Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:41:21 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9915
#KOTW9915
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 7, 2013
முஸ்லிம் சமுதாயத்தின் நலிந்தோர் முன்னேற உதவிடுவீர்! முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2262 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஸ்லிம் சமுதாயத்தின் நலிந்தோர் முன்னேற உதவிடுமாறு, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

முஸ்லிம்கள் தங்கள் வாழ்கை தரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றார்கள் என்பதற்காக 1892ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், ஆரம்பத்தில் சென்னை மாகானத்தில் மட்டும் செயல்பட்டு வந்தது. பின்னர் 2007ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இவ்வமைப்பு விரிவுபடுத்தப்பட்டது.

இந்த அமைப்பின் தலைவராக அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர்கள் (கலெக்டர்) செயல்படுவார்கள். இவ்வமைப்பு நமது மாவட்டத்தில் துவங்கப்பட்ட முதல் வருடத்தில் 10,000 ரூபாய்கள் மட்டுமே திரட்டப்பட்டு அதற்கு இணையான 10,000 ரூபாயை அரசிடம் இருந்து பெற்று 4 நபர்களுக்கு கிரைண்டர் வழங்கப்பட்டது.

இரண்டாவது முறையாக பெரும் முயற்சி செய்ததின் மூலம் 7.12 லட்சம் நிதி திரட்டி, அதன் மூலம் 118 நபர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29ஆம் தேதி 7.12 லட்சம் அரசிடமிருந்து இணைநிதி பெற்று 144 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்து நிதி திரட்டும் முயற்சியாக 06.01.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05:30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி வளாகத்தில் அவ்வமைப்பின் கவுரவச் செயலாளர் வஹிதா தம்பி அவர்களால் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துவக்கமாக ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை இறைமறை வசனத்தை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையையும், கூட்டம் குறித்த நோக்கத்தையும் காயல்பட்டினம் நகராட்சியின் முன்னால் தலைவியும், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளருமான வஹிதா தம்பி அவர்கள் விளக்கிப் பேசினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-



இத்திட்டத்தின் கீழ் நாம் உதவும்போது, நம் சமுதாயத்திற்கு உதவுகின்றோம் என்ற உயரிய நோக்கத்துடன் நாம் நிதிகளை வழங்க முன்வர வேண்டும். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிளும் உள்ளவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதற்கான நிதியின் பெரும்பகுதியை நம் நகரில் இருந்தே பெற்று வருகிறோம். கடந்த முறை மற்ற ஊர்களில் இருந்து சிலர் இதற்காக நிதி வழங்கினர்.

நமது அண்டை ஊரான ஆத்தூரில் மிகவும் ஏழ்மை நிலையில், அதிகமான நம் சமுதாய மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவலாம். கடந்த முறை 144 நபர்களுக்கு உதவி வழங்கப்பட்டதில் 99 நபர்கள் நமதூரைச் சேர்ந்தவர்கள்.

இத்திட்டத்திற்கு கடந்த காலங்களில் நாம் வழங்கிய தொகைக்கு இணையான ஒரு மடங்கு தொகையே வழங்கப்பட்டு வந்தது. இவ்வாண்டு முதல் அரசு இரண்டு மடங்கு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. தற்போது நாம் 10 லட்சம் ரூபாய் நிதியினை திரட்டி கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் இத்தொகையினை நாம் கொடுத்தால், அரசிடமிருந்து 20 லட்சம் ரூபாய் என மொத்தம் 30 லட்சம் ரூபாயைப் பெற்று பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கலாம்.

கடந்த ஆண்டு இவ்வமைப்பின் மூலம் அதிக உதவிகள் செய்த மாவட்டங்களைத் தெரிவு செய்து விருதுகள் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்டதில் தமிழகத்தில் முதல் இடத்தினை தேனி மாவட்டம் பெற்றது. இரண்டாவது இடத்தினை நம் மாவட்டம் பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.

இவ்வமைப்பின் மூலம் தையல் மிஷின், கிரைண்டர் (மாவு அரைக்க), மிக்ஸி (குளிர்பானம் கடை வைக்க, மிளகாய் அரைக்க), அரசு உதவி பெறாத விதவைகளுக்கு உதவித் தொகை வழங்குதல், மருத்துவ உதவி, காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்த்தல், மறுமணம் / திருமண உதவி, கல்வி உதவி (பாட புத்தகங்கள் வாங்க), கழிப்பறை வசதி உதவி, சிறு C.F.L. விளக்கு அமைத்தல் வசதி, சிறு வாகனம் மற்றும் தொழிற் கருவிகள், உடல் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம், பாய் நெய்தல், பானைகள் செய்தல், சுய உதவிக் குழுக்கள் அமைப்பதற்கு மற்றும் கடனுதவி பெற்றிட உதவி செய்தல், அரசு உதவிகள் பெற்றுத் தருதல், ஆகியன நிர்வாக குழுவின் ஒப்புதலுடன் மேற்கூறிய உதவிகள் மற்றும் இதர உதவிகள் வழங்கலாம்.

இன்று (06/01) மாலை நடைபெற்ற கூட்டத்தில் இவ்வகைக்காக 2,29,000 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் நாம் திட்டமிட்டுள்ளபடி 10 லட்சம் ரூபாயை இன்ஷாஅல்லாஹ் அரசிடம் ஒப்படைக்கவும், மேலும் நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் அனைவரும் உதவ வேண்டுகிறேன்.


இவ்வாறு, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க கவுரவ செயலாளர் அ.வஹீதா தம்பி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், தாய்லாந்து காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத், ஹாஜி வாவு நாஸர், ஹாஜி ஜெஸ்மின் கலீல், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் ஆகியோருட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.



இத்திட்டத்திற்கு உதவ விரும்புவோர்
அ.வஹிதா தம்பி அவர்களை
+91 9894 842 238 என்ற எண்ணிலும்,
ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கதுல்லாஹ் (ஹாஜி காக்கா) அவர்களை
+91 9382 812 954 என்ற எண்ணிலும்
தொடர்புகொண்டு தங்களால் இயன்றளவு உதவிகளை நம் சமுதாயத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (8/1/2013) [Views - 2432; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved