Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:31:29 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9208
#KOTW9208
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 24, 2012
நகராட்சிகளில் LED விளக்குகள் அறிமுகம்! தமிழக அரசு அறிவிப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3027 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2012-13 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் சில நகராட்சிகளில் குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாக இருக்கும் சூழ்நிலையில், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை எதிர்கொள்வதில் நகராட்சிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன என்பதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நகராட்சிகளின் எரிசக்தி மற்றும் பராமரிப்பு செலவினை குறைக்கும் வகையில், திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப் பதிலாக திறன் மிகுந்த எல்இடி/ சூரிய சக்தி மின்விளக்குகள் பயன்படுத்துதல்; தெரு விளக்குகள் ஒளிர்வதில் ஒளியின் அளவை மட்டுப்படுத்தும் முறையினை பின்பற்றி, மின் நுகர்வினை குறைப்பது; தெரு விளக்குகளை பயன்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி, திறமையான பராமரிப்பு மேற்கொள்ளுதல்; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். இம்முறைகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பயன்களை குறிப்பிட்ட கால முறையில் மூன்றாம் நபர்/முகமை மூலம் அளவிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன்படி 2012-13 ஆம் ஆண்டில் பரிசோதனை முறையில் 9 மாநகராட்சிகள்; திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களிலுள்ள 35 நகராட்சிகள் மற்றும் 101 பேரூராட்சிகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள குழல் விளக்குகளுக்குப் பதிலாக எல்இடி போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கும் வகையில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்காக, நகராட்சி நிர்வாக ஆணையரக தலைமைப் பொறியாளர் அவர்கள் தலைமையில் 9 நபர் கொண்ட தொழில் நுட்பக் குழுவும், நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையில் 7 நபர் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவும், பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் பேருராட்சி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள நிர்வாகப் பொறியாளர் தலைமையில் 9 நபர் கொண்ட தொழில் நுட்பக் குழுவும், பேரூராட்சிகள் இயக்குநர் தலைமையில் 6 நபர் கொண்ட உயர்மட்ட அதிகாரக் குழுவும் அமைக்கப்படும். இதற்காக பொது ஏல ஆவணம் அறிமுகப்படுத்தியும், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

பொதுமக்கள் நலன் கருதியும், அலுவலர்கள் பணியாற்றுவதற்கு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் வண்ணமும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகங்கள் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதியின்றி இயங்கி வரும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு புதிய அலுவலகங்கள் கட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். ஜ்ஞஹழுநு னூ இதன் அடிப்படையில், சேலம் மாநகராட்சி மற்றும் ஓசூர், மறைமலைநகர், கொடைக்கானல், சங்கரன்கோவில், திருச்செங்கோடு, ராணிப்பேட்டை, தேனி-அல்லிநகரம், தர்மபுரி, துறையூர் மற்றும் பரமக்குடி ஆகிய 10 நகராட்சிகளுக்கு 37 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அரசு மானியமாக 26 கோடி ரூபாயினை வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

நகராட்சித் துறையில் அரசு எடுக்கும் இந்த முடிவுகளினால் நகராட்சிகளின் பணிகள் மேன்மை அடையும்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 September 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22399

அம்மா.. முதலில் மின்சாரத்தை மீண்டும் அறிமுகப்படுத்துங்கள்.

போகின்ற போக்கைப்பார்த்தால் மின்சாரத்தை மக்கள் மறந்து விடுவார்கள் போல.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அம்மா....தாயே...! கொஞ்சம் கரண்ட் இருந்தாப் போடுங்கமா...!
posted by முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [25 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22401

பெருச்சாளி போறதுக்கே வழி இல்லையாம் இந்த லசட்சணத்துலெ தும்புக் கட்டையையும் சேர்த்து இழுத்ட்டுப் போச்சாம். ராவுத்தர் கூழுக்கு அளாப் பறந்தாராம் ராவுத்தர் குதிரை கொள்ளுக்குப் பதிலா கோதம்பு ரொட்டி கேட்டுச்சாம். கஞ்சிக்கே வழியில்லை இதுலெ கதர் சட்டை கசங்கிடுச்சேன்னு கவலை பட்டானாம். வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சம்!

இப்படி எட்டத கனிக்கு கொட்டவி விடும் தமிழக அரசின் நிலையை எண்ணி சிரிப்பதா? அழுவதா?ன்னு தெரியாம மக்கள் தவிச்சிட்டு இருக்காங்க! அம்மா! தாயே! சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? முதல்லெ சட்டியெ ஏத்துற வழியப் பாருங்க!

LED பல்பு இருந்தா மட்டும் போதுமா? எரியுறத்துக்கு கரண்ட் வேணாமா? சூரிய ஒளி பல்புகள் சிம்மினி வெளக்கு வெளிச்சந்தான் தரும் அம்மிணி! சட்டுப் புட்டுன்னு ஏதாவது வழியைச் சொல்லுங்க தாயே...! அம்மா....தாயே....இதுதான் இன்றைய மின்பற்றாக் குறையால் அவதி படும் தமிழக மக்கள் நிலை! கொடுமைப்பா...! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இனி வரக்கூடிய 48 மாதமும் கூட்டம் நடைபெற வேண்டாம் இதனால் மக்கள் வரி பணம் ரூபாய் 5,47,200 மிச்சம்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227) [26 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22421

LED பல்பு இருந்தா மட்டும் போதுமா? எரியுறத்துக்கு கரண்ட் வேணாமா? எரியுறத்துக்கு கரண்ட்டே வந்தாலும் நமது நகர்மன்றதிர்க்கு இது சாத்திய பாடாதுங்கோ...காரணம்...! உருப்படியா நகர்மன்றத்தில் கூட்டம் நடந்தால் தானே.. LED பல்பு எல்லா தெருவிலும் உள்ள மின் கம்பத்திற்கு வர..

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்...

Moderator: செய்திக்குத் தொடர்பற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கண்டதும்...கேட்டதும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [27 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22445

நானும் என் நண்பரும் பேசிக் கொண்டது:

நான்: காக்கா இந்த LED/ சூரிய ஒளி விளக்குக்கு நிறைய நகராட்சிக்கு கவர்மெண்ட் அப்ரூவல் பணியிருக்காங்களே? நம்ம நகராட்சிக்கும் கிடைக்குமா?

நண்பர்: வேண்டாம்! வெனைய வெல குடுத்து வாங்குறத்துக்கு நான் வரலப்பா..!

நான்: அட! என்னங்க இது? நான் சாதாரணமாக் கேட்டாலே இப்படி சங்கடப் படுறீங்களே...? சரி இதுனாலெ பெரிய நண்மை நன்மை ஏதும் கிடைக்குமா? நான் லைட்டப் பத்தி கேட்க்குறேன்?

நண்பர்: சூரிய ஒளி விளக்கு வந்தா நகராட்சிக்கு உள்ள கரண்ட் செலவு மிச்சமாகும். அதே சமயம் பராமரிப்பு செலவும் இருக்கு! ட்யூப் லைட்டு ஃப்யூஸாயிட்டாலெ மாத்துறதுக்கு மூணு கூட்டம் போடணும். அந்தக் கூடத்தக் கூட ஒழுங்கா நடத்....

நான்: ம்...சரி சரி சொல்லுங்க...!

நண்பர்: ஆமா நொல்லுங்க...பழக்க தோஷம் பேசக்கூடாதுன்னு இருந்தாலும் வாய் சும்ம இருக்க மாட்டேங்கிறது.சரி கேளுங்க...! இந்த பல்புகளுக்கு தனிக் கம்பம் அமைக்கணும். அதுலெ சோளார் சிஸ்டத்தில் சூரிய ஒளியை சேமிக்கிறதுக்குன்னு ஒரு கருவி வச்சிருப்பாங்க, சேமிச்சதை மின்சாரமா மாத்தி தக்க வைக்க பேட்டரி வேணும். அதைக் கொன்ண்டு போய் கம்பத்து உச்சியிலெ வைக்க முடியாது கீழ தான் வைக்கணும். இனி நம்மாளுங்க ஆட்டையயெப் போடறதுக்குன்னே அலைவானுங்க. ATM மெஷினுக்கு முழு நேரக் காவல் போட்ட மாதிரி அட்லீஸ்ட் பத்து தெருவுக்கு ஒரு ஆள்ன்னு இரவுக் காவலர்களைப் போடணும். இல்லாட்டி அப்படியே ஆட்டையெப் போட்டு, தம் வீட்டு மொட்டை மாடியிலெ செட் பண்ணி பெட்ரூமுக்கு கனெக்‌ஷன் கொடுத்துருவானுங்க! கரண்ட் செலவு மிச்சம்! இதே போஸ்ட் கம்பின்னா கரண்ட் இருக்கும் உயரமா இருக்கும்ன்னு பயபடுவானுங்க!

பெரிய பெரிய ஹை வேயிலெ இந்தக் கம்பம்தான் வச்சிருக்காங்க! பக்கத்துலெ பக்கத்துலெ வெச்சிருக்கிறதனாலெ வெளிச்சம் பரவாயில்லை.நம்ம ஊருக்குன்னா தெருவுக்கு நாலு தான் வைப்பாங்க! இனி அது இருபது வருஷத்துக்கு முன்னாடி இருந்த முட்ட பல்பு போலத் தான் வெளிச்சம் வரும்.

நான்: அடேயப்பா...! இவ்ளோ சிக்கல் இருக்கா? நம்ம ஊருக்கும் இந்த திட்டம் வருமா?

நண்பர்: சிக்கலா...? சிரமம் தான்! நம்மாளுங்க ஒத்துமையா இருந்தா நம்ம ஊருக்கு எவ்ளோ நன்மைகள் கெடச்சிருக்கும். எங்க பெரிய காக்கா சொன்ன மாதிரி கொஞ்சம் ஒத்து (மையா) ப் போயிட்டா பத்தே நிமிஷம் தான் ப்ராப்ளம் சால்வாயிடும். அதுக்கு கொஞ்சங் கூட இவங்க அசைஞ்சு கொடுக்காத்ததுனாலே இப்படி பத்த வெச்சு வேடிக்கைப் பார்க்குறாங்க.

நான்: பெரிய காக்கான்னா....உங்க பெருமா மகன் அலி அக்பர் தானே...? அவங்க கூட மெட்றாஸ்லெ இருக்காங்கல்லே...?

நண்பர்: அட! பரவாயில்லையெ? சட்டுன்னு புடிச்சுக்கிட்டியே...?

நான்: சரிப்பா! கரண்ட்டுக்கு பில்லு கட்டணும் இன்னைக்கு தான் கடைசி நாளு கட்டாட்டி பீஸைப் புடிங்கிட்டுப் போயிடுவாங்க.அப்ப நான் வர்றேன். நான் நைசா அவரிடமிருந்து நழுவிய போது “ஆமா இல்லாத கரண்டுக்கும், வராத தண்ணிக்கும் இப்படியே பணத்தை மட்டும் கட்டிட்டே இருங்க...” என்று நண்பர் முனுமுனுத்துக் கொண்டு போவது என் காதில் விழுந்தது...

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved