Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:24:01 AM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9841
#KOTW9841
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 22, 2012
டிச.14 - காயல்பட்டினம் நகராட்சியின் அவசரக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றப்பட்ட ஜும்ஆ உரை வீடியோ!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4008 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிறைவேற்றப்படவுள்ள இரண்டாவது பைப்லைன் திட்டம் தொடர்பான அவசரக் கூட்டம், 14.12.2012 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சில நகர்மன்ற உறுப்பினர்கள் தலைவரை நோக்கி சில பிரச்சினைகளை முன்வைத்ததையடுத்து காரசாரமான வாக்குவாதம் உருவானது.

இக்கூட்டம் குறித்த தகவல்களும், வீடியோ பதிவுகளும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 21.12.2012 வெள்ளிக்கிழமை (நேற்று) ஜும்ஆ தொழுகையின்போது, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் இதுகுறித்து உரையாற்றப்பட்டுள்ளது.

அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார். முதல் குத்பாவில் உலக அழிவு குறித்து பேசப்படும் மூட நம்பிக்கைகள் குறித்தும், உலக அழிவு குறித்த இஸ்லாமிய பார்வையை விளக்கியும் அவர் உரையாற்றினார்.

இரண்டாவது குத்பாவில், டிசம்பர் 14ஆம் தேதியன்று நடைபெற்ற - காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டம் குறித்து விமர்சித்துப் பேசினார். அவரது உரையின் வீடியோ பதிவை, http://www.ustream.tv/recorded/27902573 என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கி காணலாம்.

தகவல்:
S.அப்துல் வாஹித்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஆலிம் அவர்கள் உரை
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24734

குத்பா பிரசங்கம் என்றால் குர் ஆன் ஹதீஸ் சஹாபாக்கள் வாழ்க்கை நெறிமுறைகள் தற்போது நாம் கடைபிடித்து ஒழுக வேண்டிய நல்லொழுக்கங்கள் பற்றிய நசீஹதுக்கள் என்ற விஷயங்களுடன் இன்று அன்றாட வாழ்வில் நமது ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு அதன் தாக்கங்கள் இந்த ஊரின் நன்மையையும் பாரம்பரிய கலாச்சாரத்தின் பின்னடைவுகளையும் எடுத்து கூறும் அற உரையாக அறிவுரையாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அகீதா பிரச்சினைகளையே கேட்டு கேட்டு புளித்துப்போன ஊர் மக்களுக்கு இது ஒரு பெரிய மாற்றமாக தெரிகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

உம்மத்துடைய ஒற்றுமை ஊரின் ஐக்கியம் பாரம்பரியம் பற்றி பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. சில விஷயங்கள் பற்றி பேச ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அது ஆலிம் அவர்களிடம் இருப்பது பாராட்டுக்குரியது.

காய்தல் உவத்தல் அகற்றி பேசும் ஆலிம் அவர்களின் பேச்சுக்கு எல்லோரும் முன்னுரிமை கொடுத்து கவனிக்க வேண்டும். செய்திகளை அழுத்தமாக சொல்வது வேறு, அதை எப்படி சொல்லவேண்டும் என்ற நாகரிகமும் அதை விட மிக முக்கியம்.

நகர்மன்றத்தில் நடக்கும் விஷயங்கள் எவ்வளவு தலை குனிவை இந்த ஊருக்கு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல ஊடகங்களில் மக்கள் பதிவு செய்யும் விமர்சனங்களிலிருந்து தெரிகிறது.

நகரமன்ற தலைவி அவர்களும் உறுப்பினர்களும் இந்த ஊரின் 40,000 மக்களின் பிரதிநிதிகள். நீங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டது இந்த ஊர் மக்களுக்கு சேவை செய்யத்தானே தவிர உங்களுக்குள் யார் பெரியவர் என்று பட்டிமன்றம் நடத்துவதற்கு அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொண்டு மக்கள் சேவையின் பக்கம் தங்கள் எண்ணங்களை திருப்பி விட அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.

நமது பாரம்பரியம் நமது பண்பாடுகள் கலாச்சாரங்கள் எல்லாவற்றையும் நம் மனக்கண் முன் கொண்டுவந்து அவற்றை பேணி நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. காலம் மாறிப் போனதால்...இப்ப கோலமும் மாறிப் போயிடுச்சு.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [22 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24735

கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருந்தகை அப்துல் மஜீத் மஹ்ழரி ஆற்றிய ஜும்மா உரை கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். நகர்மன்றத்தின் நாற்றங்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்றும், ஹிஜாப் அணிந்த பெண் உறுப்பினர் தலைவரை ஒருமையில் பேசுவது கண்டிக்கத்தக்க செயல் என்றும், தலைமை பொறுப்பில் உள்ளவரோடு சபை நாகரீகம் பேணி தம் கருத்துக்களை அல்லது மறுப்புக்களை முன் வைக்க வேண்டும் என ஜும்மா உரையில் அழுத்தமாகக் கூறியுள்ளார்கள்.

இணையதளத்தில் வீடியோக் காட்சிகளை பார்த்துவிட்டு நகராட்சியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கண்டு தான் கொதித்துப் போய் விட்டதாகவும் கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு கேள்விகளும் பொறுப்பற்று நடக்கும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு சாட்டையடியாகவே தோன்றியது.

எந்தக் காலத்தில் நம் பள்ளிகளில் ஜும்மா பயான்கள் மூலம் நகராட்சி விஷயங்கள் பேசப்பட்டது? அங்கு நடக்கும் எந்த நிகழ்வுகளும் பொதுமக்களுக்கு தெரியாமல் ஏதோ நம்மவங்க நடத்துறாங்க! என்றுதானே நினைத்திருந்தோம். வீட்டுக்கு புள்ளி மாற்றுவதற்கும், பைலைன், ப்ளான் அனுமதி கேட்பதற்கும் தானே நாம் நகராட்சிக்கு நாம் போய் வந்து இருந்தோம்.

மீடியாக்கள் எனும் பூதக்கண்னாடி நகர்மன்றத்திற்குள் நுழைந்த பின்னர்தானே பொதுமக்களுக்கு புரிய வந்தது. நடப்பது கபட நாடகமா? இல்லை! ரிமோட் கண்ட்ரோல் நாட்டியமா? என்று!

இப்ப புரியுதா? ஒட்டுமொத்தமா இவங்க ஏன் மீடியாவுக்கு எதிராக கொடிபிடிக்கிறாங்கன்னு? வீடியோ எடுக்கும் ஒரு செய்தியாளரைப் பார்த்து கண்கள் சிவக்க, நாடி நரம்புகள் புடைக்க, நரநரவென பல்லைக் கடித்துக் கொண்டு எடுக்காதய்யா...வெளிய போயான்னு விஜயகாந் ஸ்டைல்லெ ஒரு உறுப்பினர் குமுறினாரே...? வெறெ கேமிராவுக்கு முன்னால் முகத்தை வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டி பயமுறுத்தினாரே? இந்த திருவிளையாடல்களெல்லாம் எதற்குன்னு இப்ப புரியுதா?

மீடியா உள்ளெ வந்தா மீசைய முறுக்கி ஒரு பொம்பளெ முன்னாடி தன் வீரத்தைக் காட்ட முடியுமா? மிரட்டல் உருட்டல் பண்ணி அய்யோ...! அம்மா...பயமா இருக்குன்னு தலைவி தலைதெறிக்க ஓடிடுவாங்கன்னு நெனச்சு சீன் போடத்தான் முடியுமா...? வெட்கமா இல்லை? ஒரு பொம்பளையிடம் போய் உங்க சவுடாலைக் காட்டுவதற்கு?

ஒன்று மட்டும் சொல்கின்றேன். எவனோ ஒருத்தன் பேச்சைக் கேட்டு அவன்தான் ஊருக்கு உத்தமன்னு நினச்சு உங்க பொழப்புலெ மண்ணையள்ளி போட்டுக் கொள்ளாதீங்க...! ஒரு காலம் இருந்திச்சு! நகராட்சியை தத்துப் பிள்ளையாக்கி தன் வசம் வச்சுக்கிட்டு பேரவைக்கெல்லாம் போர்வை போட்டு மூடிவச்சு ஒரு குறுநில மன்னன் மாதிரி காயல்பட்டினத்தை ஆண்டுவந்தார்கள் சில மகாராசன்கள். அவங்கல்லாம் இப்ப வெறும் டம்மி பீசா போயிட்டாங்க! They can rule only in them own house...! இப்ப காலம் மாறிடுச்சு...கதையும் மாறிடிச்சு...! மக்கள் நகராட்சியின் நிகழ்வுகளை உற்று நோக்கிட்டு இருக்காங்க! மீடியாக்களும் அவ்வப்போது வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் ஊர்மேல் அக்கறை இருந்தால் உறுப்பினர்களே! ஒழுங்கா நகராட்சிக்குப் போய் நல்லவிதமா மக்களுக்கு பணியாற்றுங்கள். முடியவில்லை எனில் ராஜினாமா செஞ்சுட்டு உங்களை ஊர் மக்கள் ஒதுக்குறதுக்கு முன்னாடி நீங்களே ஒதுங்கிக் கொள்ளுங்கள். காயல்பட்டினத்தை இனி எடுப்பார் கைப்பிள்ளையாக்க மண்ணின் மைந்தர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சில மீடியா சேனல்களில் அனைவர்களும் பார்க்கும் படி ஒளிபரப்ப இருப்பதாக கேள்வியுற்றேன் ...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [22 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24741

இக்கூட்டம் குறித்த தகவல்களும், வீடியோ பதிவுகளும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதை நகர் மக்கள் மட்டும் பார்த்து இருக்கலாம்... சமீப காலமாக பெண்களுக்கு எதிராக இந்திய நாட்டில் நடந்துள்ள கொடுமைகள் குறித்து பல பொதுநல ஆர்வலர்கள் மீடியாவில் விவதாங்கள் நடந்து வரும் இந்நேரத்தில் தற்போது நமது நகராட்சியின் இக்கூட்டம் குறித்த தகவல்களும், வீடியோ பதிவுகளும் சில மீடியா சேனல்களில் அனைவர்களும் பார்க்கும் படி ஒளிபரப்ப இருப்பதாக கேள்வியுற்றேன் ... ஒரு பெண் என்று கூட பாராமல் மிக கடுமையாக (அச்சத்தை - ஒரு வித பய உணர்வை ஏற்படுத்தும் வகையில்) பெண் தலைவரை காரசாரமாக கையை தூக்கி மிரட்டும் தோரணையில் இக்கூட்டத்தின் வீடியோ ஆதாரமே சாட்சி..

இனி நகர்மன்றத்தில் பெண் தலைவர்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியே...! எந்த நேரமும் எந்த அசம்பாவிதமும் நமது நகர்மன்றத்தில் பெண் தலைவருக்கு நடக்கலாம்... ! இனி நடக்கும் கூட்டங்களில் காவல் துறை பாதுக்காப்பு அவசியம் - பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகம் இருந்து கூட்டம் நடந்தால்தான் நல்லது...!

இந்த மாதிரி நமது நகரமன்ற செயல்பாடுகள் வெளி உலகத்திற்கு தெரிய கூடாது என்பதற்க்காகவே மீடியா - புகை படம் - வீடியோ - இவைகளை வெறுக்கிறார்களோ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பாம்புக்கு பால் வார்காதீர்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [22 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24742

அஷ்ஷைக் அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் ஜும்ஆ உரையில், நமது நகராட்சியின் நாகரீகமற்ற செயலை குறித்து மிக வேதனையுடைய ஆதங்கத்தை அப்படியே கொட்டி, நியாயவான்களையும், ஊர்ப்பெரியவர்களையும் நம் நக்ராட்சிட்யின் கண்ணியம் காக்க வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது அம் மஹ்லரியின் பெருந்தன்மை பயணத்தின் பிறிதொரு மைல் கல்லாகும்!

என்னதான் காரசாரமான விவாதங்கள் நடந்தாலும் ஒரு தலைவியான ஒரு பெண்மணியை பார்த்து ,"வவுந்துவிடுவேன்" என்ற கொலை மிரட்டலோடு கொக்கரித்து குதித்து செல்லும் காட்சியைப் பார்க்கும் எந்த நடுநிலையானவர்கள்தான் ஏனோ தானோ வென்று இருக்க முடியும்?

நம் உயிரினும் மேலான புனித இஸ்லாம் மார்க்கத்தின் கலாச்சாரத்தை கேலி செய்யும் வார்த்தைகளை கொட்டுகிறார்! அவருக்கு அந்தரங்கமாக அனைத்து சக்திவாய்ந்தவர்களின் தூண்டுதலும், துணையும் கிடைக்கிறது!

எதிரிக்கு எதரி என் நண்பனே என்ற மனப்பான்மையுடையவர்களின் ஊக்கத்தை ஊன்றுகோலாக கொண்டு நம்முடைய கையை வைத்தே நம்மவர்களையும், நம் புனித மார்கத்தையும் மெது, மெதுவாக மானபங்கபடித்தி கொண்டிருக்கிறார்.

எவரும் என்னை நெருங்காவண்ணம் பாதுகாப்பான பெரிய சக்தியின் பிரியதுக்குறியவன் நான் என்ற இறுமாப்புடைய எதேச்சிகார செயல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது! இதற்கொரு விடிவு காலமே வராதா?

ஒன்று மட்டும் சொல்கிறேன், தலைவி முதல் அனைத்து உறுப்பினர்களையும் மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் செய்யும் செயல்பாடுகள் சரிதான் என்று குதித்துகொண்டிருக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்களே! உங்களுக்கு தைரியமும் திராணியும் இருக்குமேயானால் கூண்டோடு விலகி மீண்டும் மக்கள் முன் சென்று அவர்களின் ஆதரவு என்ற நல் அத்தாட்சியை பெற முயற்சியுங்கள் பார்ப்போம்!

அடித்து சொல்கிறேன் நீங்கள் அனைவர்களும் 100%க்கு100% டெபாசிட் இழப்பது உண்மை! நம்மவர்கள், நம் எதிரியை பழிதீர்க்க எத்தீயவனையும் துணை கொள்ளலாம் என்ற வெறியோடு, எந்த எதிர் நிலையையும் பாராமல் பாம்புக்கு பால் வார்த்து கொண்டிருக்கிறார்கள்.

உஷாராக இருங்கள்! உங்களை விட அதிக பால் தருபவரிடம் அப்பாம்பு செல்ல நேரிட்டால் உங்களையும் தீண்டிவிட்டு சந்தோசமடையாமல் செல்லாது ஜாக்கரதை!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [23 December 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24768

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது மரியாதைக்கும் / நமது கண்ணியத்திற்குரிய ஆலிம் பெருந்தகை அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் ஆற்றிய ஜும்மா பேருரையில் அவர்களின் உரை கேட்டு நாம் உண்மையில் ரொம்பவும் மெய்சிலிர்த்துப் போய்விட்டோம்.

நம் ஊர் நகர்மன்றத்தின் செயல்பாட்டை நல்ல முறையில் நம் ஊர் பொது மக்களுக்கு ரொம்பவும் அருமையாகவே ....நிதானத்துடன் யார் மனதையுமே புண்படாது பேசியது ....மாஷா அல்லாஹ்... நாம் யாவர்களுமே ஆலிம் பெருந்தகை அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்களை மனதாரவே பாராட்டியே ஆகணும்.

இது போன்ற ஜும்மா பேருரையில் நமது ஆலிம் பெருந்தகை அவர்கள் உரை ஆற்றுவதுதான் சரியான செயல்பாடு... காரணம் இந்த நேரத்தில்தான் நம் மக்களின் முழுமையான கவனமும் ஒருமையில் இருக்கும் .தருணம் ....பொதுவாகவே நம் ஊரின் மற்ற அனைத்து ஜூம்மா பள்ளிகளிலும் ...கூட ஜூம்மா பேருரையில் நமது ஆலிம் பெருந்தகைகள் உரை ஆற்றி இருக்கவேணும் .....

இந்த சகோதரி ( தலைவி ) அவர்கள் அப்படி என்னதான் தவறு செய்கிறார் ....யாருமே செய்யாத ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்கணும் என்று பார்க்கிறார்.

அதாவது, நம் ஊரை தமிழத்தின் தலை சிறந்த நகர் மன்றமாக மாற்றுவேன் ......தமிழக அரசின் நல்ல ...நல்ல ....செயல் திட்டங்களை எல்லாம் அரசிடம் இருந்து... கேட்டு வாங்கி நம் ஊர் மக்கள் அனைவர்களும் பயன் பெரும் வகையில் செய்து காட்டுவேன்....+... லஞ்சம் இல்லாத முறையில் நம் நகர் மன்றத்தை வழி நடத்தி செல்வேன் ....என்று அவர்களின் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்ற துடிக்கிறார்.... இதில் என்ன தப்பு இருக்கிறது ........

ஒரு நேர்மையான பெண் சேர்மனுக்கு ஏற்படுகிற சிரம்மங்களை எல்லாம் நமது ஊர் பொது மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்..... இந்த உறுப்பினர்களை எல்லாம் நம் ஊர் பொதுமக்கள் எப்படிதான் மறப்பார்கள்.... தாறுமாறாக இந்த ஒரு உறுப்பினர். பெண் சேர்மன் என்று கூட பாராமல் ...தரமற்ற முறையில் ....ரொம்பவும் தர குறைவாகவும் ....கையை நீட்டியும் ....மேசையை வெறியுடன் தட்டியும் .... ஒரு உறுப்பினர் பேசுகிறார் .....மேலும் ஆவேசத்துடன் நெருக்கமாகவே சென்று காட்டு கத்து கத்துகிறார் ......இதை எல்லாம் மற்ற நம் உறுப்பினர்கள் பார்த்து கொண்டு சும்மாவே ....இருக்கிறார்கள் என்றால் என்னதான் அர்த்தம் ?? மீடியாவும் , பொது மக்களும் இல்லை என்றால் ?? நம்மால் நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது ....

இப்படி பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது கண்டிப்பாக நம் நகர் மன்றத்துக்கு .....மீடியாக்களின் ( வீடியோ கிழிப்பு ) + பத்திரிகைகளின் வரவு அவசியம் தேவை தான் .......

யம்மா .....நம் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆவேசமான ,, மோசமான ...தரமற்ற ....மிகவும் கேவலமான பேச்சை பார்த்ததுமே ....நம் மனது கடுமையான சங்கடத்துக்கு ஆளானது ...நம் சேர்மன் அவர்களின் ....படிப்புக்கும் ,, பதவிக்கும் ,,சேர்மனின் திறமைக்கும் ,,அறிவுக்கும் ,, இந்த பெண் உறுப்பினர் எந்த ஒரு விதத்திலும் ...கொஞ்சமும் பொருத்தமே இல்லாத போது ...இப்படி தான் செயல் படுவார்... என்ன செய்ய .... நாம் ஒன்றுமே செய்ய முடியாது தான் ......

இவ்வளவு மோசமான பிரச்சனைகள் ...நம் நகர் மன்றதில் நம் சகோதரி ஒருத்திக்கு நடந்து இருக்கும் போது ....நம் ஊர் ஜாமத்துகள் / நம் ஊர் பொது நல அமைப்புகளும் ....ஓன்று சொல்லாது மௌனம் காப்பது தான் என்ன வென்று நமக்கே புரிய வில்லை .....அல்லாஹு தான் நம் யாவர்களையும் ஒற்றுமையாக்கி அருளனும்..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இனி ஓட்டு கேட்டு வாங்க....பழைய செ....கருத்தை முழுமையாக கீழே பார்க்கவும்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [23 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24770

வரும் கருத்துக்களின் நீளத்தைப் பார்த்தாலே விஷயத்தின் ஆழம் புரிந்து விடும்!

“எவரும் எக்கேடு கெட்டு போகட்டும் என் பாடு குஜால்” என கண்டும் காணாமல் இருக்கும் உறுப்பினர்களே? எழுதி வைத்துக் கொள்ளுங்கள்....

இன்ஷா அல்லாஹ் உங்கள் பதவிக்கு அல்ப ஆயுசு தான்! அதுக்கு பிறகு எங்க கிட்டெ ஓட்டு கேட்க வாங்க, ஒட்டு மொத்தமா சேர்ந்து பழைய....செ...ய்கைகளை மனதில் வைத்து ஓட ஓட விரட்டியடிப்பார்கள் மக்கள்!

இது மக்கள் தேர்ந்தெடுத்த நகராட்சியா? இல்லை ரவுடிகளின் கூடாரமா? வசைபடுதல், மிரட்டுதல், சவால் சவுடால் விடுதல், மீடியாவுக்கு முன்னால் ஆர்ப்பரித்து ஆவேசப்படுதல், ஓங்கி மேஜையில் அடித்தல்... நீங்கள் நியாத்திற்காக மேஜயைத் தட்டினால் வரவேற்போம்! மாறாக ஒர் பெண்ணை அதட்டுவதற்காக தட்டினால் மக்கள் உங்களை மனதிலிருந்து அகற்றி குப்பையில் தட்டி விடுவார்கள். கவனம்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved