Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:37:29 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 100
#KOTWEM100
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013
ஆஷிஷ் குமார்! சல்யூட் சார்...

இந்த பக்கம் 3371 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



கதிரவன் ஒருபோதும்
உதிப்பதுமில்லை... மறைவதுமில்லை...
சுழல்வது நாம்தான்...
அக்னி அணைவதுமில்லை...
அதன் குணம் மாறுவதுமில்லை

இயற்கை அன்னையின்
மார்பினை அறுக்கும்
எத்தர்கள் ஏய்ப்பது
எத்தனை நாளைக்கு?

இடம்தானே மாறுகிறது...
எண்ணங்கள்...?
எப்படி இருந்ததோ
அப்படியே இருக்கிறது
அவரிடமே பத்திரமாய்...

நகர்வதால் நதிக்கென்ன நஷ்டம்?
நனைவதால் நிலத்திற்கா கஷ்டம்?

மக்கள் மனதை கொள்ளை கொண்ட
மாவட்ட ஆட்சியர்
மணற்கொள்ளை மாஃபியாக்களால்
பணிமாற்றம்...
ஸ்டெர்லைட் முதல் டிசி டபிள்யு வரை
நச்சுப் பாம்புகளுக்கு கொண்டாட்டம்...

நிலவெளி மாற்றங்களால்
கடலின் கரைகள் மாறக் கூடும்...
அலைகளின் ஆரவாரம்?

மணலை அள்ளுவதால்
மக்களுக்கு நஷ்டமா?
இலஞ்சம் கொடுத்தால்
என்ன தவறு?
வேலை நடக்க வேண்டாமா?
கருத்து கந்தசாமிகள் கேள்வி?
குழந்தைக்காக கற்பை விற்கும்
கலிகாலப் பத்தினிகள்...

ஆட்சிகள் நிரந்தரம் அல்ல...
அதிகாரிகள்...?
ஆசிஷ்குமார்...சல்யுட் சார்!

புகைப்படம்:
சத்தியம் டிவி

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Mohamed Salih (Bangalore) on 13 August 2013
IP: 121.*.*.* India | Comment Reference Number: 29449

மிக அருமை ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: M.N.Sulaiman (Bangalore) on 13 August 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29451

கவிமகனாரின் கவிதை மழை மிகவும் அருமை...!!!

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...super
posted by: s.e.m abdul ader (bahrain) on 14 August 2013
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 29461

very good. keep it up, wish you all the best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 14 August 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29467

மந்திரிகளுக்கு கார் கதவை திறந்து விடும் கலெக்டர் மத்தியில் இவரைப்போன்ற சிலர் விதிவிலக்கு dcw விவகாரமாகட்டும் sterlitte விவகாரமாகட்டும் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் நடந்தார்

நமது ஊரைச்சார்ந்த பிரமுகர்கள் அல்லது kepa அமைப்பில் இருந்தாவது யாராவது அவரை சென்று சந்தித்து நமது நன்றிகளை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நமது சமுதாய மக்கள் மீது அவருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...கவிஞரின் ஆதங்கம் புரிகிறது
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 14 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29470

இவன் யாரென்று புரிகிறதா, இவன் தீ என்று தெரிகிறதா என்று விசுவரூபம் எடுத்து கவிமகன் பாடினாலும் அந்த பாடல் ரசிக்க கூடியதாக இருந்தாலும் சில் பொருட் சுவை குன்றி இருப்பதை வேதனையுடன் அவதானிக்கிறேன். கதிரவன் உதிப்பதும் இல்லை மறைவதும் இல்லை நாம்தான் சுழல்கிறோம் என்ற கவிஞரின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

vas shamsu thajree li musthaqarrin lahaa thaalika thaqdheerul azeezul aleem என்பதும் LAS SHAMSU YANBAGHEE LAHAA ANN DHUDHRIKAL QAMARA VALALAILU SAABIQUNNAHAAR என்பதும் இறை மறை வசனங்கள்.. கவிதைகள் படிப்பதற்கு சுவையாக இருந்தாலும் அது நமது இரத்த நாளங்களில் ஓடும் திருமறை வசனங்களுக்கு மாறுபட்டு இருந்து விடக் கூடாது என்பதாலேயே, எனது அநேகமான கருத்து விமர்சனங்களில் நான் குர் ஆன் ஹதீத் வசனங்களை தவிர்த்து கொள்கிறேன்.

IAS படிக்க முன்வாருங்கள் என்று நமதூர் மாணவர்களை சில பெரியவர்கள் அழைக்கும்போதெல்லாம் நான் முகம் சுளித்துக் கொள்வேன்.காரணம் இப்படி அதிரடி மாற்றங்கள் தான். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக நம்மவர்கள் இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அரசியல் சாக்கடையில் இந்த நல்லவர்களை தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதில் வல்லவர்கள் இந்த பணக்கார மாபியா கும்பல்கள்.அதற்கு நமது பிள்ளைகள் பலிகிடாவவது மட்டுமல்ல அவர்கள் காணாமல் போவார்கள். சிலவேளை உயிருடன் திரும்பி வரவும் மாட்டார்கள்.

சிந்தனைக்கு விட்டு விட்டேன், இனியும் ஒரு IAS பதவி நமக்கு தேவையா? அதற்கான மதிப்பு மரியாதை எல்லாம் காலாவதியான தந்தி சேவையை போல் ஆகிவிட்டது. கவிஞரின் பிற வரிகள் ரசிக்க தக்கவை. சுட்டிக் காட்ட நினைத்தேன், தவறிருந்தால் மன்னித்து அருளுங்கள், கவி மகனே....

"என்னை தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா? உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது . வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நன்றியும்,வேண்டுகோளும்!
posted by: kavimagan m.s.abdul kader (doha..qatar.) on 15 August 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29489

அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்....கவிதையை விமர்சித்த அனைவருக்கும் நன்றி!

மதிப்பிற்குரிய மக்கி நூஹுத் தம்பி காக்கா அவர்களுக்கு! எனது மார்க்க ஞானம் மிகக் குறைவு....சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...

அதே நேரம், இங்குள்ள தமிழ் உலமாக்கள் சிலரிடம் இந்தக் கவிதை வரிகளையும், தாங்கள் குறிப்பிட்டிருந்த இறைமறை வசனங்களையும் காட்டி, கருத்து கேட்ட போது, எனது கவிதை வரிகள், திருமறை வசனங்களுக்கு முரண்படவில்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது....

இதுகுறித்து தங்களது மேலான அபிப்ராயத்தை எதிர்பார்க்கிறேன்... உங்களுடன் விவாதம் செய்வதற்காக அல்ல.... தெரிந்து தெளிவு பெறுவதற்காக....

இந்த வசனங்களுக்கான விளக்கத்தை, நமது அறிஞர்கள் தெளிவு படுத்துவதையும் இணையத்தில் கண்டேன்.... இருந்தும் எனது சிற்றறிவிற்கு எந்த முரண்பாடும் பிடிபடவில்லை.....

ஆகையால் தயை கூர்ந்து, எனது மின்னஞ்சல் முகவரியில், விளக்கமாக எடுத்துரைத்து, என்னை வழிநடத்த அன்புடன் வேண்டுகிறேன்....

தங்களது அன்பிற்கு நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved