Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:25 AM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9659
#KOTW9659
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 22, 2012
DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நவ.29ஆம் தேதி கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்! வெளியூர் - வெளிநாடுவாழ் காயலர்களும் கலந்துகொள்ள அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3254 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து - காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டிகள் ஆதரவுடன் நவ.29ஆம் தேதி கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்திட, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தீர்மானித்துள்ளது. நிகழ்வுகள் அனைத்திலும் - வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களும் பங்கேற்க வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு்ளளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

DCW தொழிற்சாலையின் நுழைவாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது. சட்டம் - ஓழங்கு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, ஊருக்குள் நடத்துவதற்கு மட்டுமே காவல்துறை அனுமதி கிட்டியது. பின்னர், அதன் சாதக - பாதகங்கள் குறித்து கலந்தாலோசித்ததன் அடிப்படையில்,

29.11.2012 வியாழக்கிழமையன்று முழு கடையடைப்பு நடத்தவும்,

அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும்,

அதனைத் தொடர்ந்து, அதே இடத்தில் அன்றிரவு 07.00 மணியளவில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நமதூர் - அல்லாஹ்வால் நமக்களிக்கப்பட்ட அமானிதம். அதனை நன்றாக காத்துக்கொள்வதன் மூலம், நாமும் நலம் பெற்று, நம் சந்ததிக்கும் பாதுகாக்கப்பட்ட காயல்பட்டினத்தை அளிக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், அவற்றில் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தவர்களாக, கடையடைப்புக்கு முழு ஆதரவளிக்குமாறும், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் நகரின் அனைத்து பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்களில், அன்றைய தினம் ஊர் வரும் வாய்ப்புள்ளவர்கள் - அவசியம் நேரம் ஒதுக்கி வந்து - இப்போராட்டத்தில் பங்கேற்று, நகரின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒரே குரலில் பிரதிபலிக்க வருமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.

எல்லாம்வல்ல இறைவன், நமதூரை - சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட - மாசு மருவற்ற ஊராகவும், கொடிய நோய் - வியாதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஊராகவும் ஆக்கியருள்வானாக...


இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Samu.A.B (DUBAI) [23 November 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24026

கண்டிப்பாக காயலர் அனைவரும் புற நகர் மற்றும் பக்கத்துக்கு ஊர் சகோதரர்களும் சேர்ந்து போராட வேண்டிய தருணம் இது. DCW வின் சுற்றுப்புற சீர்கேற்றிற்கு எதிராக நடக்க விருக்கும் நீண்ட போரின் முதல் அடி இந்த நிகழ்ச்சி. நேரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், மன பூர்வ வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. குடத்துக்குள்ளெ பாங்கு சொன்னா...கோஸ்மறைக்கா கேட்குப்போகுது...?
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [23 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24027

சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கருதி காவல்துறை அனுமதி மறுப்பு...? இது நமது உரிமையைத் தட்டிக் கேட்க ஆலையின் கதவுகளை தட்ட மறுக்கப்பட்ட மிக வேதனைக்குரிய விஷயம்.

காயல்வாசிகள் கட்டுக்கடங்காதவர்களோ? கன்னியக்குறைவானவர்களோ அல்ல! ஆர்ப்பாட்டம் என்பது அந்த ஆலையின் முன் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு கோஷங்கள் எழுப்பி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு இவ் விஷயத்தை கொண்டு செல்வதே நம் நோக்கம். அங்கு சென்று ஆக்கிரமிப்பு நடத்தவோ? அடாவடித்தனம் பண்ணவோ அல்ல!

காவல்துறையினர் அவர்கள் தரப்பு நியாயங்களைதான் பார்ப்பார்கள். எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அனுமதியையும் மீறி நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஊருக்குள்லேயே கூக்குரல் இட்டு சாதிக்கப் போவது எதுவுமில்லை. சம்பந்தப்பட்ட ஆலைக்கு முன் பொது மக்கள் அமைதியாகச் சென்று தங்கள் எதிர்ப்பை வாசகங்கள் அடங்கிய தட்டிகள், பேனர்கள், கோஷங்கள் மூலம் தெரியப்படுத்தலாம். ஏன்? கருப்பு பேட்ஜ் அணிந்து வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு அமைதி ஊர்வலம் கூட நடத்தலாம். இதனால் சட்ட ஒழுங்கோ? கலவரமோ ஏற்படப் போவதில்லை! இத்தகைய உறுதி மொழிகளை காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு ஆர்ப்பாட்டக்குழு எழுத்து மூலம் உறுதி மொழிக் கடிதம் கொடுத்து DCW வுக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டம் நடத்தும் அனுமதியைப் பெறலாம்.

இது ஒரு தனிமனித பிரச்சனை அல்ல! ஒட்டு மொத்த ஊர் மக்களின் பிரச்சனை! உரிமைப் பிரச்சனை! இதற்கு பிறகும் காவல்துறை அனுமதி தர மறுக்குமேயானால் தடைகளை மீறி துணிவுடன் நாம் அங்கு செல்ல வேண்டும். கைது செய்வார்கள்.செய்யட்டும். வழக்குப்பதிவு செய்வார்கள் செய்யட்டும். அதிக எண்ணிகையில் கைது படலம் நடக்குமேயானால் அது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நம் தார்மீகப் போராட்டத்தின் நியாங்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு எடுத்துரைக்க நல்லதோர் வாய்ப்பு. இதை ஆர்ப்பாட்டக் குழு மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளட்டும். சட்ட ரீதியான சவால்களை நாம் சட்டத்திற்குட்பட்டே சமாளிக்கலாம். அதை விடுத்து ஊருக்குள் கூப்பாடு போடுவதால் ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இந்த போராட்டம் வெற்றி பெற
posted by Mohamed Salih (Bangalore) [23 November 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24029

இன்ஷா அல்லாஹ் ..

இதில் கலந்து கொள்ளவது ஒவ்வரு கயலின் கடமை ... முடிந்த வரை பெற்றோர் தங்களது குழந்தையும் அழைத்து வரவும் ...

முக்கியம் .. பள்ளிக்கூடம் விடுமுறை இருகிறதா ????

முடிந்த வரை கலந்து கொள்ள முயற்சி பண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ் ..

இந்த போராட்டம் வெற்றி பெற எங்கள் காயல் நல மன்றம் - பெங்களூர் . அணைத்து உறுபினர்கள் வாழ்த்துகிறோம் ..

காயல் நல விரும்பி ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நமக்காக நாளை நமது சந்ததியனர்களுக்காக இன்று நமக்கு நாமே நடத்தும் ஆர்பாட்டம்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [23 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24030

நமக்காகவும் நமது அடுத்த தலைமுறை மக்களுக்காவும் நடத்தப்படும் இப்போராட்டத்தில் நாம் கண்டிப்பாகவே பங்கேற்று நகரின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒரே குரலில் பிரதிபலிக்க அனைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்...

இந்த ஆர்ப்பாட்டம் எந்த தனி நபருக்காகவும் அல்ல..!

நமக்காக நாளை நமது சந்ததியனர்களுக்காக இன்று நமக்கு நாமே நடத்தும் ஆர்பாட்டம்...!

ஆர்ப்பாட்டம் முழு வெற்றி அடைய நாம் அனைவர்களும் நமக்கு தெரிந்த - தெரியாத நண்பர்கள், சகோதரர்கள் மத்தியில் இரசாயன கழிவின் (மூச்சு திணறல் - கண் எரிச்சல்) ஆபத்தை (புற்றுநோய்) பாதிப்பை விழிப்புணர்வு செய்து இந்த ஆர்பாட்டத்திற்கு முழு ஆதரவு திரட்ட வேண்டும்...

நகரில் புற்று நோயால் அவதிப்பட்டு இல்லத்திலும், மருத்துவமனையிலும் முடங்கி கிடக்கும் நமது அணைத்து மத சகோதர - சகோதரிகளுக்காக நாம் இந்த பிரச்சாரத்தை அதிக படுத்தி மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்கும், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்த கொடிய இரசாயன தொழிற்சாலையை பற்றி அறியபடுவதற்க்கு நாம் கண்டிப்பாக செயல் படவேண்டும்...

நகரில் புற்றுநோயால் வேதனை பட்டு இல்லத்திலும், மருத்துவமனையிலும் முடங்கி கிடக்கும் அணைத்து மத சகோதரர்களின் நல் துவாவை இப்பிரச்சாரத்தின் மூலம் நாம் பெறுவோமாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றி அடையா செய்வானக!
posted by Firdous (Colombo) [23 November 2012]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 24031

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்போராட்டத்தை வெற்றி அடைய செய்வானாக!

இதன் முக்கியத்தை கருதி, அனைத்து மக்களும் கலந்து கொள்ளவும். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தது போல் உறுப்பினர்கள் இருக்க வேண்டாம். கவுன்சிலர்களும் முன்னணியில் நின்று போராட்டத்தை வெற்றி அடைய செய்யவும்.

நமது சந்ததி நோய் நொடி இல்லாமல் தளைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவனாக!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [23 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24032

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களின் அழைப்பை ஏற்று நம் ஊரை சேர்ந்த உள் நாட்டில் & வெளி நாட்டில் வாழ் நம் மக்கள் ...நம் ஊர் வந்து இருக்கும் இது சமையம் கண்டிப்பான முறையில் அவர்களின் வேலைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு .... நவ.29 . ம் ... கண்டன ஆர்ப்பாட்டம் & பொதுக்கூட்டம் நடக்கும் போது கலந்து கொள்வது நல்லது + தேவையானது. நாம் கூட்டத்தை கூட்டினால் தான் ....அரசு அதிகாரிகளின் கவனம் நம் ஊர் பக்கம் முழுமையாகவே திரும்பும்.

ஆமா என்ன ஒரு அநியாயம் சார் .....நம் ஊர் மக்களின் செயல் முறைகள் என்ன ...நம் காவல் துரை அதிகாரிகளுக்கு தெரியாதா...நம் மக்களும் / நம் ஊர் பெரிய மனிதர்களும் ...எந்த அளவுக்கு கண்ணியமான முறையில் நடப்பார்கள் என்பது கூடவா ....நம் காவல் துரை அதிகாரிகளுக்கு தெரியாது.

நாம் >>D.C.W. << தொழிற்சாலை வாசல் முன் நம் போராட்டத்தை நடத்துவதால் தான் ....கண்டிப்பான முறையில் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் & நம் போராட்டதின் பலனும் கூட ...மாநில / மத்திய அரசுக்களின் கண் பார்வைக்கு செல்லும் ....அரசு அதிகாரிகளின் செயல் பாடுகளின் கவனமும் நம் ஊர் பக்கம் திரும்பி கொள் சான்சு உண்டு அல்லவா .....

நம் காவல் துரை ...கண்டிப்பான முறையில் நம் இந்த போராட்டத்தால் எந்த ஒரு சட்ட ஒழுங்கும் கேட்டு போகாது.நாம் அமைதியான / அகிம்சை முறையில் போராட கூடியவர்கள் தானே .... என்று நினைத்து நமக்கு அனுமதி தரனும் ....

சட்டம் ஒழுக்கு கேட்டு போககூடிய ....போராட்ட காரர்களுக்கு எல்லாம் இந்த ..அரசும் சரி / காவல் துறையும் சரி அனுமதி கொடுக்கிறது ....நம் போராட்டத்துக்கு ஏன் ?? அனுமதி தர மறுப்பது ..??

ஆனால் ஓன்று நம் போராட்டம் >>>DC.W. <<< தொழிற்சாலை வாசல் வரை சென்று போராடினால் தான் ....கண்டிப்பாகவே பலன் உண்டு ....இல்லையேல் ...கடினம் தான் ....

ஆமா இந்த நாசமா போன >>> D.C.W.<<< காரர்கள் நம் காவல் துறையையும் பணிய வைத்து விட்டார்களா என்ன ??ஒன்றுமே புரிய வில்லையே ?? நம் ஊரின் நிலைதான் என்னா ??

நாம் வேறு எந்த கதவை தட்டினால் இந்த காவல் துரையின் கதவு திறந்து நம் போராட்டத்துக்கு அனுமதி கிடைக்குமோ ....அங்கு சென்று நாம் முழு வேகமாகவே ...கதவை தட்டலாமே ....& நம் ஊர் முக்கியமான தலைவர்கள் எல்லாம் ஒன்றாகவே சென்று அரசின் கதவை தட்டலாமே ......விடாது கதவை தட்டினால் தான் ....எந்த ஒரு கதவும் திறக்கும் ............

இந்த போராட்டம் இன்றைய காயல் மக்களுக்காவும் / நம் வருங்கால சந்ததினர்களுக்காகவும் தானே நாம் போராடுகின்றோம் ...நம் மக்கள் ஒவ்வொருவர்களுக்கும் நாம் இதை மனதில் புரிய வைக்கவேணும் .......

அல்லாஹ் இந்த போராட்டதில் நமக்கு முழு வெற்றியை தந்தருவானாக .............

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...நமக்காகவும் நம் மக்கள் காகவும் போராட நீங்கள் தயாரா?
posted by b.a.buhari (chennai) [23 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24038

assalamualaikum

ஊர் நன்மையை கருத்தில் கொண்டு KEPA மூலம் dcw வை எதீர்த்து வருகின்ற 29th நடைபெறகின்ற கடையடைப்பு, மட்டும் கண்டன ஆர்ப்பாட்டதில் Chennai wal காலர்கள் கலந்து கொள்வதாக இருந்தால் சென்னை மண்ணடி மட்டும் eggmore வழியாக பஸ் மூலம் புதன் கிழமை புறப்பட்டு செல்ல தயாராக உள்ளவர்கள் என் உடைய செல்
9385215717
and
8695106161
வரும் திங்கள் கிழமை குள் தொடர்பு கொள்ளவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மணாங்கட்டியாவது !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [23 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24057

போராட்டம் வெற்றிபெற வாழ்துக்கள் ! எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்துவிதமான நோய், நொடிகளை விட்டும் நம் மக்கள் அனைவரையும் பாதுகாப்பானாக !

ஆலையின் முன்பு போராட்டம் நடைபெறுவதே மிகவும் பயனளிக்கும். காவல்துறையின் அனுமதி மறுப்பு கண்டனத்துக்குரியது !

சட்ட ஒழுங்கு சீர்கேடாவது, மணாங்கட்டியாவது!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஒய்யாரக் கொண்டையிலே.... (?!)  (22/11/2012) [Views - 4192; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved