Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:50:08 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9654
#KOTW9654
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 21, 2012
கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3489 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில், இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரை நுழைவாயிலில் அவர்கள் கட்டுப்பாடற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதால், நடந்து செல்வோர் - வருவோருக்கு அது பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்கம் சார்பில், கடற்கரை நுழைவாயிலில் வாகனங்களை நிறுத்த காயல்பட்டினம் நகராட்சியின் துணையுடன் எல்லைக்கோடு அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை நுழைவாயிலிலிருந்து சுமார் 10 மீட்டர் இடைவெளியில் வாகனங்கள் எதையும் நிறுத்தாமலிருக்க தடுப்புக்கோடும், கடற்கரையில் முடியும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையின் வடபுறத்தில் நாற்சக்கர வாகனங்களை நிறுத்தவும் - தென்புறத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும் எல்லைக்கோடும் அமைக்கப்பட்டுள்ளது.



காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ தலைமையில், இம்மாதம் 19, 20 தேதிகளில் இப்பணி நடைபெற்றது. 20.11.2012 அன்று மாலை 04.45 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் அவற்றைப் பார்வையிட்டார்.



பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற எல்லா நற்காரியங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் துணை நிற்கும் என்று அவர் அப்போது தெரிவித்தார்.

காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், அலுவலர் ராதாகிருஷ்ணன், காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் எல்.எம்.இ.கைலானீ, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

தினமும் கடற்கரைக்கு இருசக்கர - நாற்சக்கர வாகனங்களில் வருவோரிடம், புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லைக் கோட்டை மதித்து செயல்பட்டு ஒத்துழைப்பளிக்குமாறு காயல்பட்டினம் கடற்கரை பயனாளிகள் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொள்ள, அவர்கள் மனமுவந்து ஒத்துழைப்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இந்த இடம் போதுமா?
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [21 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23997

கைலானி காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

காக்கா தங்களின் இந்த சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் இவ்வளவு இடம் எதற்கு சும்மா விடனும்? அந்த இடத்திலும் இப்போது லைன் போடப்பட்டது போல ஓரங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்ப்பாடு செய்யலாம்தானே? ஏன்னா வாகனங்கள் நிப்பாட்ட இந்த இப்போது ஒதுக்கபட்ட இடம் போதாமல் வருமே?

ஏற்க்கனவே நுழைவாயிலிலிருந்து கொஞ்ச தூரம் தடுப்பு இருக்குதுதானே. அது போதாதா? சரி யோசிக்காமலா செய்திருப்பீர்கள். இருந்தாலும் மனசுல பட்டதை சொல்லிட்டேன்.

இனி முதல் VIP கள் இடைஞ்சல் இல்லாமல் சர்ருன்னு வந்து இறங்கலாம். அவர்களுக்குதான் NO PARKING எல்லாம் பிரச்சினை இல்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பயனுள்ள பணிகள் தொடரட்டும்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [21 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23998

ரொம்ப முக்கியமானதுதான் பாராட்டுக்கள்! அதே நேரத்தில் கடற்கரையை அசுத்தபடுத்துவோருக்காக என்ன நடவடிக்கைகள் எடுதிருக்கிறீர்கள்! நான் அசுத்தம் என்பது எல்லாவகையான அசுத்தமான, அறுவெறுப்பான ஆபாசமான காரியங்கள் அனைத்தும் அடங்கும்!

இக்காரியங்களை விளக்கி மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டுபண்ணுவதோடு, வெறுக்கத்தக்க காரியங்களை ஊர் உறங்கிய பின் உபயோகிக்க இந்த இடத்தை தேர்வு செய்யும் சில சமூக விரோதிகளை காவல் துறை மூலமாக கண்காணிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்! யாரையாவது பிடித்திருக்கிறீர்களா?

பயனாளிகள் சங்கம் என்று இருப்பதால்தான் கேட்கிறேன். தவறாக என்ன வேண்டாம். எது முக்கியம் என்பது அனுபவ முதிர்ச்சியுள்ள உங்களுகெல்லாம் தெரியாதது அல்ல! எல்லா வகையிலும் முன் உதாரணமாக மின்னவேண்டுமென்ற எண்ணமுடைய குழுக்கள் நீங்கள்!

கடந்த 6 அல்லது 7 மாதங்களுக்கு முன் என்று நினைக்கின்றேன், பக்கத்துக்கு ஊர் பள்ளி மாணவ குழுக்கள் வந்து நம் ஊர் கடற்கரையை சுத்தம் செய்தார்கள்! அவர்களை பாராட்டி பரிசு வழங்கும் விழாவும் நடந்தது. அதில் பேசியவர்களில் ஒருவர் கூட நம் கடற்க்கரையை அசுத்தமாக வைதிருக்கிறீர்கள் அதை அடுத்த ஊர் மாணவர்கள் சுத்தம் செய்து இருக்கிறார்கள். இக்காரியத்தை செய்த அவர்களை பாராட்டுவதோடு நாமும் நம்மைப்பற்றி சிந்தித்து வெட்கமடைய வேண்டும் என்று உள்ளம் உரைக்கின்ற மாதிரி பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றமே!

இரு நிமிடம் எனக்கு வாய்ப்பு தந்தால் சொல்லி இருப்பேன், அங்கு வாய்ப்பை பெறவில்லை. இறுதியில் புகைப்பட போஸுடன் களைந்து சென்றார்கள்!

என்னடா இவன் A /C யில் உட்கார்ந்து கொண்டு எதைஎதையோ கிறுக்குகிறானே என்று நினைத்தால், என் இந்த எண்ணத்திற்காக வருந்துகிறேன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...கவி மகனே பதில் கூரும்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [21 November 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24000

நான் யாரையும் குறை கூற நினைக்கவில்லை!

அங்கே நான் கேட்க வேண்டியதை இங்கே முஹம்மது ஆதம் சுல்த்தான் கேட்டுள்ளார். பதில் கூரும் கவிமகனாரே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நேரில் சொல்ல ஆயிரம் உண்டு...
posted by Hameed Rifai (Kayalpatnam) [21 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24002

அன்பின் ஆதம் சுல்தான் காக்கா, உமர் அனஸ் காக்கா ஆகியோர் உட்பட, அந்த தொணியில் கருத்தெழுதும் அனைவருக்கும் எனது பணிவான பதில்:-

நல்ல எண்ணங்கொண்ட - செயல்திறன் மிக்க பலர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு, தங்களால் இயன்ற நற்பணிகளை செய்து வருகிறீர்கள்... அல்லாஹ் உங்களை நன்றாக வைத்தருள்வானாக...

ஊரில் பொதுப்பணிகளைச் செய்வதற்கு (எந்த உள்நோக்கமுமின்றி) முன்வருவோர் மிக மிகக் குறைவாகவே உள்ளனர்.. அவர்களும், தம் தகுதிக்கு மிஞ்சி - எடுத்த பணிகளைச் செய்து முடிக்க ஆர்வத்தோடும் - அக்கறையோடும்தான் உள்ளனர்.

கடற்கரையில் இந்த எல்லைக்கோடு போடுவதற்கு பல காலமாக பேசப்பட்டு வந்தபோதிலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இது விஷயத்தில் கடற்கரை பயனாளிகள் சங்க செயலாளர் கைலானீ காக்கா அவர்கள் மிகுந்த அக்கறையோடு நகராட்சி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு முனைப்புடன் செயலாற்றியதன் விளைவாகவே 19ஆம் தேதி இப்பணி துவங்கியது என்பதை நான் நேரிலிருந்து பார்த்தறிந்து கொண்டேன்.

விடுமுறையில் ஊருக்கு வந்தால் எங்கள் மஹல்லா வேலைகளோடு சுருக்கமாக இருந்த என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற நகர்நலப் பணிகளில் கூடுதல் அக்கறை வந்ததே இவர் போன்றவர்களின் செயல்பாடுகளைப் பார்த்துதான்! (இதற்கு மேல் இதில் விளக்கம் சொல்ல வேண்டிய தேவையிருக்காது. எனினும், இதற்கு தாங்கள்தான் காரணம் என்று யாரேனும் கருதுவார்களேயானால் அவர்களுக்கு அதற்கான முழு நற்கூலியும் அல்லாஹ்விடம் உண்டு. தொடர்ந்து அவர்களின் அக்கறையை எல்லாப் பணிகளிலும் பொதுநல ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

அடுத்து, கடற்கரையில் அது நடந்ததே...? அதற்கு என்ன செய்தீர்கள்?? இது நடந்ததே இதற்கு என்ன செய்தீர்கள்?? என்று கேட்கப்பட்டுள்ளது. இது எழுத்தில் தரத்தக்க விஷயமல்ல. நேரில் கேட்டால் சொல்ல ஆயிரம் விஷயங்களுண்டு. தாங்கள் அதுபற்றி அறிந்துகொள்ளவில்லை என்பதால் அது செய்யப்படவே இல்லை என்றாகிவிடாது. எங்கள் கவனத்திற்கு வரும் இதுபோன்ற அனைத்தையும் பலர் செய்து வருகின்றோம்.

வெளியூரிலிருந்து வந்து கடற்கரையைத் துப்புரவு செய்த மாணவர்களைப் பாராட்ட வேண்டியதே அந்தக் கூட்டத்தின் நோக்கம். அங்கிருந்துகொண்டு நம்மவர்களைக் குறைகூறுவது இடம் - பொருள் - ஏவல் தெரியாத சிலர் செய்யும் காரியம். அதிலிருந்து சற்று மாறுபட்டிருக்கவே நாம் விரும்புகிறோம்.

நாங்கள் சுட்டிக்காட்டியதால்தான் இது நடந்தது, அது நடந்தது என்று சொல்லப்பட்டு வரும் இக்காலையில், அதற்கெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. உள்ளூர் பள்ளிகளிலுள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களைத் தருமாறு அந்தந்த பள்ளிகளில் கேட்கப்பட்டுள்ளது. இதுவும் முகவரியற்றவர்களின் எழுத்துகளுக்கு முன்னரே செய்யப்பட்ட விஷயம். (அந்தப் பணியும் இன்ஷாஅல்லாஹ் சில தினங்களில் நடைபெற்று முடியும். மீண்டும், “பார்த்தீர்களா? நாங்க சுட்டிக்காட்டியதால்தானே இதுவும் நடந்திச்சி?” என்று கேட்கப்படலாம்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சட்டி சூடாத்தன் இருக்கு கை பத்திரம்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [21 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24006

விடுமுறையில் ஊர் வந்து வியர்வை துளிகள் நம் மண்ணின் நலனுக்காக சிந்தும் அருமை இளவல் ஹாமீது ரிஃபாய் அவர்களின் பொறுப்பான பதில் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும்.

சில பதார்த்தங்களை வேக வைக்கும் போது “தம் “ போட்டு வேக வைப்பதில்லையா? உடனே, என்ன இது? எப்படி வேகும்? தீ இல்லையே? புகை வரமாட்டேங்குதே? இப்படி கேட்போர்க்கு சட்டியின் கீழும் மேலும் கனன்று கொண்டிருக்கும் தணலின் தாக்கம் தெரிந்திருக்க வாய்ப்பிலை! அதற்காக வெரும் சட்டியை வேக வைத்திருக்கின்றார்கள் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம். கண்காணிப்பும், சட்டவிதிகளுக்குட்பட்ட பாதுகாப்பும், நம் காவல்துறையின் உதவியோடு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

நாம் வெளிநாட்டில் இருப்பதால் உள்ளூர் நடப்புகளை உருப்பெருக்கி ஆடி(பூதக்கண்ணாடி) மூலம் பார்க்க இயலாது. இருந்தாலும் நகர் நலனை மைக்ரோஸ்கோப் (நுன்னுயிர் நோக்கி) மூலம் நன்றாகக் கவனிக்கும் ஒரு கூட்டம் இன்றளவும் இருப்பதால்தான் காயல் கடற்கரை மியாமி, கோவளம் ரேன்ச்ஜுக்கு இன்னும் போகமல் இருந்து வருகின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இரண்டும் ஒன்றல்ல!
posted by kavimagan (qatar) [22 November 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24008

நான் பதில் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள உமர் காக்கா அவர்களுக்கு நன்றி! ஆனால்,களத்திலிருந்து நேரிடையாக உண்மையை விளக்கியுள்ள நண்பர் ஹமீத் ரிஃபாய் அவர்களது பதிலே போதுமானது என்று நம்புகிறேன்.

உமர் காக்கா அவர்களே! நீங்கள் எழுதியதைத்தான் ஆதம் சுல்த்தான் காக்கா எழுதியுள்ளதாக எப்படிச் சொல்கின்றீர்கள். ஒரு விஷயத்தை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள விதத்தில், கண்ணியமும், நளினமும், உண்மையான ஆதங்கமும் இருக்கிறது. ஆனால் உங்கள் கருத்திலோ, குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் தாண்டவம் ஆடுவதை தாங்கள் அறிய வில்லையா?

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்பவர் என்றும், நீதானா அந்தக் குயில் என்றும், அவன்தானா இவன் என்றும் நீங்கள் இழிவு படுத்த நினைப்பது யாரை? எப்படி உங்கள் கருத்தும் ஆதம் சுல்த்தான் காக்கா அவர்களது கருத்தும் ஒன்றுபடும்? ஆதங்கத்தை வெளிப்படுத்துவற்கும், அவமானப் படுத்த விழைவதற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிந்தே இருக்கின்றார்கள். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். பாசாங்கு செய்பவர்களை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. விமர்சகரின் விமர்சனத்திற்கு தக்க பதில்....
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [22 November 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24010

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்...... ஆளும் கட்சி என்று ஒன்று இருந்தால், எதிர்கட்சி என்று ஒன்று இருக்கத்தானே செய்யும்????

கடற்கரை பயனியர் சங்க பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

சகோ. ஹாமித் ரிபாயி அவர்களின் சீரிய பதில், விமர்சகரின் விமர்சனத்திற்கு தக்க பதில்.... இதுக்கு மேல விளக்கம் கூற படைத்த இறைவன் ஒருவனால் மட்டும்தான் முடியும்...

ரபீக் பாய் என்ன சமையல் பண்ணிட்டு இருக்கும் போதே கமென்ட் எழுதுனீங்களா? ஒரே தம்கட்டிடு இருக்கீங்க (முகபுத்தகத்தில் தங்களின் சமையல் பதிப்பை கண்டேன்....)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மறுமுறையும் கருத்துபதிவு!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [22 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24017

நான் ஊரில் இருக்கும் காலகட்டத்தில் கடற்கரைப்பற்ற்ய "கசமுசா" செய்திகள் ஒவொரு நாளும் வந்து கொண்டே இருந்தது. அதில் உண்மையில்லை என்று அனைத்தையும் அப்படியே ஒதுக்கமுடியாத அளவிற்கு ஓரிரு சம்பவங்கள் உள்மனதை அரித்து கொண்டேதான் இருந்தது..

அப்படி கேள்விப்பட்ட சம்பவங்களில் ஏதாவதொன்றின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த எனக்கு, இந்த எல்லைக்கோடு அமைக்கும் சம்பவம் சற்று சாதாரணமாக தெரிந்ததால் என் மனதில் பட்டதை எழுதினேன்!

ஊரில் யாருக்கு ஒரு இன்னல் ஏற்ப்பட்டாலும் அது காவல்துறை மூலம் வந்தாலும் கூட ஓடோடிச்சென்று உதவும் உன்னத குணமுள்ளவர் சகோதரர் கைலானி அவர்கள் என்பதை நேரில் கண்டவன் நான்!

ஆகவே, ஒர் உரிமையின் அடிப்படையில் தான் என் ஆதங்கத்தை எழுதினேன்!

எந்தவித உள் நோக்கமில்லாத என் விமர்சனத்தை பகடைக்காயாக பயன்படுத்தி போகாத ஊருக்கு வழியமைக்க முயற்சிக்கும் சிலரின் விமர்சனங்களைப்பார்தேன். அந்த வளையத்திற்குள் நான் புகவும் விருப்பவில்லை, என்னை வளைக்கவும் முடியாது!

தவிர்க்கமுடியாத காரணத்தால் மறுமுறையும் இச்செய்திக்கு கருத்து எழுத நேரிட்டு விட்டது.!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24023

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் ..கடற்கரை பயனாளிகள் சங்கத்தின்...இந்த செயல் பாடு பாராட்டுக்குரியது......நம் மக்களின் முழு ஒத்துழைப்பும் கண்டிப்பாகவே தேவை ...நம் மக்களும் உணர்ந்து இத் திட்டதை நடை முறை படுத்த இந்த அமைப்போடு ஒத்துளைக்கவேனும்.......

நம் ஊர் கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் செயலாளர் MR..கைலானி அவர்களுக்கும் & துணைச் செயலாளர் MR..S.K.சாலிஹ் அவர்களுக்கும் பொது சேவை என்பது ...லட்டு தின்பது போல் அல்லவா.....

இந்த நல்ல திட்டத்தை நம் மக்கள் தான் '' தொய்வின்றி ''கொண்டு செல்ல வேணும் .

முழு ஒத்துழைப்பு அளித்த நம் நகராட்சி ஆணையர் அவர்களையும் நாம் பாராட்டனும் .

நம் கடற்கரையின் ஒரு சில குறை பாடுகள் ...இருப்பதையும் இந்த "" கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் "' மூலம் நிறைவு பெற்றால் நல்லது தான் ...

நமது ''கடற்கரை பயனாளிகள் சங்கத்தின் '' கண்பார்வை பட்டு விட்டது ...இன்ஷா அல்லாஹ் நம் ஊர் கடற் கரையும் ....சீரடையும் . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஒய்யாரக் கொண்டையிலே.... (?!)  (22/11/2012) [Views - 4189; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved