Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:02:52 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9159
#KOTW9159
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 16, 2012
ஜெய்ப்பூர் கா.ந.மன்றத்தின் மறைந்த தலைவர் மறைவுக்கு அம்மன்றத்தின் சார்பில் ஙாயிப் ஜனாஸா தொழுகை! திரளான உறுப்பினர்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2709 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் 12.09.2012 அன்று இரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார். அவரது மறைவை முன்னிட்டு, 14.09.2012 வெள்ளிக்கிழமையன்று மஃரிப் தொழுகைக்குப் பின், ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பில் ஙாயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அவரது பிழை பொறுப்பிற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

ஙாயிப் ஜனாஸா தொழுகையை மவ்லவீ அபுல்ஹஸன் மஷீஷ் வழிநடத்தினார். ஹாபிழ் வேனா மகுதூம் துஆ பிரார்த்தனை செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மறைந்த ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்கள் தம் வாழ்வில் செய்த நற்சேவைகளை ஹாஜி கே.எஸ்.முஹம்மத் நூஹ் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

பின்னர், ஜக்வா அமைப்பின் சார்பில் பின்வருமாறு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது:-

மாமா என்றும் சாச்சா என்றும் செல்லமாக எங்களால் அழைக்கப்பட்ட எங்கள் மன்றத் தலைவர் ஹாஜி முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவு அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் அமைப்பிற்கும் பேரிழப்பாகும்.

எல்லா விஷயங்களிலும் தன்னுடைய தேவைகளை பிற்படுத்தி அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்றி தந்தவர். வல்ல நாயகன் அன்னாரின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதி தந்தருவள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஜக்வா அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வாறு அந்த இரங்கல் செய்தி அமைந்துள்ளது. தொழுகை மற்றும் துஆ - பிரார்த்தனை அமர்வில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.







நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை லுகவி முஹம்மத் லெப்பை, மஹ்மூத் சுலைமான் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

தகவல்;
ஜக்வா சார்பாக,
ஹாஃபிழ் ஷெய்கு அலீ நுஸ்கீ
செய்யித் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மீளா துயரம்
posted by Ruknudeen Sahib (China) [16 September 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 22209

அஸ்ஸலாமு அலைக்கும் ஜக்வா அமைப்பினர் அனைவருடைய முகத்தை உற்று நோக்கும் போது அவர்கள் அனைவரும் மன்ற தலைவர் அவர்களின் மறைவின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள வில்லை என்பது நன்றாக தெரிகிறது. இதிலிருந்து அன்னாருடைய தன்னலம் பாரா பொது தொண்டின் மகிமையே உணரமுடிகிறது.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியே ஏற்று அவர்களுக்கு சொர்கத்தை வசிப்பிடமாக ஆக்கவும் நீங்கள் இந்த மீளா துயரத்தில் இருந்து விடுபட்டு அன்னாரது நற்பணியே தொடர்ந்திட உங்களிலிருந்து நற்பண்புகள் நிறைந்திட்ட ஒரு நல்ல தலைவர்(ஆலிமாக இருக்கலாம்) பொறுப்பேற்பதற்கும் துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [17 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22221

எங்கள் கம்பனிக்கு அருகில் இருக்கும் ஒரு நண்பர், ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்களின் மரண செய்தியில் காணப்பட்ட கமெண்ட்ஸ்-களின் எண்ணிக்கையையும், வாசகங்களையும், அவர்களின் நல்லடக்க நிகழ்வில் காணப்பட்ட மக்கள்களின் கூட்டத்தை கண்டு,

" ஜியா.. பாய்.. இவங்க ஊர் தலைவரா..? ஊரில் பெரிய ஆளா இவங்க..!! " என்று வினவினார்.

ஆம்.. பெரிய ஆள் தான். அமலில், நற்பண்புகளில், குணத்தில், மற்றவர்களுக்கு உதவுவதில் பெரிய ஆள்தான்.என்று கூறினேன். அதான் இவ்வளவு மக்கள் அவர்களுக்கு புகழ் பாடியுள்ளார்கள் என்று கூறினேன்..

+++++++++++++++++++++++++++++++++++++

அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், "உறுதியாகிவிட்டது" என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது?' எனக் கூறினார்கள்.

உமர்(ரலி) 'எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும், நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்" எனக் கூறினார்கள்.

(ஹதீஸ் புஹாரி: 1367 )

+++++++++++++++++++++++++++++++++++

ஆக, இன்ஷா அல்லாஹ்..ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா காக்கா அவர்களுக்கு, வல்ல ரஹ்மான் சுவனத்தை அங்கீகரித்து இருப்பான்.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved