்வை வாழ்ந்து, நூற்றாண்டின் விளிம்பில் நின்றுகொண்டு, அண்மையில் நம்மை விட்டும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், பெரிய முத்துவாப்பா தைக்கா இருக்கும் காலமெல்லாம் பேஷ் இமாம் அவர்களின் பெயரும் நிலைத்திருக்கும். என்னதான் 95 வயது வரை வாழ்ந்து மறைந்தாலும், ஒரு குடும்பத்தலைவரை, திறமை மிக்க நல்லாசிரியரை இழந்து விடுவது என்பது மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

நிகழ்காலத்தில் நம் கண்ணாரக் கண்ட இறைநேசர் இவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!

காலமெல்லாம் பள்ளிவாசலே தரிப்பிடம் என்றிருந்த அவர்கள், தன் வயோதிகம் - இயலாமை காரணமாக எங்கள் குருவித்துறைப் பள்ளியின் இமாமத் பொறுப்பை விட்டும் விடைபெற்றுக் கொண்டார்கள் என்றாலும், “பேஷ் இமாம் என்றால், அந்தப் பெயர் நானிருக்கும் வரை எனக்குத்தான்!” என்று உரிமையுடன் கூறுவார்கள்.

எல்லாம்வல்ல அல்லாஹ் அன்னவர்கள் தம் வாழ்வில் அறிந்தோ - அறியாமலோ செய்த பாவப் பிழைகளைத் தனதருளால் மன்னித்து, மண்ணறையைப் பிரகாசமாகி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனபதியில் - அண்ணலம் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) ஏனைய நபிமார்கள் - ஸித்தீக்கீன்கள் - ஷுஹதாக்கள் - ஸாலிஹீன்களுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக.!

எங்கள் உஸ்தாது அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் அல்லாஹ் மேலான ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

பின்குறிப்பு: மேற்படி வாசகங்களை, எனது உஸ்தாத் பெருந்தகை அவர்களின் வஃபாத் செய்தியின் கீழ் வாசகர் கருத்தாகவே பதிவிட முயற்சித்தேன். ஆனால், இத்தளத்தின் அளவு எல்லைக்குள் அது இல்லாத காரணத்தால், இதைச் சிறப்புக் கட்டுரையாக்கிடும் எனது விருப்பத்தை ஏற்று வெளியிட்டமைக்காக, காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நிர்வாகத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஸாக்குமுல்லாஹு கைரா!

இப்படிக்கு,
அன்னாரின் மாணவன்:
எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இறைவா இதை விட மெளனத்தை எங்களுக்கு தா
posted by: mackie noohuthambi (kayalpatnam ) on 10 February 2017
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45216

மருமகன் ஹாஜா முஹிய்யித்தீன் மஹ்லரி அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக மறைந்த ஷேய்க் அப்துல்லாஹ் ஆலிம் மாமா அவர்களை பற்றிய சிறப்புக் கட்டுரை சிறப்பாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள். 96 வருடங்கள் ஒரு நிறைவான வாழ்வு வாழ்வு வாழ்ந்து விட்டு சென்றிருக்கும் மாமா அவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.

ஆனால் அவர்கள் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று அரசியல் தலைவர்கள் சொல்வது போல் நாம் சொல்லக் கூடாது.ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்றும் சொல்லக் கூடாது. அப்படியானால் எப்படித்தான் அவர்கள் மறைவைப் பற்றி சொல்வது என்றால் அதற்கு ஸஹாபாக்கள் வாழ்க்கையில் ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது.

அபூ ஸலமா உம்மு ஸலமா என்று ஒரு தம்பதிகள். இவர்கள் வாழ்ந்தது போல் வாழ வெண்டும் என்று ஆசைப் படுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படி ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்த தம்பதிகள். அபூ ஸலமா அவர்கள் வபாத்தாகிறார்கள். உம்மு சலாமா அவர்களுக்கு பெரிய கவலை. இனி என்ன செய்யப் போகிறோம். இப்படி ஒரு கணவர் இப்பூவுலகில் கிடைக்க மாட்டார்கள் என்று பெருந் கவலையில் இருந்த போது அவர்களுக்கு நபிகள் நாயகம் அவர்கள் கேட்க சொன்ன து ஆ நினைவுக்கு வருகிறது.

நாக்கு பிரியமான ஒன்றை இழந்து விட்டால், யா அல்லாஹ் இதைவிட மேலான ஒன்றை எனக்கு தருவாயாக என்று து ஆ கேட்கவேண்டுமாம். அதெப்படி சாத்தியம் என்று அவர்கள் நினைத்தபோது, நபியவர்கள் சொன்னால் அது பொய்யாகாது என்ற அழுத்தமான நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த ஒரே காரணத்துக்காக நபியவர்கள் சொன்னார்கள் ஓதுகிறேன் அல்லாஹ்விடம் கேட்கிறேன் என்ற நிய்யத்துடன் அவர்கள் து ஆ கேட்கிறார்கள்.

நாட்கள் ஓடுகின்றன,, திடீரென்று ஒரு தூது வருகிறது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஸலமா அவர்களை மணமுடிக்க விரும்பும் தூது அது. உம்மு ஸலமா அவர்களுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. அவர்கள் காதுகளில் சொல்லப் படும் செய்தி எவ்வளவு இனிமையானது, அல்ஹம்து லில்லாஹ் அவர்கள் பூரண சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஆம் அல்லாஹ்வின் ஹபீப் உம்மு ஸலமா அவர்களின் ஹபீபாக ஆகிறார்கள். இந்த செய்தியை உங்களை போன்ற உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

எனவே நிரந்தரமாக ''பேஷ் இமாம்'' என்றே மரணத்துக்கு பிறகும் நாம் அழைக்கின்ற பாசத்துக்குரிய மாமா அவர்களைவிட மேலான ஒருவரை அல்லாஹ் நமக்கு தரவேண்டும் என்று உங்களுடன் நானும் சேர்ந்து பிரார்த்திக்கிறேன். அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. விழுதுகளைத்தந்து விடைபெற்ற விருட்சம்.
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 15 February 2017
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45234

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் நாம் நம்கண் காணக்கண்ட மாமேதை பல பழுதில்லாத சிகரங்களை விழுதுகளாகத்தந்து விடைபெற்ற விருட்சம் நமது பேஷ் இமாம் ஷைக் அப்துல்லாஹ் ஆலிம் பெருந்தகையவர்கள் இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

ஒருமுறை மத்ரஸா ஹாமிதியா விழாவில் புதிதாக இணைந்த அருள்மறை புனித குர்ஆன் மனனப்பிரிவுக்கு மாணவச்சிறார்களுக்கு அவர்களை சுண்டியிழுக்க தூண்டிலில்லாது வாண்டுகளை எடுத்துவைத்த அறிவுரையின் ஒருபகுதி

இதோ.

குர்ஆனை மனனம் செய்யும் ஹாஃபிழீன்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அல்லாஹ் இம்மையிலும் இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையிலும் எப்படி கண்ணியப்படுத்துவானென்பதை மிகத்தெளிவாக விளக்கியது

ஒருமலர் தென்சொட்ட,ச்சொட்ட வாய்மலர்ந்தது போலிருந்தது அன்று அந்த சக சிறுமானாக்களோடு வாய்பார்த்ததில் நானும் ஒருவன் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அது ஒருகொடுப்பினை அல்ஹம்துலில்லாஹ் அப்படியிருக்கும் நம் பேஷ் இமாமின் அணுகுமுறை தீனாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அழகாக தேனாக வெளிவந்து விஷயத்தை எடுத்துவைக்கும் மாஷா அல்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் அந்த உயர்வான கிரீடங்களையும் மகுடங்களையும் தீன்வழியில் பயணிக்கும் அனைவருக்கும் சூட்டி மகிழ்விப்பானாக ஆமீன்

இந்தக்கட்டுரையால் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ நம்மை இறையடிசேர்ந்துவிட்ட பேஷ் இமாம் அவர்களின் நினைவுகளோடு ஒரு அழகான பயணத்தைத்தந்திருக்கிறார்கள் ஜஃஜாக்கல்லாஹ் ஹைர் மச்சான்

உங்களிடம் நிறைய நல்ல,நல்ல விஷயங்களும் நகைச்சுவை நிறைந்த விஷயங்களிருக்கிறதென்பது நம்மில் நிறையபேருக்குத்தெரியும் அதையும் படைப்புகளாக இத்தளத்தில் பதியுங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றியைத்தருவான் ஆமீன்

ஏக நாயன் ரஹ்மான் அவனுடைய நேரான நம் இமாம் அவர்கள் கற்றுத்தந்த வழியில் சென்று அவர்களைப்போன்ற இமாம்கள் நம்மில் உருவாக்கவும் நம்மால் உருவுவாக்கவும் அந்த வழியில் அவனைஅடையவும் நமக்கும்,நம்சந்ததிகளுக்கும் அருளிபாலிப்பானாக ஆமீன்

மர்ஹூம் அவர்களின் எல்லா நல்லமல்களையும் ஏற்று அறிந்தோ,அறியாமலோ செய்த பாவ,பிழைகளை பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா நாளைமறுமையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் பரிந்துரையோடு அவனுடைய காட்ச்சியுடன் மேலான சுவனத்தில் அவர்களோடு நம்மையும் இருக்கச்செய்வானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையையும்,அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பார்க்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved