Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:18:30 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 98
#KOTWEM98
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 31, 2013
ஓசி, தூசி, ஏசி!

இந்த பக்கம் 2667 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலகலாவிய இணையதள காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (ரமழான் முபாரக் கூறி கொள்கிறேன்). நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மாதம் நான்கு கட்டுரை எழுத விருப்பம் (D.T.P. அச்சு எடுத்துத் தர போதிய ஆளில்லை) சின்னஞ்சிறு செய்திகளின் சிறப்பு பாகம் ஒன்றுக்கு பின் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

ஓசியினால் மனமகிழ்ச்சியா?

ஓசி என்ற ஆங்கில சொல்லுக்கு இலவசம் என்று பொருள். யார் இலவசம் தந்தாலும் அது ஓசி வகையைச் சார்ந்தது. ஓசி என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? தபால் சேவை தொடங்குவதற்கு முன் இங்கிலாந்தில் அரச குடும்பத்திற்கு செய்தி அனுப்பப்பட்ட முறையின் பெயர் ஓசி தபால் சேவையாகும். இதற்கு பிரத்தியேக தபால் தலை ஒட்டப்பட்டிருக்காது.

இந்த சேவை அனேகமாக 1800இல் நடந்திருக்க வேண்டும் என்று அறிகிறோம். இந்த சேவை குறித்து அறிய எண்சைக்கிளேபிடியா பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தில் காணமுடியும் அல்லது விகடன் வெளியிட்ட தமிழில் கலைக்களஞ்சியம் பாகம் ஒன்று முதல் மூன்று வரை தேடிப்பார்க்கலாம். நமதூர் அரசு நூலகத்தில் புதிய கட்டிடம் கட்டப்படுவதால் அது எங்கோ மறைந்து தூங்குகிறது தேடி சென்று ஆதாரத்துடன் தரமுயற்சித்தேன் முடியவில்லை.

ஓசி என்ற இலவச பொருட்கள் வழங்குதல் முறை சரிதானா?

இலவசமாக தரப்படும் அனைத்து பொருட்களின் பின்னணியில் மறைந்து இருக்கும் வார்த்தை ஓசிதான். இன்று அரசியல் வட்டாரத்தில் ஓட்டு வங்கியை தக்க வைக்க இலவச என்ற பொருட்களை கொடுத்து மக்களை திசை திருப்புகிறார்கள். தமிழகத்தில் திராவிட இயக்க வரிசையில் கலைஞர் ஆட்சியில் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, எரிவாய்வு அடுப்பு வழங்கி ஆட்சியை பிடித்தார் கலைஞர். அடுத்து வந்த அம்மா அரசும் மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் சைக்கிள், கணினி, ஆடு போன்ற பொருட்களையும் 20 கிலோ அரிசி என்று அடுக்கடுக்காய் இலவசங்களை கொடுத்து ஆட்சியை பிடித்தார். அம்மா அரசு பொதுவாக இலவசப் பொருட்கள் தருவதினால் மக்களை உழைக்கவிடாமல், சோம்பேறிகளாக ஆக்குவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

மக்களுக்கு தேவை, வேலைவாய்ப்பு கொடுத்து அதன் மூலம் ஊதியம் பெற வைத்து உழைத்த பணத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்ய வைக்கலாம். எந்த அரசியல்வாதிகளும் இலவசமாக பொருட்களை கொடுப்பதைத் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிக்குத் தக்கவாறு செயல்பட்டு, நாடு வளம் பெற மக்கள் நலம் பெற திட்டம் தீட்டி, அதை மக்கள் அனுபவித்தாலே ஆளும் கட்சிக்கு ஓட்டு வங்கி அரணாக நின்று வெற்றியை தேடித்தரலாம். மொத்தத்தில் இலவச பொருள் வழக்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

எங்கும் எதிலும் எப்போதும் தூசி

உலகிலேயே தூசி இல்லாத அழகு நகரம் லண்டன். அடுத்து சிங்கப்பூர் அந்த நாட்டு மக்கள் நாட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்க ஆரம்ப முதலே கல்வியோடு கலந்து கற்றுக் கொண்டதால் அந்த நாடுகள் தூய்மையாக விளங்குகின்றன. இந்தியாவில் தூசி அதிகம் நிறைந்த நகரம் கல்கத்தா (கோல்கத்தா). இந்நகரம் மக்கள் பெருக்கத்தோடு பல தொழிற்சாலை புகையோடு புகைமண்டலமாக வான்வெளி காட்சியாக தோன்றும் நான் 1976இல் கல்கத்தாவின் பழமை கட்டிடங்களை தூய்மையற்ற தூசி வீதிகளை நேரில் கண்டுள்ளேன்.

நகரங்களை துப்புரவாக வைக்கும்போது அந்நகரைக் காண உல்லாசப் பயணிகளும் வருகை தருவார்கள். அந்நகரத்தின் பொருளாதாரமும் வாழ்வதாரமும் உயர்நிலைக்குச் செல்லும். பொருளாதாரமும் வாழ்வாதாரமும் உயர்நிலைக்குச் செல்லும். தூசிதான் நோயின் பிறப்பிடமாக மாறுகிறது. எந்த நகரில் ஊரில் தெருக்களின் இரு பகுதிகளிலும் மணல் மண்டிக் கிடக்கிறதோ அங்கு வாகனம் செல்லும்போது தூசி கிளம்பி சாலையில் நடக்கும் மக்களின் நாசியை அடைந்து மொத்த உடலுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படுத்துகிறது.

தூசி ஓர் அலர்ஜி நோயை உருவாக்குகிறது. தூசி உடலில் படியும்போது உடல் பூராவும் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட மணல் புழுதி மணலாகி தூசி கிளம்பி சுகாதாரக் கேட்டை உண்டுபண்ணுகிறது. இதனால்தான் சுற்றுபுறத்தை தூய்மையாக்க மரம் நடச் சொல்கிறார்கள் மரம் செடிகளின் நுண்ணிய துவாரங்கள் தூசியை விரைவாக இழுத்து கொள்கிறது. இதனால் சுற்றுப்புறம் ஓரளவு பாதுகாக்கப்படும்.

தூசி விசயத்தை பெண்கள் கவனிப்பதில்லை ஏன்?

பெண்கள் தூசி விசயத்தை கவனம் செலுத்துவதில்லை. வீட்டை தினமும் பெருக்கும்போது குனிந்த நிலையில் பெருக்குகிறார்கள் தரை தூசி வேகமாக பெண்களின் மூக்கு துவாரத்தை வெகுவாக அடைகிறது. இதைத் தடுக்க பெண்ள் வீடு பெருக்கும் போது வெட்கப்படாமல் மூககை சுற்றிலும் ஒரு தடித்த துணியை பாதுகாப்புக்காக கட்டி கொள்ளலாம்.

சில வீடுகளில் கைக்குழந்தைகள் தொட்டில் அல்லது கட்டிலில் படுத்திருக்கும்போது அந்த அறையைப் பெருக்க முயற்சி எடுக்க கூடாது. கைக்குழந்தையை வேறு தூசி பாதிக்காத இடத்தில் படுக்க வைத்து விட்டு அந்த அறையை பெருக்கினால் கைக்குழந்தையை தூசி தாக்காது. இன்னும் சில பெண்கள் பழைய காலத்து பெரிய கட்டிலுக்குள் புகுந்து வாரம் ஒருமுறை பெருக்குகிறார்கள். இந்த மாதிரி பெண்களை வாரம் பூராவும் சேர்ந்த தூசி துகள்கள் வேகமாகத் தாக்குகிறது. உடலையும் ஆடைகளையும் தூசி ஆக்கிரமித்துக் கொள்கிறது.

வீட்டைப் பெருக்க பருத்தி ஆடைகளை பிரத்தியேகமாக வைத்துக் கொள்வது நலம். வீடு கூட்டி முடிந்ததும் முகம், கை, கால்களை சோப்பு போட்டு கழுவிக் கொள்வதுடன், கூட்டியபோது அணிந்த புடவையை அல்லது நைட்டியை கழற்றி அதைக் கழுவி விடுவது நல்லது. ஆரோக்கியமே சுகம் தரும். தூசி இல்லாத வீடாக வைத்துக் கொண்டால் வீட்டிலுள்ள அனைவருக்கும் நல்லது. ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

ஏசியில் தூங்குவது சரிதானா? சுகம் தானா?

நமதூரில் பெரும்பாலான வீடுகளிலுள்ள படுக்கை அறை குளிர்சாதனப் பெட்டி என்ற ஏசி வைத்து அதில் பகலிலும் இரவிலும் தூங்குகிறார்கள். இந்த மாதிரி ஏசியில் தூங்குவது கொஞ்ச நேரம் சுகம்தான் பகலில் இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்திருந்து வெளியே வரும் போது அனல் காற்று போல உடல் கதகதப்புடன் நெருப்பு காற்றுப் போல ஒரு தாக்கு ஏற்படுகிறது. அரபுலகில் அலுவலகம், வீடு, வாகனம் எல்லா இடத்திலும் ஏசி என்பதால் அதன் தாக்கம் நமக்கு தெரிவதில்லை. அரபுலகில் உள்ள அனல் காற்று பாலைவனத்து போக்கும் நாம் ஏசியை நாட வேண்டியதிருக்கிறது. சொந்த நாட்டில் ஏசி வைப்பதானால் அதற்கான ரெட்டிப்பான பண முதலீடு செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கான பிரத்தியேக மின்கட்டணம் வேறு அதிகப்படுகிறதை உணர்வதில்லை.

ஏசியில் இரவு 8 மணிநேரம் தூங்கிவிட்டு வெளியே வந்து மற்ற அறைகளுக்கு செல்லும்போது உடலில் ஒருவகை உஷ்ணக் காற்று போல தாக்கம் ஏற்படுகிறது. கொஞ்ச நேரம் சுகத்திற்கு ஆரோக்கிய குறைவான ஏசி வாழ்க்கை தேவையா? யோசிப்போம். வசதி வந்துள்ளது அதனால் நாங்கள் ஏசி வைத்துள்ளோம் என்று கூறலாம். அதன் கெடுதிகளை மட்டுமே எடுத்து வைக்கப்பட்டது; உங்களை தடுக்கவில்லை.

வாகனத்தில் ஏசி

சில வாகனத்தில் ஏசி உள்ளது. வாகனப் பயணம் முடிந்ததும் வெளியே வந்தால் உடல் சூடு அதிகமாகிறதை உணர முடிகிறது. ஏசி வைத்த வாகனத்தில் இரவு முழுவதும் படுத்து உறங்கிய சில நபர்களை மரணம் தழுவிச் சென்றதை பத்திரிக்கை வாயிலாக படித்தோம்.

காசைக் கரியாக்க, ஏசியை போட்டு இயற்கை சுகத்தை ஏன் வீணடித்து உடலை பாழ்படுத்த வேண்டும்? சுகம் என்பது இயற்கைக் காற்றிலும், தூய்மையான பகுதியிலுமே உள்ளது என்பதை உணர்த்தவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஆரோக்கிய வாழ்வே இனிய வாழ்வு அது நலம் தரும் உள்ளுறுப்புகளுக்கு பலம் தரும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:.மாமா எங்கே இருக்கிறீர்கள்?..
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 01 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29128

ஓசி, தூசி, ஏசி பற்றிய உங்கள் கட்டுரை, என்னை மீண்டும் ஒரு முறை அதை வாசி, நடைமுறை சாத்தியம்தானா யோசி என்று கேட்க வைத்தது.

நாம் இருக்கும் நாடு, அரசியல் வட்டம். சுற்று சூழல் வட்டம். நாம் வெளிநாட்டில் பணிபுரிந்து நமக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தூங்கிய பழக்கம் எல்லாம் நம்மை இந்த மூன்றுக்கும் அடிமையாக்கி வைத்துள்ளது.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக நம்மை நாம் எத்தனை நாள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதை செய்வதற்கு நமது ஊரில் நமது சமுதாயத்தில் நமது முஹல்லாவில், நமது தெருவில் முதல் முயற்சியை துவங்க வேண்டும். நடக்கிற காரியமா இது.

முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டாலும் ஒரு வேளை அது நடக்கலாம்.. ஆனால் ஒரு இந்தியன் ஓசி இல்லாமல் தூசி இல்லாமல் ஏசி இல்லாமல் வாழ ஆசைப்பட்டால் அது நடப்பது சந்தேகமே..NO CHANCE மாமா !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Vilack SMA (Zhe Cheng , Henan ) on 01 August 2013
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29130

ஓசி .... மனிதனின் உள்ளத்தூயமையை கெடுக்கிறது . தூசியும் ஏசியும் உடல் தூய்மையை கெடுக்கிறது . உண்மைதான் மாமா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கடுப்பேத்துறாங்க மை லார்ட்...!
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 01 August 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29132

ஓசி:

1. வங்கியில் பணம் செலுத்தும் போது சார் கொஞ்சம் பேனா தாங்க ப்ளீஸ் என கேட்பது.

2. இரயில் பயணத்தின் போது நாம் வார இதழ்கலை வாங்கி படித்து கொண்டிருக்க்கும் போது எதிரே உள்ள நபர் நம் கையிலிருக்கும் புத்தகத்தையே வைத்த கண் வாங்காமல் வெறித்து பார்ப்பதும் நாம் அவரை பார்த்தால் ஈளிப்பதும். கொஞ்சம் சடவு முறித்தால் புத்தகத்திற்காக கை நீட்டுவது.

3. முடிவெட்டும் கடையில் நாளிதழ் வாசிக்கும் நபரிடம் கொஞ்சம் பேப்பர் தாங்க ஹெட்டிங் மட்டும் படிச்சுட்டு தாரேன் என கேட்கும் போது நடுப் பக்கத்தை மட்டும் தருவது.

தூசி:

1. நம்ம தெருவுலெ ஒரு ஆட்டொ போனகூட போதும் அதுக்கு பின்னாடி ஒரு தூசு மண்டலமே கூட போகும். அப்ப லாரி போனா என்னகும்ன்னு நினைச்சு பார்ப்பது.

2. நூறு ரூபா கொடுத்து பைக்கை வாட்டர் சர்வீஸ் பண்ணி பளபளன்னு இருக்கும் போது தெருவுலெ நிறுத்தி வச்சு அஞ்சே நிமிஷத்துலெ பக்கத்து வீடு உடைக்கிற தூசி மொத்தமா பைக்கை அபிஷேகம் பண்ணுற போது.

3. செருப்பை கழுவி தொட்டுக் கொண்டு ஜாக்கிரதையா நடக்குறேன்னு மூன்று எட்டு வச்சதும் புழுதி மண்ணைக் கோதி விட ச்சே...என அலுத்துக் கொள்வது.

ஏஸி:

1. வேக்காடு தாங்க முடியாம வீடுக்குள்ளெ வந்து ஏஸியெ போட்டு கொஞ்ச நேரத்துலெ ஸ்பீட் அட்ஜஸ் பண்ணுறேன்னு தவறுதலாக ஆஃப் பட்டனை நச்சு அட...ச்சே! ன்னு தலையில் அடிச்சுகிறது. (கம்பிரஸர் ஆன் ஆக இனி அஞ்சு நிமிஷம் ஆகும்).

2. ஏ.டி.எம்.மெஷின் வச்சிருக்கிற அத்தனை கேபின்லெயும் ஏஸி இருக்கும் ஆனா ஓடாது. உள்ளே போய் பணமெடுத்துட்டு வெளியில் வரும் போது ஏஸியெ முறைத்துப் பார்த்துவிட்டு வருவது.

3. மாசக் கடைசியிலெ கரண்ட் பில் வந்ததும் இனி ஏசியே போட வேணாம்ன்னு ரெண்டு நாள் சபதமெடுப்பது.

இப்படி கடுப்பேத்தும் பல சம்பவங்கள் நம் அன்றாட வாழ்வில் நிகழ்வதும் ஒரு வகை கடுப்புதான். ALS மாமா சும்மா சொல்லக் கூடாது கலக்கிட்டீங்க...போங்க...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved