Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:28:20 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9817
#KOTW9817
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 19, 2012
மின் வாரிய நிகழ்ச்சியில் காயல்பட்டினம் புறக்கணிப்பு! நோட்டீஸ் வினியோகிக்க வந்த உதவி பொறியாளரை பொதுமக்கள் முற்றுகை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3620 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - திருச்செந்தூர் சார்பில், மின்சார சிக்கன வாரம் 14.12.2012 முதல் 20.12.2012 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மின்சார சிக்கன வார விழா நிகழ்ச்சி, டிசம்பர் 19ஆம் தேதி (இன்று) மதியம் 03.00 மணியளவில் ஆறுமுகநேரி ரத்னா கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்த விபரங்களடங்கிய பிரசுரம் (நோட்டீஸ்) இன்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி வெளி வளாகத்தில் வினியோகிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலக உதவி பொறியாளர் முருகன் தலைமையில், அதன் ஊழியர் ஒருவர், ஆசிரியர் மு.அப்துல் ரசாக் ஆகியோர் பிரசுரத்தை பொதுமக்களுக்கும், நகராட்சி அங்கத்தினருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தனர்.





மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் DCW நிறுவன துணை மேலாளர், குரும்பூர் காமராஜர் மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர், ஆறுமுகநேரி - கே.ஏ.மேனிலைப்பள்ளி ஆசிரியை, திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபர், ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற தலைவர், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் தொழில்நுட்பக் கல்லூரியின் முதுல்வர், ஆழ்வார் திருநகரி தேர்வுநிலை பேரூராட்சியின் தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளதாக அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரையோ, பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளையோ அழைக்காதது ஏன் என காயல்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர் முருகனிடம் பொதுமக்கள் கேள்வியெழுப்பினர்.

காயல்பட்டினத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றக் கேட்டுக்கொண்டதாகவும், அவர்கள் மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மின் வாரியத்தின் சார்பில் அழைக்கப்பட்ட நான்கு காயலர்கள் யார் என்று மறுபடியும் கேட்கப்பட்டபோது, “உயரதிகாரிதான் பேசினார்... அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்... வேண்டுமானால் நீங்க யாராவது பேச வாருங்களேன்...” என்று கூறினார்.

அழைக்க வேண்டியவர்களை முறைப்படி அழைக்காமல் நோட்டீஸும் அச்சடிக்கப்பட்ட பின்னர், நின்ற இடத்தில் அழைப்பது சரியல்ல என்றும், நிகழ்ச்சியில் உரையாற்ற காயல்பட்டினத்திலுள்ளோரை புறக்கணிக்கும்போது, கலந்துகொள்ள மட்டும் அழைப்பு விடுப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.

அத்துடன், மின்சார சிக்கன வார விழாவை அறிவிக்கும் ஸ்டிக்கர் - விழா முடிய ஒரேயொரு நாள் மட்டுமே உள்ள நிலையில் நேற்றுதான் (டிச.18) நகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய ஆசிரியர் மு.அப்துல் ரசாக், ஏற்கனவே மின் வாரியத்தின் சார்பில் கவிதைப் போட்டியொன்று காயல்பட்டினத்தின் பள்ளியொன்றில் நடத்தப்பட்டதாகக் கூறினார். வேறு நிகழ்ச்சிகளைப் பற்றி தாங்கள் எதுவும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும், மின்சார சிக்கன வார விழாவில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணத்தை மட்டும் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அவரிடம் தெரிவித்தனர்.





[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 17:42 / 19.12.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இந்த விழாவிற்கு நகராட்சி தலைவரையோ...! நகரில் வேறு எந்த பொது அமைப்பையோ..! நீங்கள் அழைக்க வேண்டாம்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [19 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24597

மின்சார சிக்கன வார விழாவா...! மின்சாரம் சரியா விநியோகிக்க துப்பு இல்லை...! இதுல வேற விழா வேண்டிகிடக்குதோ... விழா அழைப்பில் சிக்கனம் செய்து உள்ளீர்கள்...

மின்சார சிக்கன வார விழா நிகழ்ச்சியில் பங்கேற்க காயல்பட்டினத்தின் மின் வாரிய சப் ஸ்டேஷன் விரிவாக்க திட்டத்திற்கு சமீபத்தில் பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை அன்பளிப்பு செய்த ஐக்கிய பேரவையின் முக்கிய பெரியவர்களை அழைப்பு விடுத்து கண்ணியபடுத்தி இருக்கலாம் இந்த நிகழ்ச்சி பங்கேற்க செய்து இருக்கலாம்...

மின்சார வாரியத்திற்கு ஏன் இந்த பாகுபாடு...!

புறக்களிப்புக்கு என்ன காரணம்...?

இந்த ஊர் பெரியவர்களும் மக்களும் அன்று முதல் இன்றைய காலம் வரை மின்சார வாரியத்திற்கு நல்ல தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்...! இன்னும் செய்து கொண்டு இருக்கிறார்கள்...!

இந்த விழாவிற்கு நகராட்சி தலைவரையோ...! நகரில் வேறு எந்த பொது அமைப்பையோ..! நீங்கள் அழைக்க வேண்டாம்..

மின்சார வாரியத்திற்கு பல உதவிகளை செய்த ஐக்கிய பேரவை பெரியவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைக்க தவறியது கண்டிக்கதக்கது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Koman Babu (India) [19 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24603

DCW நிறுவன துணை மேலாளர் , இவரின் வருகையால் காயலர் வருவதை தவிர்த்துவிட்டார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24609

யாராவது வந்து பேசுங்கள் என்று சொன்ன மாத்திரத்தில் போய் பேசி நமக்கு ஏற்படுத்தியுள்ள இழிவை எடுத்துச்சொல்லி இருக்கவேண்டும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார்களே. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.

மின்வாரியம் செய்யும் சப்பைக்கட்டு இது. மின்வெட்டு 18 மணி நேரம் இருக்கும் போது மின் சிக்கனத்தை பற்றி பேச ஒரு விழாவா? இந்த நாட்டில் இதே பிழைப்பாய் போய் விட்டது, பிறந்தாலும் விழா செத்தாலும் விழா. . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ஆச்சரியமா இருக்கு!
posted by OMER ANAS (DOHA QATAR.) [20 December 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24611

நமக்கு நாமே தினமும் வைத்துக்கொள்ளும் ஆப்பால் இவர்கள் யாரை அழைப்பது என்று ஒருவேளை குழம்பிப் போய் இருக்கலாம்! இவர்கள் செய்தது முற்றிலும் சரியே! நாம் யாரை அனுப்புவது? எது சரி கொஞ்சம் சொல்லுங்களேன்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அரை வயிறு கஞ்சி குடிக்கிறவன்டெ போயி இனி அரிசியெக் கொஞ்சமா போடுங்கிற கதை தான் இது!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [20 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24619

தேசிய பிரச்சனையாகி விட்டதாம் மின் பற்றாக்குறை! 2012-ல் மிகச் சிறந்த நகைச்சுவை!

மத்த மாநிலங்களை உத்துப் பாருங்கப்பா செத்துப் போய்டுவீங்க...! அரை வயிறு கஞ்சி குடிக்கிறவன்டெ போயி இனி அரிசியெக் கொஞ்சமா போடுங்கிற கதைதான் இது!

இந்த அரசாங்கத்தின் கையாளாகத தனத்தால் சிறு தொழில்கள் யாவும் முடங்கிப் போய் மூலையில் கிடக்குது, படிக்கிற புள்ளைங்க பரிதவிக்கிறாங்க, உடல் புழுக்கத்தால் மனம் புழுங்கி எரிச்சலில் இருக்கும் பொதுமக்களிடம் இவங்க வாங்கி கட்டாமெ போனதே பெரிய விஷயம்.

இனி இந்தப் பக்கம் வருவாங்க...? மறந்தும் கூட இந்தப் பக்கமா தலை வச்சு படுக்க மாட்டாங்க...! சபாஷ்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [20 December 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 24703

அஸ்ஸலாமு அலைக்கும்

அட ...என்னப்பா ...இந்த மின்துறையின் தமாசான புரோகரமை நினைத்தாலே பொது மக்கள் யாவர்களுக்குமே சிரிப்புதான் வரும் ....மின்சாரமே இல்லாத பொது மக்கள் எப்படி சார் ....மின்சாரத்தை சிக்கனம் பண்ண முடியும் ??

ஆமா ...ஏன் இந்த மின்சார புரோகிராமுக்கு மரியாதை நிமித்தமாக. நம் ஊர் ஐக்கிய பேரவையின் அனுபவமிக்க பெரும் தலைவர்கள் இருக்கும் போது அவர்களை அழைத்து இருக்கலாம் ....நம் ஊர் இந்த மின் துறைக்கு இவர்கள் தானே நிலம் தந்து உதவி புரிந்தார்கள் அந்த நன்றி விசுவாசம் கூடவா இந்த மின்துறை நிர்வாகத்துக்கு இல்லாமல் போய் விட்டது ....இல்லை எனில். நம் ஊர் நகர் மன்ற தலைவி அவர்களையாவது அழைத்து இருக்கலாம் ?? ??

ஏன் மின்சார துரை நம் ஊரை புறகனித்தார்கள்???
வன்மையாகவே கண்டிக்கத்தக்கது ........

>>>>நாம் கொஞ்சம் யோசிக்கவேணும் .....நம் ஊரின் ஒற்றுமை குறைவதால்தான் இதுபோன்ற ஒரு சில தவறுகள் ஏற்படுகிறதோ .....என்னவோ ...தெரிய வில்லை ?? நாம் இப்பவாது ஒற்றுமை என்கிற மரபை கடைபிடிக்க வேணும் .....

>>>>இது தான் நமது பலம் .....இல்லை ....இல்லை ....ஒற்றுமை தான் நம் ஊரின் முழு பலமே<<<<<< வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved