Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:39:09 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9183
#KOTW9183
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 19, 2012
நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4437 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், 19.09.2012 புதன் கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இவ்வார்ப்பாட்டத்திற்கு அவ்வமைப்பின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். மாணவரணியைச் சேர்ந்த சதக் ஷமீல் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.

முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.



பின்னர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ கண்டனப் பேருரையாற்றினார்.



அதனைத் தொடர்ந்து, இறைத்தூதர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்தவரையும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத அமெரிக்க அரசையும் கண்டித்தும், அமெரிக்காவுக்கும் - ஐக்கிய நாடுகள் சபைக்கும் கண்டனம் தெரிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கம் செய்யப்பட்டது.







நன்றியுரைக்குப் பின், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.







இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் ஸஹாபுத்தீன், அதன் கவுரவ தலைவர் அப்துல் கனீ, அக்கட்சியின் காயல்பட்டினம் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், துணைச் செயலாளர்களான எம்.எச்.அப்துல் வாஹித், அரபி ஷாஹுல் ஹமீத், நகர நிர்வாகிகளான ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.டி.கமால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், காயல்பட்டினத்தின் 27 ஜமாஅத்துகள், 20க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.











முன்னதாக, ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு கோரி, நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தையொட்டி, இன்று மாலையில் காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை, பிரதான வீதியின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது.



படங்களில் உதவி:
A.K.இம்ரான்.


[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 17:22/20.09.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பிறருக்கு துன்பம் விளைவிக்காத போராட்டம்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [19 September 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 22283

நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து அமைதியான முறையில் தமது கண்டனத்தை வெளிப்படுத்திய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிற்கு நன்றிகள் பல.

மொத்த ஊரே திரண்டு வந்திருக்கிறது.போராட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் நாம் போராட வேண்டும்.அதைவிடுத்து பெண்களை வீதியில் இறக்குவது நாகரீகமான செயல் அல்ல.பாதுகாப்பானதும் அல்ல.

ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம்.அது நம் பெண்களுக்கு பாதுகாப்பானதா? சமூக விரோதிகளால் கல்வீச்சு சம்பவங்கள் ஏற்பட நேரிட்டால் , அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு போன்ற தகாத சம்பவங்கள் ஏற்பட நேரிட்டால், நம் பெண்களால் ஓடி ஒழிய முடியுமா? பாதுகாப்பானதா? அதனை தொடர்ந்து கைது சம்பவங்கள் ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம்.நம் பெண்களுக்கு இவற்றை தாங்கும் சக்தியுள்ளதா?

போராட்டங்களுக்காக பெண்களை வீதியில் இறக்குவோர் சற்று சிந்திக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. صلي الله علي محمد صلي الله عليه وسلم
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [19 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22287

அஸ்ஸலாமு அலைக்கும் .

முஸ்லிம்களின், முஹ்மின்களின் உயிராக ,இல்லை உயிரைவிட உயர்வாக மதிக்கப்பட வேண்டிய அண்ணல் காருண்ய நபிகள் நாயகம் முஹம்மது صلي الله عليه وسلم அவர்களின் மீது களங்கம் கற்பித்த அமெரிக்க யூத ,நசாரா ,முஸ்ரிகீன் நாய்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அதற்க்காக நமது எதிர்ப்புக்களை எந்த வழிகளிலெல்லாம் உணர்த்தமுடியுமோ அவ்விதங்களிலேல்லாம் வெளிப்படுத்த வேண்டும். கண்டனங்கள், கூட்டங்கள் ,ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திய தனிநபர், இயக்கங்கள், பொதுநல மன்றங்கள், கட்சிகள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் !

அதே நேரம் இவ்வித நச்சுக்கருத்துக்களை இஸ்லாத்தின் பெயரால் ,கொள்கை ரீதியாக ,இயக்க ரீதியாக் தனிநபரோ,தலைவரோ, கட்சியோ யார் கூறினாலும் அவ்வித ஈமானை அழித்து ,நாசமாக்கிவிடும் விசக்கிருமியான முட்டாள்தனமான கருத்துக்களை முஸ்லிம்கள் வெறுத்து, புறக்கணித்து நடக்கவேண்டும் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

நமது நாயகம் صلي الله عليه وسلم அவர்களின் மீது ஒரு சிறு அவமரியாதை கூட நிகழமுடியாதவாறு தங்களின் ஈமானை மிகவும் எச்சரிக்கையாக ,பேணியவர்கல்தான் சத்திய சஹாபாக்கள் என்பது குர்'ஆனும், ஹதீசும் தெளிவுபடுத்தும் உறுதியான அத்தாட்சிகளாகும் ! இந்தவிதத்தில் முஸ்லிகளுக்கு ஒருநிலைப்பாடு ,முஸ்லிமல்லாத (காபிரீன்களுக்கு) ஒரு நிலைப்பாடு என்று கருத இடமில்லை!

ஆகவே ! இஸ்லாத்திற்கு ,இறைவனுக்கு,இறைதூதருக்கு எதிராக எவ்வித விசக்கருதுக்கள் எந்த ரூபத்தில் ,வேஷத்தில் வந்தாலும் அவ்வித நட்சுக்கருத்துக்களை வேரோடு ,வேறடிமண்ணோடு அகற்றிட அனைவரும் ஐக்கியப்படவேண்டும் ! எல்லாம் வல்ல அல்லாஹ் யூத,நசாரா ,பாசிச சக்திகளின் அநியாயங்களை ,அட்டூழியங்களை அவர்களுக்கு எதிராக திருப்பி, இஸ்லாத்தையும் ,முஸ்லிம் சமுதாயத்தையும்,முஸ்லிம் நாடுகளையும் பாதுகாப்பானாக ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முஸ்லீம் லீக் ஜிந்தா பாத்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [19 September 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22288

எமது உயிர்னும் மேலான நபிகள் பெருமானாரை இழிவு படுத்தி திரைபடமெடுத்த கயவனைக் கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் உலக மகா தீவிரவாதியான அமெரிக்காவைக் கண்டித்தும் உலகெங்கும் கொந்தளிக்கும் இஸ்லாமிய மக்கள் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் நமதூரிலும் பல அமைப்புக்கள் நடத்தி வரும் அறப்போராட்டத்தின் நிகழ்வுகளைத் தெள்ளத்தெளிவாக புகைப்படமெடுத்து செய்தியாக வெளியிட்டு உலகறியச் செய்வதில் உங்கள் பங்கு மகத்தானது. மாஷா அல்லாஹ்!

தாய்ச் சபையின் ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமானோர் பங்கெடுத்துள்ளனர். பெருமானாரின் புகழுக்கு ஒரு சிறிய பங்கம் ஏற்பட்டாலும் நாம் பொங்கி எழுவோம் என்பதை இஸ்லாமியர்கள் நிரூபித்துக் காட்டி வருகின்றனர். படம் எடுத்தது போகட்டும் இனி இது போன்ற கயமத்தனத்திற்கு கனவில் கூட அவர்கள் நினைக்க மாட்டார்கள். அமெரிக்காவின் திருட்டு முழி பிதுங்குகின்றது. பிடித்திருப்பது புலியின் வாலை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே தாம் பிடி விடாமல் தினறி வருகின்றனர்.

அல்லாஹ் தகுந்த தீர்ப்பை வழங்குவான். அவனது ஹபீப் ஆயிற்றே? காலம் விரைவில் பதில் சொல்லும்! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நிரந்தர போராட்டம்
posted by umar rizwan jamali (singapore) [20 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22290

எமது தாய் சபையின் இந்த அமைதிப்போராட்டாம் பாராட்டுக்குரியதே!

எனதன்பின் இஸ்லாமிய பெருங்குடி மக்களே! இத்தோடு உங்கள் போராட்டம் நின்றுவிடாமல் நமது எதிர்ப்பை பலவழிகளில் நிதானமாக காட்டலாம்.

அதில் மிக முக்கியமான ஒன்று எஹூதிகளின் சரக்குகளை (அதாவது: கொக்கோகோலா அதன் வகைராக்களைத்தான்) வாங்குவதை உடனே நிறுத்துங்கள்.

மேலும் இதுபோன்ற எத்தனை வழிகளில் நமது காசுகள் சம்பந்தம் படுவது உங்களுக்கு தெரியுமோ அத்தனை வழிகளையும் அடையுங்கள்.

அதுவே நாம் கொடுக்கும் சவுக்கடி.

இல்லையென்றால் நேரம்போக்கு போராட்டமாக அமையுமே தவிர நிரந்தர போராட்டமாக அமையாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Kader K.M (Dubai) [20 September 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22291

யா அல்லாஹ்! கயவர்களின் கரங்களை நாசப்படுத்துவயாக! இஸ்லாமியர்களான எங்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்படுத்தி எங்களை பலப்படுத்துவயாக! போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கண்மணிகளையும் கருணை நாயன் இருலோகத்திலும் கண்ணியப்படுத்துவானாக! ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [20 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22293

கண்டன பேருரையாற்றிய ஆலிம் பெருந்தகை அப்துர் ரஹ்மான் அஹ்சனி அவர்கள், ஆர்பரித்து அலைகளை போல் பொங்கி எழுந்து ஆற்றிய உரை மெய் சிலிர்க்க வைத்தது.ஆன்மீகமும் லவ்கீகமும் இரண்டறக் கலந்த மார்க்கம் தான் இஸ்லாம். ஒரு ஆன்மீக தலைவராக, ஒரு பேரரசின் ஆட்சி தலைவராக, ஒரு பாச மிக்க குடும்பத் தலைவராக, நேசம் மிக்க கணவனாக, அன்புடன் அரவணைக்கும் தந்தையாக ஆமினா அப்துல்லாஹ்வின் அருமை மகனாக ....இப்படி எல்லாக் கோணங்களிலும் முத்திரை பதித்த கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை இழிவு படுத்தியவர்கள் இந்த காலத்தில் மட்டுமில்லை, அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இருந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் வீர உரைகளில் எடுத்து சொன்னீர்கள்.

அவர்களை பார்த்து உங்களைபோல் ஒரு கெட்டவரை நான் பார்த்ததில்லை என்று ஒருவர் சொன்னபோது புன்னகைத்த நபியவர்கள் உங்களை போல் ஒரு நல்லவரை நான் கண்டதில்லை என்று வேறொருவர் சொன்னபோதும் அதே புன்னைகையை உதிர்த்தார்கள். நபிதோழர்கள் விளக்கம் கேட்டபோது "நான் ஒரு கண்ணாடி , அவரவர்கள் அவரவர்கள் முகத்தை அதில் பார்த்து தங்களையே அடையாளபடுதிக் கொண்டார்கள்" என்று மிக சாதாரணமாக சொல்லிவிட்டார்கள்.

உங்களது வீர உரைகள் உங்களை மக்களுக்கு ஓர் உன்னத உலக அரசியல் அறிந்த பேச்சாளாராக அடையாளம் காட்டியுள்ளது. மஹ்லரா என்ற நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய ஒரு சராசரி ஆலிம் அல்ல நீங்கள், பொதுவாழ்வில் உங்களை இணைத்துக்கொண்டு இஸ்லாதை அதன் தூய வடிவில் நபிகள் நாயகத்தின் வழி முறையை வலியுறுத்தி அந்த பெருமகனாரின் அடியொற்றி நடக்க எல்லோரையும் வழி நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு.. அதற்கான ஆற்றலும் திறமையும் குர் ஆன் ஹதீத்கள் நபிமொழிகள் எல்லாம் நிறைந்த ஒரு நிறைகுடமாக நீங்கள் விளங்குவதை உங்கள் கண்டன பேருரை பறைசாற்றுகிறது.

உங்களை மக்கள் மிகவும் எதிர்பார்கிறார்கள்.உங்கள் மூலம் ஒருவருக்கு ஹிதாயத் கிடைத்தால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தையும் விட உங்களுக்கு சிறந்ததாக அமையும். அல்லாஹ் உங்களை கபூல் செய்வானாக. ஆமீன். உங்கள் து ஆ க்களில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்.நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah ) [20 September 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 22298

இது போன்ற போராட்டங்கள் தொடர வேண்டும்.. நாம் நம் பெருமானாரின் மேல் கொண்டுள்ள பாசமும் பற்றும், உறுதியும்...நம் உயிரை விட நம் தூதர் நமக்கு சிறப்பானவர் என்றும் இதன் மூலம் உலகிற்கு அழகிய வழியில் அண்ணலார் காட்டிய நடைமுறையில் உணர்த்த வேண்டும்!! இஸ்லாமும் இறைவனின் தூதர் காட்டிய நடைமுறையும் இஸ்லாத்தின் எதிரிகளை சென்று அடைய வேண்டும். அதை விட்டு விட்டு நமக்கு வேண்டப்பட்ட இயக்கம் செய்யும்போது வாழ்த்துவதும், வேண்டாதவர் செய்யும்போது குறைகண்டு துற்றுவதன் மூலம் நம்மை நாமே பலவீன படுத்திகொண்டு இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். ..

சதக்தம்பி காக்கா, நீங்கள் காட்டிய இந்த அக்கறை... ஏதோ ஒரு அரசியல் கட்சி ஆட்சி செய்ய நம் பெண்கள் போட்டி போட்டி கொண்டு ஒட்டுசாவடியை போர்க்கலாமாக்கி போலீஸ் வரை கொண்டு போகும் போதும், கலைஞரும் கனிமொழியும் வரும் போது தாய்மார்கள் வீதிக்கு படையெடுக்கும் போதும், கழக பொதுகூட்டங்களின் USC, LF ரோடு மைதானங்களின் உட்கார வைத்தபோதும், ஏதோ ஒரு கோயிலின் வேல்ஐ காணோம் என்று ஒரு தலைவர் நீதி கேட்டு நெடிய பயணம் அவர் அரசியல் வாழ்விற்காக நமதூர் விதியில் வரும் போது நம் வீட்டு மாடிகளின் நின்று தாய்மார்கள் பூமாரி பொழியும் போதும் இந்த அக்கறையும் ஆதங்கமும் வந்து இருக்க வேண்டும்…..

வீணுக்காக செய்ததை எல்லாம் கண்டிக்காமல் தீனுக்காக வீதி இறங்கி இருக்கும் பெண்களை கண்டிக்கிறீர்கள் என்ன நியாயமோ?இதை ஒரு விவாத பொருளாக்க விரும்ப வில்லை மாறாக நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறேன்...பிடிக்காதவர் செய்யும் போது ஒருநிலையும், மற்றவருக்கு ஒரு நிலையும் வேண்டாம்!!

Sadak Kakaa!! Welcome to Makkah, Look forward to see you soon in the Holy Land... Hajj Al Mabrouk!!! Please contact me in case of any assistance from our side (Mbl # 055 165 9818). May Allah make easy of your journey and the all the rituals and perfect your deeds.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K S Muhamed shuaib (Chennai) [20 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22301

ஆர்ப்பாட்டம் நடத்த இன்னும் வேறு எந்த அமைப்பாவது "பாக்கி "இருந்தால் அவற்றின் பெயர்களை தயவு செய்து வெளியிடவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [20 September 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 22304

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் இஸ்லாமிய பெரும் மக்களின் ஒற்றுமையை எண்ணி ரொம்பவும் மகிழ்சியாக உள்ளது. நம் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரை வல்ல இறைவன் ஒருகாலமும் மனிக்கவே மாட்டான். அவனுக்கு இந்த உலகதிலும் சரி / மறுமையிலும் சரி.... வல்ல இறைவன் சரியான கூலியை கண்டிப்பாக கொடுப்பான்.அது நிச்சயம்.

படமெடுத்தவன் நம் உலக இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையையும் / ஒற்றுமித்த போராட்டத்தையும் எண்ணி பயந்தே இருப்பான்.

மாஷா அல்லாஹ் மொத்த நம் ஊரையே நம் கண்முன் கொண்டு வந்து விட்டார். அருமை தம்பி.S.K.S. அவர்கள். மக்கள் வெள்ளம் போல் உள்ளது. வஸ்ஸலாம்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இந்த நிகழ்வில் ஒரு சந்தோசம்..
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [20 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22305

இஸ்ரேலியரின் நோக்கம் நிறைவேறி விட்டது.

உலகில் தற்போது அதிகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம்தான். எப்போது அதிகமான மக்கள்களும், பிரபலங்களும் இஸ்லாத்தின் பக்கம் பார்வையை திருப்புகிறார்களோ, உடனே இஸ்ரேலிய சைத்தான் இதுமாதிரியான குழப்பங்களை உண்டுபண்ணி, கலவரங்களை தூண்டிவிட்டு, பாருங்கள் பாருங்கள் இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம், தீவிரவாதத்தை உண்டுபண்ணும் மார்க்கம் என்று பரப்பிவிடுவான். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் " Putting the cart before the horse " என்று. இது தான் தற்போது நடந்துள்ளது.

ஒரு கச்சடா பயல் எடுத்த படம், ஒரு 100 நபர்கள் பார்த்து இருக்கமாட்டார்கள். ஆனால் இன்றோ பல கோடி மக்கள் இந்த படக்காட்சிகளை பார்த்துள்ளார்கள். காரணம், நாம் கொடுத்த விளம்பரம்தான்.

இந்த நேரத்தில் ஹிட்லர், ஒரு புத்தகத்தில் எழுதியது நினைவுக்கு வருகிறது.
+++++++++++++++++++++++++++
" நான் அனைத்து இஸ்ரேலியர்களையும் ஒருவர் கூட மிஞ்சாமல் அழித்து இருப்பேன். ஒரு சிலரை விட்டு வைத்தேன், காரணம், பிற்காலத்தில் வரும் மக்கள், நான் ஏன் இஸ்ரேலியர்களை அழித்தேன் என்று புரிந்து கொள்ளனும் என்பதற்க்காகத்தான்".
+++++++++++++++++++++++++++++
சரியான செயல்தான் ஹிட்லர் செய்தது.

இந்த நிகழ்வில் ஒரு சந்தோசம்,

என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், நம் கண்மணி நாயகத்தையோ, இஸ்லாத்தையோ யாராவது களங்கப்படுத்தினால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று, தண்ணீருக்குள் மூச்சு முட்டிக்கொண்டு இருப்பவன் எவ்வளவு ஆக்ரோசமாக வெளியில் வருவானோ, அது மாதிரி ஒற்றுமையுடன் பொங்கி எழுந்த நிகழ்வு தான்.

ஆக, எவனாவது நம்மை தீண்டினால்தான் ஒற்றுமை வருகிறது. இந்த நிலைமை நம்மை விட்டும் மாறனும். என்றும்... எப்போதும்.. ஒற்றுமையாக இருக்கணும். வல்ல இறைவன் அதற்க்கு துணை புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [20 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22307

ஜிந்தா பாத்...!
ஜிந்தா பாத்...! முஸ்லீம் லீக் ஜிந்தா பாத்...!

நன்றிகள்! நன்றிகள் !!பல. நன்றிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிற்கு ...

[இடயில் ஓர் சம்மபவம் ] அன்றொரு நாள் தூக்கு மேடையின் முன் நபித்தோழர் ஹுபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நிற்கும் நிர்க்கதியான நேரம் ..ஆயுதம் ஏந்திய எதிரிகள் புடை சூழ நின்றுக்கொண்டு துன்புறுத்தும் அந்த வேளைஇலும் எதிரிகள் ஹுபைபை நோக்கி நமது காருண்ய சீலர் கண்மணி நாயகத்தை குறித்து ஏசச்சொன்னபோது என் உயரினும் மேலான நாயகத்தின் திரு மேனியில் ஒரு சிறு முள் குத்துவதை கூட என்னால் பொறுக்க முடியவே முடியாது .அதற்கு பதிலாக என் உயிர் பிரிவதே மேல்..என்று கூறி தூக்கு கைற்ரை முத்த மிட்டார்கள் ..சுபுஹானல்லாஹ் ! என்ன வொரு நபியன்பு !!!

நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நமது மனம் ஆராது. கண்கள் எல்லாம் குலமாகு! புண்ணாகி நெஞ்சமெல்லாம் புலம்பியே துடிக்குது !மாறாக அந்த கொடுங்கோலனுக்கு மரணத்தண்டனை இக்கனமே உடனே கொடுத்தாக வேண்டும் .... / எத்தகைய நாயகம் ? நமது உடலில் ஒரு சிறு முள்குத்து வதைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத தாஹா நபி .இன்னும் நாளை மறுமையிலும் நமக்காக இறை சமூகத்திலே தங்களது திரு நெற்றியை சுஜூதில் வைத்து மன்றாடி கரை சேற்கும் கண்மணி நாயகம் .எனது உம்மத்தில் ஒரே ஒருவர் நரகில் இருப்பதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது .. என்றுரைத்த நாயகம் அல்லவா !

அவர்களுக்கு அவைகளுக்காக நாம் என்ன தான் கைமாறு செய்ய முடியும் ?என்ன தான் கைமாறு செய்தாலும் இடாகவே இடாகாது .காயல்பட்டினத்தின் 27 ஜமாஅத்துகள், 20க்கும் மேற்பட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டது அல்ஹம்து லில்லாஹ் ! வ சுக்ரன் லில்லாஹ் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. புனித மக்கா நகரில் சந்திப்போம்.
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [21 September 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 22314

தம்பி Cnash ,

இன்ஷாஅல்லாஹ், வெகு விரைவில் புனித மக்கா நகரில் சந்திப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved