Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:46:09 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9905
#KOTW9905
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 4, 2013
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிறுவனருக்கு "நற்சேவை விருது" ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரால் மக்காவில் வழங்கப்பட்டது !!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 3602 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - மக்கா - புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற குடும்பத்துடன் மக்கா வந்திருந்த வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிறுவனர் மற்றும் முன்னாள் நகரத்தந்தை வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரை மக்காவில் சந்தித்து கலந்துரையாடினார்.



வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள் உம்ரா நிறைவேற்ற மக்கா வந்திருப்பதையொட்டி ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரின் சிறப்பு சந்திப்பு மக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 02 புதன் 2013 அன்று மக்கா அஜீசிய்யாவிலுள்ள ஜித்தா மன்றத்தின் செய்தி தொடர்பாளர் சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ் இல்லத்தில் இஷாவுக்கு பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அச்சிறப்பு அமர்வுக்கு மன்றத்தலைவர் குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை தாங்கினார். சகோ.அல்ஹாஃபிழ் வாவு எஸ்.எ.மொகுதூம் இர்ஃபான் இறைமறை ஓதினார்.



அமர்வுக்கு வந்திருந்தோரை வரவேற்று தலைமையுரையாற்றிய சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன்; 'இக்ரஃ' எனும் கல்வி அமைப்பு மற்றும் 'ஷிஃபா' எனும் மருத்துவ அமைப்பு குறித்த செய்திகளை விபரமாகத்தந்தார்.

மன்றச்செயலர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம்; மன்றத்தின் மக்கள் நலப்பணிகள் மன்றப்பணிகள் குறித்த அறிமுக உரையை சுருக்கமாக தந்தார். மேலும்; 'உரிய தருனத்தில் நம் நகர் மகளிர்க்கு சிறந்ததொரு கல்லூரியை தந்த கண்ணியத்திற்குரிய வாவு செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள், பல பொதுநலப் பணிகளையும் தன்னலம் பாராது செய்து வரும் செய்திகள் குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றும்; அவர்கள் ஆற்றும் நலச்சேவைகளை நினைவு கூறும் இத்தருனத்தில் உங்களைப்போன்ற புரவலர்கள் செய்யும் நகர் நலப்பணிகள் எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஒரு உத்வேகமாகும் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றும்; நம் நகர் நலனில் அக்கறை கொண்டு பொதுப்பணிகள ஆற்றும் தாங்கள் உள்பட அனைத்து பெரியவர்களும் பாராட்டுக்குரியவர்கள்' என்றார். மறுமையை மட்டுமே முன்னிறுத்தி இம்மன்றம் செய்யும் பணிகள் செவ்வனே நடந்தேற பிரார்த்திக்குமாறும், தாங்களின் மேலான அறிவுரையை எங்களுக்கு வழங்குமாறும் வேண்டிக்கொண்டார்.



இன்றைய தினம் எமது ஜித்தா காயல் நற்பணி மன்றம் 10 வயதை அடைந்துள்ளதென்றும், இந்நாளில் இந்நிகழ்வு நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறதென்றும், எம் மன்றப்பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு உழைத்த மற்றும் உழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுப்பணிகளுக்கு மனமுவந்து தாராளமாக பொருளதவி தரும் மன்ற உறுப்பினர்களை பாராட்டினார் மன்றச்செயலர் சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான்.

தொடர்ந்து சில வார்த்தைகள் முன் வைத்த ஜித்தா தமிழ் மன்றத்தலைவர் மற்றும் ஜித்தா காயல் நற்பணி மன்ற மூத்த செயற்குழு உறுப்பினர் சகோ.எஸ்.மூஸா ஸாஹிப்; மகளிர் கல்வி மேம்பாட்டிற்கு தேவையான பல கருத்துக்களையும், அதன் நிமித்தம் செய்ய வேண்டிய சில நடைமுறை சாத்தியங்களையும் செய்திகளாக தந்தார். அது குறித்து நம் கல்லூரியின் பார்வை என்ன என்பதனை தெரியப்படுத்தும்படி வேண்டிய அவர், மகளிர் கல்வி முன்னேற்றத்திற்கான மேலும் பல உயரிய முயற்சிகளை உங்களைப்போன்ற நல்லுள்ளம் கொண்டோர் தாமதமின்றி எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.



வாழ்த்துரை வழங்கியதோடு பல ஆக்கபூர்வமான தகல்வல்களை தந்த வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்கள், மகளிர் கல்வி மேம்பாடு குறித்த பல எதிர்கால செயல் திட்டங்கள் முன்வடிவு பெற்றுள்ளதாகவும், அதனை விரைந்து செயல்படுத்த நாடியுள்ளதாகவும் அதன் முன் முயற்சியாக 'மகளிர்கான ஆசிரியர் பயிற்சி மையம்' நம் கல்லூரியில் வளாகத்தில் இன்ஷாஅல்லாஹ் துவங்க உள்ளதாவும், நம் கல்லூரி நிர்வாகம் நம் நகர் மகளிர்க்கான கல்வி மேம்பாடு குறித்த தொலைநோக்கு திட்ட முறைகளை நெறிபடுத்தி, வரும் காலங்களில் தேவைக்கேற்ப நடைமுறைபடுத்த உளதாகவும்' தெரிவித்தார்.



மேலும் நம் கல்லூரியின் மகளிர்க்கான சிறப்பம்சம் யாதெனில், மணமுடித்த மாணவிகள் திருமணத்திற்கு பிறகு மீண்டும் படிப்பை தொடர உரிய வசதிகள் செய்து தரப்பட்டிருப்பாதகவும், ஆகையால் திருமணமாகிவிட்டதே இனி எங்கே கல்லூரி செல்ல என்று மாணவிகள் நினைக்க தேவையில்லை என்றும், தாரளமாக கல்லூரி வந்து படிப்பை தொடர்ந்து ‘பட்டம்’ பெறலாம் என்றும் கூறினார். மேலும் மகளிர்க்கு பிரத்தியேகமாக SPOKEN ENGLISH COURSE ம் நடத்தப்பட்டு வருகிறதென்றும், நம் நகர் மாணவிகள் படிப்பில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறார்கள் என்றும், நம் மாணவிகளிடம் உள்ள அரிய திறமைகள் மற்றும் நுண்ணறிவுகளை நம் கல்லூரி வெளிக்கொணர்ந்து அதை உரிய முறையில் செயல்படுத்த ஆர்வமூட்டுகிறது என்றும் கூறினார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் மக்கள் நலப்பணிகளை வெகுவாக பாராட்டிய அவர், இம்மன்றத்தின் நகர் நலப்பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற தான் வாழ்த்துவதாகவும் கூறி அமர்ந்தார்.



தாய்லாந்து காயல் நற்பணி மன்ற உறுப்பினர் வாவு முஹம்மது அலீ அவர்கள், அம்மன்றத்தின் நகர் நலப்பணிகள் குறித்த செய்திகளை சிறப்பாக தந்த அவர், ஜித்தா கா.ந. மன்றத்தின் செயல்பாடுகள் யாவும் தம்மை மிக கவர்ந்ததாகவும் கூறினார். வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களின் 'பொது நலச்சேவை' மற்றும் அவர்களின் 'நகர் நலன் அர்ப்பணிப்பு' ஆகிய நற்பணிகளை பாராட்டி அவர்களுக்கு ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பாக 'நற்சேவை விருது' வழங்கப்பட்டது.







கல்லூரி முதல் நகராட்சி வரை, பிரதான வீதி முதல் குறுகிய ஓடை வரை என அனைத்து செய்திகளும் சகோதரர்களால் வினாக்களாக தொடுக்கப்பட்டு விடைகளும் பெறப்பட்டு, கருத்துகள் பகிர்ந்து, கலந்துரையாடிய சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி, சகோ. சட்னி செய்யிது மீரான் நன்றி கூற, மன்றப் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் பிராத்திக்க துஆ கஃப்பாராவுடன் இனிதே முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!



அமர்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் இரவு உணவு விருந்தளிக்கப்பட்டது.

குறுகிய கால நிலையில் ஏற்பாடு செய்யப்பட இந்த இனிய நிகழ்வை சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ,சீனா,எஸ்.எச்.மொஹ்தூம் முஹம்மது மற்றும் சகோ.விளக்கு.எம்.டி.முஹம்மது அலி (VP) ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தகவல் மற்றும் படங்கள்:
சட்னி,எஸ்.எ.கே.செய்யது மீரான்
அரபி,எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப்,
ஜித்தா, சஊதி அரபிய்யா



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...பாராட்டுக்கள் ஊக்க மருந்து போன்றது
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24910

முன்னாள் நகர தந்தை அவர்களுக்கு ஒரு நல்ல அங்கீகாரம். அவர் மக்களின் பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து சேவை செய்பவர் அல்ல அவர் நகரமன்ற தலைவராக இருந்து தனது கைப்பணத்தை செலவழித்து ஊர் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்தவர்.பெண்கள் கல்லூரி என்பது நமதூரில் கனவாக இருந்தபோது அதை நிஜமாக ஆக்கி காட்டியவர். இப்போதும்கூட நமதூரில் குப்பைகொட்டுவதற்கு BIO GAS ஆலை அமைப்பதற்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு வழிகாட்டி விலைக்கே ஊருக்காக தந்துள்ளார்கள்.

நமது ஊரிலும் சரி நமது நாட்டிலும் சரி நல்லவைகளை பாராட்டுபவர்கள் அரிதாக இருக்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்த பிறகுதான் இந்தியாவின் மிக உயர்வான விருதாக போற்றப்படும் BHARATH RATHNA என்ற விருது சாதனயாளர்களுக்கு கொடுக்கப் படுகிறது.

பாராட்டுக்கள் வெறும் புகழ்ச்சி அல்ல, அது ஒரு அற்புதமான TONIC ஊக்கமும் புது தெம்பும் அளிக்கும் மருந்து. இந்த ஊரில் எத்தனையோ சாதனையாளர்கள் இலை மறை காய் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும், பாராட்ட வேண்டும். அந்த வகையில் ஜித்தா காயல் நலமன்றம் முந்திக் கொண்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

கல்லூரி நிறுவனருக்கு கொடுக்கப்பட்ட கேடயத்தில் ஒரு சிறு தமிழ் பிழை உள்ளது. "முன்னாள்" நகரமன்ற தலைவர் என்று இருக்க வேண்டும். "முன்னால்" என்று இருக்கிறது. தமிழ் அறிந்த சான்றோர்கள் நாம், தமிழ் வளர்த்த பெரும்புலவர்கள் நம் முன்னோர்கள். கல்லூரி நிருவனருக்கே இதை வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது உடன் திருத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் முதல்வரின் இல்லத்தையும் உள்ளத்தையும் உவகை கொள்ள செய்யும் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதில் ஒரு எழுத்து பிழையை யாரும் விரல் அசைத்து சொல்லிவிடக்கூடாது.

செய்யது அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். விருது வழங்கி கௌரவித்த காயல் நல மன்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்கையில் தோல்வி இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [05 January 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24912

"நற்சேவை விருது" பெற்ற மரியாதைக்குரிய வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இவர்களுக்கு விருது வழங்கி, தங்களை உயர்த்திக்கொண்ட ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினருக்கு நன்றிகள்.

பணம்.. பணம்.. பணம்.... இது பலரிடம் பரவலாக இருப்பது தான். அதை மக்களுக்கு கொடுக்கும் மனம்..!! இது பலருக்கு இருப்பது இல்லை. இரண்டும் இருப்பது அரிது. அது இவர்களுக்கு இருக்கின்றது.

ஒருவர் யாசகம் கேட்டால், மனப்போராட்டத்துடன் சட்டை பாக்கட்டில் கையை விட்டு, இருப்பதில் எந்த நோட்டு சிறியதோ அதை தான் மனது எடுக்க சொல்லுது. அதுவும் பழைய நோட்டு இருந்தால் அதை தான் இரண்டு விரல்கள் உருவுது.

ஆனால், மக்களுக்காக லட்சம் லட்சமாக அள்ளிக்கொடுக்கும் மனதை கண்டிப்பாக பாராட்டியே ஆகனும்.

- ஒரு காலத்தில் பெண்கள் கல்வி என்பது அபூர்வம். குத்துக்கல் தெருவில் இருந்து தீவு தெருவில் இருக்கும் பள்ளிக்கு, +2 படிக்க என் சகோதரியை அனுப்ப மறுத்தார்கள். இன்றோ முடுக்குக்கு முடுக்கு பட்டத்தாரி பெண்கள் உருவாகி இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்.

- திறமான படிப்பு, ஒழுக்கம், கண்டிப்பு என்று சுபைதா பெண்கள் பள்ளியின் மறு பதிப்பாகவே கல்லூரியை நடத்தி வருகிறார்கள். ( இப்படி தான் பிள்ளைகள் சொல்லிக்கொள்ளுகிறார்கள். ஒரு கல்லூரில் படிக்கும் மனநிலையே இல்லையாம். +2 முடித்து +3 இக்கு பள்ளிக்கு சென்ற மாதிரி உள்ளதாம்).

இன்ஷா அல்லாஹ்.. இந்த கல்லூரி வளர்ந்து முன்னணி பல்கலைக்கழகமாக வளரவும், வாவு எஸ்.செய்யிது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்களுக்கு எல்லா வளங்களையும் வல்ல ரஹ்மான் வழங்கவும், துஆ கேட்கிறேன்.

ஒரு சிறு விண்ணப்பம், நம் இக்ரா விற்கு, தன்னுடைய பதவிக்காலத்தில், சொந்த கட்டிடம் கட்டிவிடனும் என்ற துடிப்புடன் வாவு சம்சுத்தீன் ஹாஜி அவர்கள் முயன்று வருகிறார்கள். உங்கள் குடும்பத்தாருக்கு இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. இன்ஷா அல்லாஹ் ஒரு நல்ல செய்தியை எதிர்பார்த்து இருக்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நற்சேவை
posted by hylee (colombo) [05 January 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 24916

ஜெட்டாஹ் நற்பணி மன்ற வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும், முன்னால் நகர தலைவர் அவர்களுக்கும் அல்லாஹ் ரஹுமத் செய்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயலர்களின் கருணை காரியம் காற்றட்டு வெள்ளம் போல் பாயட்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [07 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24933

சகோதரர் மக்கி நூஹுதம்பி காக்கா சொல்வது போல நல்ல காரியத்தை பாராட்டுவது வெறும் புகழ்ச்சியகாது அது அடுத்தவர்களையும் தூண்டச்செயும் ஒரு டானிக் ஆகும்!

மேலும் அவர்கள் குறிப்பிட்டது போல் நமதூரில் நிறைய கருணை உள்ளமும்,கொடையுள்ளமும் கொண்ட கண்ணியவான்கள் இலைமறை காயாக இருந்து வருகிறார்கள்,அப்படிப்பட்ட புண்ணியவான்களின் பேருதவியைப்பெற்றவர்களின் துவாவின் பொருட்டால்தான் நமதூர் வல்ல நாயகனின் உதவியால் வறுமை என்ற வீழ்ச்சி பள்ளத்தில் வீழ்ந்து விடாமல், ஓரளவிற்கு ஒட்டியிருக்கும் ஊர்களைவிட வளம்பெருகின்ற பாதையை நோக்கி நிற்கின்றோம்!அல்ஹம்தில்லில்லாஹ்!

வருடம் 365 நாளும் ஏழை எளியவர்களுக்காகவும் ,ஏழை மாணவர்களுக்காகவும் ,உயிகொல்லி நோய் முதல் ஏனைய செலவு அதிகமாகும் நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்காகவும் தங்களின் இரும்புப்பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு இதயமகிழ வாரி வழங்கும் வள்ளல்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களையும் பாராட்ட வேண்டும்!

எப்படிப்பட்டவர்கள் என்ற ஒரு சில உதாரணம் சொல்ல வேண்டுமாயின், ஒரு ஏழை இதய நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு பெரிய தொகையை வழங்கியதோடு நிற்காமல்,அவருக்குறிய மாத்திரைகளைக்கூட பல வருடங்கள் கொடுத்துதவி வரும் கருணை கலந்த கொடையுள்ளமும் இன்றும் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள்!

ஆதரவற்ற முஸ்லிம் ஏழை மாணவர்கள் விடுதியில் பாயில் படுதிருந்த மாணவர்களைப்பார்த்த ஒரு கருணை காயல் உள்ளம் இவர்கள் அனைவருக்கும் உடனே மெத்தை (BED) வாங்கி கொடுங்கள் என்று கூறி அதற்குகுறிய தொகையை யும் செலுத்தி விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார்!

வெளிநாட்டிலிருந்து விடுதியின் சம்பந்த பட்டவரிடம் மெத்தை வாங்கி கொடுத்தாகி விட்டதா?,பிள்ளைகள் எல்லாம் BED யில் தானே தூங்குகிறார்கள்? அவர்கள் BED ல் தூங்குகிறார்கள் என்ற செய்தியை கேட்ட பின்னர்தான் எனக்கே தூக்கம் வரும் என்ற வார்த்தையை போனில் சொல்லியிருக்கும் இம்மனிதருள் மாணிக்கங்களை எல்லாம் அடயாளம் கண்டு அவர்களையும் கவ்ரிவிக்க வேண்டுவது ஒரு உண்மையான மனசாட்சி உள்ள காயலனின் கடமையாகும்!

அப்படிப்பட்ட கருணை காரியங்களை எல்லாம் எல்லோரும் எளிதில் தெரியும் வண்ணம் ஜித்தா காயல் நலமன்றம் முன்மாதிரி முத்தாய்ப்பான காரியத்தை செய்த கையோடு இனி வரும் காலங்களிலும் செய்ய சித்தமாகி விட்டது என்பதற்கோர் முன்வடிவ செயல் தான் நற்சேவை விருது வழங்கிய நிகழ்ச்சி! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved