Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:08:20 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9807
#KOTW9807
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 18, 2012
காயல்பட்டினம் நகர்மன்ற (நவம்பர் மாத) கூட்ட நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3536 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் 30.11.2012 வெள்ளிக்கிழமையன்று மாலை 04.25 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், அந்நேரத்தில் ஊரிலில்லாத 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீனைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்களும், அவை குறித்த விபரங்களும் வருமாறு:-



மீண்டும் மீண்டும் இப்பொருளை கூட்டப் பொருளில் கொண்டு வருவதன் நோக்கமென்ன என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வியெழுப்பினார்.

ஒரு தீர்மானத்தை இன்னொரு தீர்மானம் மூலம்தான் ரத்து செய்ய இயலும் என்றும், நகர்மன்றக் கூட்ட நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்வதென்பது ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக இருக்க, இதுவரை அதனை ரத்து செய்ய தீர்மானமியற்றப்படவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

தலைவியின் நேர்மை மீது உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், நகர்மன்றக் கூட்டங்களை வீடியோ செய்கையில், அதன் பதிவுகளில் தனக்கு சாதகமானதை வைத்துக்கொண்டு, பாதகமானதை விட்டுவிடுவார் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், தனக்கு நல்ல பெயரும் - உறுப்பினர்களுக்குக் கெட்ட பெயரும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாரப்பத்திரிக்கையில் மலிவான விளம்பர நோக்குடன் தலைவி பேட்டியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து மட்டுமே கூட்டத்தில் பேசுமாறும், இதர விஷயங்களை பேசத் தேவையில்லை என்றும் கூறினார்.

பெரும்பாலான உறுப்பினர்கள் வீடியோ பதிவு வேண்டாம் என்று கருத்து தெரிவித்திருக்க, வேண்டும் என்று தலைவி பிடிவாதம் காண்பிப்பது ஏன் என்று 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், வீடியோ பதிவு செய்யப்பட்டால், தலைவரோ - உறுப்பினர்களோ, முன்னுக்குப் பின் முரணாக யார் பேசினாலும், யார் தவறிழைத்தாலும் காண்பித்துவிடும் என்றும், பெரும்பான்மை அடிப்படையில் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துகொண்டு முன்பு நடந்த அனைத்தையும் மாற்றிச் சொல்லிவிடுவதால், உண்மையில் நடந்தது என்ன என்பதை தற்போது அறிய முடியாமல் உள்ளதாகவும், வீடியோ பதிவு இருந்தால் இக்குறை இனி வருங்காலங்களிலாவது இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்.



மன்றத்தின் பார்வைக்குத் தரப்பட வேண்டிய நகராட்சி நிர்வாக அறிக்கை எங்கே என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வியெழுப்பினார். அறிக்கை உடனடியாக பெறப்படாததால் இப்பொருள் குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரின் கடிதம் எங்கே என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் கேள்வியெழுப்பினார். கடிதம் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

பின்னர் எழுந்து பேசிய 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஊடகங்களின் மீது தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு எதுவுமில்லை என்றும், அவர்கள் ஒருதலைபட்சமாக செய்தி வெளியிடுவதுதான் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்களை நகர்மன்றத்தின் அனுமதி பெற்ற பின் செய்தி சேகரிக்கும் வகையில் தீர்மானம் இயற்றினால்தான், பிற்காலங்களில் அவர்களை அழைத்துப் பேச முடியும் என்றும், ஏற்கனவே இரண்டு இணையதளங்களுக்கு நகர்மன்றத் தலைவர் வழங்கிய அனுமதிக் கடிதத்தை மீண்டும் மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு வைக்க வேண்டும் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.

பின்னர் பேசிய நகர்மன்றத் தலைவர், செய்தியாளர்களுக்கு அனுமதியளித்து துவக்கத்தில் தான் அளித்த கடிதத்தை, உறுப்பினர்கள் விரும்பினால் ரத்து செய்து தீர்மானம் கொண்டு வரட்டும் என்று தெரிவித்தார்.



நகராட்சிக்குத் தொடர்பில்லாத அம்சம் என்ற காரணத்தால் இப்பொருளை ரத்து செய்யலாம் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



வெப்சைட் விவகாரங்கள் குறித்த பொருளை மட்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.



இத்தொட்டி கட்டப்பட்ட நாள் முதல் தண்ணீர் ஏற்றப்படவில்லை என்றும், தண்ணீர் ஏற்ற இயலாவிட்டால் அதை இடித்தகற்றுமாறும் 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா தெரிவித்தார். அதுபோல, மகுதூம் ஜும்ஆ பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கும் இவ்வாறே கோரப்பட்டது.



மருந்தடித்து கம்பளிப்பூச்சிகளை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது.



அவரவர் விருப்பத்திற்கு நகர் முழுக்க வேகத்தடைகளை எந்த வரைமுறையுமின்றி அமைத்துக்கொள்வதாகவும், நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கெங்கு வேகத்தடை தேவை என்பது குறித்து பட்டியல் தயாரித்து, அதன்படி வேகத்தடைகள் அமைக்கப்படும் என்றும் வேண்டாத வேகத்தடைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார் தெரிவித்தார்.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



பழைய லாரியை பழுது பார்க்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே இருக்கும் லாரிகளுக்கே ஓட்டுநர் பற்றாக்குறை இருக்க, புதிய லாரிகள் வாங்க வேண்டுமென்பது அவசியமற்றது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.



தற்போது புதிய சாலைகளை அமைத்தால், 2ஆவது பைப்லைன் திட்டத்திற்காக மீண்டும் அவற்றை உடைக்க வேண்டியது வரும் என்றும், எனவே அத்திட்டம் நிறைவுற்ற பின்னர் நகரில் புதிய சாலைகளை அமைக்கலாம் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் தெரிவித்தார்.

நகராட்சி நிதிநிலையை அனுசரித்து இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



DCW ஆலை, காயல்பட்டினம் நகராட்சிக்கு தொழில் வரியாக 2,13,000 ரூபாயும், கட்டிட வரியாக 7,00,000 ரூபாயும், உரிமங்களுக்காக 1,00,000 ரூபாயும் என மொத்தம் 10,13,000 ரூபாய் தருவதாகவும், அங்கு பணியாற்றும் பணியார்கள் குறித்து ஆலை நிர்வாகம் தகவல் எதுவும் அளிப்பதில்லை என்றும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் தெரிவித்தார்.

நகராட்சிக்கு ஆலை நிர்வாகம் தர வேண்டிய தகவல்களைத் தரத் தவறினால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.

DCW ஆலைக்கு நேரில் சென்று - நவ.29 அன்று காயல்பட்டினத்தில் ஓர் அமைப்பு தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் அந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

பின்னர் எழுந்து பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, அந்த ஆலையில் சில காலம் தான் ஊதிய அடிப்படையில் பணியாற்றியதாகவும், தான் ஒன்றும் அபின் கடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அவைக்கு அவசியமில்லாத விஷயங்களை இங்கு பேச வேண்டாம் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் மற்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர், “எங்களைப் பற்றி இணையதளத்தில் அறுத்துக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கும் கட்டளையிட வேண்டியதுதானே...?” என்று கேட்டனர். இவ்வாறாக, இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் இத்திட்டப்படி செய்யலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



ஊஞ்சல்கள், ராட்டினங்களை அமைக்க அனுமதித்தால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இதைச் செய்கிறார்கள் என்று ஆணையர் கேள்வியெழுப்பினார். கடைகளுக்கு தனியிடம் ஒதுக்கி வரைமுறைப்படுத்தலாம் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவுமில்லாத நிலையில் யாருக்கோ இரக்கப்பட்டு, ஊர் மக்களுக்கு வினையைத் தேடித்தரும் முயற்சியில் இறங்கத் தேவையில்லை என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.



நகர்மன்றக் கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



இதே பொருள் பின்வரும் கூட்டப் பொருளிலும் வருவதால் அப்போது விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.



தெரு விளக்கு மாட்டப்பட்டதாக காட்டப்பட்டுள்ள இப்பட்டியல் குறித்து யாராவது ஆய்வு செய்தீர்களா என நகர்மன்றத் தலைவர் கேட்டார். ஆய்வு செய்யுமாறு எங்களிடம் கேட்டீர்களா என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். ஆய்வு செய்யும்படி அனைத்து உறுப்பினர்களிடமும் தான் கேட்டுக்கொண்டதாகவும், யாரும் செய்யவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.



இந்தக் கூட்டப் பொருளை யார் கொண்டு வந்தது என 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். ஆணையரிடம் கேட்குமாறு நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். ஆணையர், தானே அப்பொருளைக் கொண்டு வந்ததாகவும், மன்றம் தீர்மானித்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார். தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கத் தேவையில்லையென்றும், அரசிடமிருந்து இதுகுறித்து ஆணை வந்த பின் விவாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.



கணினி இயக்குநர் ஒருவருக்கான பணியிடத்தையும் இணைத்துக்கொண்டு, அலுவலகக் குறிப்பின் அடிப்படையில செய்ய தீர்மானிக்கப்பட்டது.



இதுபோன்ற கூட்டப் பொருட்களுக்கு வாகனத்தின் பதிவு எண்ணை மறவாமல் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



மரத்தை வெட்டும் விஷயத்தில் நகராட்சி தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது என்றும், துறை சார் அதிகாரிகளின் உத்தரவு பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.



இன்டர்நெட் மயமான இக்காலத்தில், ஃபேஸ்புக் போன்றவற்றில் விபரங்களைப் பெற்றுக்கொண்டு, அந்நியர்கள் தெருக்களுக்குள் நுழையும் வாய்ப்புள்ளதால் தெருக்களுக்கு பெயர்ப்பலகையை நிறுவத் தேவையில்லை என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார். அதே கருத்தை 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் வழிமொழிந்தார். இதர உறுப்பினர்கள் பலர் பெயர்ப்பலகை அவசியம் நிறுவப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

அவ்வாறு பெயர்ப்பலகை நிறுவ முடிவெடுக்கப்பட்டாலும், என் வார்டிலுள்ள தெருக்களுக்கு வைக்கத் தேவையில்லை... அதற்கு நான் சம்மதிக்க மாட்டோம் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.



ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.



அரசுத் துறை சார்ந்த வளாகங்களில் இதுபோன்ற பணிகளை நகராட்சி செய்ய இயலாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இப்பொருள் நிராகரிக்கப்பட்டது.



அதற்குரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் வருவதற்கு தாமதமாவதாகவும், விரைவில் இக்குறை சரிசெய்யப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



இதுகுறித்து நகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



கட்டிடப் பணியாளர்களை நகராட்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனை வளாக பகுதியில் ஒன்றுகூட வலியுறுத்தலாம் என்றும், தேவையைக் கருத்திற்கொண்டு காவல்துறையின் உதவியை நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது. எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு அருகிலுள்ள நகராட்சி தினசரி சந்தையின் வெளியிலும் பல வணிகர்கள் கடைகளை அமைத்து வணிகம் செய்து வருவதாகவும், அவை தடுக்கப்பட வேண்டும் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.



நகரில் வேகத்தடை அமைக்கத் தேவையான இடங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு, அவற்றுக்கு வேகத்தடை அமைக்க நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



இப்பொருள் குறித்த நடவடிக்கை நடைமுறை சாத்தியமற்றது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



“கொம்புத்துறையில் இரண்டு லைன்கள் உள்ளன... அதை ஒரு லைனாக மாற்ற வேண்டும்” என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.



ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.



அக்டோபர் மாத செலவினக் கணக்கு மட்டுமே நகராட்சி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இக்கூட்டப் பொருளில் “அக்டோபர் 2012-ம் மாதம் வரையுள்ள” என்று வாசகம் உள்ளதாகவும், அத்தனை மாதங்களுக்குமான செலவுக் கணக்குகளுக்கும் ஒப்புதல் கேட்கும் வகையில் இப்பொருள் வாசகம் அமைந்துள்ளதால், செலவு கணக்கு காட்டப்பட்டுள்ள அக்டோபர் மாதத்திற்கு மட்டும் ஒப்புதல் வழங்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



தலைவி விருப்பப்படி இ-டெண்டர் விட முடிவெடுக்கப்பட்ட பிறகு, ஒப்பந்தக்காரர்கள் அவ்வப்போது இணையதளம் வாயிலாக டெண்டர் விபரங்களைப் பார்க்க வேண்டும் என்றும், அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை என்பதையெல்லாம் அவர்கள் ஒரு குறையாகச் சொல்வது சரியல்ல என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், எந்த வகை டெண்டராக இருந்தாலும், அரசு விதிப்படி என்னென்ன முறைமைகள் உள்ளனவோ அவையனைத்தும் முறையாக செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றுள் ஏதேனும் ஒன்றைச் செய்யத் தவறினாலும் அது குற்றமே என்றும், முறைப்படி அனைத்தையும் செய்து, மறு டெண்டர் விடுவதே சரியானது என்றும் தெரிவித்தார்.



நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் எவரிடத்திலும் கோரிக்கை வைக்க இயலாது என்றும், மன்றத் தலைவர் - உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கோரிக்கை வைப்பதில் தவறில்லை என்றும், நகராட்சி திட்ட உதவி அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

மன்றத்தில் தீர்மானமியற்றி, ஐக்கியப் பேரவையிடம் நிலம் கேட்டு கோரிக்கை வைக்கலாம் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.

இதற்காக அரசிடம் நிலம் கேட்கலாம் என்றும், அது கிடைக்காதபட்சத்தில் - ஒரு அமைப்பு என்றில்லாமல், பரவலாக ஊரிலுள்ள அமைப்புகளுக்கு நகராட்சி நிர்வாகம் சாராமல் கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கலாம் என நகர்மன்றத் தலைவர் தெரிவிக்க, அடுத்து பேசிய 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், அனைத்து அமைப்புகளுக்கும் கடிதம் வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் பலர், அது கடற்கரை ஒழுங்கு சட்ட விதிகளுக்குட்பட்ட (CRZ) பகுதியில் வருவதாகவும், எனவே அனுமதியளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனர். பின்னர் பேசிய 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, புகாரிஷ் ஷரீஃப் பின்புறம் இதே நில மட்டத்திலிருக்கும் குடியிருப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது போல தங்கள் பகுதிக்கும் அனுமதியளிக்கலாமே என்று தெரிவித்தார்.

CRZ விதிமுறை காரணமாகத்தான் ப்ளான் அனுமதி தரப்படவில்லை என்றால், கற்புடையார் பள்ளி வட்டத்தில் அதே இடத்திலுள்ள இதர சில வீடுகளுக்கு மட்டும் அனுமதியளித்தது எப்படி என்று உறுப்பினர் ஜெ.அந்தோணி கேட்க, “அவற்றையும் கேன்சல் செய்து விடலாம்” என்று ஆணையர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நகர்மன்றத் தலைவர், “ஆணையர் சொன்ன படி கேன்சல் செய்யலாம்... தவறாக அப்ரூவல் கொடுத்ததற்காக அவர் மீது நடவடிக்கையும் எடுக்கலாம்” என்று தெரிவித்தார்.



ஐக்கியப் பேரவையிடம் இதற்காக நிலம் கேட்கலாம் என்று தெரிவித்த 01ஆவது வார்டு உறுப்பினர், வார இதழ் ஒன்றில் நகர்மன்றத் தலைவர் அளித்த பேட்டி குறித்து விமர்சித்துப் பேசினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருளைத் தவிர இதர விஷயங்களை கூட்டத்தில் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.

குப்பை கொட்ட அரசிடம் முதலில் இடம் கேட்கலாம் என்றும், எடுத்ததற்கெல்லாம் மக்களிடமே அனைத்தையும் கேட்கத் தேவையில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.

அரசு நூலகத்திற்கு மட்டும் தனியாரிடம் கோரிக்கை வைத்ததேன் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் நகர்மன்றத் தலைவரிடம் கேள்வியெழுப்பினார். அது தன்னிறைவுத் திட்டம் என்றும், இரண்டாவது பைப்லைன் திட்டத்திற்கு அரசிடம் கேட்டதன் அடிப்படையில் இடம் கிடைத்தது போல, இதற்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டு, அது கைகூடாவிடில் அடுத்தகட்டமாக நகர அமைப்புகளிடம் கேட்கலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



இதற்கான நிதியாதாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து பெற முயற்சிக்கலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



முறைகேடான நடவடிக்கைகள் எங்கெங்கு மேற்கொள்ளப்படுகிறது என்று ஆய்ந்தறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



நகராட்சி நிதிநிலையைக் கருத்திற்கொண்டு நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



ஒரே நேரத்தில் 10 டன் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, 3 டன் ப்ளீச்சிங் பவுடர் வாங்க தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



காயல்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அரசு விரைவுப் பேருந்து சேவை அண்மைக்காலமாக இயக்கப்படவில்லை என்பதைக் கருத்திற்கொண்டு, நகர பொதுநல ஆர்வலர் ஒருவர் போக்குவரத்துத் துறையிடம் விசாரித்ததாகவும், காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள - நகராட்சிக்கு சொந்தமான இக்கழிப்பறை பராமரிப்பின்றி பூட்டி வைக்கப்பட்டிருப்பதால், பேருந்து ஓட்டுநர் - நடத்துநருக்கு சிரமம் ஏற்படுவதாகவும், எனவே தற்காலிகமாக இச்சேவை இயக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.

அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் இதுகுறித்து நடவடிக்கையெடுக்க தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.



அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு, கூட்டப்பொருட்கள் குறித்து நகர்மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அக்டோபர் 2012 வரையிலான - நகராட்சியின் வங்கிக் கணக்குகள் இருப்பு விபரம்:



கூட்டத் துளிகள்...

விடுபட்ட கூட்டப்பொருள் எண்:
கூட்டப் பொருள் எண் 105க்குப் பிறகு அடுத்த பொருளுக்கு 106 என்பதற்கு பதிலாக 107 என்று கூட்டப் பொருளில் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் நடைபெறும் நகர்மன்றக் கூட்டங்களுக்கான கூட்டப் பொருளில் எழுத்துப் பிழைகளைப் பார்த்து திருத்தும் வழக்கம் இதுவரை காணப்படவில்லை. அவசர கதியில் தட்டச்சு செய்து, அனைவருக்கும் கூட்டப் பொருள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நகர்மன்றக் கூட்டம் நடைபெறும்போதுதான் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

நகர சபைக்குள் ‘நக்கீரன்’:
‘நக்கீரன்’ நவம்பர் 24-27 இதழில், “லஞ்சம் வாங்காத தலைவிக்கு நெருக்கடி” என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா மற்றும் நகர்மன்றத் தலைவருக்கு ஆதரவாகவும் - எதிராகவும் கருத்துக்களைக் கொண்ட பொதுமக்களில் சிலரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு - அவை அச்செய்தித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்தித் தொகுப்பு பின்வருமாறு:-



(செய்தித் தொகுப்பை பெரிதாகக் காண - அதன் மீது சொடுக்குக!)

நடப்பு நகர்மன்றக் கூட்டத்தில், 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான், 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு உள்ளிட்டோர் ‘நக்கீரன்’ இதழில் வெளியான இச்செய்தி குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

நகர்மன்றக் கூட்டம் என்பது, நகர மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக கலந்தாலோசிக்கும் கூட்டம் என்பதால், அதில் கூட்டப் பொருட்கள் தவிர வேறெதையும் குறித்து பேச வேண்டாம் என்று நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதைக் காதில் வாங்காமல் தொடர்ந்து அதுகுறித்து சில உறுப்பினர்கள் விமர்சித்துக் கொண்டிருந்தனர்.

கூட்டப் பொருட்கள் 100க்கும் மேல் இருப்பதாகவும், நேரம் குறைவாக உள்ளதாகவும் கூறிய நகர்மன்றத் தலைவர், கூட்டப் பொருள் தவிர வேறெந்த விஷயங்கள் குறித்தும் பேசும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

துவக்கத்தில் இதைக் கேலி செய்து விமர்சித்த உறுப்பினர்கள் சிலர், சிறிது நேரத்தில் மவுனம் காத்தனர்.

பார்வையாளர்கள்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இது ஏதோ SOMTHING WRONG - என நினைக்க தோன்றுகிறது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [18 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24564

பொருள் என் (21) எழுந்து பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, அந்த ஆலையில் சில காலம் தான் ஊதிய அடிப்படையில் பணியாற்றியதாகவும், தான் ஒன்றும் அபின் கடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அவைக்கு அவசியமில்லாத விஷயங்களை இங்கு பேச வேண்டாம் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் மற்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர், “எங்களைப் பற்றி இணையதளத்தில் அறுத்துக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கும் கட்டளையிட வேண்டியதுதானே...?” என்று கேட்டனர்.

அபின் கடத்தவில்லை என்றும் “எங்களைப் அறுத்துக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்... என்றும் தீர்மான பொருள் எண் 21ல் ஏன் உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும்... இது விபரம் என் போன்ற மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை...

அபின் கடத்தல்...! - அறுத்துக் கிழித்து...! இப்படி போன்ற வார்த்தைகள் (வாதங்கள்) ஏன் மக்கள் மன்றத்தில் வருகிறது..?

இந்த வார்த்தைகளுக்கு இடையில் அப்போது குறுக்கிட்டுப் பேசிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் அவைக்கு அவசியமில்லாத விஷயங்களை இங்கு பேச வேண்டாம் என்று வேறு கூறி இருக்கிறார்...

இது ஏதோ SOMTHING WRONG - என நினைக்க தோன்றுகிறது...

மக்களுக்குரிய தீர்மானம் என்னதோ.. அதை விவாதிப்பதை விட்டு.. விட்டு அபின்.. கஞ்சா.. அறுத்து... கிழித்து... அது இதுன்னு ...மக்கள் வரிபணத்தில் படி ரூபாய் 600 வாங்கும் உறுப்பினர்களாகிய நீங்கள் மக்களின் குறைகளை விவாதியுங்கள்...இனி வேண்டாம் அபின்.. அறுத்து.. கிழித்து.. போன்ற வார்த்தைகள்...

இனி இப்படியே மக்களுக்குரிய கூட்டம் நடந்து கொண்டு போனால் செய்தியாளரின் புகை பட கேமராவையும் தட்டி பறிப்பார்கள் போல.. காரணம் இந்த செய்தி மக்களுக்கு போகுது அல்லவா... அதேன்.. அதேன்... அதேதான்..

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Good Joke..
posted by Jahir Hussain VENA (Bahrain) [18 December 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 24565

"அதற்கு பதிலளித்துப் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் மற்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு ஆகியோர், “எங்களைப் பற்றி இணையதளத்தில் அறுத்துக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்... அவர்களுக்கும் கட்டளையிட வேண்டியதுதானே...?"

Copy & பிரஸ் & பேஸ்ட்

நோ கமெண்ட்ஸ் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [18 December 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24568

தீர்மானம்..!! தீர்மானம்..!! தீர்மானம்.. !! தீர்மானம்..!!

எழுத்திலும் ஏட்டளவிலும் நன்றாக தான் இருக்கின்றன. என்று தான் நடைமுறை படுத்துவார்களோ தெரியவில்லை.

இத்தனை தீர்மானங்கள் நிறைவேறின, அத்தனை தீர்மானங்கள் நிறைவேறின என்ற நிகழ்வுகளை பார்த்தால், வங்கியில் பணிபுரியும் காசாளர், தன்னிடம் தினமும் பல லட்சம் புழங்குகின்றது என்று பெருமையுடன் கூறுவது போல உள்ளது.

அனைத்து நல்ல நிகழ்வுகளும் விரைவாகவும் நன்மையாகவும் அமைய வல்ல இறைவன் துணைபுரிவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...தீதும் நன்றும் பிறர் தர வாரா...
posted by Mauroof (Dubai) [20 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24622

நவம்பர் மாத நகர்மன்றக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் விவாதத்திற்கு/பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் அநேகம் அவசியமானதாகவே உள்ளது. சில பொருட்களின் மீதான உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் வரவேற்க்கத்தக்கது. மற்ற சில வரவேற்க்கத்தக்கதல்ல.

மின் விளக்குகள் பராமரிப்பு மற்றும் புதியவை, பழுதடைந்த சாலைகள் பராமரிப்பு மற்றும் புதியவை (2ஆவது பைப்லைன் திட்டம் ஆரம்பிக்கும்பொழுது சாலைகள் சேதத்திற்கு உள்ளாகலாம், எனவே அந்த பணிகள் நடைபெற்ற பின்னர் அமைக்கலாம் என்ற உறுப்பினரின் கருத்து சரியானது. அதற்காக பள்ளங்களைக்கூட நிரப்பாமல் விட்டு விடாதீர்கள்), நீர் நிலைகள் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளல், குடிநீர் தேக்கங்கள், குடிநீர் வால்வு தொட்டிகள் பராமரிப்பு மற்றும் அழகுக் குதிரைகளாகக் காட்சி தரும் குடிநீர் தேக்கத் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் அல்லது இடித்தல் (பொதுமக்களின் வரிப்பணம் சிலரின் வயிற்றிற்கு சமர்ப்பணம், அது கட்டப்ப்படும்போதும் சரி, இடிக்கப்ப்படும்போதும் சரி), புதிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிழற்குடைகள் அமைத்தல், பயன்பாடற்ற பேருந்து நிழற்கூடம் அகற்றுதல், முறைப்படுத்தப்படவேண்டிய/அகற்ற வேண்டிய வேகத்தடைகள் மற்றும் புதியவை, பேருந்து நிலைய கழிப்பறை பராமரிப்பு, நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் பராமரிப்பு, தினசரி சந்தை ஒழுங்குபடுத்துதல், சாலைகளில் பெயர் பலகை அமைத்தல், சட்டத்திற்கு உட்பட்டு கட்டுமான பணிகளுக்கான அங்கீகாரம் வழங்கல் மற்றும் அதற்கு அப்பாற்பட்டு வழங்கப்பட்டவைகளை ரத்து செய்தல், DCW ஆலை குறித்த ஆய்வுகள், கழிவு மேலாண்மைக்கு தேவைப்படும் நிலம் குறித்த கருத்துப்பரிமாற்றங்கள், கம்பளிப்பூச்சிகளை அழித்தல், நகராட்சிப் பணிகளுக்குத் தேவையான புதிய தொழிலாளர்கள் நியமனம் குறித்த வேண்டுகோள், குப்பைகள் அகற்ற பயன்படுத்தப்படும் ஊர்தி/கள் பழுது நீக்குதல், ஆடு, மாடுகள் அறுப்பிடம், ஆக்கிரமிக்கப்பிற்கு உள்ளான சாலைகளை மீட்டெடுத்தல், தனது வார்டிற்கு உட்பட்ட சாலையில் காணப்படும் புழுதி மணல்களை அப்புறப்படுத்த வேண்டி ஒரே ஒரு உறுப்பினரின் கோரிக்கை வரவேற்கத்தக்கது (குறிப்பிட்ட சாலையைத் தவிர வேறெங்கும் புழுதி மணல்கள் இல்லை போலும், அதனால்தான் மற்ற உறுப்பினர்கள் இந்த முக்கியமான கோரிக்கையை வைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

புழுதி மணல்கள் கொண்ட சாலையில் செல்லும் வாகனங்களால் எழும் புழுதிகள், அப்புழுதியின் காரணமாக ஏற்படும் நோய்களை தடுப்பது பற்றி அக்கறையே இல்லை), பொருள் எண் 82-ன் படி பள்ளங்களில் சரள் மண் பரப்புவதில் தவறில்லை, ஆனால் மோனோ ரயில் விடும் அளவிற்கு பரப்பாமல் இருந்தால் சரி (பார்க்க: http://www.kayalpatnam.com/shownews.asp?id=9592), சாலையை உயர்த்தச் சொல்லி ஒரு உறுப்பினர் கோரிக்கை. பார்த்து உயர்த்துங்க Sir தேவையான அளவிற்கு. அதை விடுத்து சில வருடங்களுக்கு முன்னர் குறுக்குதெரு உயர்தப்பட்டதைப் போன்றா அல்லது அதை விட உயரமாகவோ உயர்த்திவிடாதீர்கள். சாலைகள் உயர்த்துவதில் பொதுமக்களின் பங்கு ஒரு புறமிருக்க தற்போது அரசு இயந்திரம் மூலம் உயர்த்தினால் அப்பகுதியில் உள்ள வீடுகள் இன்னும் பாதாளத்திற்கு போகும்.

நகர்மன்றக் கூட்ட நிகழ்வுகளை காணொளிப்பதிவு செய்யப்படுவதின் மூலம் தலைவர் தனக்கு சாதகமில்லாததை நீக்கிவிடக்கூடும் என்று அஞ்சுவதாகவும், தலைவியின் நேர்மை மீது பல உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் "ஐக்கியப் புகழ்" உறுப்பினர் கூறியதை அவரின் மனசாட்சிக்கே விட்டுவிடலாம். அவ்வளவு இலகுவாக சாட்சியங்களை/நடந்தவைகளை மாற்றி அமைப்பதென்பது இன்றைய சூழலில் சாத்தியமற்றது. வழக்கமாக இவர் அமரும் இடமும் மாறுபட்டுள்ளது. காணொளிப்பதிவு செய்வதை தடை செய்யும் வகையில் பொருளும் கொண்டு வந்தாகிவிட்டது. இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களா!

தலைவி விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று கூறும் உறுப்பினர்களில் பலர் ஒரே கோரிக்கைகளை பல்வேறு பொருள்களாக அவையில் வைப்பதின் மூலம் தாங்களும் விளம்பரம் தேடிக்கொள்ளத்தான் என எடுத்துக் கொள்ளலாமா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் பொருளுக்கு சற்றும் தொடர்பில்லாது, DCW-வில் தான் பணிபுரிந்த காலத்தில் "அபின்" கடத்தவில்லை என்று கூறியுள்ளார் உறுப்பினர் சாமி. அப்படியானால் அதுவுமா தயாரிக்கப்படுகிறது அந்த ஆலையில்? சாமியே இவ்வாறு கூறி இருப்பதினால்தான் இந்த ஐயம்.

இணையத்தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை "அறுத்துக் கிழிக்கிறார்கள்" என்று காரம் தரக்கூடிய இரண்டு பொருள்களான ஒன்றின் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் எழுதும்போதான முதல் எழுத்திற்கும், மற்றொரு பொருளுடைய தமிழ் பெயரின் ஆரம்ப எழுத்திற்கும் சொந்தக்காரர்களான இரு உறுப்பினர்கள் வெகுண்டெழுந்தது அவசியமே இல்லாத ஒன்று. கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முயலாது இவ்வாறு பேசுவது அறிவுடைமை அன்று.

மன்றத்தின் பல அமர்வுகளில் உட்காருவதற்கு பதிலாக மேஜையில் படுக்கும் தோரணையிலேயே காட்சி தந்த உறுப்பினர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி விளம்பரத்தின் உச்சிக்கே போய்விட்டார் எனலாம். என்னே ஒரு ஆச்சரியம் வழக்கமாக கர்ஜிக்கும் சில உறுப்பினர்கள் (தாய்க்குலம் உட்படத்தான்) இவ்வளவு சாதுவாக இருக்கிறார்களே என்று.! நிரூபித்தார்கள் பாருங்க நாங்கள் அவ்வாறு இல்லை என்று (பார்க்க: http://www.kayalpatnam.com/shownews.asp?id=9811). அடுத்து யார் தலைவர் என்பதும் முடிவாகி இருக்கலாம். ஏனெனில், அடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம்தானே?

"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது" (பொருள்:-பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த பகையே வேண்டாம், அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்) என்ற திருக்குறளையும் "இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும்" (பொருள்:- அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்) என்ற திருக்குறளையும் இங்கே பதிந்து எனது கருத்தை முடிக்கிறேன். நன்றி. வாழ்க ஜனநாயகம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved