Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:23:18 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 99
#KOTWEM99
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 2, 2013
இரத்த தாகமா இராம கோபாலா?

இந்த பக்கம் 3059 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



மதநல்லிணக்க விதை தூவி
மனித நேய வேர்ப் பிடிப்பில்
மலர்ந்து நிற்கும் அழகுச் செடி
மணக்கின்ற எங்கள் ஊர்...

சாதி மத பேதமின்றி
செத்தும் கொடை கொடுத்த
வள்ளல் சீதக்காதி
வழித்தோன்றல் நாங்களடா!

கயமை இங்கு இல்லை...அதனால்
காவல் நிலையம் இல்லை
மடமை இங்கு இல்லை... அதனால்
மதுக்கடை இங்கு இல்லை
சிறுமை இங்கு இல்லை... அதனால்
சினிமாத் தியேட்டர் இல்லை
மென்மை எங்கள் நெஞ்சில்..அதனால்
மதவெறி கொஞ்சமும் இல்லை..

வேற்றுமை இங்கு வெகுதூரம்
ஒற்றுமை எங்களின் அடையாளம்
பற்றுதலோடு வாழ்கின்றோம்
பறித்திடமுனைந்தால் அது தகுமோ?

கடல் மலை காடு கடந்து எமின்
உடல் விடும் வியர்வை உதிரத்தை
கடமை உணர்வுடன் தேசத்தின்
உடமை ஆக்கிடும் பணி செய்தோம்...

அன்னியச் செலவாணி பெருக்குதற்காய்
அந்நிய பூமியில் கிடக்கின்றோம்...
கண்ணாம் எங்கள் சொந்தங்களை
கணினியில் தொடர்பு கொள்கின்றோம்
புண்ணியவான்களே புரிந்திருந்தும்
எண்ணெயைத் தீயில் ஊற்றுவ தேன் ?

இரத்த தாகமா இராம கோபாலா
இரையாய் எம்மை ஆக்கிட ஆவலா?
பகைமை நிறைந்த உந்தன் கருத்துரை
பார்ப்பன தினமலர் ஏட்டில் பிரசுரம்...
இருந்தும் தலைவர் காதர் முஹைதீன்
பொறுமை நிறைந்த பதிலை பார்நீ!

இந்து கிருத்துவ முஸ்லிம்கள்
இணைந்தே வாழும் பூமியிது....
அறுத்திட நினைத்தால் பலிக்காது
அன்பால் கட்டிய கயிறு இது...

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இராமகோபாலனுக்கு நன்றி...!
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 03 August 2013
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29174

காவிகறைபடிந்த இராமகோபாலா நீர் திருவாய் மலர்ந்தளிய மன்னிக்கணும் உளறிய வார்த்தைகளால்தான் எமது கவிமகனின் இந்த அற்புத கவிதைவரிகள் எமக்கு கிட்டியது. உமக்கு பதிலடி கொடுத்த எங்கள் பேராசிரியரைத் தொடர்ந்து இக்கவிதை உமக்கு ....ப்படி. இந்த வயசான காலத்துலெ நீர் திருந்தாட்டி எப்ப திருந்த போகின்றீரோ...?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: M. S. Shah Jahan (Colombo) on 03 August 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 29177

அருமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Hafil S.H.Zainul Abideen (Ras Tanura) on 03 August 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29179

என்ன ஒரு அருமையான கவிதை. இதை ஒரு நோட்டீஸ் வடிவில் அச்சிட்டு நமதூர் பகுதியில் விநியோகிப்பதன் மூலம் நமது மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கும் இந்த அருமையான கருத்துக்களை அறிய செய்வதுடன் அவர்கள் நம் மீது வைத்திருக்கும் எண்ணங்களையும், நமது பாரம்பரிய சகோதர துவத்தையும் அவர்களின் மூலமாகவே வெளிக் கொண்டு வர நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பது எனது தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:SUPER.
posted by: s.e.m. abdul cader (bahain) on 03 August 2013
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29182

HAI WA, SUPER , KEEP IT UP, SMOOTH AS WELL AS STRONG STRIKE AGAINST THIS OLD CULPRITS ON HIS ROTTON VIEW POINTS AGAINST KAYALS AND MUSLIMS.INSHALLAH, ALMIGHTY ALLAH MAY LEAD HIM INTO LIGHT OF ISLAM BEFORE HIS END, OTHERWISE, HE WILL BE IN FLAMING HELL ALWAYS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கவி மகனாரே மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 03 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29185

கயமை இங்கு இல்லை...அதனால்
காவல் நிலையம் இல்லை

மடமை இங்கு இல்லை... அதனால்
மதுக்கடை இங்கு இல்லை

சிறுமை இங்கு இல்லை... அதனால்
சினிமாத் தியேட்டர் இல்லை

மென்மை எங்கள் நெஞ்சில்..அதனால்
மதவெறி கொஞ்சமும் இல்லை..

கவி மகனாரே மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள்....

இராம கோபால பெரியவருக்கு இந்த கவிமகனின் கவிதை வரிகளின் உண்மைகள் தெரியுமா...! புரியுமா...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ரத வெறியும் ரத்த வெறியும்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 03 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29186

ரத வெறியும் ரத்த வெறியும் கூட்டணி அமைத்தால் இப்படிதான் புலம்பி ஓட்டு கேட்க வேண்டும். ஒருவர் ரதம் ஏறி பள்ளிவாசலை உடைக்க சபதம் எடுத்தார் இன்னொருவர் ரத்த கொதிப்பேறி காயல்பட்டினம் பற்றி பேசுகிறார். கவிமகன் காதருக்கு பாடுவதற்கு களம் அமைத்துக் கொடுத்தார்..

புல்லாங்குழல் தந்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
என்று இந்து மத கவிஞர்கள் பாடுவார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதை நாங்கள் குறை சொல்வதில். அது அவர்கள் பக்தி.

இங்கே காயல்பட்டினத்தில் இஸ்லாத்தை எங்களுக்கு ஒரு மதமாக அல்ல, வாழ்க்கை நெறியாக அல்லாஹ்வை எப்போதும் புகழ்ந்து பாடுவோம். அந்த வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டி முஸ்லிம்களை மட்டுமல்ல, ராம கோபாலன் போன்ற மாற்று மதத்தினரையும் மனித நேயத்துடன் வாழ சொன்ன வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகத்தை சுந்தர தமிழினில் பாட்டெடுத்து பாடி தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறோம், அப்படிப்பட்ட காயல்பட்டினத்தையா தீவிரவாதத்துக்கு மின்னஞ்சில் அனுப்பப்படுகிறது என்று சொன்னார்.

அவராக சொல்லவில்லை அவர் கூட்டணி சேர்ந்துள்ள காட்டேரிகள், ரத்த வெறியில் பாபர் மசூதியை உடைத்தவர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்களே அவர்கள் உசுப்பி விட்டு பார்க்கிறார்கள், இந்த தமிழ் மண்ணில் பிறந்த ஒருவனை வைத்து இந்த மத நல்லிணக்க மாநிலத்தின் இஸ்லாமிய தலை நகரை அசைத்துப் பார்க்கிறார்கள்.

பிரதமர் நாற்காலிக்கு கனவு கண்டு ஓடு காலியாக போனவர்கள். அந்த கனவுடன் இன்னொருவர் வலம்வருகிறாரே குஜராத் நரபலி நாயகன் இவர்களின் xerox நகலாக வலம் வர வைத்திருக்கிறார்கள் இந்த ராமகோபாலன்.அவர்களை. பாவம்.

வேண்டாம் விஷ பரீட்சை. உங்கள் வயது முதிர்ந்து விட்டது. நீங்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் வசைபாடும் காயல்பட்டினதுக்கே வந்து இங்குள்ள இஸ்லாமிய ஆன்மீக தலைவர்களின் முன் "லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுன் ரசூலுல்லாஹ்" என்ற ஓரிறை கொள்கை மந்திரத்தை சொல்லி உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள். சுவர்க்கத்தில் உங்களை நுழைய வைக்கும் சாவி அது.

வாருங்கள் ராமனின் சீடரே, உங்கள் ராமரே ஓரிறை கொள்கை முழக்கத்தை முழங்கி உயிர் நீத்தார் என்ற உண்மை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. .பெரியவரின் அணியாமான கருத்து
posted by: NIZAR (KAYALPATNAM) on 04 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29191

கவிமகனின் கவிதையில் மதநல்லிணக்க மலர் வாசமும், காயலின் உண்மைகளும் எதார்தமாக நிரம்பி உள்ளன. அதில் மத நல்லினக்கதை பறைசாற்றும் இறுதி நான்கு வரிகள் எல்லோரின் இதயத்தையும் தொட்டு நிற்பவை எனலாம்.

இந்த பெரியவரின் இந்த தகவலை புதிதாக அவதானிக்க கூடியவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் தருவதாக இருக்கும். அனால் இதை போன்ற ஆதராமற்ற,பிரச்சனைகலை உருவாக்கும் கருத்துக்களை பேட்டியில் சொல்வது இந்த பெரியவரின் வழமையான ஒன்றாகும். அதற்கு சரியான நேரத்தில் பதில் அளித்த பேராசிரியர் கூட இது இவருக்கு வழமையான ஒன்று என்று சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை போன்றோரின் கருத்துகளுக்கு முக்கியம் அளிக்காமல் இருப்பதுதான் சாமார்த்தியமான ஒன்றாகும். ஏனனில் இவரின் பேச்சை மாற்று மத சகோதரர்கள் சிறிது கூட பொருட்டாக எடுப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மனித உள்ளங்களை மதத்தின் பெயரால் கொம்பு சீவி பதவியை பெற துடிக்கும் அரசியல்வாதிகள் எண்ணம் கனவாகவே கலைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை எனலாம். ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by: Koman Babu (India) on 04 August 2013
IP: 49.*.*.* India | Comment Reference Number: 29200

அந்த போட்டோவை அப்புறபடுத்த வேண்டுகிறேன் ,இந்த புனித ரமலானில் நல்லவர்களின் ஜீனதான முகத்தை பார்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் !
posted by: K.S.A.JAMALUDEEN,ILAYANGUDI (PEOPLES REPUBLIC OF CHINA) on 11 August 2013
IP: 27.*.*.* China | Comment Reference Number: 29397

இன்றைக்கு நாட்டில் மனிதநேயம் தேய்ந்து வரக்காரணம் ராமகோபாலன் போன்ற எப்போதும் திருந்தாத ஜென்மங்கள் முஸ்லிம்கள் பற்றி எதையாவது, எப்பொழுதும் சொல்லிக்கொண்டு பொதுமக்களை குழப்பி நமது மீது சந்தேகங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதே. புலவர் ஜனாப் எஸ். எம். அப்துல்காதர் அவர்கள் கவிதை மூலம் சரியான சவுக்கடி கொடுத்தீர்கள் ! சபாஷ் !! [நான் முன்பு துபையில் பணிபுரிந்த காலத்தில், உங்களை கண்ட ஞாபகம் ]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved