Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:33:40 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9839
#KOTW9839
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 21, 2012
போதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால் (டிசம்பர் மாத) நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3638 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் (டிசம்பர் மாத) சாதாரண கூட்டம், 19.12.2012 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.





இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.







ஆனால், நகர்மன்றக் கூட்டம் நடைபெற குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு (6 உறுப்பினர்கள்) கலந்துகொள்ள வேண்டும் என்று அரசு விதி இருக்க, 04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் ஆகிய 3 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டதால், கோரம் இல்லை என்று கூறி, கூட்டத்தை ஒத்திவைப்பதாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அறிவித்தார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்த வீடியோ காட்சிகள்: பாகம் 1 பாகம் 2

பின்னர் நகர்மன்றக் கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நடப்பு கூட்டத்திற்கான கூட்ட நிரல் (அஜெண்டா) தயாரிக்கப்பட்டு, நகராட்சி ஊழியர் அந்தோணி மூலம் முறைப்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,
04ஆவது வார்டு உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்
ஆகியோர் மட்டுமே அவற்றைப் பெற்றுக்கொண்டு கைச்சான்றிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதர உறுப்பினர்கள் கூட்ட நிரலைப் பெற்றுக்கொள்ளவில்லை என நகராட்சி ஊழியர் எழுத்து மூலம் தெரிவித்துள்ள அறிக்கையை நகர்மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் அளித்தார்.





நடப்பு கூட்டத்தில் 3 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும், இதர உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததற்கு எவ்வித காரணத்தையும் தன்னிடமோ, ஆணையரிடமோ தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதை ஆமோதித்துப் பேசிய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், இம்மாதம் 30ஆம் தேதியன்று கூட்டத்தை நடத்த வாய்மொழியாக சில உறுப்பினர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.

உயிர்க்கொல்லி புற்றுநோய் காயல்பட்டினத்தைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில், காயல்பட்டினத்தில் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்தும், இதர நகர்நல கோரிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்ததாகவும்,
01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான்,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகிய உறுப்பினர்கள் இக்கூட்டத்திற்கு தமது கோரிக்கைகளை சமர்ப்பித்திருக்க, அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது தனக்கு வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்களுடன் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சந்தித்துப் பேசிய வீடியோ பதிவுகள் வருமாறு:-

பாகம் 1 பாகம் 2

செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டதால், ஜெனரேட்டர் துணையுடன் நிகழ்வுகள் நடைபெற்றன. எனினும், நண்பகல் 12.30 மணியளவில் ஜெனரேட்டர் திடீரென நின்றுபோனது. உடனடியாக சரிசெய்ய இயலாத அளவுக்கு பழுது ஏற்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு மின் வினியோகம் இல்லா நிலையிலேயே நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சுமார் 10 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [21 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24717

அஸ்ஸலாமு அழைக்கும்.

சுமார் என்கிற வார்த்தை என்ன முடியாத எண்ணிக்கை இருந்தால்தான் உபயோகிப்பார்கள். கண் முன் மொத்தமே 7 நபர்கள்தான் பார்வையாளர்கள். எப்பொழுதுமே மிகை படுத்தி (Exaggerate) கூறுவதுதான் உங்கள் வலைதளத்தின் பண்போ.

Mohamed Ali .
Madina.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பார்வையாளர்கள் நமக்கு முக்கியம் அல்ல.!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [21 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24722

அன்பு சகோதரர் முகமது அலி அவர்களே.. நமக்கு செய்தியில் இது முக்கியமில்லை...! சுமார் என்கிற வார்த்தை என்ன முடியாத எண்ணிக்கை இருந்தால்தான் உபயோகிப்பார்கள். கண் முன் மொத்தமே 7 நபர்கள்தான் பார்வையாளர்கள்...

சகோதரரே...! எத்தனை பேர் பார்வையாளராக வந்தால் என்ன..? இந்த பார்வையாளர்கள் வரமால் போனால்தான் என்ன..? இவர்கள் வருகையால் நகருக்கு நன்மையா..? அல்லது தீமையா..? என்ன...!

வரவேண்டியவர்கள் யார்..! உறுப்பினர்கள் அவர்கள் வந்து ஒத்துழைப்பு கொடுத்தால் திட்டங்கள் - நடவடிக்கைகள் நகராட்சியில் நிறைவேறும்...

போதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளாததால் (டிசம்பர் மாத) நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு!நமது நகரில் பெரும் சவாலாக விளங்க கூடிய DCW க்கு எதிராக நகர்மன்றம் எடுக்க வேண்டிய சில நடவடிக்கை எடுக்க முடியாமல் காலம் தள்ளி போய் கொண்டே போகுது - இந்த வேளையில் போதிய உறுப்பினர்கள் கலந்துகொள்ளாதது நகர் மக்கள் மத்தியில் மன வேதனையே அளிக்கிறது...!

பார்வையாளர்கள் நமக்கு முக்கியம் அல்ல.! நமது வரிபணத்தை கூட்ட படியாக பெரும் உறுப்பினர்கள் தான் நமக்கு முக்கியம் ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 December 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24728

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் நகர் மன்றத்தின் இந்த கூட்டம் நம் பொது மக்களுக்கு ஏற்பட்டு இருக்க கூடிய அவமதிப்பே என்று தான் நாம் நினைக்க வேண்டும் .....காரணம் நம் தலைவி அவர்கள் கூறியது போன்று இந்த கூட்டத்தில்.முக்கியமானது....DCW தொழிற்சாலை சம்பந்தபட்ட ஒரு பதிவு .....இந்த முக்கியமான கூட்டம் சமையத்தில் கூட நம் உறுப்பினர்கள் வராமல். தேவைகற்ற பிரச்சனைகள் பண்ணுவதை நம் ஊர் அனைத்து பொது மக்களும் உறுப்பினர்களை நிச்சயமாக மன்னிக்கவும் மாட்டார்கள் & இவர்களை மறக்கவும் மாட்டார்கள் ......இவர்களை எல்லாம் நாம் தேர்வு செய்தமைக்கு ....நாம் என்ன தான் செய்வது ??நாம் அனுபவித்து தான் ஆகனும்..............

நம் ஊரே இந்த >>DCW << விசயத்தில் கொதித்து போய் இருக்கும். இந்த சூழ்நிலைமையில் ...நம் உறுப்பினர்களின் செய்யல முறை கண்டிக்கத்தக்கது ...........

நம் அருமை தலைவின் வீடியோ கிளிப்பை பார்த்ததில்....... நம் நகர்மற்றதை.... நேர்மையான நகர் மன்றமாகவும் / நம் ஊர் மக்களுக்கு நல்ல காரியங்கள் அனைத்தும் போய் சேர கூடிய ஒரு நகர் மன்றமாகவும் & தமிழகத்தின் முதல்மையான நகர் மன்றமாக மாற்றவும் ....நினைக்க கூடிய ஒரு தலைவிக்கு ஏற்பட கூடிய கஷ்டங்களை பார்க்கும் போது நமக்கே ரொம்பவும் மன கஷ்டமாகவே இருக்கிறது....நேர்மைக்கு கிடைகின்ற பரிசு தான் இந்த உறுப்பினர்களின் செயல்பாடு.... வேதனைக்குரியது.....

நமக்கு நல்லதோர் அருமையான / நேர்மையான தலைவி அவர்கள் கிடைத்தும் .....நம் நகர் மன்றத்தின் அவல நிலைமைகளை பார்க்கும் போது நமக்கே வேதனையாகவே இருக்கிறது ..........

நம் தலைவி அவர்கள் சொல் போல ....CC கேமராதான் அமைக்கணும் ......நம் நகர் மன்றத்தின் கூட்டம் நடக்கும் சமையம் கண்டிப்பாகவே .....வீடியோ கிளிப்பு அவசியம் தேவை தான் ....மேலும் நிச்சயம் இணைய தளத்தின் பதிவும் தேவை ...இந்த இரண்டையும் ஏன் ?? மற்ற நம் உறுப்பினர்கள் எதிர்கிறார்கள்..... காரணம் என்னவாம் ??

மேடம் அவர்கள் கொடைக்காணல் சேர்மன் கூட்டத்தில் கண்டிப்பாகவே பேசி ...வீடியோ கிளிப்பு விஷயத்தில் '' ஒரு தீர்மானமாகவே கொண்டு வந்து ....அதை நிறைவேற்றி....நம் தமிழக முதல்வர்.அம்மா அவர்களிடம் அனுமதி கேட்டால் கண்டிப்பாகவே ...அனுமதி கிடைக்கும் . காரணம் நம் தமிழக முதல்வர் அவர்கள் ....பெண்களின் முனேற்றதுக்கும் / பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுப்பவர்கள் .....

போன ஒரு கூட்டத்தில் நம் சகோதரியை ஒரு உறுப்பினர் பேசிய பேச்சை நம் மக்கள் யாருமே மறக்கவும் மாட்டார்கள் ...அந்த உறுப்பினரை மன்னிக்கவும் மாட்டார்கள் .....

பொதுவாகவே பதவியில் யார் இருந்தாலும் ...அவரை மதித்துதான் .பேசணும் .அப்படி ஒரு ''இங்கிதமே '' தெரியாமல். பேசுகின்ற.... நம் உறுப்பினர்களை நாம் பார்க்கும் போது நாம் இவர்களுக்கா ?? ஒட்டு போட்டோம் ...என்று நம் மனம் வேதனை படுகிறது.மேலும் சேர்மன் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் பேசுகிற ஒரு உறுப்பினருக்கு நம் மற்ற உறுப்பினர்களும் ஒன்றுமே சொல்லாது மௌனமாகவே இருப்பதும் வருத்ததக்கது தான் .

வீடியோ கிளிப்பு எடுப்பதை ஏற்று கொள்ள மறுக்கும் & நிருபர்களையும் அனுமதிக்க மறுக்க நினைக்கும் இந்த உறுப்பினர்களை நாம் என்ன சொல்வது ....

தயவு செய்து நம் ஊரின் முன்னேற்றத்துக்கு பாடு பட கூடிய ஒரு நேர்மையான / அறிவாற்றல் உள்ள ஒரு தலைவியை முழு மனதோடு நம் ஊர் மக்களுக்காக வேலை செய்ய அனுமதியுங்கள்..........

நீங்கள் இந்த கூட்டத்துக்கு வராததால் ...யாருக்கு நட்டம் ....நம் ஊர் பொது மக்களுக்கும் ....நம் ஊரின் முன்னேற்றத்துக்கும் தான் ....நம் ஊர் மக்களையும் / ஊரின் நலனையும் நீங்கள் தங்கள் மனதில் கொள்ளவும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கேள்வியும் நானே. பதிலும் நானே
posted by Muthu Magdoom VSH (Jeddah) [22 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24729

கேள்வியும் நானே. பதிலும் நானே?????

எவ்வளவோ பிரச்னை இருக்கும் போது, Video Shooting ஒரு பிரச்சனையா?

தோல்வியை தாங்கும் மனப் பக்குவமும் சிலருக்கு வேண்டும்.

இரு தரப்பும் தங்களின் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தப்பு பண்ணிட்டோம்....-பொதுமக்கள்
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [22 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24731

எல்லாம் ஒரு திட்டத்தோடதான் இருக்காங்க!

அம்புகளெல்லாம் எய்தவரை பார்க்கச் சென்றுள்ளது. இதுலெ நமகெதுக்கு வம்புன்னு? வாயை பொத்திக்கிட்டு இருக்க முடியல்லெ.

நல்லது செய்வாங்கன்னு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பி வச்சா இவங்க மக்கள் உணர்வுகளை மதிக்காமெ இப்படி ஆட்டம் போடுறாங்க!

இப்படி சொல்வார் பேச்சைக் கேட்டு எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விட்ட மக்கள் பிரதிநிதிகளை நினைத்தால் நாம் ஏமாந்து விட்டோம், தப்பு பண்ணிட்டோம் என மக்கள் தம் தலையிலேயே அடித்துக் கொள்வது உறுதி!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அம்பு அடுத்தவன் மார்பில் தானே என எண்ணினால் அடுத்த குறி நமக்குத்தான்....புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [22 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24732

நகர்மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் வீடியோ ஒளிப்பதிவு கட்டாயம் தேவை! என ஆணித்தரமாக தலைவர் கூறுவது நியாயமாகத்தான் படுகின்றது.

உறுப்பினர்கள் ஆரம்பத்திலேயே இதற்கு எதிப்பு தெரிவிக்காமல் விட்டிருந்திருப்பார்களேயானால் வீடியோ காட்சி சாதாரணமான ஒன்றாகத்தான் மக்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்களின் பிடிவாதத்தால் அதுவே விஸ்வரூபம் எடுத்து தமிழக அனைத்து சேர்மன் மாநாட்டில் பிரதிபலித்து புதிய வகை கூர்தீட்டிய ஆப்பாக தமிழக முதல்வர் அம்மா வடிவில் ஒட்டுமொத்த நகராட்சிகளுக்கும் வரப்போகுது! என்ன செய்ய? இவங்க அடிக்கிற பந்து அப்டியே திரும்பி நேரா இவங்களை நோக்கிதான் வருது. பாவம்! உறுப்பினர்கள்.

மேலும் தலைவிக்கு எதிராக “வகுந்துறுவேன்னு” பகிரங்கமா கொலை மிரட்டல் விடுத்த நகர்மன்ற உறுப்பினர் பெயரில் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வார்த்தையை உன்னிப்பாக வீடியோ பதிவு மூலம் கேட்டு கொதித்துப் போய் நான்தான் முதலில் கண்டித்து கருத்துப் பதிவு செய்தேன் மட்டுமல்ல, இதே உறுப்பினர்தான் முன்பு நம் கண்ணியமிக்க கோஷாப் பெண்களை வம்புக்கிழுத்து பேசினார். அப்போதும் அவரது வஞ்சக வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி கண்டித்து முதல் கருத்தெழுதினேன்.

ஏன்? நம் மக்களுக்கு இது போன்ற விஷயங்களில் உள்ளம் கொதிக்கவில்லை? இனி இதுக்கு ஒரு அமைப்பையா ஏற்படுத்த முடியும்? உணர்வு என்பது யதார்த்தமாக வர வேண்டும். அந்த வகையில் சில மாற்றுக் கருத்துகள் இருப்பினும் நம் சகோதரியைக் கேவலப்படுத்திய நிகழ்வு கொண்டு பொங்கி எழுந்து நெருப்புக் கங்குகளை கருத்துக்களாய் பதிந்தாரே? சகோதரர் உமர் அனஸ். அந்த உணர்வு இம்மண்ணின் மைந்தர்களுக்கு இருக்குமானால் நம் சகோதரிக்கு முன்னால் அந்த உறுப்பினரின் இந்த கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் வந்திருக்காது. இனியாவது நாம் இது போன்ற விஷயங்களில் ஒன்றாகக் கைகோர்த்து நிற்க வேண்டும்.

நொந்த மனதுடன்,
-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M Sajith (Dubai) [22 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24738

நம்ம வழி எப்போதுமே தனிவழிதானே....

அறிவிப்பில்லாத மற்றும் அவசர கூட்டத்திற்கு வருவதுக்கு மட்டும்தான் இப்போதைக்கு 'பெர்மிஷன்' கிடைத்து இருக்கிறது போல.

இல்லை... விசாரிச்சா தெரியும், வேற ஏதாவது 'பெரிய' அவையில் முக்கிய மீட்டிங் இருந்திருக்கும்...

அவங்க பயங்கர பிஸி - நேரம் கிடைத்தாத்தானே நகரவை கூட்டத்துக்கு எல்லாம் வரமுடியும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...ரொம்ப நல்லது
posted by சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) [22 December 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 24739

தலை காட்ட வெட்கமோ ? அல்லது தலை நகரில் தலைமையை பார்க்க போய் விட்டார்களா ? இவர்கள் நினைத்தால் வருவார்கள் அல்லது வர மாட்டார்கள் .செயல் படாத பொறுப்பற்ற தனம் கண்டிக்கத்தக்கது. இவர்களை தேர்ந்தெடுத்த வார்டு மக்கள் இவர்களை தட்டி கேட்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...நாட்டாம.... தீர்ப்ப மாத்து.
posted by M.S.ABDULAZEEZ (GZ, China) [22 December 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 24740

இன்னும் எத்துனை நாட்கள்தான் இப்படி இந்த நார மன்றத்த (சாரி ) நகர்மன்றத்த பத்தி பேசுறது ? இதுகலம் ஒரு முடிவு ஒன்னு இருக்கு நாடாமைகிட்ட தீர்ப்ப மாத்தி எழுத சொல்லணும். நாடாம யாருன்னு தெரியலய ? நாமதாங்க இவங்கள தேர்ந்து எடுத்த மக்கள் தான் நாட்டாம. அப்போ பாக்கலாம் திரும்பும் யாருலாம் வெற்றி பெற்று வாரங்கனு. இல்லன இன்னும் இருக்கிற மீதி நாட்களும் இப்படித்தான் நாடாகும் நாமளும் இதயத்தான் கருத்துல சொல்லணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உப்பு திண்டால்....... தண்ணி குடிச்சிதானே.... ஆகணும்....??? பழமொழிடோய்.
posted by s.s.md meerasahib (riyadh) [23 December 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24744

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு நண்பர்களே...... நம்மில் பலருக்கும் இதை கேட்பதுக்கு மனக்கஷ்ட்டமா இருக்குது.

நியூசின் குமுறலும், கமாண்டுகளின் குமுறல்களையும் பார்த்தால் வருத்தமாதான் இருக்குது.

“தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது... தவறு செய்தவன் வருந்தியாகணும்... தப்பு செய்தவன் திருந்தியாகணும்...”

எப்போ..... விடிவுகாலம் வருமோ.......?!!! தவறு செய்தவர்கள் வருந்தினா....... விடிவுகாலம் வரலாமா....... இருக்கும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved