Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:44:20 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 206
#KOTWEM206
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 26, 2016
ஏ.எல்.எஸ். மாமா மரணத்தினூடே என்னுள் எழுந்த சிந்தனைகள்!

இந்த பக்கம் 2542 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஏ.எல்.எஸ். மாமா பற்றி எழுத்தாளர் சாளை பஷீரின் கட்டுரையை இன்று (26-09-2016)தான் படித்தேன். அதில் வரலாற்றை பாதுகாக்க முனையாத மனதிலிருந்துதான் வரலாற்றை அழிக்கும் உந்துதலும் அனிச்சையாகவே உதிக்கும் போலும்.

தாயிம்பள்ளி ஜமாஅத்தார்கள், கருத்தம்பி மரைக்காயர் தெருவாசிகள், ஊர்வாசிகள் ஏ.எல்.எஸ். மாமாவின் களஞ்சியங்களை சற்றும் தாமதிக்காமல் உரிய இழப்பீட்டு தொகை கொடுத்து பொதுச் சொத்தாக கையகப்படுத்த வேண்டும். அப்படி கையகப்படுத்தப்பட்டவற்றை மின்னணு முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற வாசகங்கள் என்னெஞ்சைத் துளைப்பது போல் உணர்ந்ததால் பிறந்த கட்டுரை இது.

என் தந்தையை இழந்தபோது எனக்கேற்பட்ட கைசேதம் போல மாமா அவர்களின் பிரிவாலும் துக்கம் என் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து கண்ணீர் கரை புரண்டோடியது.

அதனிடையே தட்டச்சில் என் கைகள் எத்தனை வரிகளை தட்டுகிறதோ அதையே இப்போது ஆக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு தியாகம் செய்தால்தான் ஒரு நன்மை செய்ய முடியும். தனது சொந்த வாழ்வில் பற்பல ஆசைகளை சுருக்கிக்கொண்டே மாமா போன்றவர்கள் பொதுவாழ்விற்காக தங்களை குர்பானி கொடுத்தார்கள்.

நாடறிந்த நல்லோர்களுக்கான நினைவுகளாக காயிதே மில்லத் அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் எனும் விதத்திலும்> அறிஞர் அண்ணா பெயரில் ஒரு லைப்ரரியாகவும் அரசாங்க செலவிலேயே கட்டிப் பாதுகாக்கப்படுகின்றன. அதிலிருந்து நாம் பெரும் பாடமென்ன?

காயல்கவி பிறைக்கொடியான் எஸ்.எம்.பி. மஹ்மூது ஹுசைன் மாமா, என் பாசத்திற்குரிய தந்தை எஸ்.கே.மாமா, இப்போது நம்மைப் பிரிந்துசென்ற ஏ.எல்.எஸ். மாமா போன்றோரின் ஆக்கங்களையும் புத்தகம் மற்றும் அரிய பல சேமிப்புகளையும் (MANUSCRIPTS) பாதுகhப்பதைத்தானே நமக்கு அவை கற்றுத்தருகின்றன?

செல்வச் சேமிப்பில் தம் காலங்களை கழித்து பல நல்ல காரியங்களுக்கு செலவிடுவோரின் முன்னுரிமைகளாக இவை மிளிராமல் போவதேனோ...? செல்வச் சேமிப்புகளைச் சுருக்கிக்கொண்டு, இருப்பதில் வாழ்ந்து தன்னிடம் இருந்த அறிவாற்றலை கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்களல்லவா இவர்கள் யாவரும்...?

என் தந்தையல்லாத இருவரையும் காணுமிடத்து என் தந்தையுடன் கழித்த காலங்களையும் அதிலேற்பட்ட நல்ல பல சந்தோஷ நிகழ்வுகளையும் அவர்கள் என்னிடம் கூற மறந்ததே இல்லை. இதில் ஏ.எல்.எஸ். மாமா அவர்கள், “ஒங்க வாப்பாவோட மவுத்து எனக்கெல்லாம் பேரிழப்பு!” எனச் சொல்லாமல் என்னிடம் விடைபெற்றதே இல்லை...

வரலாற்றை சற்று மீட்டிப்பார்க்கிறேன். என் மூத்த சகோதரியின் திருமண காலம் அது. வீட்டில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டு மொட்டை மாடிக்குச் செல்லும் அறையிலும் வழிநெடுக ஏணிப்படிகளிலும் எங்கள் வீட்டின் அலமாரியிலும் அலங்கரித்தவைகள் யாவும் என் பாசமிகு தந்தையின் அரிய பல நூல்களும் பேப்பர் கட்டிங்குகளும்தான்!

வெள்ளையடிக்க வீட்டை சுத்தம் செய்தபோது அவைகளில் சி(ப)ல எங்கள் வீட்டு கோட்டையையும் தாண்டி தெருவரை பரவிக்கிடந்தன. வெளியில் சென்றிருந்த தந்தை வந்து பார்த்ததும் அவர்கள் உள்ளம் என்னவானது என்பதை முகமும், பேச்சுக்களும் சொல்லிக்கொண்டிருந்தன. “என்னிடம் சொல்லியிருந்தால் நான் ஒதுக்கித் தந்திருப்பேனே...?” என மெல்லிய கோபத்தில் என்னருமைத் தாயாரிடம் கூறி, “தம்பி அதையெல்லாம் பொறுக்கு!” என என்னையும் கூறி தாமும் அவ்வேலையை செய்தார்கள்.

இன்னொரு சமையம் என் தங்கையின் திருமணத்தின்போது வீட்டையே காலி செய்யவேண்டியிருந்ததால், முடிந்த வரை சில புத்தகங்களை வேறொரு இடத்தில் பாதுகாத்து, மற்றவற்றை வீட்டின் தோட்டத்தில் உள்ள குடிலில் போட்டுவிட்டார்கள். அதை அப்படியே விடமனமின்றி பொறுக்கியபோது, அதிலிருந்தும் பல கிடைத்தற்கரிய நூல்கள் என் கரங்களில் சிக்கின. அருமை தந்தையின் அன்புக்கட்டளையை ஏற்று அவைகளை நான் புகுந்த இல்லத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறேன். ஏனையவற்றை என் மச்சான் சூஃபி இப்ராஹீம் - மாமாவின் வஸிய்யத்தாக சுமந்து பாதுகாத்து வருகிறார். என் சகோதரிகளும் சிலவற்றை தங்களது குட்டி லைப்ரரியில் அமர வைத்துள்ளனர்.

தந்தை வழியில் நானும் அவ்வப்போது புதுப்புது படைப்புகளை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்து வைப்பதில் கடந்த சில வருடங்கள் முன்பு வரை வீரியத்துடன் ஈடுபட்டிருந்தேன். இப்போது அவ்வாசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. காரணம் “மனிதர்களுக்கு பயன்தரவேண்டிய நூல்கள் கரையான்களுக்கல்லவா உணவாகிக் கொண்டிருக்கின்றன...?” என்ற கவலையால்தான்!

நம்மால் பாதுகாக்க முடியாதவற்றை பராமரிக்க நூலகங்கள் இருந்துவந்தாலும் புத்தக வாசிப்பைத் தூண்டும் ஆர்வமும் வாசிப்புகளின் மீதான ஆர்வமும் மக்களிடம் குறைந்து போனதை அடுத்து அவற்றைப் பாதுகாக்கும் எண்ணமும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துவிட்டன.

என் அலுவலகப் பணிக்காக நான் செல்லுமிடமெல்லாம் என் குடும்பத்துடன் ஒரு லைப்ரரியும் தனது எதிர்காலத்தை நினைத்து வருந்தியவாறே என்னோடு சேர்ந்து பயணித்து வருகிறது.

ஏ.எல்.எஸ். மாமாவைப் பற்றி ஏதோ கூற ஆரம்பித்து என்னைப் பற்றி தன் புராணம் பாடுவதாக தயவுசெய்து யாரும் எண்ணிக் கொள்ளாதீர்கள். நூல்களையும், பல அரிய பிரதிகளையும் அடுத்த தலைமுறையினரிடம் முறையாகவும், பொறுப்பாகவும் கையொப்படைப்பது யார் என்ற என் போன்றோரின் புலம்பல்களுக்கு விடைதேடும் வேண்டுதல்களாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜோக்குகள் பலவகையுண்டு. கத்தி ஜோக், கடி ஜோக், மொக்கை ஜோக் இப்படி. ஆனால் வேறு சில ஜோக்குகளும் இருக்கவே செய்கின்றன. சரியான நேரத்தில் அனைவரையும் கொள்ளென சிரிக்கவும் வைத்து அதன் கருத்துக்களை காலங்காலமாக கேட்பவர் மனதில் தங்கவிடுவது. இது மாதிரியான நகைச்சுவைகள் எல்லோராலும் செய்யமுடியாதவை.

என் தந்தை எஸ்.கே. அவர்கள் இந்த ரகம்தான். அவர்களின் நகைச்சுவைகள் எஸ்.கே.மாமா ஜோக்ஸ் என நூலாக ஆக்கிடுமளவு நிறைய ஜோக்குகளை அவர்களோடு ஆரம்ப காலம் முதலே நெருங்கிப்பழகி வந்த தீவுத்தெரு டீ.எஸ்.ஏ.இஸ்மாஈல் காக்கா எழுத்தாக்கிப் பாதுகாத்து வைத்துள்ளார்கள். யார் இதைச்செய்வார்கள்...?

இப்படி சிந்திக்க வைக்கும் சிரிப்புகளை பட்டென உரைக்கும் பின்னணியில் அவர்களின் இடைவிடாத புத்தகவாசிப்பும் ஜோக்ஸ்கள் குறித்த சிறு நூல்களையும் கூட வாங்கிப் படித்ததும் சிரிக்க வைத்து, சிந்திக்க வைக்கும் திறமைகளை சாத்தியப்படுத்திற்று எனலாம். Khuswantsingh Jokes என்ற ஒரு நூல் நீண்ட நாட்களாக என் தந்தையின் புத்தக அலமாரியை அலங்கரித்து வந்ததையும் நானறிவேன்.

வரலாற்றைப் படித்தால்தான் வரலாற்றைப் படைக்க முடியும் என்பார்கள். குர்ஆன் பற்பல வரலாறுகளை நமக்குச் சொல்வதன் மூலம் நம் வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கான அடிப்படைகளையும், காரணங்களையும் சொல்லித்தரும். காலத்தின் சங்கிலித்தொடரே வரலாறுகள் எனலாம்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னாள் அறிமுகம் செய்யப்பட ஐபோன் இன்றும் அதேபோல சந்தைகளில் மங்காப்புகழுடன் இருந்து வருவதற்கான காரணமே - அதனுள் உள்ள மென்பொருள் காலத்துக்கேற்றார் போல மேம்படுத்தப்படுவதனாலேயே ஆகும். அவ்வாறு செய்யாத கைபேசிகள் பல இன்று நம் நினைவைவிட்டும் மறைந்து போனதல்லவா...?

மீண்டும் நண்பர் சாளை பஷீரின் கருத்தாக இக்கட்டுரை மேலிட்ட அதே கருத்துக்களையே என் முடிவுரையாக்கி விடைபெறுகிறேன்.

வரலாற்றை பாதுகாக்க முனையாத மனதிலிருந்துதான் வரலாற்றை அழிக்கும் உந்துதலும் அனிச்சையாகவே உதிக்கும் போலும்.

தாயிம்பள்ளி ஜமாஅத்தார்கள், கருத்தம்பி மரைக்காயர் தெருவாசிகள், ஊர்வாசிகள் ஏ.எல்.எஸ்.. மாமாவின் களஞ்சியங்களை சற்றும் தாமதிக்காமல் உரிய இழப்பீட்டுத் தொகை கொடுத்து பொதுச் சொத்தாகக் கையகப்படுத்த வேண்டும். அப்படிக் கையகப்படுத்தப்பட்டவற்றை மின்னணு முறையில் பாதுகாக்க வேண்டும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Umm Nooh (Chennai) on 28 September 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 44724

ஒரு சமுதாயத்துக்கு அதன் வரலாறு மிக முக்கியம். நம் கல்விமுறை , மருத்துவம் விவசாயம் மற்றும் பல கலைகள் அழிக்கப்பட்டு மேற்கத்திய மோகம் திணிக்கப்பட்டதற்கு முழு முக்கிய காரணம் நம் வரலாறு நமக்கே தெரியாமல் அழிக்கப்பட்ட சோகம்.

இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து ஆரம்பித்த பேனா பயன்பாடு நம் தலைமுறையிலா அழிந்து போக வேண்டும்? சாபக்கேடு.

ஒரு ஆராய்ச்சிக்கு கூட இன்றைய தலைமுறை பல புத்தகங்களை ஆராய்வதில்லை. இணையத்தின் ஓற்றை வரி தேடல்களோடு முடிந்து விடுகின்றன இன்றைய அறிவுத்தாகம்.

நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டிய மிகப்பெரிய சொத்து எழுத்து மற்றும் வாசித்தல் கலைகள். கண்கெட்டபிறகுதான் இந்த ஞானோதயம். இனஷா அல்லாஹ் பாதுக்காப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மலர்ந்தும்,தேனிருந்தும்,ஜந்துக்களும்தென்றலும் வருடல் தராதபோது நெருடல்வருவது இயற்கை.
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 28 September 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44730

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

தன்னைப்பதியம்போட்டு ஒரு ரோஜாசெடி மலர்ந்து, மனம்தந்து, மணம்தந்து தேனூற அழைக்கும்போது ஜந்தும், தென்றலும் வருடித்தழுகவில்லையென்றால் செடியின், மலரின் மனதில் நெருடல்வருவது நியாயம்தானே

தன்வாழ்நாளை நூலில்கோர்த்து நூலாய்இழைத்து நூலகத்தைநெய்த அந்நூலகம் தன்நூல்களின் தாள்களைப்புரட்டாது, கண்கலமேயாது மனதில்பதியாது யாதொருபயனுமின்றி கரையான்கள்குடியேறியழிக்கும்போதும்கூட மானுடமனம் மனம்ததாழிட்டுக்கொண்டால் நூல்களின் மனம் நூல்பிரிந்துபோகாதோ எழுத்தாளர்கள் கோடிட்டுக்காட்டி பரிந்துரைசெய்யும் நிலைக்கு வாசிப்புமோகம் உதிர்ந்துவிட்டதே

ஒருகாலத்தில் கடிதம் வருமென தபால்காரர்கள் செய்தியாளர்களாய் மகிழ்ச்சித்தந்தார்கள் எழுதும் அந்தமகிழ்ச்சிகள் அந்தமாகிப்போய்விட்டனவே. இந்த உலகில் செய்தித்தாள்களுக்குமுன் கடிதப்போக்குவரத்தே முதல் ஊடகம் அந்த ஊடகம்தரும் ஊடல்சுகம் இனியெந்த ஊடகமும்தரமுடியாது அதை அனுபவித்தர்களுக்கேபுரியும்.

கணனிகள் கண்ணிவைத்துப்பிடித்துவிட்டனவே கணனிகளும் நமக்குப்பிடித்துப்போய்விட்டனவே அப்பாடியானால் காலத்திற்குத்தகுந்தாற்போல் கரையான்கள்அ தொடமுடியாத தேகணணிகளைக்கொண்டுதான் வசீகரிக்கவேண்டும். ஆமாம் நாம்முன்னோர்களின் அனைத்துப்படைப்புகளையும் அணைத்துப்பிடிக்கவேண்டும் அப்படிப்படிக்கும்போதே நமக்கும்,இன்றையதலைமுறையினருக்கும் அனைத்தும்பிடிக்கவரும்

எனவே அரியபடைப்புகளை நூலகங்கள்,பள்ளி,பள்ளிக்கூடங்களிலும் மின்னணுமூலம் பதிவேற்றி ஒவ்வொருநாளும் ஒவ்வொருபள்ளிகளிலும் வெவ்வேறுபடைப்புகளின் கதைக்கட்டுரை,நகைச்சுவை போன்ற அம்சங்களிநிறைந்த விழித்திரைகளில்படும்படி ஒளித்திரைகளில் ஓடுமாறுபார்வைக்குவைத்து ஆவலைத்தூண்ட தூண்டிலிடவேண்டும் அப்பாடியொரு ஏற்பாடுசெய்தால் இன்ஷா அல்லாஹ் வருடல்கள்தொடரும் நெருடல்கள் அகன்றுவிடும்

இந்தவிஷயத்தில் படைப்பாளிகள் அன்றும்,இன்றும்,என்றும் குழந்தைகள்தான்.

வாழ்த்துக்கள் ஆசிரியர் ஷமீமுல் இஸ்லாம்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கவனிக்கப்படாத காலக் கருவூலங்கள்....
posted by: Sithy Lareefa (Chennai) on 30 September 2016
IP: 61.*.*.* India | Comment Reference Number: 44734

அஸ்ஸலாமு அலைக்கும்...

எஸ்.கே. மாமா அவர்களின் அறிவுக்கருவூலத்திலிருந்து நேரடியாக பலன் பெற்றவள் நான்...

எனது பயான்களுக்கான அரிய பல குறிப்புகளையும், புள்ளி விபரங்களையும், பேப்பர் கட்டிங்குகளையும் எனக்குத் தருவார்கள். இன்றளவும் அவர்கள் எனக்களித்த சில பேப்பர் கட்டிங்குகளை நான் பாதுகாத்து வருகிறேன்.

அவர்கள் உடல் நலிவுற்ற நாட்களில் அவர்களது அருமைத் துணைவியார் மர்ஜூனாமா, " மாமாவின் உடல்நிலை அடிக்கடி மோசமாகிக் கொண்டே வருகிறது... எனவே அவர்களது அறிவை முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்." என்று அடிக்கடி எங்களிடம் கூறுவது உண்டு...

தன் கணவரது அறிவு அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற அந்த அருமைத் துணைவியின் ஆதங்கம் ஓர் அபூர்வமே...!

மாமா குளோபல் வார்மிங்' பற்றி இஸ்லாம் கூறும் அனைத்து விபரங்களும் குரான் ஹதீஸ் ஒளியில் தான் சேகரித்து வைத்திருப்பதாகவும் அதை என்னிடம் தருவதாகவும், நான் அதனைப் பற்றி முழுமையாக ஓர் உரை நிகழ்த்த வேண்டும் என்றும் என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார்கள்... இதற்காக மாமாவின் வீட்டிற்கே சென்று அந்த குறிப்புகளைக் கேட்டேன்...

ஷமீம் காக்கா சொன்னது போல வீட்டை துப்புரவு செய்த போது அவைகள் தவறி விட்டன என்றும், தேடி எடுத்துத் தருவதாகவும் மாமா கூறினார்கள். மாமாவின் மரணத்திற்குப் பின்னரும் அந்த குறிப்புகளுக்காக அவர்களின் குடும்பத்தார்களிடம் கேட்டேன்... அவர்களுக்கும் அது பற்றி ஒன்றும் தெரியவில்லை...

இப்படி எத்தனை பொக்கிஷங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்து மறைந்ததோ தெரியவில்லை... மாமா வாழும் காலத்திலேயே இன்னும் அவர்களை அதிகமாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமோ...! என்னும் மனக்குறை இன்றும் என்னுள் தொடர்கிறது. ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved