Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:52:06 AM
திங்கள் | 28 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1915, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0815:2818:0419:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:53
மறைவு17:56மறைவு15:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4319:07
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 114
#KOTWART01114
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 15, 2017
விருந்துபசரிப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை!
இந்த பக்கம் 9834 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அஸ்ஸலாமு அலைக்கும் 25 வருடத்திற்கு முன் நடந்த ஓர் அழகிய நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக கூட பிறந்த சகோதரர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாயல் இருக்கும். ஆனால் ஒரே மாதிரியான குணம், நிறம், பழக்க வழக்கம் இருப்பதில்லை. அதேபோல்தான் என் வீட்டில் நாங்கள் மூன்று சகோதரர்கள்.. மூவருக்கும் வெவ்வேறு விதமான தனித்தன்மைகள்...

என்னுடைய மூத்த சகோதர் இந்த உலக விஷயங்களில் அதிக தாக்கம் இல்லாதவர்.. காயல்பட்டினத்திலே குர்ஆன் மனனம் முடித்து விட்டு லால்பேட்டை அரபிக் கல்லூரியில் ஆலீம் படிப்பை தொடர்ந்தார்.. கல்லூரி விடுமுறையில் சகோதரர் காயல்பட்டினம் வந்திருந்தார்.. மீண்டும் லால்பேட்டை செல்ல இருந்த சகோதரரிடம் என் தாயார் சில அறிவுரைகளைச் சொன்னார். அத்தோடு, “பள்ளி விடுமுறையில் இருக்கும் உன் தம்பியையும் (நான்தான்!) ஒரு வாரப் பேச்சுக்கு அழைத்துச் செல்!” என்று சொன்னார்...

ஏற்றுக்கொண்ட சகோதரரை கையில் சில நூறுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.. காயல்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி சென்றோம். அங்கிருந்து இரவில் திருவள்ளுவர் பஸ்ஸில் ஏறி காலையில் தஞ்சாவூர் போய் சேர்ந்தோம்.

தஞ்சாவூரில் இறங்கி தேநீர் அருந்தலாம் என் சகோதரர் பாக்கட்டில் கைவிட பத்து பைசா கூட இல்லை... பர்ஸ் தவறிவிட்டது... திக்குச் திசை தெரியாமல் நின்றபோது அருகில் நின்றவரிடம் பள்ளிவாசல் முகவரி கேட்டுப் போய்ச் சேர்ந்தோம்.

நடக்கும் தூரத்திலேயே பள்ளி அமைந்திருந்தது.. பள்ளியில் ஓய்வு எடுத்தோம்.. காலை 11 மணி அளவில் முஅத்தின் வந்து விவரம் கேட்டார்.

“சரி இருங்கள்! நிர்வாகிகள் வரட்டும்!!” என்றார்.

கடுமையான பசியில் இருந்தாலும் கேட்க மனம் இடம் கொடுக்கவில்லை... ஒவ்வொருவராக வர ஜமாஅத் தொடங்கியது. ஜமாஅத் முடிந்தவுடன் திக்ருகளும் முடிந்தது. இமாம் துஆ ஓத ஆரம்பிக்க இருந்தபோது என் சகோதரர் சற்றும் எதிர்பாராமல் இமாம் அருகில் நின்று மக்களைப் பார்த்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஆரம்பித்து நடந்ததை சொல்லி உதவுமாறு கேட்டு கொண்டார்.

சிரிப்பும், அதிர்ச்சியும் ஆன நான் குனிந்த தலை நிமிராமல் இருந்தேன்.. இன்றும் அந்த பசுமையான நிகழ்வை நினைவுபடுத்தி சிரித்ததுண்டு.

அந்தக் காலத்திலேயே அப்பள்ளியில் பைத்துல்மால் அமைப்பு இருந்தது. அதன் உதவி மூலம் கும்பகோணம், காட்டு மன்னார்குடி வழியாக லால்பேட்டையில் இறங்கினோம். எங்கும் சிவப்புக் கம்பளம் விரித்தது போல அழகிய செம்மண் தரைகள்.

சகோதரிடம், “என்னங்க பஸ் ஸ்டாப் மட்டும்தான் இருந்தது... ஊரைக் காணவில்லை?” என்றேன். சகோதரர் “ஊர் உள்ளே இருக்கிறது, வா!” என்றழைக்க, லால்பேட்டை மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரிக்குப் போய்ச் சேர்ந்தோம்.











மத்ரஸா வெளியே ரொட்டிக் கடையில் லால்பேட்டை அமைப்பில் இருந்த புரோட்டாவை சால்னா துணையுடன் சாப்பிட்டோம். மத்ரஸாவின் நாஜிர் கண்ணியத்துக்குறிய ஜக்கரியா மவ்லவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அமானி ஹஸ்ரத் மகன் முஹம்மத் ஹாஃபிழ் தந்த விருந்து மறக்க முடியாதது.

மத்ரஸாவின் நிகழ்வுகளை அவதானித்தேன். காலை சுபுஹு தொழுகை முடிந்ததும் தேனீர் மற்றும் காலை சாப்பாட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. முன்னூறுக்கும் மேற்பட்ட நம்பர்கள் ஒட்டிய டிபன் கேரியர்கள் கொண்ட வண்டியைக் கண்டேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு மாணவனுக்கு மதியம், இரவு என இரண்டு வீட்டில் சாப்பாடு வழங்கும் நிகழ்வைக் கண்டு அதிர்ந்து போனேன். தமிழகத்தில் எங்கும் காண முடியாத பெரிய நன்மைகளைக் கொள்ளையடிக்கும் பரக்கத்தான ஊராக இருக்கிறது. என் சகோதரருக்கு வந்த டிபனில், புளியாணத்தில் அவிச்ச முட்டையை கண்டேன்.

ஒரேயொரு நாள் யாருக்காவது சாப்பாடு கொடுப்பதென்பதே சிரமம். ஆனால் ஒவ்வொரு நாளும் தன் பிள்ளைக்கு கொடுப்பது போல் வெளியூரைச் சார்ந்த மாணவர்களுக்கு இரு வேளை உணவளிப்பதை வாழ்த்த வார்த்தையில்லை.

மொத்தத்தில் இறை அருளும் இயற்கை சுழழும் நிறைந்த அந்த வெத்தலை கொடிக்கால் நிறைந்த ஊரில் சில நாட்கள் தங்கும் பாக்கியத்தைப் பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்கிறேன். அந்தப் பசுமையான நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்த சந்தோசத்தில் முடிக்கிறேன்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: mohamedyounus (Dubai) on 15 November 2017
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45904

அருமையான அனுபவங்கள் .

விருந்தோம்பல் என்பது இயற்கையாகவே வருவது . செயற்கையான விருந்தோம்பல் முகத்தில் தெரிந்து விடும்.

இஸ்லாம் விருந்தோம்பலை விரும்பும் அதே நேரத்தில் விருந்துக்கு செல்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி சொல்லுகிறது .

லால் பேட்டை இத்தகைய விருந்தோம்பலுக்கு சிறப்பு பெற்றது என்பதை உங்கள் கட்டுரையில் இருந்து காண முடிகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: vilack sma (Jeddah) on 15 November 2017
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45905

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் ... இது நடைமுறையில் உள்ள ஒரு சொல்வழக்கு . ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது வருடம் முழுவதும் மதரஸாவில் படிக்கும் மாணவர்களுக்கு உணவளிப்பதுபற்றி . நல்ல காரியம்தான் . ( ஒருவேளை அந்த மதராசாவிற்கு மாணவர்களை பராமரிக்கும் அளவிற்கு போதிய வருமானம் இல்லாமல் இருக்கலாம் . )

பொதுவாக மார்க்க கல்வி பயில மதராசாவிற்கு வரும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது . உலக கல்வி பயில லட்சங்களை லஞ்சமாகவும் , ஆயிரங்களை கட்டணமாகவும் கொடுக்கும் நாம் , மார்க்க கல்வி பயில இலவசத்தை எதிர்பார்க்கிறோம் . கட்டணம் கொடுத்து மார்க்க கல்வி பயிலும் மதரசாக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை .

பள்ளிவாசல்களில் வெளியூர்களில் இருந்து வந்து வேலைபார்க்கும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு அந்தந்த ஜமாத்தை சார்ந்த வீடுகளில் இருந்து உணவு கொடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் . இன்றும் நமதூரில் இது நடைமுறையில் உள்ளது .

அதுபோன்றுதான் லால்பேட்டையில் உள்ளது . புதுமை இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. matta madrasakkal
posted by: LANDMARK RAVANNA ABULHASAN (chennai) on 23 February 2018
IP: 171.*.*.* India | Comment Reference Number: 46021

Mr. Nizar, you have mentioned about Lalpettai Madhrasa. But I have visited many other madhrasas in Tamilnadu.Many Other Madhrasas also having same system of giving food daily by village people.

LANDMARK RAVANNA ABULHASAN.

நன்றி. நம்மூரில் அந்த வழக்கம் illai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: ரைசுல் இஸ்லாம் (Abu Dhabi ) on 19 November 2018
IP: 31.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46312

அன்பின் சகோதரர்களுக்கு,

சகோதரர்கள் சொல்வதுபோல வருமானம் இல்லாத மதரஸா அல்ல. தமிழகத்தில் மிகப் பெரும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் தன்னகத்தே கொண்ட மதரஸாக்களில் ஒன்று.

அதுபோல தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வேண்டுமானால் நீங்கள் மாணவர்களுக்கு உனவளிக்கும் முறையை அனைத்து இடங்களிலும் காணலாம்.

ஆனால் எங்கள் லால்பேட்டையில் இன்றல்ல, நேற்றல்ல 1862 ம் ஆண்டு முதல் இன்று வரை தொய்வில்லாமல் நடைபெறும் நடைமுறை.

தங்கள் வீட்டு பிள்ளைகள் போன்றே பாவிக்கும் மனநிலை இன்றளவும் உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved